வியாழன், 2 ஜூலை, 2015

சிறு­வனின் காதுக்குள் 4 அங்­குல நீள பூரான்

கடும் காது வலிக்­குள் ளாகி துன்பப் ­பட்ட 14 வயது சிறுவன் ஒரு­வ­னது காதி­லி­ருந்து 4 அங்­குல நீள­ மான உயிருள்ள பூரான் ஒன்று அகற்­றப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க அர்­கன்ஸாஸ் மாநி­லத்தில் இடம்­பெற்றுள்­ளது.



சாலின் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிரான்ட் பொற்றி என்ற சிறு­வனின் காதின் செவிப்­ப­றையில் இவ்­வாறு உயி­ருள்ள பூரான் இருந்­துள்­ளது.

காது வலிக்கு உள்­ளான கிரான்ட், வலிக்கு கார­ண­மான பொருளை வெளியே எடுக்கும் முயற்­சியில் ஈடு­பட்டான். இதன் ­போது அவனால் காதி­லி­ருந்து இழுத்­தெ­டுக்­கப்­பட்ட பொருள் ஒரு உயி­ருள்ள பூரான் என்­பதைக் கண்­ட­றிந்து அவன் அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளான்.

இத­னை­ய­டுத்து அவ­னது தாயா­ரான அஞ்­ஜெலா பொற்றி, பூரானை பிளாஸ்டிக் பையில் எடுத்துக்கொண்டு சிறு­வனை சாலின் ஞாப­கார்த்த மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் சென்­றுள்ளார்.

அங்கு கிரான்ட்­டிற்கு பூரான் கடிக்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டது. ஒரு­வ­ரது காதுக்குள் பூரான் பிர­வே­சித்­தி­ருப்­பது தொடர்பில் தாம் அறி­வது தமது மருத்­துவப் பணிக் காலத்தில் இதுவே முதல் தடவையென அந்த சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத் துவர்கள் தெரிவித்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல