வறுமை, கடன்சுமை, நாட்டில் வாழ முடியாத நிலை, சீதனப்பிரச்சினை, பொருளாதார முன்னேற்றம், உயிர் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களின் நிமித்தம் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட பலர் இன்று நிர்க்கதியாய் உள்ளதுடன் , தமது குடும்பங்களையும் இக்கட்டான சூழ்நிலையில் வாழும் நிலைக்கு தள்ளியுள்ளனர்.
சிலர் பெருமளவு பணத்தை செலவழித்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு உடல், உளரீதியான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு தமது இலக்கை அடைய முடியாமல் தாய் நாட்டிற்கு திரும்பிய நிலையிலும், சிலர் பல வருடங்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற தமது உறவுகள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில் தொடர்ந்து ஏக்கத்துடன் வாழ்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
அந்தவகையில் தமது குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் கருதி பெருந்தொகையான பணத்தை செலவழித்து படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற தனது கணவனும், மகனும் எங்கு இருக்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் வேதனைகளை மனதில் சுமந்தவாறு அவர்களை மீண்டும் காண மாட்டேனா? என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றார் அன்னலட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அன்னலட்சுமி மனஉருகி தனது ஆதங்கத்தை எம்மோடு பகிர்ந்துகொண்ட போது,
எனக்கு மூன்று பெண்பிள்ளைகளும், ஒரு ஆண்பிள்ளையும். எனது கணவர் வாகனங்களை திருத்துபவர். நாங்கள் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலேயே வசித்து வந்தோம். எனினும், வறுமையும் மரண பயமும் எங்களை அங்கு வாழ விடாமல் துரத்தின. எனவே, நாங்கள் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தோம். அப்போது எனது கடைசி மகள் எனது வயிற்றில். மற்ற பிள்ளைகள் மூவரும் சிறியவர்கள். வந்த புதிதில் எங்களுக்கு வாழ்வாதார தொழிலொன்று ஒன்று இருக்கவில்லை. இருப்பதற்கும் நிரந்தரமான இடமொன்று இல்லாமல் பெரும் சிரமப்பட்டோம். அதன்பின்னரே எனது கணவரின் உழைப்பில் சிறுக சிறுக சேமித்து வீடு, காணி என்று வாங்கி ஓரளவுக்கு நிம்மதியடைந்தோம்.
அதன்பின் பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அதுவும் எனது மூத்த மகள் திருமண வயதை அடைந்தாள். எனவே, மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு, சீதனம் கொடுப்பதற்கெல்லாம் பெருமளவு பணம் தேவைப்படும் அவற்றுக்கு என்ன செய்வது? என்று எமக்கு பெரும் யோசனையாகவிருந்தது.
இந்நிலையில், மகனும் வவுனியா நகரிலுள்ள மொபைல் கடையொன்றில் வேலைக்குச் சென்றான். எனவே கணவனினதும், மகனினதும் உழைப்பில் குடும்ப சக்கரம் ஓடியது. இத்தகையதொரு தருணத்தில் தான் எனது மூத்த மகளுக்கு கணவரின் நண்பரொருவரின் மூலம் லண்டனிலிருந்து திருமண வரன் ஒன்று வந்தது. நாங்களும் நல்ல வசதியான இடம் என்றவுடன் மகளின் எதிர்காலம் கருதி அந்த வரனுக்கு சம்மதம் தெரிவித்தோம். அத்துடன் மகளின் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பினோம். அதன்பின் அவர்களுக்கும் மகளை பிடித்துப்போக இருவருக்கும் திருமணம் செய்வது பெரியோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு வருட காலம் மகளும், மருமகனும் தொலைபேசியில் கதைத்துக்கொள்வார்கள். இந்நிலையில், திருமண வைபவத்தை இலங்கையில் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. எங்களால் மருமகனின் வசதிவாய்ப்புகளுக்கு ஏற்ப செய்ய முடியாவிட்டாலும், கணவரின் சேமிப்பிலிருந்த பணத்தை கொண்டு எங்களால் முடிந்த அளவு ஏற்பாடுகளை செய்தோம்.
எனினும், மாப்பிள்ளையின் தாயார் இலங்கைக்கு வந்தவுடன் எங்களுடைய வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றாற் போல் நீங்கள் சீதனம் தர மறுத்தால் இந்த கல்யாணம் நடக்காது என்று உறுதியாக கூறிவிட்டார். எனினும், மாப்பிள்ளை அவருடைய முடிவில் உறுதியாகவிருந்தார்.
“ நான் ஒரு வருட காலமாக தொலைபேசியில் கதைத்து வருகின்றேன். இனி நான் அவளை ஏமாற்றுவது நியாயமில்லை ” என்று கூறி தனது தாயை எதிர்த்து பதிவு திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் மகளுக்கு விசா கிடைக்கும்வரை எங்களுடன் இருக்குமாறு கூறி விட்டு மாப்பிள்ளை லண்டன் பயணமானார். எங்களுக்கு மகளின் திருமணம் நடைபெற்றுவிட்டது என்று திருப்தியடைந்தாலும் ஏனைய மகள்மார்களின் திருமணத்தின் போது இதே பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது பெரும் யோசனையாகவே இருந்தது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் மகனின் நண்பர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றிருந்தான். எனினும், அவருக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, அவன் அடிக்கடி தொலைபேசியில் மகனுடன் கதைப்பான். அவன் தான் "நீயும் வாடா இங்கு ஒரு பிரச்சினையுமில்லை” என்று கூறியிருக்கின்றான். எனவே குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம், சகோதரிகளின் திருமணம் என்பவற்றை நினைத்து மகனும் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானித்தான்.
இதன்போது தான் வவுனியாவைச் சேர்ந்த கிருஷாந்தன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடை தரகரின் அறிமுகம் கிடைத்தது. எனவே அவனும் அவுஸ்திரேலியா செல்வது தொடர்பாக அளவுக்கதிகமான ஆசைகளை மகனின் மனதில் விதைத்தான். எனினும், ஆரம்பத்தில் நானும் எனது கணவரும் , அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஏனெனில், சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வது கடினமான, ஆபத்தான காரியம் என்பதை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தோம். எனவே, எங்களுக்கு இருப்பது ஒரே மகன் பணத்துக்காக அவனை அங்கு அனுப்பி ஆபத்தில் தள்ளிவிட நாங்கள் விரும்பவில்லை. ஆயினும், மகன் பிடிவாதக்காரன் நாங்கள் செல்வது எதையும் கேட்க மாட்டான். தனது முடிவில் உடும்புப்பிடியாகவிருந்தான். இறுதியில் மகனின் விருப்பத்துக்கு நாங்களும் சம்மதம் தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மகனை தனியாக அனுப்பாது தானும் மகனுடன் படகில் அவுஸ்திரேலியா செல்ல எனது கணவர் முடிவெடுத்தார்.
எனது கணவர் உண்மையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதை கடுமையாக விமர்சிப்பவர். ஊடகங்களில் அவுஸ்திரேலியா செல்பவர்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகும் போதெல்லாம் ' படகு மூலம் அவுஸ்திரேலியா செல்பவர்களுக்கு நடுக்கடலில் தான் அந்தியேட்டி செய்ய வேண்டி வரும்' என்று கூறுவார். அப்படியிருக்கையில் அவரே அன்று படகில் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானித்தது ஒரே மகனை எப்படி தனியாக அனுப்புவது என்று தான்.
அந்த தரகர் தந்தையையும், மகனையும் படகில் அவுஸ்திரேலியா அனுப்ப இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் கேட்டான். எனினும், எங்களிடம் மொத்தமாக அவ்வளவு பணம் இருக்கவில்லை. எனவே, முதலில் ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கொடுத்து பின் அவுஸ்திரேலியா செல்ல புறப்பட்ட பின்னர் மிகுதி இரண்டு இலட்சம் ரூபா பணத்தைக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
நாங்கள் எங்களிடமிருந்த சிறிய காணி துண்டொன்றை விற்று 50 ஆயிரம் ரூபா பணத்தை ஒரு வழியாய் முதலில் செலுத்தினோம். இந்நிலையில், கணவரும் மகனும் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அதிகாலை வேளையில் அவுஸ்திரேலியா செல்வதாகவிருந்தது. பயணத்தின் போது தம்மை அடையாளப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையும் கையில் வைத்திருக்க முடியாது என்று அந்த தரகரினால் அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி திருகோணமலை கடற்பரப்பிலிருந்தே படகில் ஏறுவதாகவிருந்தது. எனவே, 21ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சென்றார்கள். இதன்போது நானும் எனது மகள்மார்களும் திருகோணமலை வரை உடன் சென்றோம்.
நாங்கள் அவர்களை திருகோணமலை நகரில் விட்டு விட்டு மீண்டும் வவுனியா திரும்பிவிட்டோம். அதன்பின் மறுநாள் காலை 7.30 மணியளவில் பிறிதொருவரின் தொலைபேசியிலிருந்து மகன் எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, " அம்மா எங்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கின்றார்கள். நாங்கள் இன்னும் சாப்பிடவுமில்லை ”என்று கூறினான். அதனைதொடர்ந்து, அந்த அழைப்பை துண்டித்து நாங்கள் அந்த இடைதரகருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினோம்.
அப்போது எனது மூத்த மகள் தான் அந்த தரகரிடம் கதைத்தாள்.
22ஆம் திகதி அதிகாலையிலேயே தானே புறப்பட போவதாக கூறினீர்கள் இன்னும் ஏன் அனுப்பாமல் வைத்திருக்கின்றீர்கள். அவர்களுக்கு சாப்பிடவும் ஒன்றும் கொடுக்கவில்லையாமே ” என்று வினவினாள். அதற்கு அந்த தரகர் " இல்லை. சிறிய பிரச்சினையொன்று மாலை 5.30 மணிக்கு தான் இங்கிருந்து புறப்படுகின்றார்கள். ” என்று கூறினான்.
அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மகன் பிறிதொருவரின் தொலைபேசியிலிருந்து அழைப்பை ஏற்படுத்தி " அம்மா நாங்கள் செல்லப்போகின்றோம்” என்று கண்ணீருடன் கூறினான். இதன்போது கணவரும் என்னுடனும் மகள்மார்களுடனும் கதைத்தார். அன்று எங்களுடைய வீடு கண்ணீரால் நிரம்பியது. அன்றிரவு ஒருவரும் சாப்பிடவுமில்லை. ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தோம்.
அன்றைய பொழுது கழிந்தது. மறுநாள் காலை நாங்கள் அந்த தரகருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவர்கள் சென்றுவிட்டார்களா?” என்று கேட்டோம். அதற்கு அந்த தரகர் படகில் ஏறிவிட்டார்கள். இப்போது அவர்கள் சென்றுகொண்டிருப்பார்கள். அங்கு சென்றடைய பல நாட்களாகும். அவர்கள் அங்கு சென்றடைந்தவுடன் நான் உங்களுக்கு தகவல் தருவேன் என்று கூறினார். எங்களுக்கு வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல் பயமாகவிருந்தது.
நாட்களும் உருண்டோடின. அவர்களிடமிருந்து எந்தவித தகவல்களும் வரவில்லை. எனினும், அந்த தரகர் மட்டும் இரவு வேளைகளில் அடிக்கடி பணம் கேட்டு வீட்டுக்கு வந்து போவான். அன்றைய நிலையில் எங்களின் கையில் பணமிருக்கவில்லை. நாங்கள் இன்று காலை, நாளை என்று தவணை சொன்னோம். எனினும், அந்த தரகர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்வான்.
இதன்போது எனது கணவன், மகன் தொடர்பாக நாங்கள் விசாரித்தால், அவர்கள் படகில் தானே செல்கின்றார்கள். போய் சேர நாட்கள் செல்லும் , உனது மகனுக்கு பழக்கமில்லாதால் ஒரே வாந்தியாகவிருக்கின்றது. என்றெல்லாம் பொய்யான கதைகளை கூறிச்செல்வான்.
எங்களுடைய வீடு ஆண் துணையொருவர் இல்லாதது. நான் மூன்று பெண்பிள்ளைகளுடனே தனியாக வீட்டிலிருந்தேன். எனவே அடிக்கடி அந்த தரகர் வீட்டுக்கு வந்து செல்வதை பார்த்த அயலவர்கள் எங்களை வித்தியாசமாக பார்த்தார்கள். எனவே எங்களிடமிருந்த தங்க நகைகளை விற்று அந்த மிகுதி பணத்தை தரகருக்கு கொடுத்தோம். அவற்றை பெற்றுக்கொண்டவன் அதற்கு பிறகு எப்போதுமே வீட்டுக்கு வரவில்லை.
அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாலும் அவனுடைய தொலைபேசி நிறுத்தப்பட்டிருக்கின்றது. அதன்பின் தான் நாங்கள் அறிந்துகொண்டோம் அவன் எங்கோ தலை மறைவாகிவிட்டான் என்று.
எனது மகனிடமிருந்தும் கணவனிடமிருந்தும் இன்று தொலைபேசி அழைப்பு வரும், நாளை வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன.
இன்று வரை அவர்கள் தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை. அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற காரணத்தினால் நாங்கள் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் சென்று முறைப்பாடு செய்யவில்லை.
இதுவரை சர்வதேச புலம்பெயர்வோருக்கான நிறுவனத்தில் மட்டுமே இது தொடர்பாக அறிவித்துள்ளோம். ஆயினும் இதுவரை எங்களுக்கு காத்திரமான எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
இன்று எனது மூத்த மகள் லண்டனிலுள்ள அவருடைய கணவரிடம் சென்றுவிட்டாள். கடைசி மகள் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் கல்வி கற்கின்றாள். எனது இரண்டாவது மகள் வவுனியாவிலுள்ள சிறிய கடையொன்றில் தொழில் செய்கின்றாள். அவளுடைய வருமானத்தில் தான் இன்று நான் குடும்பத்தை நடாத்தி வருகின்றேன்...
வீரகேசரி
சிலர் பெருமளவு பணத்தை செலவழித்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு உடல், உளரீதியான சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்டு தமது இலக்கை அடைய முடியாமல் தாய் நாட்டிற்கு திரும்பிய நிலையிலும், சிலர் பல வருடங்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற தமது உறவுகள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவராத நிலையில் தொடர்ந்து ஏக்கத்துடன் வாழ்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.
அந்தவகையில் தமது குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம் கருதி பெருந்தொகையான பணத்தை செலவழித்து படகுமூலம் அவுஸ்திரேலியா சென்ற தனது கணவனும், மகனும் எங்கு இருக்கின்றார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் வேதனைகளை மனதில் சுமந்தவாறு அவர்களை மீண்டும் காண மாட்டேனா? என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றார் அன்னலட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அன்னலட்சுமி மனஉருகி தனது ஆதங்கத்தை எம்மோடு பகிர்ந்துகொண்ட போது,
எனக்கு மூன்று பெண்பிள்ளைகளும், ஒரு ஆண்பிள்ளையும். எனது கணவர் வாகனங்களை திருத்துபவர். நாங்கள் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திலேயே வசித்து வந்தோம். எனினும், வறுமையும் மரண பயமும் எங்களை அங்கு வாழ விடாமல் துரத்தின. எனவே, நாங்கள் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தோம். அப்போது எனது கடைசி மகள் எனது வயிற்றில். மற்ற பிள்ளைகள் மூவரும் சிறியவர்கள். வந்த புதிதில் எங்களுக்கு வாழ்வாதார தொழிலொன்று ஒன்று இருக்கவில்லை. இருப்பதற்கும் நிரந்தரமான இடமொன்று இல்லாமல் பெரும் சிரமப்பட்டோம். அதன்பின்னரே எனது கணவரின் உழைப்பில் சிறுக சிறுக சேமித்து வீடு, காணி என்று வாங்கி ஓரளவுக்கு நிம்மதியடைந்தோம்.
அதன்பின் பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அதுவும் எனது மூத்த மகள் திருமண வயதை அடைந்தாள். எனவே, மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு, சீதனம் கொடுப்பதற்கெல்லாம் பெருமளவு பணம் தேவைப்படும் அவற்றுக்கு என்ன செய்வது? என்று எமக்கு பெரும் யோசனையாகவிருந்தது.
இந்நிலையில், மகனும் வவுனியா நகரிலுள்ள மொபைல் கடையொன்றில் வேலைக்குச் சென்றான். எனவே கணவனினதும், மகனினதும் உழைப்பில் குடும்ப சக்கரம் ஓடியது. இத்தகையதொரு தருணத்தில் தான் எனது மூத்த மகளுக்கு கணவரின் நண்பரொருவரின் மூலம் லண்டனிலிருந்து திருமண வரன் ஒன்று வந்தது. நாங்களும் நல்ல வசதியான இடம் என்றவுடன் மகளின் எதிர்காலம் கருதி அந்த வரனுக்கு சம்மதம் தெரிவித்தோம். அத்துடன் மகளின் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பினோம். அதன்பின் அவர்களுக்கும் மகளை பிடித்துப்போக இருவருக்கும் திருமணம் செய்வது பெரியோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு வருட காலம் மகளும், மருமகனும் தொலைபேசியில் கதைத்துக்கொள்வார்கள். இந்நிலையில், திருமண வைபவத்தை இலங்கையில் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. எங்களால் மருமகனின் வசதிவாய்ப்புகளுக்கு ஏற்ப செய்ய முடியாவிட்டாலும், கணவரின் சேமிப்பிலிருந்த பணத்தை கொண்டு எங்களால் முடிந்த அளவு ஏற்பாடுகளை செய்தோம்.
எனினும், மாப்பிள்ளையின் தாயார் இலங்கைக்கு வந்தவுடன் எங்களுடைய வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றாற் போல் நீங்கள் சீதனம் தர மறுத்தால் இந்த கல்யாணம் நடக்காது என்று உறுதியாக கூறிவிட்டார். எனினும், மாப்பிள்ளை அவருடைய முடிவில் உறுதியாகவிருந்தார்.
“ நான் ஒரு வருட காலமாக தொலைபேசியில் கதைத்து வருகின்றேன். இனி நான் அவளை ஏமாற்றுவது நியாயமில்லை ” என்று கூறி தனது தாயை எதிர்த்து பதிவு திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் மகளுக்கு விசா கிடைக்கும்வரை எங்களுடன் இருக்குமாறு கூறி விட்டு மாப்பிள்ளை லண்டன் பயணமானார். எங்களுக்கு மகளின் திருமணம் நடைபெற்றுவிட்டது என்று திருப்தியடைந்தாலும் ஏனைய மகள்மார்களின் திருமணத்தின் போது இதே பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது? என்பது பெரும் யோசனையாகவே இருந்தது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் மகனின் நண்பர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றிருந்தான். எனினும், அவருக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, அவன் அடிக்கடி தொலைபேசியில் மகனுடன் கதைப்பான். அவன் தான் "நீயும் வாடா இங்கு ஒரு பிரச்சினையுமில்லை” என்று கூறியிருக்கின்றான். எனவே குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றம், சகோதரிகளின் திருமணம் என்பவற்றை நினைத்து மகனும் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானித்தான்.
இதன்போது தான் வவுனியாவைச் சேர்ந்த கிருஷாந்தன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இடை தரகரின் அறிமுகம் கிடைத்தது. எனவே அவனும் அவுஸ்திரேலியா செல்வது தொடர்பாக அளவுக்கதிகமான ஆசைகளை மகனின் மனதில் விதைத்தான். எனினும், ஆரம்பத்தில் நானும் எனது கணவரும் , அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஏனெனில், சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வது கடினமான, ஆபத்தான காரியம் என்பதை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தோம். எனவே, எங்களுக்கு இருப்பது ஒரே மகன் பணத்துக்காக அவனை அங்கு அனுப்பி ஆபத்தில் தள்ளிவிட நாங்கள் விரும்பவில்லை. ஆயினும், மகன் பிடிவாதக்காரன் நாங்கள் செல்வது எதையும் கேட்க மாட்டான். தனது முடிவில் உடும்புப்பிடியாகவிருந்தான். இறுதியில் மகனின் விருப்பத்துக்கு நாங்களும் சம்மதம் தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மகனை தனியாக அனுப்பாது தானும் மகனுடன் படகில் அவுஸ்திரேலியா செல்ல எனது கணவர் முடிவெடுத்தார்.
எனது கணவர் உண்மையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதை கடுமையாக விமர்சிப்பவர். ஊடகங்களில் அவுஸ்திரேலியா செல்பவர்கள் தொடர்பாக செய்திகள் வெளியாகும் போதெல்லாம் ' படகு மூலம் அவுஸ்திரேலியா செல்பவர்களுக்கு நடுக்கடலில் தான் அந்தியேட்டி செய்ய வேண்டி வரும்' என்று கூறுவார். அப்படியிருக்கையில் அவரே அன்று படகில் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானித்தது ஒரே மகனை எப்படி தனியாக அனுப்புவது என்று தான்.
அந்த தரகர் தந்தையையும், மகனையும் படகில் அவுஸ்திரேலியா அனுப்ப இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் கேட்டான். எனினும், எங்களிடம் மொத்தமாக அவ்வளவு பணம் இருக்கவில்லை. எனவே, முதலில் ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கொடுத்து பின் அவுஸ்திரேலியா செல்ல புறப்பட்ட பின்னர் மிகுதி இரண்டு இலட்சம் ரூபா பணத்தைக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
நாங்கள் எங்களிடமிருந்த சிறிய காணி துண்டொன்றை விற்று 50 ஆயிரம் ரூபா பணத்தை ஒரு வழியாய் முதலில் செலுத்தினோம். இந்நிலையில், கணவரும் மகனும் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அதிகாலை வேளையில் அவுஸ்திரேலியா செல்வதாகவிருந்தது. பயணத்தின் போது தம்மை அடையாளப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையும் கையில் வைத்திருக்க முடியாது என்று அந்த தரகரினால் அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி திருகோணமலை கடற்பரப்பிலிருந்தே படகில் ஏறுவதாகவிருந்தது. எனவே, 21ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சென்றார்கள். இதன்போது நானும் எனது மகள்மார்களும் திருகோணமலை வரை உடன் சென்றோம்.
நாங்கள் அவர்களை திருகோணமலை நகரில் விட்டு விட்டு மீண்டும் வவுனியா திரும்பிவிட்டோம். அதன்பின் மறுநாள் காலை 7.30 மணியளவில் பிறிதொருவரின் தொலைபேசியிலிருந்து மகன் எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, " அம்மா எங்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கின்றார்கள். நாங்கள் இன்னும் சாப்பிடவுமில்லை ”என்று கூறினான். அதனைதொடர்ந்து, அந்த அழைப்பை துண்டித்து நாங்கள் அந்த இடைதரகருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினோம்.
அப்போது எனது மூத்த மகள் தான் அந்த தரகரிடம் கதைத்தாள்.
22ஆம் திகதி அதிகாலையிலேயே தானே புறப்பட போவதாக கூறினீர்கள் இன்னும் ஏன் அனுப்பாமல் வைத்திருக்கின்றீர்கள். அவர்களுக்கு சாப்பிடவும் ஒன்றும் கொடுக்கவில்லையாமே ” என்று வினவினாள். அதற்கு அந்த தரகர் " இல்லை. சிறிய பிரச்சினையொன்று மாலை 5.30 மணிக்கு தான் இங்கிருந்து புறப்படுகின்றார்கள். ” என்று கூறினான்.
அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மகன் பிறிதொருவரின் தொலைபேசியிலிருந்து அழைப்பை ஏற்படுத்தி " அம்மா நாங்கள் செல்லப்போகின்றோம்” என்று கண்ணீருடன் கூறினான். இதன்போது கணவரும் என்னுடனும் மகள்மார்களுடனும் கதைத்தார். அன்று எங்களுடைய வீடு கண்ணீரால் நிரம்பியது. அன்றிரவு ஒருவரும் சாப்பிடவுமில்லை. ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தோம்.
அன்றைய பொழுது கழிந்தது. மறுநாள் காலை நாங்கள் அந்த தரகருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவர்கள் சென்றுவிட்டார்களா?” என்று கேட்டோம். அதற்கு அந்த தரகர் படகில் ஏறிவிட்டார்கள். இப்போது அவர்கள் சென்றுகொண்டிருப்பார்கள். அங்கு சென்றடைய பல நாட்களாகும். அவர்கள் அங்கு சென்றடைந்தவுடன் நான் உங்களுக்கு தகவல் தருவேன் என்று கூறினார். எங்களுக்கு வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பது போல் பயமாகவிருந்தது.
நாட்களும் உருண்டோடின. அவர்களிடமிருந்து எந்தவித தகவல்களும் வரவில்லை. எனினும், அந்த தரகர் மட்டும் இரவு வேளைகளில் அடிக்கடி பணம் கேட்டு வீட்டுக்கு வந்து போவான். அன்றைய நிலையில் எங்களின் கையில் பணமிருக்கவில்லை. நாங்கள் இன்று காலை, நாளை என்று தவணை சொன்னோம். எனினும், அந்த தரகர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்வான்.
இதன்போது எனது கணவன், மகன் தொடர்பாக நாங்கள் விசாரித்தால், அவர்கள் படகில் தானே செல்கின்றார்கள். போய் சேர நாட்கள் செல்லும் , உனது மகனுக்கு பழக்கமில்லாதால் ஒரே வாந்தியாகவிருக்கின்றது. என்றெல்லாம் பொய்யான கதைகளை கூறிச்செல்வான்.
எங்களுடைய வீடு ஆண் துணையொருவர் இல்லாதது. நான் மூன்று பெண்பிள்ளைகளுடனே தனியாக வீட்டிலிருந்தேன். எனவே அடிக்கடி அந்த தரகர் வீட்டுக்கு வந்து செல்வதை பார்த்த அயலவர்கள் எங்களை வித்தியாசமாக பார்த்தார்கள். எனவே எங்களிடமிருந்த தங்க நகைகளை விற்று அந்த மிகுதி பணத்தை தரகருக்கு கொடுத்தோம். அவற்றை பெற்றுக்கொண்டவன் அதற்கு பிறகு எப்போதுமே வீட்டுக்கு வரவில்லை.
அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தினாலும் அவனுடைய தொலைபேசி நிறுத்தப்பட்டிருக்கின்றது. அதன்பின் தான் நாங்கள் அறிந்துகொண்டோம் அவன் எங்கோ தலை மறைவாகிவிட்டான் என்று.
எனது மகனிடமிருந்தும் கணவனிடமிருந்தும் இன்று தொலைபேசி அழைப்பு வரும், நாளை வரும் என்ற எதிர்பார்ப்பிலேயே மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன.
இன்று வரை அவர்கள் தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை. அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற காரணத்தினால் நாங்கள் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்திலும் சென்று முறைப்பாடு செய்யவில்லை.
இதுவரை சர்வதேச புலம்பெயர்வோருக்கான நிறுவனத்தில் மட்டுமே இது தொடர்பாக அறிவித்துள்ளோம். ஆயினும் இதுவரை எங்களுக்கு காத்திரமான எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
இன்று எனது மூத்த மகள் லண்டனிலுள்ள அவருடைய கணவரிடம் சென்றுவிட்டாள். கடைசி மகள் கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தில் கல்வி கற்கின்றாள். எனது இரண்டாவது மகள் வவுனியாவிலுள்ள சிறிய கடையொன்றில் தொழில் செய்கின்றாள். அவளுடைய வருமானத்தில் தான் இன்று நான் குடும்பத்தை நடாத்தி வருகின்றேன்...
வீரகேசரி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக