புதன், 9 ஏப்ரல், 2014

சரண் அடையாத புலி உறுப்பினர்கள் அதிகம் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்யும் நோக்கில் செயற்பட்டதாக இவர்கள் மீது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர். இறுதிக் கட்டப் போரின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடையாத முன்னாள் உறுப்பினர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கை மையமாக வைத்தே படையினரின் சுற்றி வளைப்புகள், தேடுதல்கள், கைதுகள் இடம்பெற்று வருகின்றன.

வீதிச் சோதனைகளையும் மேற்கொண்டு வரும் படையினர் வாகனங்களையும் சோதனையிட்டு கைதுகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல