ஞாயிறு, 15 மார்ச், 2015

சரவண பவன் சாம்பார்

தேவையானவை :

துவரம்பருப்பு - 1/4 டம்ளர்
கத்திரிக்காய் - ஒன்று (நறுக்கியது)
முருங்கைக்காய் - ஒன்று (நறுக்கியது)
சாம்பார் வெங்காயம் - 10 (நறுக்கியது)
தக்காளி - ஒன்று (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவைக்கு
புளி - சிறிய லெமன் அளவு



பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
தக்காளி - ஒன்று
தேங்காய் - ஒரு ஸ்பூன்
சாம்பார்பொடி - 4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

கடுகு - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
வற்றல்மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை, மல்லி இலை - தேவைக்கு

1.முதலில் ஒரு பாத்திரத்தில் பருப்பை வேக வைக்கவும்.

வேகவைத்த பருப்புடன், நான்கு டம்ளர் நீர் விட்டு நறுக்கிய காய், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.

மிக்ஸியில் அரைக்க கூறியவற்றை நைசாக அரைத்து எடுத்து அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும்.காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.

2.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும்.

மல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கவும்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல