முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் செயலிழந்த யுவதியொருவர், தனது இடது கால் விரல்களைப் பயன்படுத்தி 60,000 சொற்களைக் கொண்ட நாவலொன்றை எழுதி சாதனை படைத்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு சீனாவில் அனஹுயி மாகாணத்தில் பின்தங்கிய சமூகமொன்றைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த ஹு ஹுயியுவான் (21 வயது) என்ற யுவதியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த ஹுயியுவான் ஒரு சில நாட்களே உயிர் வாழ்வார் என மருத்துவர்களால் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மருத்துவர்களின் கூற்றை பொய்யாக்கும் வகையில் ஹுயியுவான் உயிர் பிழைத்துள்ளார்.
அவர் பிறந்து 10 மாதங்கள் கழித்தே அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு முடக்குவாதம் என்பதை மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.
முடக்குவாத பாதிப்பால் அவருக்கு தலையையும் பாதத்தையும் தவிர உடலில் எந்த உறுப்பையும் விரும்பியவாறு அசைக்க முடியாது இருந்தது.
இந்நிலையில் அவரது தந்தையான பெங்கும் (49 வயது) தாயாரான சன்னும் (47 வயது) அவருக்கு பெரிதும் அனுசரணையாக இருந்தனர்.
சிறுமியாக வளர்ந்த ஹூயியுவான் எதையாவது சாதித்தே தீருவது என தீர்மானித்தார்.
அவருக்கு பாடசாலை சென்று கல்வி கற்பது சாத்தியமற்று இருந்ததால் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் எழுத்துக்களைப் பயன்படுத்தி சுயமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
அத்துடன் கால்களை பயன்படுத்தி அந்த எழுத்துக்களை எழுதவும் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்று தனது கால் விரல்களைப் பயன்படுத்தி கணினியில் நாவலொன்றை எழுதி சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு சீனாவில் அனஹுயி மாகாணத்தில் பின்தங்கிய சமூகமொன்றைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த ஹு ஹுயியுவான் (21 வயது) என்ற யுவதியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த ஹுயியுவான் ஒரு சில நாட்களே உயிர் வாழ்வார் என மருத்துவர்களால் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் மருத்துவர்களின் கூற்றை பொய்யாக்கும் வகையில் ஹுயியுவான் உயிர் பிழைத்துள்ளார்.
அவர் பிறந்து 10 மாதங்கள் கழித்தே அவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு முடக்குவாதம் என்பதை மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.
முடக்குவாத பாதிப்பால் அவருக்கு தலையையும் பாதத்தையும் தவிர உடலில் எந்த உறுப்பையும் விரும்பியவாறு அசைக்க முடியாது இருந்தது.
இந்நிலையில் அவரது தந்தையான பெங்கும் (49 வயது) தாயாரான சன்னும் (47 வயது) அவருக்கு பெரிதும் அனுசரணையாக இருந்தனர்.
சிறுமியாக வளர்ந்த ஹூயியுவான் எதையாவது சாதித்தே தீருவது என தீர்மானித்தார்.
அவருக்கு பாடசாலை சென்று கல்வி கற்பது சாத்தியமற்று இருந்ததால் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் எழுத்துக்களைப் பயன்படுத்தி சுயமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.
அத்துடன் கால்களை பயன்படுத்தி அந்த எழுத்துக்களை எழுதவும் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அவர் தனது முயற்சியில் வெற்றி பெற்று தனது கால் விரல்களைப் பயன்படுத்தி கணினியில் நாவலொன்றை எழுதி சாதனை படைத்துள்ளார்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக