ஐ.எஸ். போராளிகள் தொடர்பில் ஈராக்கிய அரசாங்கத்துக்கு தகவல் அளித்த குற்றச்சாட்டில் அந்தப் போராளி குழுவால் 8 ஈராக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
‘தீர்ப்பு தினம்’ என்ற தலைப்பில் ஐ.எஸ். போராளிகளால் இணையத்தளத்தில் மேற்படி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தப் போராளிக் குழுவால் அடுத்து வெளியிடப்படவுள்ள வீடியோ காட்சியிலிருந்தே அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
மேற்படி புகைப்படங்கள் செம்மஞ்சள் ஆடை அணிந்து கண்கள் கட்டப்பட்டு ஆற்றங்கரையோரமாக அமைந்த பாலமொன்றின் கீழ் மண்டியிட்டிருந்த 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஐ.எஸ். போராளிகளால் கொல்லப்படுவதை காண்பிக்கின்றன.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஈராக்கிய படைவீரர்கள் பலரது பெயர்கள் அந்தப் புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அரசாங்கத்துக்கு தகவல் அளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட மேற்படி குழுவின் தலைவர் கப்டன் ஹொஸ்ஸம் சலாஹ் பனோஷ் என ஐ.எஸ். போராளிகளின் ஊடகத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பனோஷும் ஏனைய ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஐ.எஸ். போராளி குழுவில் இணையும் முகமாக சுன்னி இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் பின்னர் அவர்கள் ஈராக்கிய அரசாங்கத்துக்காக ஐ.எஸ். போராளிகளை இரகசியமாக உளவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்துக்கு தகவல் அளிப்பதில் ஈடுபட்ட மேற்படி குழுவில் அஹமட் பஸில் ரமடான் என்பவர், ஐ.எஸ். போராளிக் குழு வினரின் வீடுகள் தொடர்பில் தகவலளித்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம் நுணுக்குப்பன்னி கருவியை அணிந்திருந்த மாவன் ஹபிப் ஷெயித் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், ஐ.எஸ். போராளிக் குழுவில் இணைந்து அந்தப் போராளி குழு தொடர்பில் அரசாங்கத்துக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.
அந்த 8 பேருக்கும் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.எஸ். போராளிகளால் சலாஹுதீன் மாகாணத்தில் 13 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டு சில வாரங்களிலேயே மேற்படி புதிய மரணதண்டனை நிறைவேற்ற வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.
‘தீர்ப்பு தினம்’ என்ற தலைப்பில் ஐ.எஸ். போராளிகளால் இணையத்தளத்தில் மேற்படி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தப் போராளிக் குழுவால் அடுத்து வெளியிடப்படவுள்ள வீடியோ காட்சியிலிருந்தே அந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
மேற்படி புகைப்படங்கள் செம்மஞ்சள் ஆடை அணிந்து கண்கள் கட்டப்பட்டு ஆற்றங்கரையோரமாக அமைந்த பாலமொன்றின் கீழ் மண்டியிட்டிருந்த 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஐ.எஸ். போராளிகளால் கொல்லப்படுவதை காண்பிக்கின்றன.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஈராக்கிய படைவீரர்கள் பலரது பெயர்கள் அந்தப் புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அரசாங்கத்துக்கு தகவல் அளிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்ட மேற்படி குழுவின் தலைவர் கப்டன் ஹொஸ்ஸம் சலாஹ் பனோஷ் என ஐ.எஸ். போராளிகளின் ஊடகத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பனோஷும் ஏனைய ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஐ.எஸ். போராளி குழுவில் இணையும் முகமாக சுன்னி இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் பின்னர் அவர்கள் ஈராக்கிய அரசாங்கத்துக்காக ஐ.எஸ். போராளிகளை இரகசியமாக உளவு பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்துக்கு தகவல் அளிப்பதில் ஈடுபட்ட மேற்படி குழுவில் அஹமட் பஸில் ரமடான் என்பவர், ஐ.எஸ். போராளிக் குழு வினரின் வீடுகள் தொடர்பில் தகவலளித்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம் நுணுக்குப்பன்னி கருவியை அணிந்திருந்த மாவன் ஹபிப் ஷெயித் என்ற பொலிஸ் உத்தியோகத்தர், ஐ.எஸ். போராளிக் குழுவில் இணைந்து அந்தப் போராளி குழு தொடர்பில் அரசாங்கத்துக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.
அந்த 8 பேருக்கும் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.எஸ். போராளிகளால் சலாஹுதீன் மாகாணத்தில் 13 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டு சில வாரங்களிலேயே மேற்படி புதிய மரணதண்டனை நிறைவேற்ற வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிட த்தக்கது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக