ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

சிறுநீரக சந்தையாக இலங்கை

மலை­யக மக்­களின் வறு­மையைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு அதிக பணம் தரு­வதாக ஆசை­வார்த்தை கூறி இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் பெரும்­பாலும் வெளி­நா­டு­களைச் சேர்ந்த­வர்­களே இலங்­கையில் பணம் கொடுத்து சிறு­நீ­ர­கங்­களை வாங்­கு­வ­தா­கவும் இரா­ஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்­துள்ளார்

ஒரு சிறு­நீ­ர­கத்தை வழங்­கு­வ­தற்கு குறித்த தரகர் நோயா­ளர்­க­ளி­ட­மி­ருந்து இந்­திய மதிப்பில் முப்­பது இலட்சம் ரூபா­வினை பெற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. பெற்­றுக்­கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறு­நீ­ரகம் வழங்­கு­வோ­ருக்கு கொடுக்­கப்­பட்­ட­துடன் தர­கர்கள் மற்றும் இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது



சிறு­நீ­ரக வர்த்­தகம் இன்று நாட்டின் முக்­கிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது. வெளி­நாட்டுப் பிர­ஜை­க­ளுக்கு குறிப்­பாக இந்­தி­ யர்­க­ளுக்கு சிறு­நீ­ரக மாற்று அறு­வைச்­சி­கிச்சை செய்யும் தள­மா­கவும், சிறு­நீ­ரகம் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான இட­மா­கவும் இலங்கை இருந்து வந்­துள்­ளமை தொடர்­பான தக­வல்கள் தற்­போது வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

முன்­ன­ரெல்லாம் சிறு­நீ­ரக மாற்று சிகி ச்சை மற்றும் சத்­திர சிகிச்­சை­க­ளுக்­காக இந்­தி­யா­வுக்கு செல்­வ­தையே இலங்­கை­யர்கள் வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­தனர். ஆனால், தற்­போது சிகிச்­சை­களை இலங்­கை­யிலே செய்­து­கொள்­ளக்­கூ­டிய வச­தி­களும் வாய்ப்­பு­களும் கிடைத்­துள்­ளமை பெரு­மைப்­ப­டக்­கூ­டி­யது. எனினும், சட்­ட­வி­ரோ­த­மான செயற்­பா­டு­க­ளுக்கும், வைத்­திய தர்­மத்தை மீறு­வதும் அதிக பணம் சம்­பா­திப்­ப­தற்கும் அதனைப் பயன்­ப­டுத்­து­வதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­ததொன்­றாகும்.

இந்­தி­யாவில் சட்­ட­வி­ரோ­த­மான முறை யில் வறிய மக்­களை ஏமாற்றி அவர்­களின் சிறு­நீ­ர­கங்­களை அப­க­ரிப்­பது பற்­றியும், சிலரை கடத்­திச்­சென்று அவர்­க­ளது சிறு­நீ­ர­கங்­களை கொள்­ளை­யி­டு­வது பற்­றியும், சிலரை மயக்­க­மு­றச்­செய்து அவர்­களின் சிறு­நீ­ர­கங்­களை கொள்­ளை­யிட்ட சம்­ப­வங்கள் பற்­றியும் நாம் செய்­திகள் வாயி­லாக கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றோம். இப்­ப­டி­யெல்லாம் நடக்­கி­றதா? என்று கூட ஆச்­ச­ரி­யப்­பட்­டி­ருக்­கிறோம். அதே­வேளை சிலர் வறுமை, குடும்ப கஷ்டம் போன்ற பிரச்­சி­னை­க­ளுக்­காக தமது சிறு­நீ­ர­கங்­களை விற்­றுள்­ள­தா­கவும் கேள்­விப்­பட்­டி­ருக்­கின்றோம்.

ஆனால், பெரு­ம­ளவில் பணம் சம்­பா­திப்­ப­தற்­காக சில இந்­தி­யர்கள் இந்த சிறு­நீ­ரக வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டி­ருப்­பது தற்­போது கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது இந்­தி­யா­வி­லுள்ள சில சிறு­நீ­ரக தர­கர்கள் அந்த நாட்­டி­லுள்ள வறி­ய­வர்­களை இலங்­கைக்கு அழைத்­து­வந்து இங்கு சில தனி யார் வைத்­தி­ய­சா­லை­களில் வைத்து இல ங்கை வைத்­தி­யர்­களின் உத­வி­யுடன் சிறு­நீ­ர­ கங்­களை தேவை­யா­ன­வர்­க­ளுக்கு வழ ங்கி பெருந்­தொகைப் பணத்தைப் பெற்­றுக்­கொண்ட சம்­ப­வங்கள் தற்­போது அம்­ப­ல­மா­கி­யுள்­ளன.

இது இவ்­வா­றி­ருக்க இலங்­கை­யி­லு ள்ள அப்­பாவி மக்­களும் பாதிக்­கப்­பட்டு ள்­ளமை தொடர்பிலான தக­வல்கள் தற் போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. குறிப்­பாக தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களும் இதனால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் கூறு­கின்­றன.

இந்த சிறு­நீ­ரக வர்த்­தகம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தைச் சேர்ந்த விசேட இர­க­சிய பொலிஸ் குழு­வொன்று இலங்­கையில் வைத்து மர்­ம­மான முறையில் உயி­ரி­ழந்த இந்­தி­ய­ரான தினேஷ் என்­ப­வரின் மரணம் தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கு இலங்கை வந்­தி­ருந்­தது.

விசா­ர­ணை­யின்­போது தினேஷ் மார­டைப்­பினால் மர­ண­ம­டைந்­த­தாக பிரே­தப்­ப­ரி­சோ­த­னையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. எனினும், பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை தொடர்ந்­தனர். இறந்­த­வரின் சகோ­த­ரனின் சாட்­சி­யத்தில், தனது சகோ­த­ர­னான தினேஷ் சிறு­நீ­ரக மாற்று சிகிச்­சைக்­கா­கவே இலங்­கைக்கு சென்­ற­தா­கவும் 2014 மார்ச் 30ஆம் திகதி சிறு­நீ­ரகம் அகற்­றப்­பட்­டதன் கார­ண­மாக அவர் இறந்­த­தா­கவும் தெரி­ய­வந்­த­தாக கூறினார். இதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மின்­னஞ்­சல்கள் மற்றும் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் ஆதா­ரங்கள் பெறப்­பட்­டன. மின்­னஞ்­சல்­களை ஆராய்ந்­ததன் மூலம் உயி­ரி­ழந்­த­வ­ருக்கும், சிறு­நீ­ரக தரகர் ஒரு­வ­ருக்கும் தொடர்­புகள் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது. தினேஷ் சிறு­நீ­ரக மாற்று சிகிச்­சைக்­கா­கவே இலங்கை சென்­றி­ருந்தார் என்­பதும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

அத்­துடன் தினேஷ் மேலும் இரு­வ­ருடன் தனது சிறு­நீ­ர­கங்­களை விற்­பனை செய்­யவே இலங்­கைக்கு சென்­றி­ருந்தார் என்­பதும் தெரி­ய­வந்­தது.
தினேஷின் மர­ணத்தின் பின்­ன­ணியில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சிறு­நீ­ர­கங்­களின் வர்த்­தக செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருப்­பது பற்றி இந்­திய பொலிஸார் அறிந்­து­கொண்­டனர். தொடர்ந்து மேல­திக விசா­ர­ணைகள் பொலி­ஸாரால் பல கோணங்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டன. . இதனைத் தொடர்ந்து பொலி­ஸாரின் கவனம் சிறு­நீ­ர­கங்­களை பறி­கொ­டுத்தோர் மீது திரும்­பி­யது. அவர்­களைக் குறி­வைத்து தேடு­தலைத் தொடர்ந்­தனர். அவர்­களை கண்­டு­பி­டித்து விசா­ரணை செய்த போது, இந்த சட்­ட­வி­ரோத செயற்­பாட்­டிற்கு பிர­தான முக­வ­ராக செயற்­பட்ட அஹ­ம­தா­பாத்தைச் சேர்ந்த சுரேஷ் பிர­ஜா­பதி என்­பவர் அடை­யாளம் காணப்­பட்டார்

இந்த நபரே இலங்­கையில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சைக்கு தர­க­ராக செயற்­பட்­டுள்ளார். இவ­ரையும் இவ­ரது உத­வி­யா­ளர்கள் இரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­தனர். இது­தொ­டர்­பாக பிர­ஜா­ப­தியை விசா­ரித்­த­போது சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சைக்கு தர­க­ராக செயற்­பட்­டதை ஒப்­புக்­கொண்டார். அது தவிர, இந்த சட்­ட­வி­ரோத செயற்­பாடு பற்­றிய பல்­வேறு தக­வல்­க­ளையும் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்தார். அவ­ரது வாக்­கு­மூ­லத்தில் பெறப்­பட்ட தக­வல்கள் வரு­மாறு:

ஏழைகள், படிப்­ப­றி­வற்­ற­வர்கள், வேலைவாய்ப்­பின்றி நிர்க்­க­தி­யானோர் போன்­ற­வர்­களின் சிறு­நீ­ர­கங்­களே குறைந்த தொகைக்கு பெறப்­பட்­டுள்­ளன. ஒரு­சி­று­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சைக்கு பல ஆயிரம் அமெ­ரிக்க டொலர் செல­வி­டப்­பட்­டது. குறைந்த செலவில் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சையை வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­வ­தற்கு இலங்கை வைத்­தி­ய­சா­லைகள் சிறந்­த­வை­யென அறி­யப்­பட்­டது. குறைந்த செலவில் மாத்­தி­ர­மின்றி பாது­காப்­பா­கவும் நம்­பிக்­கை­யா­கவும் அறுவை சிகிச்­சை­களை மேற்­கொள்ள இலங்கை வைத்­தி­ய­சா­லைகள் பொருத்­த­மா­ன­தா­கவும் இருந்­தன.

இவ்­வா­றான அறு­வைச்­சி­கிச்­சை­க­ளுக்கு இலங்­கையில் சட்ட சிக்­கல்கள் இருக்­க­வில்லை. இதன் கார­ண­மா­கவே அங்குள்ள வைத்­தி­ய­சா­லையில் சிறு­நீ­ரக மாற்று சிகிச்­சைகள் தாரா­ள­மாக இடம்­பெற்­றன. இலங்கை சட்­டத்­தின்­படி சிறு­நீ­ரக மாற்று சிகிச்சை செய்­ய­வேண்­டு­மானால் வைத்­தி­ய­சா­லையின் அங்­கீ­காரம் பெற்ற மூன்று பேர­டங்­கிய வைத்­தி­யர்கள் குழுவின் அங்­கீ­காரம் தேவை. அந்த குழு முன்­னி­லையில் சிறு­நீ­ர­கத்தை வழங்­கு­பவர், தான் சுய­மா­கவே சிறு­நீ­ர­கத்தை வழங்­கு­வ­தாக ஒப்­புக்­கொள்­ள­வேண்டும்.

இலங்­கையின் சுகா­தார அமைச்சின் அதி­காரி ஒரு­வரும் அர­சாங்க வைத்­தி­ய­சா­லையின் இரண்டு வைத்­தி­யர்­களும் குழுவில் அங்கம் வகிப்பர். இந்த அறிக்­கையைப் பெறு­வ­தற்கு மாத்­திரம் 500 அமெ­ரிக்க டொலர் வரை லஞ்­ச­மாக வழங்­கப்­பட்­டது.

சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்­சைக்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்கு அனுப்­பப்­படும் நபர்கள் அஹ­ம­தா­பாத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றில் வைத்து ஆர ம்ப பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே இலங்கை அனுப்­பப்­ப­டுவர்.

சிறு­நீ­ர­கங்­களை வழங்­கு­வ­தற்­காக இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்கு வருவோர் 05-06 பேர் கொண்ட குழு­வா­கவே அழைத்­து­வ­ரப்­ப­டுவர் இந்­தக்­கு­ழு­விற்­கான தங்­கு ­மிட, உணவு வச­தி­களும் இலங்­கையில் செய்­து­கொ­டுக்­கப்­பட்­டன.

ஒரு சிறு­நீ­ர­கத்தை வழங்­கு­வ­தற்கு குறித்த தரகர் நோயா­ளர்­க­ளி­ட­மி­ருந்து இந்­திய மதிப்பில் முப்­பது இலட்சம் ரூபா­வினை பெற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. பெற்­றுக்­கொண்ட பணத்தில் ஐந்து இலட்சம் ரூபா வரை சிறு­நீ­ரகம் வழங்­கு­வோ­ருக்கு கொடுக்­கப்­பட்­ட­துடன் தர­கர்கள் மற்றும் இத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளுக்கு 15 இலட்சம் ரூபா வரை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது

ஆரம்­பத்தில் சிறு­நீ­ரகம் வழங்­கு­வோ­ரிடம் பணம் தரு­வ­தா­கக்­கூறி சிறு­நீ­ர­கத்தை பெற்­றுக்­கொண்டு, சிறு­நீ­ரக நோயாளர்­ களைக் கண்­ட­றிந்து அவர்­களைத் தொ டர்புகொண்டு அறு­வை­சி­கிச்­சைகள் மேற்கொ ள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த சிறு­நீ­ரக மாற்று அறு­வை­சி­கிச்­சைக்கு கொல்­கத்தா மற்றும்
சென்­னையில் மாத்­திரம் 95 முக­வர்கள் செயற்­ப­டு­கின்­றனர். இது­வரை சுமார் 60
சிறு­நீ­ரக மாற்று அறு­வை­சிகிச்சைகள் இல ங்­கையில் இடம்­பெற்­றுள்­ளன.
இலங்­கையில் உள்ள பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லைகள் நான்கில் இலங்­கை யைச் சேர்ந்த நான்கு பெண் வைத்­தி­யர் கள் உட்­பட ஆறு வைத்­தி­யர்கள் சிறு­நீ­ரக மாற்று அறு­வை­சி­கிச்­சை­களில் ஈடு­பட்­டு­வந்­துள்­ளனர் என பிர­ஜா­பதி அவர் வாக்­கு­மூ­லத்தில் கூறி­யுள்ளார்.

இந்த சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் மூல­மாக தரகர் பிர­ஜா­பதி கோடீஸ்­வ­ரா­கி­யுள்­ள­துடன் சமீ­பத்தில் ஒரு கோடியே நாற்­பது இலட்சம் பெறு­ம­தியில் சொகுசு வீடொன்­றினை வாங்­கி­யுள்ளார்.

இதே­வேளை இந்த சிறு­நீ­ரக மோச­டிக்­கா­ரர்­க­ளிடம் இலங்­கையைச் சேர்ந்த வறிய, படிப்­ப­றி­வற்ற தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களும் சிக்­கி­யி­ருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் அண்­மையில் டய­கம பகு­தியில் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போது மலை­ய­கத்தில் வறு­மையில் வாடும் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களைக் குறி­வை த்து சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக வியா­பா­ரத்தில் சிலர் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் இவ்­வா­றான சிறு­நீ­ரக மோசடி நபர்கள் குறித்து தோட்ட மக்கள் அவ­தா­னத்­துடன் இருக்­க­வேண்­டு­மெ­னவும் தோட்ட மக்­களைக் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

மலை­யக மக்­களை இலக்கு வைத்து இது­போன்ற சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களை சிலர் மேற்­கொண்­டு­வ­ரு­வ­தா­கவும் இவ்­வி­யா­பா­ரத்தில் சில தர­கர்கள் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் அந்தத் தர­கர்கள் வறிய தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களை இலக்கு வைத்து செயற்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். இது­போன்ற நிலை­மைக்­குள்­ளா­ன­வர்கள் தமக்கு நேர்ந்த நிலைமை பற்றி வெளியில் சொல்­வ­தற்கு அச்­சப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

ஹட்டன் பகு­தி­யி­லுள்ள தோட்ட இளைஞர் ஒரு­வ­ருக்கு 10 இலட்சம் ரூபா தரு­வ­தாக ஆசை­வார்த்­தைகள் கூறி வைத்­தி­ய­சாலை ஒன்றில் வைத்து அறுவைச் சிகிச்சை மூலம் சிறு­நீ­ரகம் ஒன்றைப் பெற்­றுக்­கொண்ட சிலர் குறிப்­பிட்­ட­படி அவ­ருக்குப் பணத்தைக் கொடுக்­காமல் வெளி­நாடு சென்­று­விட்­ட­தாக வெளி­யான தக­வல்­க­ளையும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மலை­யக மக்­களின் வறு­மையைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு அதிக பணம் தரு­வ­தாக ஆசை­வார்த்தை கூறி இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் பெரும்­பாலும் வெளி­நா­டு­களைச் சேர்ந்­த­வர்­களே இலங்­கையில் பணம் கொடுத்து சிறு­நீ­ர­கங்­களை வாங்­கு­வ­தா­கவும் இரா­ஜாங்க அமைச்சர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இந்­தி­யாவைச் சேர்ந்­த­வர்­களால் மேற்­கொள்­ளப்­படும் இந்த சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை இலங்­கை­யிலும் வியா­பித்­துள்­ளது என்­பதை புரிந்­து­கொள்ள முடி­கி­றது. இந்த விட­யத்தில் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் மட்­டு­மன்றி இலங்­கையின் சகல மக்­களும் விழிப்­பு­ணர்­வுடன் இருக்­க­வேண்டும் என்­பதை உணர்த்­து­கி­றது.
இதே­வேளை இலங்­கையின் சில வைத்தி­ய­சா­லை­களில் சிறு­நீ­ர­கங்­களை விற் பனை செய்யும் சட்­ட­வி­ரோத செயற்பா­டு கள் இடம்­பெ­று­வ­தாக வெளி­யான முறை ப்­பா­டு­க­ளைத்­தொ­டர்ந்து, வெளி­நாட்டவர்­க­ளுக்கு சிறு­நீ­ரக மாற்று அறு­வைச்­சி­கிச்­சைகள் செய்­வதை இடை­நி­றுத்­து­மாறு வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு அர­சாங்கம் அண்­மையில் பணிப்­புரை விடுத்­தி­ருந்­தது.

இதன் மூலம் வெளி­நாட்­ட­வர்­க­ளினால் மேற்­கொள்­ளப்­படும் சிறு­நீ­ரக மோசடி செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­மு­டியும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எவ்­வா­றெ­னினும் இது­தொ­டர்­பாக முழு­மை­யாக ஆய்­வு­செய்து இத­னுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வேண்டும்

இத­னி­டையே சிறு­நீ­ரக மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கு­மாறு பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்­கக்கோன் கொழும்பு குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது. சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாய­கத்தின் கோரிக்­கை­யை­ய­டுத்தே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இதே­வேளை இந்­தி­யப்­பி­ர­ஜை­க­ளுக்கு இலங்­கையில் சிறு­நீ­ரக மாற்று சிகிச்சை மேற்­கொண்­ட­தாக சில வைத்­தி­யர்­க­ளுக்கு எதி­ராக இந்­தி­யாவில் வழக்கு தொட­ரப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் இலங்கை மருத்­துவ சங்கம் கவலை தெரி­வித்­துள்­ளது.

இந்த விடயம் தொடர்­பாக விசா­ரணை செய்ய இலங்கை சுகா­தார அமைச்சு குழு ஒன்றை அமைத்­துள்­ள­தா­கவும் அவ்­வா­றான அறிக்கை இது­தொ­டர்­பாக மேலும் பல விட­யங்­களை வெளிப்­ப­டுத்தும் என்றும் இலங்கை மருத்­துவ சங்கம் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் இலங்கை சகல உறுப்பு மாற்று சிகிச்­சை­களும் இலங்கை சுகா­தார அமைச்சின் அங்­கீ­கா­ரத்­துக்­க­மை­யவே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உடல் உறுப்­புக்­களை மாற்றும் சிகிச்சை உள்­ளிட்ட தேசிய உடல் உறுப்பு நன்­கொடை திட்டம் தொடர்­பாக தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள வழி­மு­றைகள் மற்றும் சட்­டங்­களை கடு­மை­யாக்­கும்­படி சுகா­தார அமைச்­சிடம் இலங்கை மருத்­துவர் சங்கம் கேட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன அண்­மை யில் ஊடக சந்­திப்­பொன்றில் இலங்­கை யின் தனியார் வைத்­தி­ய­சா­லை­களில் முன்­னெ­டுக்­கப்­படும் சட்­ட­வி­ரோத சிறு­நீ­ரக மாற்று அறு­வைச்­சி­கிச்­சைக்கு பின்னால் உள்ள மாபியா குறித்து இலங்கை பொலிஸ் குற்றப்­பு­ல­னாய்­வு­பி­ரி­வுக்கு அறிக்­கை­யொன்று சமர்ப்­பித்­துள்­ளது என்றும் குறித்த தனியார் வைத்­தி­ய­சாலை பற்றி விசேட விசா­ர­ணை­களைத் மேற்­கொள்­வ­தற்கு அமைச்சு மட்­டத்தில் தனியார் வைத்­தி­ய­சா­லைகள் தொடர்­பி­லான பணிப்­பா­ளரின் கீழ் மூவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்டு அதற்கு அமை­வாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மெ­னவும் தெரி­வித்தார்.

எவ்­வா­றெ­னினும் இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் இந்­திய பொலிஸ் விசா­ரணை தக­வல்­க­ளையும் கருத்­திற்­கொண்டு இலங்­கையின் மேல்­மா­கா­ணத்­துக்கு பொ றுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் கீழ் விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றம் இழைத்திருக்கும் பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

 தொகுப்பு: இ.சதீஸ் 
வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல