புதன், 28 ஜனவரி, 2015

வெளி­றிய தோலைக் கொண்­ட­வர்கள் தமது குடும்­பத்­தி­னரால் மிரு­கங்கள் போன்று வேட்­டை­யா­டப்­படும் கொடுமை (படங்கள் இணைப்பு)

தான்­சா­னி­யா­வி­லுள்ள வெளி­றிய தோலை கொண்­ட­வர்கள், தமது சொந்த குடும்­பங்­க ளால் மிரு­கங்கள் போன்று வேட்­டை­யா­டப்­பட்டு விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக அதிர்ச்சி தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.



வெளி­றிய தோலைக் கொண்­ட­வர்­க­ளது உடல் பாகங்கள் அதிர்ஷ்­டத்­தையும் செல்­வ த்­தையும் தேடித் ­த­ரக்­கூ­டி­யன என்ற நம்­பி க்கை சூனி­யக்­கா­ரர்­க­ளி­டையே நிலவி வரு­கின்­ற­மையே இதற்கு காரணம் என நம்­பப்­ப­டு­கின்­றது.

இதன்பிர­காரம் வெளி­றிய தோலைக்­கொண்ட ஒரு­வ­ரது அவ­ய­வ­மொன்று 3,000 டொலர் முதல் 4,000 டொல­ருக்கும் முழு உடலும் சுமார் 50,000 டொலர் முதல் 75, 000 டொலர் வரைக்கும் விற்­ப­னை­யா­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி பாரம்­ப­ரிய ரீதி­யான தோல் கேசம் மற்றும் கண்­களில் நிறப்­பொ­ருட்கள் முழு­மை­யாக அற்ற வெளிறல் நிலையால் பாதிக்­கப்­பட்ட 1,400 பேர் தான்­சா­னி­யா வில் வாழ்­கின்­றனர்.

இந்த பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­க ளின் படு­கொ­லைகள் தொடர்பில் தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட ஆரம்­பித்­தி­லி­ருந்து இது­வரை 74 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­துடன் 59 பேர் தாக்­கு­த­லுக்­குள்­ளாகி உயிர் தப்­பி­யுள்­ளனர். அங்கு வெளி­றிய தோல் உள்­ள­வர்கள் துரத்தி பிடிக்­கப்­பட்டு அவர்­க­ளது அவ­ய­வங் கள் வெட்டி துண்­டிக்­கப்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்­ளது.

மேலும் வெளி­றிய தோல் உள்­ள­வர்கள் இயற்­கை­யாக இறக்கும் பட்­சத்தில் அவர்­க­ளது கல்­ல­றை­க­ளி­லி­ருந்து சட­லங்கள் திரு­ட ப்­ப­டு­வதும் வழ­மை­யா­க­வுள்­ளது.

இது­வரை 16 கல்­ல­றை­க­ளி­லி­ருந்து வெளி­றிய இனத்­த­வர்­க­ளது சட­லங்கள் தோண்டி அகற்­றப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள் ளது. பணத்தின் மீதான மோகத்தால் கண­வர்மார் தமது வெளி­றிய தோலைக்­கொண்ட மனை­வி­க­ளையும் பெற்றோர் தமது பிள்­ளை­க­ளையும் பலிக்­க­டா­வாகி வருகின்றனர்.

தான்­சா­னி­யா­வி­லுள்ள பல செல்­வந்­தர்கள் வெளி­றிய தோலைக் ­கொண்­ட­வர்­க­ளது உடல் பாகங்­களை பெற போட்டி போட்டு வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரிவிக்­கின்­றன.

அண்­மையில் வெளி­றிய தோலைக்­கொண்ட பென்டோ எமன்­னுயலி நுன்டி என்ற 4 வயது சிறுமி கடத்தப்பட்டதையடுத்து சந் தேகத்தின் பேரில் அந்த சிறுமியின் தந்தையும் மாமனாரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Prejudice is such in Tanzania that children like Verdastus, pictured, are often unable to attend school


Children and adults are kept behind high walls in special centres, hidden away from the people who want to kill and maim them
Pendo Sengerema, 15, pictured right with campaigner Vicky Ntetema, was one of three people attacked in 11 days last August
It is thought those buying the potions made by the witch doctors include some of the richest and most powerful people in the country
images: dailymail
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல