ஞாயிறு, 15 மார்ச், 2015

சிம்பிள் ஜாங்கிரி

தேவையான பொருள்கள் :

உளுந்து - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
ஏலக்காய் - 3
உணவு நிறமி (ஃபுட் கலர்) - ஒரு சிட்டிகை.
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதன் தோலை (கருப்பு) நீக்கி வைக்கவும். சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

தோல் நீக்கிய உளுந்தை நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். (கையை மட்டும் தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை கையால் தள்ளிவிட்டு நன்றாக பந்து போல கெட்டியாகும் வரை அரைக்கவும்)

அதனுடன் நிறமி, அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் சற்று மொத்தமான ஊசி (உல்லன் ஊசி) கொண்டு ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். (எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது).

இருபக்கமும் வெந்ததும் (மொறுமொறுப்பாக வேகக்கூடாது) எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். (ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும்).

சுவையான, சுலபமான ஜாங்கிரி தயார்.

குறிப்பு :

மாவை அரைக்கும் போது அதிகமாக தண்ணீர் சேர்த்தால் கலவை சரியாக வராது. அதிகம் எண்ணெயை உறிஞ்சும். அதனால் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

பொரிக்கும் போது எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது. மிதமான சூட்டைவிட சற்று குறைவாக இருப்பதே நல்லது. மாவைப் பிழியும் போது அதுதான் வசதியாக இருக்கும்.

இல்லையெனில் பொங்கி பெரிதாகிடும். ஜாங்கிரி சுற்ற வராது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல