மலையக மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகங்களை வாங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
ஒரு சிறுநீரகத்தை வழங்குவதற்கு குறித்த தரகர் நோயாளர்களிடமிருந்து இந்திய மதிப்பில் முப்பது இலட்சம் ரூபாவினை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பெற்றுக்கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறுநீரகம் வழங்குவோருக்கு கொடுக்கப்பட்டதுடன் தரகர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்தளிக்கப்பட்டது
சிறுநீரக வர்த்தகம் இன்று நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு குறிப்பாக இந்தி யர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யும் தளமாகவும், சிறுநீரகம் பெற்றுக்கொள்வதற்கான இடமாகவும் இலங்கை இருந்து வந்துள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.
முன்னரெல்லாம் சிறுநீரக மாற்று சிகி ச்சை மற்றும் சத்திர சிகிச்சைகளுக்காக இந்தியாவுக்கு செல்வதையே இலங்கையர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது சிகிச்சைகளை இலங்கையிலே செய்துகொள்ளக்கூடிய வசதிகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளமை பெருமைப்படக்கூடியது. எனினும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும், வைத்திய தர்மத்தை மீறுவதும் அதிக பணம் சம்பாதிப்பதற்கும் அதனைப் பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
இந்தியாவில் சட்டவிரோதமான முறை யில் வறிய மக்களை ஏமாற்றி அவர்களின் சிறுநீரகங்களை அபகரிப்பது பற்றியும், சிலரை கடத்திச்சென்று அவர்களது சிறுநீரகங்களை கொள்ளையிடுவது பற்றியும், சிலரை மயக்கமுறச்செய்து அவர்களின் சிறுநீரகங்களை கொள்ளையிட்ட சம்பவங்கள் பற்றியும் நாம் செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கின்றோம். இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று கூட ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அதேவேளை சிலர் வறுமை, குடும்ப கஷ்டம் போன்ற பிரச்சினைகளுக்காக தமது சிறுநீரகங்களை விற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஆனால், பெருமளவில் பணம் சம்பாதிப்பதற்காக சில இந்தியர்கள் இந்த சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இந்தியாவிலுள்ள சில சிறுநீரக தரகர்கள் அந்த நாட்டிலுள்ள வறியவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து இங்கு சில தனி யார் வைத்தியசாலைகளில் வைத்து இல ங்கை வைத்தியர்களின் உதவியுடன் சிறுநீர கங்களை தேவையானவர்களுக்கு வழ ங்கி பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
இது இவ்வாறிருக்க இலங்கையிலு ள்ள அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டு ள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த விசேட இரகசிய பொலிஸ் குழுவொன்று இலங்கையில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியரான தினேஷ் என்பவரின் மரணம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கை வந்திருந்தது.
விசாரணையின்போது தினேஷ் மாரடைப்பினால் மரணமடைந்ததாக பிரேதப்பரிசோதனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தனர். இறந்தவரின் சகோதரனின் சாட்சியத்தில், தனது சகோதரனான தினேஷ் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகவே இலங்கைக்கு சென்றதாகவும் 2014 மார்ச் 30ஆம் திகதி சிறுநீரகம் அகற்றப்பட்டதன் காரணமாக அவர் இறந்ததாகவும் தெரியவந்ததாக கூறினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் ஆதாரங்கள் பெறப்பட்டன. மின்னஞ்சல்களை ஆராய்ந்ததன் மூலம் உயிரிழந்தவருக்கும், சிறுநீரக தரகர் ஒருவருக்கும் தொடர்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. தினேஷ் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகவே இலங்கை சென்றிருந்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன் தினேஷ் மேலும் இருவருடன் தனது சிறுநீரகங்களை விற்பனை செய்யவே இலங்கைக்கு சென்றிருந்தார் என்பதும் தெரியவந்தது.
தினேஷின் மரணத்தின் பின்னணியில் சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களின் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பது பற்றி இந்திய பொலிஸார் அறிந்துகொண்டனர். தொடர்ந்து மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் பல கோணங்களில் மேற்கொள்ளப்பட்டன. . இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் கவனம் சிறுநீரகங்களை பறிகொடுத்தோர் மீது திரும்பியது. அவர்களைக் குறிவைத்து தேடுதலைத் தொடர்ந்தனர். அவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்த போது, இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு பிரதான முகவராக செயற்பட்ட அஹமதாபாத்தைச் சேர்ந்த சுரேஷ் பிரஜாபதி என்பவர் அடையாளம் காணப்பட்டார்
இந்த நபரே இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தரகராக செயற்பட்டுள்ளார். இவரையும் இவரது உதவியாளர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக பிரஜாபதியை விசாரித்தபோது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தரகராக செயற்பட்டதை ஒப்புக்கொண்டார். அது தவிர, இந்த சட்டவிரோத செயற்பாடு பற்றிய பல்வேறு தகவல்களையும் பொலிஸாரிடம் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தில் பெறப்பட்ட தகவல்கள் வருமாறு:
ஏழைகள், படிப்பறிவற்றவர்கள், வேலைவாய்ப்பின்றி நிர்க்கதியானோர் போன்றவர்களின் சிறுநீரகங்களே குறைந்த தொகைக்கு பெறப்பட்டுள்ளன. ஒருசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பல ஆயிரம் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டது. குறைந்த செலவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இலங்கை வைத்தியசாலைகள் சிறந்தவையென அறியப்பட்டது. குறைந்த செலவில் மாத்திரமின்றி பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கை வைத்தியசாலைகள் பொருத்தமானதாகவும் இருந்தன.
இவ்வாறான அறுவைச்சிகிச்சைகளுக்கு இலங்கையில் சட்ட சிக்கல்கள் இருக்கவில்லை. இதன் காரணமாகவே அங்குள்ள வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் தாராளமாக இடம்பெற்றன. இலங்கை சட்டத்தின்படி சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவேண்டுமானால் வைத்தியசாலையின் அங்கீகாரம் பெற்ற மூன்று பேரடங்கிய வைத்தியர்கள் குழுவின் அங்கீகாரம் தேவை. அந்த குழு முன்னிலையில் சிறுநீரகத்தை வழங்குபவர், தான் சுயமாகவே சிறுநீரகத்தை வழங்குவதாக ஒப்புக்கொள்ளவேண்டும்.
இலங்கையின் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவரும் அரசாங்க வைத்தியசாலையின் இரண்டு வைத்தியர்களும் குழுவில் அங்கம் வகிப்பர். இந்த அறிக்கையைப் பெறுவதற்கு மாத்திரம் 500 அமெரிக்க டொலர் வரை லஞ்சமாக வழங்கப்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நபர்கள் அஹமதாபாத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் வைத்து ஆர ம்ப பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இலங்கை அனுப்பப்படுவர்.
சிறுநீரகங்களை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவோர் 05-06 பேர் கொண்ட குழுவாகவே அழைத்துவரப்படுவர் இந்தக்குழுவிற்கான தங்கு மிட, உணவு வசதிகளும் இலங்கையில் செய்துகொடுக்கப்பட்டன.
ஒரு சிறுநீரகத்தை வழங்குவதற்கு குறித்த தரகர் நோயாளர்களிடமிருந்து இந்திய மதிப்பில் முப்பது இலட்சம் ரூபாவினை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பெற்றுக்கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறுநீரகம் வழங்குவோருக்கு கொடுக்கப்பட்டதுடன் தரகர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்தளிக்கப்பட்டது
ஆரம்பத்தில் சிறுநீரகம் வழங்குவோரிடம் பணம் தருவதாகக்கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொண்டு, சிறுநீரக நோயாளர் களைக் கண்டறிந்து அவர்களைத் தொ டர்புகொண்டு அறுவைசிகிச்சைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளன. இந்த சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு கொல்கத்தா மற்றும்
சென்னையில் மாத்திரம் 95 முகவர்கள் செயற்படுகின்றனர். இதுவரை சுமார் 60
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் இல ங்கையில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகள் நான்கில் இலங்கை யைச் சேர்ந்த நான்கு பெண் வைத்தியர் கள் உட்பட ஆறு வைத்தியர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகளில் ஈடுபட்டுவந்துள்ளனர் என பிரஜாபதி அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த சட்டவிரோத செயற்பாடுகள் மூலமாக தரகர் பிரஜாபதி கோடீஸ்வராகியுள்ளதுடன் சமீபத்தில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் பெறுமதியில் சொகுசு வீடொன்றினை வாங்கியுள்ளார்.
இதேவேளை இந்த சிறுநீரக மோசடிக்காரர்களிடம் இலங்கையைச் சேர்ந்த வறிய, படிப்பறிவற்ற தோட்டத்தொழிலாளர்களும் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அண்மையில் டயகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது மலையகத்தில் வறுமையில் வாடும் தோட்டத்தொழிலாளர்களைக் குறிவை த்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறான சிறுநீரக மோசடி நபர்கள் குறித்து தோட்ட மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமெனவும் தோட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலையக மக்களை இலக்கு வைத்து இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டுவருவதாகவும் இவ்வியாபாரத்தில் சில தரகர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அந்தத் தரகர்கள் வறிய தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலைமைக்குள்ளானவர்கள் தமக்கு நேர்ந்த நிலைமை பற்றி வெளியில் சொல்வதற்கு அச்சப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் பகுதியிலுள்ள தோட்ட இளைஞர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி வைத்தியசாலை ஒன்றில் வைத்து அறுவைச் சிகிச்சை மூலம் சிறுநீரகம் ஒன்றைப் பெற்றுக்கொண்ட சிலர் குறிப்பிட்டபடி அவருக்குப் பணத்தைக் கொடுக்காமல் வெளிநாடு சென்றுவிட்டதாக வெளியான தகவல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகங்களை வாங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் இந்த சட்டவிரோத நடவடிக்கை இலங்கையிலும் வியாபித்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விடயத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமன்றி இலங்கையின் சகல மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இதேவேளை இலங்கையின் சில வைத்தியசாலைகளில் சிறுநீரகங்களை விற் பனை செய்யும் சட்டவிரோத செயற்பாடு கள் இடம்பெறுவதாக வெளியான முறை ப்பாடுகளைத்தொடர்ந்து, வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைகள் செய்வதை இடைநிறுத்துமாறு வைத்தியசாலைகளுக்கு அரசாங்கம் அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தது.
இதன் மூலம் வெளிநாட்டவர்களினால் மேற்கொள்ளப்படும் சிறுநீரக மோசடி செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் இதுதொடர்பாக முழுமையாக ஆய்வுசெய்து இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்
இதனிடையே சிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கோரிக்கையையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை இந்தியப்பிரஜைகளுக்கு இலங்கையில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டதாக சில வைத்தியர்களுக்கு எதிராக இந்தியாவில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்ய இலங்கை சுகாதார அமைச்சு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவ்வாறான அறிக்கை இதுதொடர்பாக மேலும் பல விடயங்களை வெளிப்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இலங்கை சகல உறுப்பு மாற்று சிகிச்சைகளும் இலங்கை சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துக்கமையவே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடல் உறுப்புக்களை மாற்றும் சிகிச்சை உள்ளிட்ட தேசிய உடல் உறுப்பு நன்கொடை திட்டம் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக்கும்படி சுகாதார அமைச்சிடம் இலங்கை மருத்துவர் சங்கம் கேட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மை யில் ஊடக சந்திப்பொன்றில் இலங்கை யின் தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைக்கு பின்னால் உள்ள மாபியா குறித்து இலங்கை பொலிஸ் குற்றப்புலனாய்வுபிரிவுக்கு அறிக்கையொன்று சமர்ப்பித்துள்ளது என்றும் குறித்த தனியார் வைத்தியசாலை பற்றி விசேட விசாரணைகளைத் மேற்கொள்வதற்கு அமைச்சு மட்டத்தில் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பிலான பணிப்பாளரின் கீழ் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அதற்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் இது தொடர்பிலான விசாரணைகள் இந்திய பொலிஸ் விசாரணை தகவல்களையும் கருத்திற்கொண்டு இலங்கையின் மேல்மாகாணத்துக்கு பொ றுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் கீழ் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றம் இழைத்திருக்கும் பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
தொகுப்பு: இ.சதீஸ்
வீரகேசரி
ஒரு சிறுநீரகத்தை வழங்குவதற்கு குறித்த தரகர் நோயாளர்களிடமிருந்து இந்திய மதிப்பில் முப்பது இலட்சம் ரூபாவினை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பெற்றுக்கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறுநீரகம் வழங்குவோருக்கு கொடுக்கப்பட்டதுடன் தரகர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்தளிக்கப்பட்டது
சிறுநீரக வர்த்தகம் இன்று நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு குறிப்பாக இந்தி யர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யும் தளமாகவும், சிறுநீரகம் பெற்றுக்கொள்வதற்கான இடமாகவும் இலங்கை இருந்து வந்துள்ளமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.
முன்னரெல்லாம் சிறுநீரக மாற்று சிகி ச்சை மற்றும் சத்திர சிகிச்சைகளுக்காக இந்தியாவுக்கு செல்வதையே இலங்கையர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது சிகிச்சைகளை இலங்கையிலே செய்துகொள்ளக்கூடிய வசதிகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளமை பெருமைப்படக்கூடியது. எனினும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும், வைத்திய தர்மத்தை மீறுவதும் அதிக பணம் சம்பாதிப்பதற்கும் அதனைப் பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
இந்தியாவில் சட்டவிரோதமான முறை யில் வறிய மக்களை ஏமாற்றி அவர்களின் சிறுநீரகங்களை அபகரிப்பது பற்றியும், சிலரை கடத்திச்சென்று அவர்களது சிறுநீரகங்களை கொள்ளையிடுவது பற்றியும், சிலரை மயக்கமுறச்செய்து அவர்களின் சிறுநீரகங்களை கொள்ளையிட்ட சம்பவங்கள் பற்றியும் நாம் செய்திகள் வாயிலாக கேள்விப்பட்டிருக்கின்றோம். இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று கூட ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அதேவேளை சிலர் வறுமை, குடும்ப கஷ்டம் போன்ற பிரச்சினைகளுக்காக தமது சிறுநீரகங்களை விற்றுள்ளதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஆனால், பெருமளவில் பணம் சம்பாதிப்பதற்காக சில இந்தியர்கள் இந்த சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பது தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இந்தியாவிலுள்ள சில சிறுநீரக தரகர்கள் அந்த நாட்டிலுள்ள வறியவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து இங்கு சில தனி யார் வைத்தியசாலைகளில் வைத்து இல ங்கை வைத்தியர்களின் உதவியுடன் சிறுநீர கங்களை தேவையானவர்களுக்கு வழ ங்கி பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்ட சம்பவங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன.
இது இவ்வாறிருக்க இலங்கையிலு ள்ள அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டு ள்ளமை தொடர்பிலான தகவல்கள் தற் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக தோட்டத்தொழிலாளர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த விசேட இரகசிய பொலிஸ் குழுவொன்று இலங்கையில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியரான தினேஷ் என்பவரின் மரணம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கை வந்திருந்தது.
விசாரணையின்போது தினேஷ் மாரடைப்பினால் மரணமடைந்ததாக பிரேதப்பரிசோதனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தனர். இறந்தவரின் சகோதரனின் சாட்சியத்தில், தனது சகோதரனான தினேஷ் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகவே இலங்கைக்கு சென்றதாகவும் 2014 மார்ச் 30ஆம் திகதி சிறுநீரகம் அகற்றப்பட்டதன் காரணமாக அவர் இறந்ததாகவும் தெரியவந்ததாக கூறினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் ஆதாரங்கள் பெறப்பட்டன. மின்னஞ்சல்களை ஆராய்ந்ததன் மூலம் உயிரிழந்தவருக்கும், சிறுநீரக தரகர் ஒருவருக்கும் தொடர்புகள் இருந்தமை கண்டறியப்பட்டது. தினேஷ் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகவே இலங்கை சென்றிருந்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன் தினேஷ் மேலும் இருவருடன் தனது சிறுநீரகங்களை விற்பனை செய்யவே இலங்கைக்கு சென்றிருந்தார் என்பதும் தெரியவந்தது.
தினேஷின் மரணத்தின் பின்னணியில் சட்டவிரோதமான முறையில் சிறுநீரகங்களின் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்றிருப்பது பற்றி இந்திய பொலிஸார் அறிந்துகொண்டனர். தொடர்ந்து மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் பல கோணங்களில் மேற்கொள்ளப்பட்டன. . இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் கவனம் சிறுநீரகங்களை பறிகொடுத்தோர் மீது திரும்பியது. அவர்களைக் குறிவைத்து தேடுதலைத் தொடர்ந்தனர். அவர்களை கண்டுபிடித்து விசாரணை செய்த போது, இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு பிரதான முகவராக செயற்பட்ட அஹமதாபாத்தைச் சேர்ந்த சுரேஷ் பிரஜாபதி என்பவர் அடையாளம் காணப்பட்டார்
இந்த நபரே இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தரகராக செயற்பட்டுள்ளார். இவரையும் இவரது உதவியாளர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக பிரஜாபதியை விசாரித்தபோது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தரகராக செயற்பட்டதை ஒப்புக்கொண்டார். அது தவிர, இந்த சட்டவிரோத செயற்பாடு பற்றிய பல்வேறு தகவல்களையும் பொலிஸாரிடம் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தில் பெறப்பட்ட தகவல்கள் வருமாறு:
ஏழைகள், படிப்பறிவற்றவர்கள், வேலைவாய்ப்பின்றி நிர்க்கதியானோர் போன்றவர்களின் சிறுநீரகங்களே குறைந்த தொகைக்கு பெறப்பட்டுள்ளன. ஒருசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பல ஆயிரம் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டது. குறைந்த செலவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இலங்கை வைத்தியசாலைகள் சிறந்தவையென அறியப்பட்டது. குறைந்த செலவில் மாத்திரமின்றி பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கை வைத்தியசாலைகள் பொருத்தமானதாகவும் இருந்தன.
இவ்வாறான அறுவைச்சிகிச்சைகளுக்கு இலங்கையில் சட்ட சிக்கல்கள் இருக்கவில்லை. இதன் காரணமாகவே அங்குள்ள வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சிகிச்சைகள் தாராளமாக இடம்பெற்றன. இலங்கை சட்டத்தின்படி சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவேண்டுமானால் வைத்தியசாலையின் அங்கீகாரம் பெற்ற மூன்று பேரடங்கிய வைத்தியர்கள் குழுவின் அங்கீகாரம் தேவை. அந்த குழு முன்னிலையில் சிறுநீரகத்தை வழங்குபவர், தான் சுயமாகவே சிறுநீரகத்தை வழங்குவதாக ஒப்புக்கொள்ளவேண்டும்.
இலங்கையின் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவரும் அரசாங்க வைத்தியசாலையின் இரண்டு வைத்தியர்களும் குழுவில் அங்கம் வகிப்பர். இந்த அறிக்கையைப் பெறுவதற்கு மாத்திரம் 500 அமெரிக்க டொலர் வரை லஞ்சமாக வழங்கப்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நபர்கள் அஹமதாபாத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் வைத்து ஆர ம்ப பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இலங்கை அனுப்பப்படுவர்.
சிறுநீரகங்களை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவோர் 05-06 பேர் கொண்ட குழுவாகவே அழைத்துவரப்படுவர் இந்தக்குழுவிற்கான தங்கு மிட, உணவு வசதிகளும் இலங்கையில் செய்துகொடுக்கப்பட்டன.
ஒரு சிறுநீரகத்தை வழங்குவதற்கு குறித்த தரகர் நோயாளர்களிடமிருந்து இந்திய மதிப்பில் முப்பது இலட்சம் ரூபாவினை பெற்றதாகவும் கூறப்படுகிறது. பெற்றுக்கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறுநீரகம் வழங்குவோருக்கு கொடுக்கப்பட்டதுடன் தரகர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்தளிக்கப்பட்டது
ஆரம்பத்தில் சிறுநீரகம் வழங்குவோரிடம் பணம் தருவதாகக்கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொண்டு, சிறுநீரக நோயாளர் களைக் கண்டறிந்து அவர்களைத் தொ டர்புகொண்டு அறுவைசிகிச்சைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளன. இந்த சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு கொல்கத்தா மற்றும்
சென்னையில் மாத்திரம் 95 முகவர்கள் செயற்படுகின்றனர். இதுவரை சுமார் 60
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் இல ங்கையில் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகள் நான்கில் இலங்கை யைச் சேர்ந்த நான்கு பெண் வைத்தியர் கள் உட்பட ஆறு வைத்தியர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகளில் ஈடுபட்டுவந்துள்ளனர் என பிரஜாபதி அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்த சட்டவிரோத செயற்பாடுகள் மூலமாக தரகர் பிரஜாபதி கோடீஸ்வராகியுள்ளதுடன் சமீபத்தில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் பெறுமதியில் சொகுசு வீடொன்றினை வாங்கியுள்ளார்.
இதேவேளை இந்த சிறுநீரக மோசடிக்காரர்களிடம் இலங்கையைச் சேர்ந்த வறிய, படிப்பறிவற்ற தோட்டத்தொழிலாளர்களும் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அண்மையில் டயகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது மலையகத்தில் வறுமையில் வாடும் தோட்டத்தொழிலாளர்களைக் குறிவை த்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்வாறான சிறுநீரக மோசடி நபர்கள் குறித்து தோட்ட மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமெனவும் தோட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலையக மக்களை இலக்கு வைத்து இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டுவருவதாகவும் இவ்வியாபாரத்தில் சில தரகர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அந்தத் தரகர்கள் வறிய தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலைமைக்குள்ளானவர்கள் தமக்கு நேர்ந்த நிலைமை பற்றி வெளியில் சொல்வதற்கு அச்சப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹட்டன் பகுதியிலுள்ள தோட்ட இளைஞர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபா தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி வைத்தியசாலை ஒன்றில் வைத்து அறுவைச் சிகிச்சை மூலம் சிறுநீரகம் ஒன்றைப் பெற்றுக்கொண்ட சிலர் குறிப்பிட்டபடி அவருக்குப் பணத்தைக் கொடுக்காமல் வெளிநாடு சென்றுவிட்டதாக வெளியான தகவல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகங்களை வாங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் இந்த சட்டவிரோத நடவடிக்கை இலங்கையிலும் வியாபித்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விடயத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமன்றி இலங்கையின் சகல மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இதேவேளை இலங்கையின் சில வைத்தியசாலைகளில் சிறுநீரகங்களை விற் பனை செய்யும் சட்டவிரோத செயற்பாடு கள் இடம்பெறுவதாக வெளியான முறை ப்பாடுகளைத்தொடர்ந்து, வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைகள் செய்வதை இடைநிறுத்துமாறு வைத்தியசாலைகளுக்கு அரசாங்கம் அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தது.
இதன் மூலம் வெளிநாட்டவர்களினால் மேற்கொள்ளப்படும் சிறுநீரக மோசடி செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் இதுதொடர்பாக முழுமையாக ஆய்வுசெய்து இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்
இதனிடையே சிறுநீரக மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கோரிக்கையையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை இந்தியப்பிரஜைகளுக்கு இலங்கையில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டதாக சில வைத்தியர்களுக்கு எதிராக இந்தியாவில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விசாரணை செய்ய இலங்கை சுகாதார அமைச்சு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அவ்வாறான அறிக்கை இதுதொடர்பாக மேலும் பல விடயங்களை வெளிப்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இலங்கை சகல உறுப்பு மாற்று சிகிச்சைகளும் இலங்கை சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துக்கமையவே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடல் உறுப்புக்களை மாற்றும் சிகிச்சை உள்ளிட்ட தேசிய உடல் உறுப்பு நன்கொடை திட்டம் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக்கும்படி சுகாதார அமைச்சிடம் இலங்கை மருத்துவர் சங்கம் கேட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மை யில் ஊடக சந்திப்பொன்றில் இலங்கை யின் தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைக்கு பின்னால் உள்ள மாபியா குறித்து இலங்கை பொலிஸ் குற்றப்புலனாய்வுபிரிவுக்கு அறிக்கையொன்று சமர்ப்பித்துள்ளது என்றும் குறித்த தனியார் வைத்தியசாலை பற்றி விசேட விசாரணைகளைத் மேற்கொள்வதற்கு அமைச்சு மட்டத்தில் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பிலான பணிப்பாளரின் கீழ் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அதற்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் இது தொடர்பிலான விசாரணைகள் இந்திய பொலிஸ் விசாரணை தகவல்களையும் கருத்திற்கொண்டு இலங்கையின் மேல்மாகாணத்துக்கு பொ றுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் கீழ் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றம் இழைத்திருக்கும் பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
தொகுப்பு: இ.சதீஸ்
வீரகேசரி



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக