இரு வருட காலமாக பற்களை துளையிடும் உபகரணம் தாடையில் ஊடுருவியுள்ளதை அறியாது பெண்ணொருவர் வாழ்ந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வார்விக் ஷியரைச் சேர்ந்த அலிஸன் சவுத்வூட்(44 வயது) என்ற பெண்ணே இவ்வாறு பல் துளையிடும் உபகரணம் ஊடுருவியிருப்பதை அறியாது வாழ்ந்துள்ளார்.
அவர் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பற்குழி சிகிச்சையொன்றைப் பெறுவதற்காக பல் மருத்துவரிடம் சென்றார்.
இதன்போது பல் மருத்துவரின் துளையிடும் உபகரணத்தின் ஒரு பகுதி உடைந்து அவரது தாடையை ஊடுருவியுள்ளது.
இதனால் அவரது முகத்தின் ஒரு பகுதி முழுமையாக உணர்விழந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட 'எக்ஸ்ரே' பரிசோதனையின் போது அவரது தாடையில் துளையிடும் உபகரணத்தின் ஒரு பகுதி ஊடுருவியிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அலிஸன் குறிப்பிட்ட மருத்துவனைக்கு எதிராக மேற்கொண்ட சட்ட நடவடிக்கையையடுத்து, மேற்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம் அலிஸனுக்கு 5,500 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நஷ்டஈட்டை வழங்க அந்த மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.
வார்விக் ஷியரைச் சேர்ந்த அலிஸன் சவுத்வூட்(44 வயது) என்ற பெண்ணே இவ்வாறு பல் துளையிடும் உபகரணம் ஊடுருவியிருப்பதை அறியாது வாழ்ந்துள்ளார்.
அவர் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பற்குழி சிகிச்சையொன்றைப் பெறுவதற்காக பல் மருத்துவரிடம் சென்றார்.
இதன்போது பல் மருத்துவரின் துளையிடும் உபகரணத்தின் ஒரு பகுதி உடைந்து அவரது தாடையை ஊடுருவியுள்ளது.
இதனால் அவரது முகத்தின் ஒரு பகுதி முழுமையாக உணர்விழந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட 'எக்ஸ்ரே' பரிசோதனையின் போது அவரது தாடையில் துளையிடும் உபகரணத்தின் ஒரு பகுதி ஊடுருவியிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அலிஸன் குறிப்பிட்ட மருத்துவனைக்கு எதிராக மேற்கொண்ட சட்ட நடவடிக்கையையடுத்து, மேற்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம் அலிஸனுக்கு 5,500 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நஷ்டஈட்டை வழங்க அந்த மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக