வியாழன், 2 ஜூலை, 2015

தன்னைத் தானே துப்­பாக்­கியால் சுட்டு உயி­ரி­ழந்த 3 வயது பாலகன்

தனது தந்­தையின் ரவைகள் நிரப்­பப்­பட்ட துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய 3 வயது சிறுவன் ஒருவன் தனது தலையில் தானே சுட்டு உயி­ரி­ழந்த விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க மிக்­சிக்கன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.



கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஜொனாதன் கோப்மான் என்ற மேற்­படி சிறுவன் வீட்டின் அறை­யொன்­றி­லி­ருந்த துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சம்­ப­வத்தால் சிறு­வ­ னது பெற்­றோ­ரான டெறிக் மற் றும் மிசெல் உட்­பட குடும்ப உறுப்­பி­னர்கள் அனை­வரும் கடும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சிறு­வனை வீட்டில் தனி­யே விட்­டு­விட்டு அவ­னது தந்­தையும் மூத்த சகோ­த­ரனும் வெளியில் சென்றிருந்த வேளை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல