வெள்ளி, 4 ஏப்ரல், 2014

ஃப்ரீயா இருந்தா அப்படியே பண்ணை வீட்டுக்கு வாங்களேன்... - பிரபல நடிகையின் அழைப்பு

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோவென்றிருந்த நடிகை அவர். அந்த நம்பர் ஒன் அந்தஸ்து இருக்கும்போதே இந்திக்கு ஓடினார்.


முதல் படம் பிரமாதமாகப் போனாலும், அடுத்தடுத்த தோல்விகள் நடிகையை முடக்கிப் போட்டுவிட்டன.

இப்போது இந்தியிலும் தாக்குப் பிடிக்க முடியாமல் தமிழுக்கும் வரமுடியாமல் தவிக்கிறாராம் அம்மணி.

இதற்கிடையில் கேரளாவில் கடற்கரையோர ஊர் ஒன்றில் பிரமாதமான பண்ணை வீட்டை விலைக்கு வாங்கு அதி நவீனத்துக்கு மாற்றியுள்ளாராம்.
இருக்கும் நேரமெல்லாம் ஓய்வுதான் என்பதால் பெரும்பாலும் இந்த பண்ணை வீட்டில்தான் பொழுதைக் கழிக்கிறாரம் நடிகை.

அதுமட்டுமல்ல, பாலிவுட்டில் தனது நட்பு வட்டத்திலிருக்கும் இயக்குநர்களுக்கு ஸ்பெஷலாக அழைப்பு விடும் நடிகை, வார இறுதி நாட்கள் தவிர்த்த மற்ற தினங்களில் தனது பண்ணை இல்லத்தில் வந்து தங்கிவிட்டுச் செல்லுமாறு அழைக்கிறாராம்.

சமீபத்தில் அப்படி அழைப்பு கிடைக்கப் பெற்ற ஒரு இயக்குநர், நடிகையின் பண்ணையில், அவரது அன்பான கவனிப்பில் மூன்று நாட்கள் தங்கிச் சென்றாராம்.

மும்பை போனதும் முதல் வேலையாக தனது அடுத்த படத்தில் பண்ணை நடிகைக்கும் ஒரு பாத்திரம் இருப்பதாக இனிப்புச் சேதி சொன்னாராம்!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல