ஆயுள் ரேகையானது ஒரு சங்கிலியைப் போன்றோ துண்டு துண்டாகவோ அமைந்திருந்து அத்துடன் ஆரோக்கிய ரேகையும் ஆழப்பதிந்து காணப்பட்டால் அவ்விதம் அமைந்தவருக்கும் ஆரோக்கியத்துக்கும் வெகுதூரம்.
ஒருவரது ஆரோக்கியமானது அவரது வாழ்க்கை முறையால் பழக்க வழக்கங்களினால் உருவாக்கப்படுகிறது. அந்த உருவாக்கமானது அவரது கையில் குறுக்கும் நெடுக்குமாய் வரையப்பட்டுள்ள கோடுகளால் உணர்த்தப்படுகிறது.
ஆயுள், புத்தி, இருதய, விதி ரேகைகள் அனைத்தும் அவரது எதிர்காலத்தைச் சொல்லுவது போல இவைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆரோக்கிய ரேகையும் அவரது உடல் நிலை, செளக்கியம் மற்றும் ரோகங்கள் பற்றிச் சொல்கிறது. ஒரு கையிலுள்ள முக்கியமான ஏழு ரேகைகளுள் ஆரோக்கிய ரேகையும் ஒன்றென ரேகை சாத்திரம் குறிப்பிடுகின்றது. ஆனால் இந்த ரேகையானது இல்லாதிருப்பதே நல்லதென ரேகை சாஸ்திரத்தின் பிதாமகரான கைரோ குறிப்பிடுகின்றார். ஏனென்றால் நோய்கள் எதுவுமற்ற ஒரு திடமான தேகத்தையுடையவர் கையில் இந்த ரேகை இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பது அவரது கூற்றாகும். இந்த ரேகை காணப்படுவது உடம்பில் ஏதோவொரு உள்ளடங்கிய நோய் இருப்பதன் அறிகுறியாகும் என்பதை இத்தாலிய கைரேகை மேதையான திசபெரளியும் ஒத்துக் கொள்கிறார்.
ஆனால் ஒரு நேர்கோடாக இல்லாமல் அலைந்து உலைந்து வெட்டுண்டு அல்லது சிதைவுற்றுக் காணப்படுவதே நோயின் அறிகுறியென்றும் ஆயுள்ரேகையின் கிளையாக இராத அல்லது அதனுடன் தொடர்புபடாத சிதைவுகள் பின்னங்களற்ற ஸ்திரமான ஒரு ரேகையாக ஆரோக்கிய ரேகை நீண்டிருப்பது வாழ்நாளில் குன்றாத ஆரோக்கியத்தையும் தீர்க்காயுசையும் குறிப்பதாக எல்லா ரேகை சாஸ்திரிமாரும் ஒத்துக்கொள்கின்றனர்.
ஆரோக்கிய ரேகையானது ஆயுள்ரேகையின் எந்தப் பாகத்தில் அல்லது ஆயுள்ரேகை குறிப்பிடும் ஆயுளின் எத்தனையாம் வயதில் உற்பத்தியாகிறதோ அந்த வயதில் அவ்விதம் அமைந்த நபரின் ஆயுள் முடிவடையுமென ஆங்கில ரேகை சாத்திரிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அது அனுபவத்திற்கு ஒத்துவரவில்லையென இந்திய ரேகை சாத்திரிகள் பலரும் கூறுகின்றனர். ஏனெனில் ஆயுள் ரேகையிலிருந்து ஆரோக்கிய ரேகை ஆரம்பமான காலம் கடந்த பின்னரும் உயிர் வாழும் அநேகம் பேர் இதற்குச் சாட்சியாய் இருப்பதாக அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். இது விடயத்தில் ஆரோக்கிய ரேகையானது ஆயுள் ரேகையை தொடாதிருந்தால் மாத்திரமே தீர்க்காயுளுக்கு உத்தரவாதமுண்டு என தமிழ் நாட்டின் முதுபெரும் ரேகை சாத்திரியான சக்திதாசன் தமது ஆய்வு நூலொன்றில் குறிப்பிடுகிறார்.
ஆரோக்கிய ரேகையானது சந்திரமேட்டில் ஆரம்பித்து செவ்வாய் மேட்டைக்கடந்து புதன் மேடுவரை சென்றால் அது நீண்ட ஆயுளைக் குறிப்பதாகும். அவ்விதம் செல்லாமல் அது வளைந்து சந்திரமேட்டின் குறுக்கே நீண்டிருந்தால் அவ்விதம் அமைந்தவர் கடல் கடந்து பல பிரயாணங்கள் செய்வதை அது குறிக்கும். ஆயுள் ரேகையிலிருந்து அதன் கிளையாகப் பிரிந்து சந்திரமேட்டின் குறுக்கே செல்லும் பிரயாண ரேகையை விட இது சிலாக்கியமானதென ரேகை சாத்திரம் குறிப்பிடுகின்றது. முன்னது கடல் கடப்பதும் பிறநாடு சென்று முன்னேற்றம் அடைவதும் அநேகமாக பிறர் தயவில் தங்கியிருப்பதைக் குறிப்பதாகவும் பின்னது தன் முயற்சியில் முயன்று கடல் கடந்து பயணங்கள் மூலம் நல்ல சம்பாத்தியம் பெறுவதைக் குறிப்பதாகவும் அது விபரிக்கிறது.
ஆரோக்கிய ரேகை ஒரு நேர்கோடாக இல்லாமல் வளைந்து வளைந்து புதன் மேட்டை நோக்கிச் சென்றிருந்தால் அப்படி அமைந்தவர் பித்த உடம்பு உடையவரென்று அர்த்தம். அவரது உள்ளங்கையில் சதா வியர்வை ஊறியபடி இருக்கும். நீண்ட தூர பஸ், ரயில் பயணங்களில் கிறுதி பிடித்து வாந்தியெடுத்து இவர் படும் அவஸ்தை காணக் கன்றாவியாயிருக்கும். கையிலுள்ள இதர ரேகைகள் பெரும்பாலும் மெல்லியவையாக அமைந்திருந்து, ஆரோக்கிய ரேகைக்குட்பட்டும் படாமலும் அமைந்திருக்கக் காணப்பட்டால் அவ்விதம் அமைந்தவர் இளமைக்காலத்திலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்து விடப் போகிறார் என்பதன் அறிகுறி அது. ஆரோக்கிய ரேகையின் சிவப்புப் புள்ளிகள் ஆங்காங்கே காணப்படின் இருதயத்துடிப்பு அதிகமாகும். நெடுந்தூரம் நடந்தாலும் உயரமான இடங்களில் ஏற நேர்ந்தாலும் இருதயம் நின்று விடுவது போல் படபடவென்று பலமாக அடித்துக் கொள்வதை உணர்ந்து அஞ்சுவர்.
ஆரோக்கிய ரேகை மஞ்சள் நிறம் கொண்டிருந்தால் உடம்பானது இரத்தக் குறைவால் ஏற்படும் பல நோய்களின் விளைநிலமாக இருப்பதன் அறிகுறி அது. அதேவேளை ஆயுள்ரேகையில் இருந்து ஆரம்பிக்கும் ஆரோக்கிய ரேகையில் சிவப்பும் கறுப்புமான புள்ளிகள் காணப்பட்டால் அது இருதய நோயுண்டாவதன் அறிகுறியாகும். ஆரோக்கிய ரேகையானது புத்திரேகையைக் குறுக்கிடும் போது சூலக்கு போன்ற கிளை ரேகைகளுடன் காணப்பட்டால் (B) ரேகை சாத்திரம் சோதிடம், வான சாத்திரம் போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சியும் புகழும் பெறக்கூடிய சுபரூசகம் அதுவாகும்.
ஆரோக்கிய ரேகை மேல் நோக்கிச் சென்று புத்திரேகையோடு கலந்து விட அதேசமயம் ஆயுள் ரேகையிலும் குறுக்கிட்ட சிறு சிறு ரேகைகள் நெருங்கிக் காணப்பட்டால் மூளை சம்பந்தமான நோயுண்டாகும். ஆயுள், புத்தி, ஆரோக்கிய ரேகைகள் மூன்றும் சேர்ந்து சிறியதொரு முக்கோணமாக அமைந்து காணப்பட்டால் (C) சாத்திர ஆராய்ச்சியில் சோதிடம் ரேகை சாத்திரம் மற்றும் வானவியலில் ஆர்வமும் அவற்றில் தீவிரமாய் ஈடுபட்டால் பின்னே வரப்போவதை முன்னே மொழியும் சூட்சுமமான ஞானதிருஷ்டியும் அதனால் புகழுமுண்டாகும். இத்தகையோர் தெய்வ உபாசனையில் ஈடுபட்டால் அவர் வழியாக தெய்வம் பேசுமாம். ஆனால் இம்முக்கோணத்தின் மத்தியில் ஒரு நட்சத்திரக் குறி அமைந்திருப்பது சிறப்பான பலனைத்தராது. அது மாலைக்கண் நோயிருப்பதன் அறிகுறியாம்.
அதேசமயம் ஆரோக்கிய ரேகையில் ஒரு நட்சத்திரக்குறி காணப்படுவது உயிராபத்தைத் தராது. அது அன்னாருக்கு புத்திர சந்தானமெதுவும் தரமுடியாத மலட்டுத்தன்மை அவரது உடலோடொட்டி இருப்பதை அறிவிப்பதாகும். ஆரோக்கிய ரேகை சுக்கிர மேட்டிலிருந்து உற்பத்தியாவதும் சரியல்ல. (D) அத்தகையவர் சமூக கலாசாரம் பண்பாடுகள் யாவும் தமது முன்னேற்றத்திற்குத் தடையானவை என்ற எண்ணமும் தான்தோன்றித்தனமான போக்கும் கொண்டவர். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
ஆயுள் ரேகையானது ஒரு சங்கிலியைப் போன்றோ துண்டு துண்டாகவோ அமைந்திருந்து அத்துடன் ஆரோக்கிய ரேகையும் ஆழப்பதிந்து காணப்பட்டால் அத்தகையவருக்கும் ஆரோக்கியத்துக்கும் வெகு தூரம். மருந்தும் கையுமாக முக்கலும் முனகலுமாக எப்போதும் தம்மை ஒரு நோயாளியாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்.
ஒன்றின் பக்கத்திலொன்றாய் இரட்டை ஆரோக்கிய ரேகைகள் புதன் மேடுவரை சென்றிருக்கக் காணப்பட்டால் அத்தகையவர் நல்ல ஆரோக்கியசாலியாகவும் பலசாலியாகவும் காணப்படுவார். அத்துடன் உடற்பயிற்சிகள், விளையாட்டுக்களில் தேர்ந்து வெற்றி வாகை சூடுகிறவராயுமிருப்பார். காரைக்கட்டியிழுத்தல், நெஞ்சில் பார ஊர்தியை ஏற்றுதல் போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்களும் இத்தகையோரே.
புத்தி மற்றும் இருதய ரேகைகளுக்கிடையில் ஆரோக்கிய ரேகையில் தீவுக்குறி காணப்பட்டால் (E) மூக்கு, தொண்டை பற்றிய நோயைக் குறிக்கும். ஆரோக்கிய ரேகையில் ஒரு தீவானது (F) புத்தி ரேகையின் நடுவே அமைந்திருந்தால் மார்பு அல்லது ஈரல் பற்றிய நோய்கள் பீடிக்கப்போவதை அல்லது பீடித்திருப்பதை அது காட்டும் குழல் போல் வளைந்த கைவிரல் நகங்கள் இதனை ருசுப்படுத்தும். ஆரோக்கிய ரேகையானது உற்பத்தியில் சந்திரமேட்டின் அடிப்புறத்தில் ஒரு வில்வளைவுடன் ஆரம்பமாகி தங்கு தடைகள் சிதைவுகள் பின்னங்களில்லாமல் நேரே புதன் மேட்டில் சென்று முடிந்திருந்தால் நீண்ட ஆயுளையும் நோய்நொடிகளில்லாத சுக வாழ்வையும் அது குறிப்பதாகும்.
புதன் மேடு நோக்கிச் செல்லும் ஆரோக்கிய ரேகையானது செவ்வாய் மேட்டின் திசை திரும்பி சூரிய மேட்டை நோக்கியிருந்தால் (J) செய்யும் தொழில்கள் நாளாந்தம் ஓங்கி செல்வம் செழிக்குமென ரேகை சாத்திரம் சொல்கிறது. ஆரோக்கிய ரேகை உற்பத்தியில் இரு கிளைகளாக அதிலொரு கிளை ஆயுள்ரேகையைக் குறுக்கிட்டு சுக்கிர மேட்டுக்குள் சென்றிருக்குமானால் (K) அத்தகையவருக்கு மரணம் தன்னை நெருங்கி விட்டதான பிரமை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்குமாம். சாதாரணமாய் தனக்கு நேரும் வியாதி வருத்தம் விபத்துக்களைக் கூட பெரிதாய்க் கற்பனை பண்ணி அஞ்சி நடுங்குவார். ஆனால் அவ்விதம் அற்பாயுளில் வாழ்வு முடியுமா என்பது குறித்து அவரது கையில் ஆயுள்ரேகையின் அமைப்பை அவதானித்தே அறிய வேண்டும். ஆயுள் ரேகையானது அதன் இறுதிவரை சீராகக் சென்றால் மரணம் குறித்து அஞ்ச வேண்டியதில்லை.
திருவோணம்
ஒருவரது ஆரோக்கியமானது அவரது வாழ்க்கை முறையால் பழக்க வழக்கங்களினால் உருவாக்கப்படுகிறது. அந்த உருவாக்கமானது அவரது கையில் குறுக்கும் நெடுக்குமாய் வரையப்பட்டுள்ள கோடுகளால் உணர்த்தப்படுகிறது.
ஆயுள், புத்தி, இருதய, விதி ரேகைகள் அனைத்தும் அவரது எதிர்காலத்தைச் சொல்லுவது போல இவைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆரோக்கிய ரேகையும் அவரது உடல் நிலை, செளக்கியம் மற்றும் ரோகங்கள் பற்றிச் சொல்கிறது. ஒரு கையிலுள்ள முக்கியமான ஏழு ரேகைகளுள் ஆரோக்கிய ரேகையும் ஒன்றென ரேகை சாத்திரம் குறிப்பிடுகின்றது. ஆனால் இந்த ரேகையானது இல்லாதிருப்பதே நல்லதென ரேகை சாஸ்திரத்தின் பிதாமகரான கைரோ குறிப்பிடுகின்றார். ஏனென்றால் நோய்கள் எதுவுமற்ற ஒரு திடமான தேகத்தையுடையவர் கையில் இந்த ரேகை இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பது அவரது கூற்றாகும். இந்த ரேகை காணப்படுவது உடம்பில் ஏதோவொரு உள்ளடங்கிய நோய் இருப்பதன் அறிகுறியாகும் என்பதை இத்தாலிய கைரேகை மேதையான திசபெரளியும் ஒத்துக் கொள்கிறார்.
ஆனால் ஒரு நேர்கோடாக இல்லாமல் அலைந்து உலைந்து வெட்டுண்டு அல்லது சிதைவுற்றுக் காணப்படுவதே நோயின் அறிகுறியென்றும் ஆயுள்ரேகையின் கிளையாக இராத அல்லது அதனுடன் தொடர்புபடாத சிதைவுகள் பின்னங்களற்ற ஸ்திரமான ஒரு ரேகையாக ஆரோக்கிய ரேகை நீண்டிருப்பது வாழ்நாளில் குன்றாத ஆரோக்கியத்தையும் தீர்க்காயுசையும் குறிப்பதாக எல்லா ரேகை சாஸ்திரிமாரும் ஒத்துக்கொள்கின்றனர்.
ஆரோக்கிய ரேகையானது ஆயுள்ரேகையின் எந்தப் பாகத்தில் அல்லது ஆயுள்ரேகை குறிப்பிடும் ஆயுளின் எத்தனையாம் வயதில் உற்பத்தியாகிறதோ அந்த வயதில் அவ்விதம் அமைந்த நபரின் ஆயுள் முடிவடையுமென ஆங்கில ரேகை சாத்திரிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அது அனுபவத்திற்கு ஒத்துவரவில்லையென இந்திய ரேகை சாத்திரிகள் பலரும் கூறுகின்றனர். ஏனெனில் ஆயுள் ரேகையிலிருந்து ஆரோக்கிய ரேகை ஆரம்பமான காலம் கடந்த பின்னரும் உயிர் வாழும் அநேகம் பேர் இதற்குச் சாட்சியாய் இருப்பதாக அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். இது விடயத்தில் ஆரோக்கிய ரேகையானது ஆயுள் ரேகையை தொடாதிருந்தால் மாத்திரமே தீர்க்காயுளுக்கு உத்தரவாதமுண்டு என தமிழ் நாட்டின் முதுபெரும் ரேகை சாத்திரியான சக்திதாசன் தமது ஆய்வு நூலொன்றில் குறிப்பிடுகிறார்.
ஆரோக்கிய ரேகையானது சந்திரமேட்டில் ஆரம்பித்து செவ்வாய் மேட்டைக்கடந்து புதன் மேடுவரை சென்றால் அது நீண்ட ஆயுளைக் குறிப்பதாகும். அவ்விதம் செல்லாமல் அது வளைந்து சந்திரமேட்டின் குறுக்கே நீண்டிருந்தால் அவ்விதம் அமைந்தவர் கடல் கடந்து பல பிரயாணங்கள் செய்வதை அது குறிக்கும். ஆயுள் ரேகையிலிருந்து அதன் கிளையாகப் பிரிந்து சந்திரமேட்டின் குறுக்கே செல்லும் பிரயாண ரேகையை விட இது சிலாக்கியமானதென ரேகை சாத்திரம் குறிப்பிடுகின்றது. முன்னது கடல் கடப்பதும் பிறநாடு சென்று முன்னேற்றம் அடைவதும் அநேகமாக பிறர் தயவில் தங்கியிருப்பதைக் குறிப்பதாகவும் பின்னது தன் முயற்சியில் முயன்று கடல் கடந்து பயணங்கள் மூலம் நல்ல சம்பாத்தியம் பெறுவதைக் குறிப்பதாகவும் அது விபரிக்கிறது.
ஆரோக்கிய ரேகை ஒரு நேர்கோடாக இல்லாமல் வளைந்து வளைந்து புதன் மேட்டை நோக்கிச் சென்றிருந்தால் அப்படி அமைந்தவர் பித்த உடம்பு உடையவரென்று அர்த்தம். அவரது உள்ளங்கையில் சதா வியர்வை ஊறியபடி இருக்கும். நீண்ட தூர பஸ், ரயில் பயணங்களில் கிறுதி பிடித்து வாந்தியெடுத்து இவர் படும் அவஸ்தை காணக் கன்றாவியாயிருக்கும். கையிலுள்ள இதர ரேகைகள் பெரும்பாலும் மெல்லியவையாக அமைந்திருந்து, ஆரோக்கிய ரேகைக்குட்பட்டும் படாமலும் அமைந்திருக்கக் காணப்பட்டால் அவ்விதம் அமைந்தவர் இளமைக்காலத்திலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்து விடப் போகிறார் என்பதன் அறிகுறி அது. ஆரோக்கிய ரேகையின் சிவப்புப் புள்ளிகள் ஆங்காங்கே காணப்படின் இருதயத்துடிப்பு அதிகமாகும். நெடுந்தூரம் நடந்தாலும் உயரமான இடங்களில் ஏற நேர்ந்தாலும் இருதயம் நின்று விடுவது போல் படபடவென்று பலமாக அடித்துக் கொள்வதை உணர்ந்து அஞ்சுவர்.
ஆரோக்கிய ரேகை மஞ்சள் நிறம் கொண்டிருந்தால் உடம்பானது இரத்தக் குறைவால் ஏற்படும் பல நோய்களின் விளைநிலமாக இருப்பதன் அறிகுறி அது. அதேவேளை ஆயுள்ரேகையில் இருந்து ஆரம்பிக்கும் ஆரோக்கிய ரேகையில் சிவப்பும் கறுப்புமான புள்ளிகள் காணப்பட்டால் அது இருதய நோயுண்டாவதன் அறிகுறியாகும். ஆரோக்கிய ரேகையானது புத்திரேகையைக் குறுக்கிடும் போது சூலக்கு போன்ற கிளை ரேகைகளுடன் காணப்பட்டால் (B) ரேகை சாத்திரம் சோதிடம், வான சாத்திரம் போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சியும் புகழும் பெறக்கூடிய சுபரூசகம் அதுவாகும்.
ஆரோக்கிய ரேகை மேல் நோக்கிச் சென்று புத்திரேகையோடு கலந்து விட அதேசமயம் ஆயுள் ரேகையிலும் குறுக்கிட்ட சிறு சிறு ரேகைகள் நெருங்கிக் காணப்பட்டால் மூளை சம்பந்தமான நோயுண்டாகும். ஆயுள், புத்தி, ஆரோக்கிய ரேகைகள் மூன்றும் சேர்ந்து சிறியதொரு முக்கோணமாக அமைந்து காணப்பட்டால் (C) சாத்திர ஆராய்ச்சியில் சோதிடம் ரேகை சாத்திரம் மற்றும் வானவியலில் ஆர்வமும் அவற்றில் தீவிரமாய் ஈடுபட்டால் பின்னே வரப்போவதை முன்னே மொழியும் சூட்சுமமான ஞானதிருஷ்டியும் அதனால் புகழுமுண்டாகும். இத்தகையோர் தெய்வ உபாசனையில் ஈடுபட்டால் அவர் வழியாக தெய்வம் பேசுமாம். ஆனால் இம்முக்கோணத்தின் மத்தியில் ஒரு நட்சத்திரக் குறி அமைந்திருப்பது சிறப்பான பலனைத்தராது. அது மாலைக்கண் நோயிருப்பதன் அறிகுறியாம்.
அதேசமயம் ஆரோக்கிய ரேகையில் ஒரு நட்சத்திரக்குறி காணப்படுவது உயிராபத்தைத் தராது. அது அன்னாருக்கு புத்திர சந்தானமெதுவும் தரமுடியாத மலட்டுத்தன்மை அவரது உடலோடொட்டி இருப்பதை அறிவிப்பதாகும். ஆரோக்கிய ரேகை சுக்கிர மேட்டிலிருந்து உற்பத்தியாவதும் சரியல்ல. (D) அத்தகையவர் சமூக கலாசாரம் பண்பாடுகள் யாவும் தமது முன்னேற்றத்திற்குத் தடையானவை என்ற எண்ணமும் தான்தோன்றித்தனமான போக்கும் கொண்டவர். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
ஆயுள் ரேகையானது ஒரு சங்கிலியைப் போன்றோ துண்டு துண்டாகவோ அமைந்திருந்து அத்துடன் ஆரோக்கிய ரேகையும் ஆழப்பதிந்து காணப்பட்டால் அத்தகையவருக்கும் ஆரோக்கியத்துக்கும் வெகு தூரம். மருந்தும் கையுமாக முக்கலும் முனகலுமாக எப்போதும் தம்மை ஒரு நோயாளியாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்.
ஒன்றின் பக்கத்திலொன்றாய் இரட்டை ஆரோக்கிய ரேகைகள் புதன் மேடுவரை சென்றிருக்கக் காணப்பட்டால் அத்தகையவர் நல்ல ஆரோக்கியசாலியாகவும் பலசாலியாகவும் காணப்படுவார். அத்துடன் உடற்பயிற்சிகள், விளையாட்டுக்களில் தேர்ந்து வெற்றி வாகை சூடுகிறவராயுமிருப்பார். காரைக்கட்டியிழுத்தல், நெஞ்சில் பார ஊர்தியை ஏற்றுதல் போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்களும் இத்தகையோரே.
புத்தி மற்றும் இருதய ரேகைகளுக்கிடையில் ஆரோக்கிய ரேகையில் தீவுக்குறி காணப்பட்டால் (E) மூக்கு, தொண்டை பற்றிய நோயைக் குறிக்கும். ஆரோக்கிய ரேகையில் ஒரு தீவானது (F) புத்தி ரேகையின் நடுவே அமைந்திருந்தால் மார்பு அல்லது ஈரல் பற்றிய நோய்கள் பீடிக்கப்போவதை அல்லது பீடித்திருப்பதை அது காட்டும் குழல் போல் வளைந்த கைவிரல் நகங்கள் இதனை ருசுப்படுத்தும். ஆரோக்கிய ரேகையானது உற்பத்தியில் சந்திரமேட்டின் அடிப்புறத்தில் ஒரு வில்வளைவுடன் ஆரம்பமாகி தங்கு தடைகள் சிதைவுகள் பின்னங்களில்லாமல் நேரே புதன் மேட்டில் சென்று முடிந்திருந்தால் நீண்ட ஆயுளையும் நோய்நொடிகளில்லாத சுக வாழ்வையும் அது குறிப்பதாகும்.
புதன் மேடு நோக்கிச் செல்லும் ஆரோக்கிய ரேகையானது செவ்வாய் மேட்டின் திசை திரும்பி சூரிய மேட்டை நோக்கியிருந்தால் (J) செய்யும் தொழில்கள் நாளாந்தம் ஓங்கி செல்வம் செழிக்குமென ரேகை சாத்திரம் சொல்கிறது. ஆரோக்கிய ரேகை உற்பத்தியில் இரு கிளைகளாக அதிலொரு கிளை ஆயுள்ரேகையைக் குறுக்கிட்டு சுக்கிர மேட்டுக்குள் சென்றிருக்குமானால் (K) அத்தகையவருக்கு மரணம் தன்னை நெருங்கி விட்டதான பிரமை அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்குமாம். சாதாரணமாய் தனக்கு நேரும் வியாதி வருத்தம் விபத்துக்களைக் கூட பெரிதாய்க் கற்பனை பண்ணி அஞ்சி நடுங்குவார். ஆனால் அவ்விதம் அற்பாயுளில் வாழ்வு முடியுமா என்பது குறித்து அவரது கையில் ஆயுள்ரேகையின் அமைப்பை அவதானித்தே அறிய வேண்டும். ஆயுள் ரேகையானது அதன் இறுதிவரை சீராகக் சென்றால் மரணம் குறித்து அஞ்ச வேண்டியதில்லை.
திருவோணம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக