செவ்வாய், 8 ஏப்ரல், 2014

காணாமல் போனவர் காட்டில் அதிர்ச்சிச் சடலம்!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் வீட்டில் உருந்து சென்று கடந்த மூன்று தினங்களாக காணாமல் போனவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



வேற்றுச்சேனையில் உள்ள காட்டுப் பகுதியில் மரம் ஒன்றில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய சடலம் மீட்கப்பட்டு உள்ளது.

மண்டூரை சேர்ந்த வைரமுத்து சந்திரசேகரம் (65வயது) என்பவரே இறந்து உள்ளார் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல