எமது கலாசார விழுமியம் சேர்ந்த புத்தாண்டாக அமைவதே, சித்திரைப்புத்தாண்டு எனப்படுகின்ற மேட சங்கிராந்தி இயற்கையும் இனிதாய் பூத்துக்காய்த்து கனியும் வசந்தகாலம் என வரையறை கொடுக்கப்பட்ட தமிழ் - சிங்கள புத்தாண்டாக அறுபது வருடச் சுற்றின் 30ஆவது வருடமாக துர்முகி எனும் நாமத்தோடு இப் புத்தாண்டு மலர்கின்றது. 13–-04–-2016 புதன்கிழமை வளர் ஸப்தமித் திதியும் திருவாதிரை நட்சத்திரமும் அதிகண்டயோகம் வணிசகரணம் துலாம் லக்னம் விருட்சிக நவாம்சம் சூரிய கால வோரை செவ்வாய் சூட்சுமவோரை ராக் ஷச குண வேளை கொண்ட பஞ்சாங்க சம்பிரதாயங்கள் சேர யாழ்ப்பாணம் இரகுநாதஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி மாலை 6 மணி 36 நிமிட நேரமளவில் இந்தப் புதிய துர்முகி வருடம் பிறக்கின்றது.
சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வருடப் பிறப்பு அமைவதனால் 14.04.2016 வியாழன் அதிகாலையில் இருந்து வருடப் பிறப்பு சம்பிரதாயங்களை மேற்கொள்வதே சாலச்சிறந்தது.
விஷு புண்ணிய காலம் 13.04.2016 புதன்கிழமை பிற்பகல் 2.36 முதல் இரவு 10.36 வரையுள்ள காலம் இந்த வருடப் பிறப்பன்று அனைவரும் அதிகாலையில் துயிலெழுந்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து பச்சை வர்ணம் அல்லது வெண்பட்டு அமைந்த புத்தாடை தரித்து மரகதம் வைரம் பதித்த ஆபரணம் அணிந்து கண்ணாடி, தீபம், நிறைகுடம் தனது வலக்கை, மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களை தரிசித்து விநாயகர் முதலான தத்தமது இஷ்ட குல தெய்வ வழிபாடும் சூரியனுக்கு பொங்கல் வழிபாடும் புரிந்து தாய், தந்தை, ஆசிரியர், பெரியோர் ஆசிகள் பெற்று கைவிசேடம் கொடுத்து வாங்கி உணவுப் பரிமாற்றம் செய்து அறுசுவை உணவருந்தி தாம்பூலம் தரித்து உறவினர் நண்பர்களுடன் உறவாடி இயன்ற தான தர்மம் செய்து புதிய வருடப்பலன்களை வாசித்தும் கேட்டும் நன்குணர்ந்து நல்ல சிந்தனை கொண்டு மங்கலம் நிறைந்த மகிழ்வோடு சயனம் கொள்ள வேண்டும்.
சங்கிரம தோஷமுடைய நட்சத்திரங்கள்
மிருகசீரிடம் 3, 4ஆம் பாதம் புனர்பூசம், 1, 2, 3 பாதம் சுவாதி, விசாகம், 4ஆம் பாதம் அனுஷம், கேட்டை, சதயம் கொண்டோர் தவறாது மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து இயன்ற தான தர்மம் செய்து சங்கிரம தோஷ நிவர்த்தி பெற வேண்டும்.
இவ்வருடத்தின் வரவு –செலவு
ராசிகளின் விபரம்
மேடம்- வரவு 2, செலவு 8
இடபம்- வரவு 11, செலவு 14
மிதுனம்- வரவு 14, செலவு 11
கடகம்- வரவு 14, செலவு 2
சிம்மம்- வரவு 11, செலவு 5
கன்னி- வரவு 14, செலவு 11
துலாம் - வரவு 11, செலவு 14
விருட்சிகம் - வரவு 2, செலவு 8
தனுசு - வரவு 5, செலவு 14
மகரம் - வரவு 8, செலவு 8
கும்பம் - வரவு 8, செலவு 8
மீனம் - வரவு 5, செலவு 14
அணிய வேண்டிய புத்தாடை வர்ணம் பச்சை அல்லது வெண்மை.
கைவிசேடம் வருடப்பிறப்பன்று கொடுத்து வாங்குவோர் தெய்வேந்திர முகூர்த்தம் 14.04.2016 பகல் 11.46 முதல் 12.16 வரை உள்ள சுபவேளையில் மேற்கொள்ளலாம்.
18 -–-04– 2016 திங்கள் காலை 9.10 முதல் 9.37 வரை காலை 9.47 முதல் 11.46 வரை மாலை 6.05 முதல் 7.25 வரை உள்ள சுபநேரங்களில் கைவிஷேடம் புது வியாபார கணக்கு என்பன ஆற்றுவதற்கு உரிய சுப நேரங்களாகும். துர்முகி வருடம் அனைவர் துயரங்களையும் போக்கட்டும்.
மேடராசி
(அஸ்வினி, பரணி, கார்த்திகை, 1ம் பாதம்)
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் கிரஹகத்தின் ஆதிபத்தியம் கொண்ட மேட ராசி அன்பர்களே எதைச் செய்தாலும் அதில் உங்களின் முதன்மைத்தனத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நீங்கள் நியாய பூர்வமான குண இயல்புகள் கொண்டவர்கள். மலரும் துர்முகி வருடத்தின் முற்பகுதி உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூலம் தருவதாய் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் அமையும். இவ்வருடம் ஆடி மாதம் நடுப்பகுதி வரை ஓரளவிற்கு உங்களின் முயற்சிகளில் வெற்றி காண முடியும். அதன் பின்னர் அமையும் குருப்பெயர்ச்சி 02.08.2016 முதலாக ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமைவதும் இவ் வருடம் முழுவதும் அட்டமத்து சனி சஞ்சாரம் அமைவதும் சற்று அலைச்சல், இழுபறி நிலைகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக உடல் நிலையில் சுகவீனங்கள், மருத்துவ செலவுகள் மற்றும் சத்திர சிகிச்சை போன்ற பலன்கள் அமையும். எந்த விடயம் என்றாலும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். புதிய தொழில் சார்ந்த விடயங்களில் தடை, தாமத இழுபறிகள் தொடரும். பணவரவு இடையிடையே இறுக்கமான நிலையை ஏற்படுத்தும். உறவினர், நண்பர்களுடன் மனச் சஞ்சலமான நிலைகள் அமையும். உங்களின் ஜாதக நிலையில் அமையும் மஹா திசைப் பலன்கள் சிறப்பானதாக அமையும் நிலையில் ஓரளவிற்கு நன்மைகளும் அதிபலன்களும் அமையும் நிலை இருக்கும். வருடம் முழுவதும் அமையும் ராகு கேதுவின் கோசார பலன் ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் தரும். பெண்களுக்கு மனச் சஞ்சல நிலை சற்று அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் ஊக்கமும் முயற்சியும் மிக முக்கியம். எதையும் முகத்திற்கு நேரே படபடவென பேசித்தீர்த்து விடும் நீங்கள் உங்களின் காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயற்படுவீர்கள். எல்லா விடயங்களிலும் நேர்மையான செயற்திறன் கொண்டிருப்பதால் தெய்வ அனுகூலம் உங்களுக்கு உண்டு. இந்த வருடம் சனீஸ்வரன் குரு கிரஹ வழிபாட்டுடன் அம்பாள் வழிபாடும் மேற்கொண்டு செயற்படுங்கள். அனுகூலமான நன்மை நூற்றிற்கு 55% உண்டு.
இடபராசி
(கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்)
களத்திர காரகன் எனப்படுகின்ற சுக்கிரனின் ஆதிபத்தியம் கொண்ட இடப ராசி அன்பர்களே தனித்துவமான போக்கும் சாதுர்யமான செயற்பாடும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசி நிலைக்கு துர்முகி வருடத்தின் பிற்பகுதி அனுகூலமானதாக அமையும். சுகஸ்தானம் எனப்படுகின்ற 4ஆம் இடத்திலே குருவின் கோசார நிலை அமைகின்றது. அத்தோடு சனீஸ்வரன் சஞ்சாரம் களத்திரஸ்தானம் எனப்படும் 7ஆம் இடம் அமைகின்றது. எனவே ஆண்டின் நடுப்பகுதி வரை சற்று அலைச்சலும் இழுபறி நிலைகளும் இருக்கும். தொழில் நிலைகளில் வேலைப்பழு சற்று அதிகமாக இருக்கும். குடும்ப நிலையிலே சிறு சிறு பிரச்சினைகள், மனச்சஞ்சல நிலைகள் ஏற்படும். தேவையற்ற வீண் பிரச்சினைகள் உங்களை நாடி வருகின்ற நிலை இருக்கும். பண வரவு மத்திமமாகவே அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் 02 முதல் குருவின் கோசார நிலை பஞ்சமஸ்தானமாகிய 05 ஆம் இடம் அமைவதன் மூலமாக தொழில் நிலைகளில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் அமையும். குடும்ப நிலையில் மகிழ்ச்சியும் நன்மைகளும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு. பெண்களுக்கு ஓரளவுக்கு மன நிறைவும் குடும்ப நிலையில் சுமுகமான பலன்களும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய முயற்சி ஓரளவிற்கு வெற்றிகளை தரக்கூடியதாய் இருக்கும். உங்களின் நீண்ட நாள் நண்பர்கள் உறவினர்களின் தொடர்புகள் அமையும். மொத்தத்தில் துர்முகி வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு ஓரளவுக்கு சிறப்புகள் கொடுக்கும். உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு வெற்றிகள் அமையும். பொதுவாகவே எல்லா விடயங்களையும் மனதிற்குள்ளே வைத்து மூடி மறைக்கும் குண இயல்பால் பல விடயங்களிலும் நீங்கள் மந்தமானவர்களாக இருப்பீர்கள். இதை சரி செய்தால் நீங்களே மகத்தான வெற்றியாளர்கள். சனீஸ்வரன் அம்மன் வழிபாடு நல்லது. துர்முகி வருடம் நூற்றிற்கு 65 % நன்மைகள் கொடுக்கும்.
மிதுன ராசி
(மிருகசீரிடம் 3, 4 பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்)
வித்தியாகாரகன் புதனின் ஆதிபத்தியம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே அறிவுத்திறனும் ஆக்கபூர்வ செயற்பாடும் கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடத்தின் சற்று மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு. எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். குடும்ப நிலையில் குழப்ப நிலை அதிகமாயிருக்கும். மனச்சஞ்சல நிலை, யோசனைகள் சற்று அதிகமாயிருக்கும். உங்களின் ராசி நிலைக்கு குருவின் கோசார சஞ்சாரமானது முதற்பகுதி ஆகஸ்ட் 02 வரை ஜெயஸ்த்தானமாகிய 3ஆம் இடம் குருவின் சஞ்சாரம் அமைகின்றது. அதன் பின்னராக சுகஸ்தானமாகிய 4ஆம் இடம் குருசஞ்சாரம் அமைகின்றது. எனவே இந்த இரு நிலைச் சஞ்சாரமும் சற்று மத்திமமான பலன்களையே தரும். எனவே பெரும் சிறப்பான நன்மையான பலாபலன்களை எதிர்பார்க்க முடியாது. சனீஸ்வரனின் சஞ்சாரம் ரோகஸ்த்தானமாகிய 6ம் இடம் அமைவதன் மூலம் இடையிடையே சிறு சிறு நன்மைகளும் அதிர்ஷ்ட பலன்களும் அமையும். எதையும் பொறுமையாக கையாண்டு கொள்வதே மிகவும் நல்லது. தொழில் சார்ந்த தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். மற்றும் திடீர் வழக்கு விவகாரங்கள் அமையும். கொடுக்கல் வாங்கல் மற்றும் புதிய முயற்சிகளில் மிகப் பொறுமையோடு செயற்பட வேண்டும். பெண்களுக்கு சஞ்சலமான நிலைகள் இருக்கும். வாக்கு வாதங்கள், பகைமை நிலை என்பன ஏற்படும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். மந்தமான நிலை கல்வியில் தொடரும் முயற்சியும் நிதானமுமே மிகவும் வெற்றிகள் கொடுக்கும். உங்களின் ஜாதக மஹா திசை சிறப்பாக அமையும் நிலை இருப்பின் ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகளும் இருக்கும். பொதுவாகவே உங்களை ஒரு புரியாத புதிராகவே உங்கள் உறவினர் முதல் நண்பர்கள் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு உங்களின் செயற்பாடும் அமைந்திருக்கும். யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் உங்கள் விடயங்களை உங்களுக்குள்ளேயே வைத்து செயற்பட்டு பல பிரச்சினைகளை சந்திப்பீர்கள். விஷ்ணுவை வழிபடவும் எடுக்கும் விடயங்களில் பொறுமை நிதான முடன் செயற்படவும் துர்முகி வருடம் நூற்றிற்கு 50% நன்மைகள் கொடுக்கும்.
கடக ராசி
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்)
மாத்துருகாரகன், சந்திரனின் ஆதிபத்தியம் கொண்ட கடகராசி அன்பர்களே மன நிலையில் சிந்தனையும் மறைமுகமான செயற்பாடும் கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடம் ஓரளவிற்கு அனுகூலமானதாக அமையும். வருட முற்பகுதியில் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றிகள் கொடுக்கும். தொழில் நிலையில் முன்னேற்றகரமான பலன் இருக்கும். புதிய முயற்சிகளிலும் ஓரளவிற்கு அனுகூலமான பலன் இருக்கும். பண வரவு தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை இருக்கும். ஆகஸ்ட் 02 ஆம் திகதியின் மேல் குருவின் நிலை ஜெயஸ்த்தானமாகிய 3ஆம் இடம் அமைவது சற்று அலைச்சல் நிலைகளைக் கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையும் நிதானமும் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க வேண்டி பலன் இருக்கும். குடும்ப நிலையில் மத்திமமான மந்தமான பலன் இருக்கும். சகோதரர்களுடன் சிறு சிறு மனஸ்தாபம் அமையும். எதையும் எண்ணியபடி செய்து முடிக்க இயலாத தடைகள் இருக்கும். இந்த துர்முகி வருடம் முழுவதும் சனீஸ்வரன் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைவதனால் திடீர் சிக்கல் நிலைகள் பணவரவில் தடைகள் கொடுக்கல் வாங்கல் நிலைகளில் இழுபறி நிலைகள் என்பன இருக்கும். ராகு கேது சஞ்சாரமும் சற்று இழுபறி நிலையை இடையிடையே ஏற்படுத்தும். பெண்களுக்கு தாம் நினைக்கும் விடயங்களில் சிறு சிறு பிரச்சினைகள், மனச்சஞ்சல நிலைகள் என்பன அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான நிலை இருப்பினும் பரீட்சைகளில் மந்தமான பலாபலன்கள் இருக்கும். அதற்கு ஏற்ப நிதானமுடன் செயற்பட வேண்டும். பொதுவாகவே கலகலப்பாகவும் எல்லோருடனும் நட்புறவு கொண்டும் பழகும் நீங்கள் முயற்சியும் இலட்சியமும் அதிகம் கொண்டவர்கள். இருப்பினும் உங்களின் செயற்பாட்டினில் முழுமையான ஈடுபாடு இருக்காது. சிறுபிள்ளைத்தனமான உங்களின் நடைமுறை பல விடயங்களிலும் உங்களுக்கு சற்று பிரச்சினைகளை தருவதாகவே இருக்கும். இந்த வருசத்திலே முதல் ஆறு மாத காலம் ஓரளவிற்கு உங்களுக்கு வெற்றிகள் அமையும். பிற்பகுதி சற்று போராட்டமான நிலைகளைக் கொடுக்கும். குருக்கிரஹ வழிபாடு, அம்மன் வழிபாடு அனுகூலம் கொடுக்கும். இந்த துர்முக வருடத்திலே நூற்றிற்கு 50% நன்மையுண்டு.
சிம்ம ராசி
(மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்)
சூரியனின் ஆதிபத்தியம் கொண்ட சிம்மராசி அன்பர்களே எந்த விடயத்தையும் சாணக்கியத்துடன் செய்கின்ற ஆளுமையும் திறமையும் கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடத்தின் முதற்பகுதி சற்று மத்திமமான சுமாரான பலன்களையே கொடுக்கும். குருவின் கோசார சஞ்சார நிலை 2016 ஆகஸ்ட் வரை ஜென்ம குருவாக அமைந்திருப்பது தொழில் நிலைகளில் சற்று அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். தேவையற்ற வீண் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். குடும்ப நிலையில் மனச்சஞ்சல நிலைகள், தேவையற்ற வீண் செலவீனங்கள், உடல் நிலை உபாதைகள், வழக்கு விவகாரங்களில் சிக்கல், இழுபறி நிலைகள் என்பன ஏற்படும். எந்த விடயம் என்றாலும் பொறுமை, நிதானமுடன் செயற்படவும். அத்தோடு இந்த துர்முகி வருடம் முழுவதும் சனீஸ்வரன் சஞ்சாரம், சுகஸ்தானம் எனப்படுகின்ற 4ஆம் இடம் கண்டார்த்த சனியாக அமைவதனால் ஒரு பிரச்சினை நிறைவு பெற மறு பிரச்சினை உருவாகும் நிலை இருக்கும். எனவே அதற்கு ஏற்ப பொறுமையும் நிதானமும் கொண்டு செயற்பட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் பலன் தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான பலன்களைக்கொடுக்கும். குடும்ப ரீதியில் சிறு சிறு நன்மைகள் அமையும். தொழில் நிலை சார்ந்த முன்னேற்றங்கள் அமையும். பெண்களுக்கும் ஓரளவிற்கு அனுகூலமான நிலை அமையும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் முன்னேற்றங்கள் ஏற்படும். பொதுவாகவே உங்களின் செயற்பாடுகளில் அதிகமான அக்கறை கொண்டு செயற்படும் நீங்கள் யாருக்காகவும் இரக்கம் கொண்டு செயற்படமாட்டீர்கள். உங்கள் காரியங்களிலே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். மனநிலையில் எப்போதும் சஞ்சலங்களும் சிந்தனைகளும் கொண்டு செயற்படுவீர்கள். உங்களுக்கு இந்த துர்முகி வருடத்திலே சற்று சுமாரான மத்திம பலன்களே அமையும். அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடு இருக்க வேண்டும். குரு சனி கிரஹ வழிபாடும் சிவன் வழிபாடும் நன்மை தரும். துர்முகி வருடம் நூற்றிக்கு 50% நன்மையுண்டு.
கன்னி ராசி
(உத்தரம், 2,3,4,பாதம், அத்தம், சித்திரை1,2,பாதம்)
புதனின் ஆதிபத்தியம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! எதிர்காலம் உணர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். இதனாலே பல சிக்கல்களையும் எதிர்கொள்வீர்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த துர்முகி வருடத்திலே ஆடி மாதம் வரையும் அனுகூலமான நன்மைகள் அமையும். எதையும் சமாளிக்கும் நிலைகளைக்கொடுக்கும் பலனிருக்கும். இருப்பினும் செலவீனங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். ஆகஸ்ட் மாதம் அமையும் குருப்பெயர்ச்சி ஜென்மஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைவது சற்று மந்தமான பலன்களே அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலைகளில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். வேலைப்பளு, மேலதி காரிகளுடன் மனச்சஞ்சல நிலை என்பன ஏற்படும். குடும்ப நிலையில் உறவினர்களுடன் மனஸ்தாப நிலை, எதிர்பாராத உடல் நிலை உபாதை, பணவரவில் மந்த நிலை போன்ற பலாபலன்கள் இருக்கும். அதற்கு ஏற்ப பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலை இழுபறி நிலை தொடரும். புதிய முயற்சிகளில் பொறுமை, நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். பெண்களுக்கு மந்தமான பலனளிக்கும். திருமணம் போன்ற விடயங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் சற்று மத்திமமாக இருக்கும். இழுபறி தடைகளைக் கொடுக்கும். மாணவர் கல்வி நிலையில் கூடுதலான கவனமும் முயற்சியும் எடுக்க வேண்டும். பொதுவாகவே தேவையில்லாமல் மிக அதிகமாக சிந்தித்து பல பிரச்சினைகளையும் உடல், மனநிலை சோர்வையும் நீங்களே ஏற்படுத்திக்கொண்டு விடுவீர்கள். யாருடனும் நம்பிக்கையோடு பழகமாட்டீர்கள். இதுவும் உங்களுக்கு அதிகமான பிரச்சினைகளை தரும். சனீஸ்வரன் சஞ்சாரம் இந்த வருடம் அனுகூலமாக அமைகின்றது. குருக்கிரஹ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் நல்லது. இந்த துர்முகி வருடம் உங்களுக்கு நூற்றிற்கு 45% நன்மை.
(தொடரும்)
துலாம் ராசி
( சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
சுக்கிரனின் ஆதிபத்தியம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே எதையும் மனச்சாட்சிப்படி செய்கின்ற மனப்பக்குவம் அதிகம் கொண்டவர்கள். தவறான ஒரு விடயம் செய்தாலும் அதற்காக ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்க்கு பரிகாரம் செய்து விடுவீர்கள்.
உங்களின் ராசி நிலைக்கு துர்முகி வருஷத்திலே ஆகஸ்ட் மாதம் வரை அனுகூலமான பலன்கள் அமையும். அதன் பின்னர் குருவின் சஞ்சாரம் விரயஸ்த்தானமாகிய 12ம் இடம் அமைவதன் காரணமாக அதிகமான செலவுகள் இருக்கும். அத்தோடு இந்த வருஷம் முழுவதுமாக உங்களுக்கு ஏழரைச்சனி சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே ஏழரைச்சனியின் கடைக்கூற்றுப்பலன் என்பதனாலே பெரும் சிரமங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொழில் நிலைகளில் ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு இழுபறி, மந்த நிலை இருப்பினும் அனுகூலமான பலன் இருக்கும். பண வரவு ஓரளவிற்கு தேவைகளைப்பூர்த்தி செய்யும். குடும்ப நிலையில் அனுகூலமான பலாபலன்கள் இருக்கும். எதிர்பாராத தல யாத்திரைப் பயணங்கள் அமைகின்ற நிலை இருக்கும். பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்றவர்கட்கு அப்பலன் சிறு சிறு இழுபறி நிலைகளைக்கொடுக்கும். மாணவர்கட்கு கல்வி நிலை அனுகூலமானதாக அமையும். கடன் பிரச்சினைகளில் சற்று இழுபறி தாமத நிலைகள் அமையும். பொதுவாக எந்தவிடயம் என்றாலும் சற்று போராடியே ஜெயிக்க வேண்டும். பொதுவாகவே செய்யும் விடயங்களில் நேர்மைத்திறன் கொண்டவர்கள் நீங்கள் எல்லோரையும் அனுசரித்து செயல்படுவீர்கள். ஒருவர் மீது வெறுப்பு ஏற்பட்டால் கடைசிவரை அது வெறுப்பாகவே கொண்டு செயல்படுவீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த வருடத்தில் சனி குரு வழிபாடும் அம்மன் வழிபாடும் மிகவும் நன்மை தரும். துர்முகி வருடம் நூற்றிற்கு 60% நன்மையுண்டு.
விருட்சிக ராசி
(விசாகம், 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
செவ்வாய் கிரஹ ஆதிபத்தியம் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே! எந்த விடயத்திலும் தேவையற்ற தலையீடுகள் கொடுத்து பிரச்சினைகளை வாங்கிக் கொள்பவர்கள் நீங்கள். உங்கள் ராசி நிலைக்கு துர்முகி வருட பலாபலன்கள் மத்திமமானதாகவே முற்பகுதி அமையும். தொழில் சார்ந்த பிரச்சினைகள், வேலைப்பளு, தொழில் நிலை இடமாற்றம் போன்ற பலாபலன்கள் அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் லாபஸ்த்தான மாகிய 11ம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான பலன் கொடுக்கும். பண வரவும் அனுகூலமான நிலையிலே அமைகின்ற பலன் இருக்கும். இருப்பினும் ஏழரைச்சனி சஞ்சாரம் ஜென்மச்சனியாக அமைவதனால் எந்தவிடயம் என்றாலும் சற்று பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். தேவையற்ற சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். உடல் நிலையில் சுகயீனங்களும் மருத்துவ செலவுகளும் அமையும். கடன் பிரச்சினைகளில் சிக்கல் நிலைகள், வழக்கு விவகாரங்களில் இழுபறி நிலைகள் என்பன ஏற்பட்டு மறையும் நிலையிருக்கும். பெண்களுக்கு சஞ்சலமான நிலை அமைந்திருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு சிறு சிறு அலைச்சல், இழுபறி என்பன இருக்கும். குருவின் லாபஸ்த்தான சஞ்சார நிலை நற்பலன்களைக் கொடுக்கும் நிலை உண்டு. இருப்பினும் அவை முழுமையாக நிறைவாகப் பெற முடியாத நிலையில் ஜென்மச்சனியாக ஏழரைச்சனியின் சஞ்சாரம் வருடம் முழுவதும் அமைவதனால் இந்த துர்முகி வருஷத்தில் போராட்ட நிலை மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப பொறுமை நிதானத்துடன் செயற்பட வேண்டும். நீங்கள் நினைக்கும் விடயங்களை எப்படியும் செய்து முடிக்கின்ற குண இயல்பு உங்களிடம் அதிகமாக இருக்கும். எந்த நிலையிலும் உங்களுக்கு இஷ்டமான விடயங்களை எப்படியும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள். எதையும் உங்களின் எண்ணப்படியே எல்லாவற்றையும் செய்வீர்கள். இதனாலேயே பலவித இன்னல்களைச்சந்தித்து கொள்வீர்கள். இந்த துர்முகி வருடத்திலே நூற்றிற்கு 60% நன்மையுண்டு.
தனுசு ராசி
( மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம்)
குருவின் பூரணமான ஆதிபத்தியம் கொண்ட தனுசுராசி அன்பர்களே! எந்த விடயம் என்றாலும் தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு போராடும் குண இயல்பு கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடத்திலே உங்கள் ராசிக்கு முற்பகுதிப்பலன் மிகவும் அனுகூலமானதாக அமைகின்றது. தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் அமையும் நிலை இருக்கும். குடும்ப நிலையில் நற்பலாபலன்களுக்கு இடமிருக்கும். சுபகாரிய பலன்கள் சுமுகமாக அமையும் பலன் இருக்கும். புதிய முயற்சிகளில் ஓரளவிற்கு அனுகூல பலன் அமையும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமைகின்ற குருவின் பலன் ஜீவனஸ்தானமாகிய 10 ஆம் இடம் அமைவதன் மூலமாக எடுக்கும் முயற்சிகளில் அலைச்சல் நிலை அதிகமாக இருக்கும். பணவரவு மந்தமான நிலையில் அமையும். தொழில் நிலைகளில் இடமாற்றம், பதவி மாற்றம், தொழில்சார்ந்த விடயங்கள் என்பன அமைகின்ற நிலையிருக்கும்.
தேவையற்ற அலைச்சல் நிலைகள் அதிகமாக இருக்கும். குடும்ப நிலையிலும் மனச்சஞ்சலம் மந்தமான பலன் என்பன அமைகின்ற நிலை இருக்கும். பொறுமை, நிதானத்தோடு செயற்படுவது மிக நல்லது. இந்த துர்முகி வருடம் முழுவதும் ஏழரைச்சனி சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். திடீர் பணவிரயம், பொருள் விரயம் என்பன ஏற்படுகின்ற நிலைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையில் தடைகள், இழுபறிகள் அமையும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகளும் குடும்ப நிலையில் குழப்ப நிலைகளும் அமையும். எதையும் சிந்தித்தே நிதானமுடன் செயல்படுத்துங்கள். மாணவர்களின் கல்வி நிலையில் சிறுசிறு மந்த நிலைகள் இருக்கும். பரீட்சைகளில் முயற்சியோடு செயற்பட வேண்டும். பொதுவாக துர்முகி வருடத்தின் பிற்பகுதியில் சுமாரான பலன்களே அமையும் நிலை இருக்கும். அதற்குரிய செயல் கொண்டு உங்களின் காரியங்களை நீங்கள் நகர்த்த வேண்டும். முக்கியமாக புதிய முயற்சிகளில் ஈடுபாடு கொள்ளும் போது ஒன்றிற்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே மிக மிக நல்லது. பொதுவாகவே உங்கள் செயற்பாடுகளில் பிடிவாதம் அதிகம் கொண்டிருப்பீர்கள். அந்த பிடிவாத நிலையில் இருந்து இறங்கி வரமாட்டீர்கள். இதனாலேயே அதிக பிரச்சினைகளையும் சந்தித்து கொள்வீர்கள். உங்களின் அணுகுமுறை மற்றவர்களை கோபப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று எனச்செயல்படுவீர்கள். மற்றவர்களின் மனதை புரிந்து செயல்படும் எண்ணம் அற்றவர்களாகவே இருப்பீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களின் தனித்துவமாகும்.
குரு, சனி கிரஹ வழிபாடும் சிவன் வழிபாடும்
அனுகூலமான பலன் தரும். இந்த துர்முகி வருடத்திலே நூற்றிற்கு 60% நன்மைகள் ஏற்படும்.
மகர ராசி
(உத்தராடம், 2,3,4 ஆம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்)
சனீஸ்வரனின் ஆதிபத்தியம் கொண்ட மகரராசி அன்பர்களே! முகத்திற்கு நேரே எதையும் பேசுகின்ற சுபாவம் கொண்ட நீங்கள் உங்கள் நிலையிலிருந்து இறங்கி வரமாட்டீர்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த துர்முகி வருடத்திலே முதற்பகுதியினிலே அட்டமத்து குருவின் சஞ்சாரம் ஆகஸ்ட் மாதம் வரை எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை, தாமத நிலைகள் அமையும். தொழில் நிலைகளில் தேவையற்ற வீண் பிரச்சினைகளில் சிக்க வேண்டி வரும். பணவரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமையும். குடும்ப நிலையில் மத்திமமான பலன்களும் மனச்சஞ்சல நிலைகளும் இருக்கும். எதையும் திருப்திகரமாக செய்ய முடியாத நிலை இருக்கும். சற்று பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். உடல் நிலையிலே சிறு சிறு சுகயீனங்கள், மருத்துவ செலவு என்பன இருக்கும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் நிதானம் தேவை. கடன் பிரச்சினைகளில் இழுபறி நிலை, வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலை போன்ற பலாபலன்கள் அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமையும் குருவின் பலன் பாக்கியஸ்த்தானமாகிய 9ஆம் இடம் அமைவது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்களைக்கொடுக்கும்.
சனீஸ்வரனின் பலன் லாபஸ்த்தானமாகிய 11 ம் இடம் அமைந்து இருப்பதும் சிறப்பான நிலையே. எனவே புதிய முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும் நிலை இருக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய திறன் அமையும். திருமணம் போன்ற சுபகாரியம் எதிர்பார்க்கின்றவர்கட்கு அப்பலன் நிறைவானதாகக் கைகூடும் நிலையுண்டு. மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றகரமான பலன் அமையும். பொதுவாகவே துர்முகி வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு எண்ணங்கள் ஈடேறும் நிலையே அதிகமாக உண்டு. எனவே அதற்கு ஏற்ப செயல்பட்டு நல்ல வெற்றிகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். பிடிவாதமும் வாக்கு வாதம் செய்வதும் உங்களின் முக்கிய குணம். யாரையும் மதிக்கமாட்டீர்கள். உங்கள் முடிவே உங்களுக்கு திருப்தி தரும். குருவழிபாடும் சிவன் வழிபாடும் உத்தமம். இந்த வருடம் நூற்றிற்கு 70% நன்மையுண்டு.
கும்ப ராசி
( அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்)
சனீஸ்வரனின் முழுமையான ஆதிபத்தியம் கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்களை ஒரு அப்பாவி போல காட்டியே பலவித அதிர்ஷ்டங்களையும் பெற்றுக்கொள்ளும் புத்திசாலிகள் நீங்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த துர்முகி வருடம் அமையும் பலன்கள் சற்று மத்திமமான பலன்களாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமை, நிதானம் தேவை. குடும்ப நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் ஆகஸ்ட் மாதம் வரை அமையும். இக்கால எல்லையிலே உங்களின் புதிய முயற்சிகள் செயற்பாடுகளில் ஓரளவிற்கு நன்மைகள் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் பலன் அட்டமஸ்த்தானமாகிய 8ம் இடம் அமைவது தொழில் நிலைகளில் அலைச்சல் பிரச்சினை என்பன அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. பணவரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமைகின்ற நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் இழுபறி, தாமத நிலை தொடரும். எதையும் நினைத்தபடி செய்ய முடியாத நிலை இருக்கும். குடும்ப நிலையிலே மனச்சஞ்சலங்களும் தேவையற்ற பிரச்சினைகளும் அமைகின்ற நிலை இருக்கும். எதையும் நிதானமாகவே செயற்படுத்த வேண்டும். பெண்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். வேலைப்பளு அதிகமிருக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல் நிலை அமையும். பொதுவாகவே எதையுமே ஒரு அசட்டைத்தனத்தோடு எடுத்து செயற்படுபவர்கள் நீங்கள். ஒரு விடயம் பற்றிய தெளிவு அறிவு இல்லாவிடினும் தெரிந்தது போல் துணிவோடு செயல் ஆற்றும் குணம் உடையவர்கள். உங்களை விஞ்சி மற்றவர் முன்னேற்றம் காண்பதை விரும்ப மாட்டீர்கள். இந்த வருஷம் குரு வழிபாடும் சிவன் வழிபாடும் மிக நல்லது. துர்முகி வருடத்தில் நூற்றிற்கு 50% நன்மையுண்டு.
மீன ராசி
(பூரட்டாதி 4ம் பாதம் உத்தரட்டாதி ரேவதி)
குருவின் பூரணமான ஆதிபத்தியம் கொண்ட மீனராசி அன்பர்களே !எதையும் விளம்பரத்தோடு செய்ய வேண்டும் எனும் எண்ணப்பாங்கு அதிகம் கொண்டவர்கள். நீங்கள் உங்களின் ராசி நிலைக்கு துர்முகி வருடத்திலே ஓரளவு அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. எடுக்கும் முயற்சிகள் சிறு சிறு தடை தாமத நிலைகளை கொடுத்தாலும் அனுகூலமான பலன்களைத்தரும். தொழில் நிலைகளில் நல்ல சுமுகமான பலன்களுக்கு இடமிருக்கும். ஆகஸ்ட் மாதம் வரை சிறு சிறு மந்தமான பலன்கள் இடையிடையே ஏற்பட்டு மறையும். உடல் நிலையிலும் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் ஏற்பட்டு மறையும். எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமையும் பலன்கள் அனுகூலமான நன்மைகள் தரும். குடும்ப நிலையில் மகிழ்வும் உறவினர் மூலம் நன்மைகளும் ஏற்படும். பண வரவு தேவைகளைப்பூர்த்தி செய்யும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும். பெண்களுக்கு மன மகிழ்வும் நன்மைகளும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் முன்னேற்ற பலன் இருக்கும். இந்த துர்முகி வருடம் முழுவதும் சனியின் சஞ்சாரம் பாக்கியஸ்த்தானமாகிய 9ம் இடம் அமைவது அனுகூலமான நன்மைகளைக்கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் அமையும் நிலைகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளில் சுமுகமான பலன்கள் அமையும். வழக்கு விவகாரங்களும் வெற்றிகளைத்தரும் நிலையுண்டு. பொதுவாகவே உதவி செய்யும் மனோ பாவம் உங்களிடம் இருக்கும். ஆனால் அதை பலரும் அறியக்கூடிய நிலையில் செய்வீர்கள். எங்கு எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வீர்கள். வாக்குவாதம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள் நீங்கள். குரு வழிபாடும், சிவன், அம்மன் வழிபாடும் அனுகூலமான பலன் தரும். பொதுவாக இந்த துர்முகி வருடத்திலே உங்களுக்கு நூற்றிற்கு 60% நன்மைகள் அமையும்.
ஜோதிட பூஷணம் துன்னையூர் -
ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
(சாரதாபீடம் ஜோதிடம்)
சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வருடப் பிறப்பு அமைவதனால் 14.04.2016 வியாழன் அதிகாலையில் இருந்து வருடப் பிறப்பு சம்பிரதாயங்களை மேற்கொள்வதே சாலச்சிறந்தது.
விஷு புண்ணிய காலம் 13.04.2016 புதன்கிழமை பிற்பகல் 2.36 முதல் இரவு 10.36 வரையுள்ள காலம் இந்த வருடப் பிறப்பன்று அனைவரும் அதிகாலையில் துயிலெழுந்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து பச்சை வர்ணம் அல்லது வெண்பட்டு அமைந்த புத்தாடை தரித்து மரகதம் வைரம் பதித்த ஆபரணம் அணிந்து கண்ணாடி, தீபம், நிறைகுடம் தனது வலக்கை, மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களை தரிசித்து விநாயகர் முதலான தத்தமது இஷ்ட குல தெய்வ வழிபாடும் சூரியனுக்கு பொங்கல் வழிபாடும் புரிந்து தாய், தந்தை, ஆசிரியர், பெரியோர் ஆசிகள் பெற்று கைவிசேடம் கொடுத்து வாங்கி உணவுப் பரிமாற்றம் செய்து அறுசுவை உணவருந்தி தாம்பூலம் தரித்து உறவினர் நண்பர்களுடன் உறவாடி இயன்ற தான தர்மம் செய்து புதிய வருடப்பலன்களை வாசித்தும் கேட்டும் நன்குணர்ந்து நல்ல சிந்தனை கொண்டு மங்கலம் நிறைந்த மகிழ்வோடு சயனம் கொள்ள வேண்டும்.
சங்கிரம தோஷமுடைய நட்சத்திரங்கள்
மிருகசீரிடம் 3, 4ஆம் பாதம் புனர்பூசம், 1, 2, 3 பாதம் சுவாதி, விசாகம், 4ஆம் பாதம் அனுஷம், கேட்டை, சதயம் கொண்டோர் தவறாது மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து இயன்ற தான தர்மம் செய்து சங்கிரம தோஷ நிவர்த்தி பெற வேண்டும்.
இவ்வருடத்தின் வரவு –செலவு
ராசிகளின் விபரம்
மேடம்- வரவு 2, செலவு 8
இடபம்- வரவு 11, செலவு 14
மிதுனம்- வரவு 14, செலவு 11
கடகம்- வரவு 14, செலவு 2
சிம்மம்- வரவு 11, செலவு 5
கன்னி- வரவு 14, செலவு 11
துலாம் - வரவு 11, செலவு 14
விருட்சிகம் - வரவு 2, செலவு 8
தனுசு - வரவு 5, செலவு 14
மகரம் - வரவு 8, செலவு 8
கும்பம் - வரவு 8, செலவு 8
மீனம் - வரவு 5, செலவு 14
அணிய வேண்டிய புத்தாடை வர்ணம் பச்சை அல்லது வெண்மை.
கைவிசேடம் வருடப்பிறப்பன்று கொடுத்து வாங்குவோர் தெய்வேந்திர முகூர்த்தம் 14.04.2016 பகல் 11.46 முதல் 12.16 வரை உள்ள சுபவேளையில் மேற்கொள்ளலாம்.
18 -–-04– 2016 திங்கள் காலை 9.10 முதல் 9.37 வரை காலை 9.47 முதல் 11.46 வரை மாலை 6.05 முதல் 7.25 வரை உள்ள சுபநேரங்களில் கைவிஷேடம் புது வியாபார கணக்கு என்பன ஆற்றுவதற்கு உரிய சுப நேரங்களாகும். துர்முகி வருடம் அனைவர் துயரங்களையும் போக்கட்டும்.
மேடராசி
(அஸ்வினி, பரணி, கார்த்திகை, 1ம் பாதம்)
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் கிரஹகத்தின் ஆதிபத்தியம் கொண்ட மேட ராசி அன்பர்களே எதைச் செய்தாலும் அதில் உங்களின் முதன்மைத்தனத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நீங்கள் நியாய பூர்வமான குண இயல்புகள் கொண்டவர்கள். மலரும் துர்முகி வருடத்தின் முற்பகுதி உங்களுக்கு ஓரளவிற்கு அனுகூலம் தருவதாய் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் அமையும். இவ்வருடம் ஆடி மாதம் நடுப்பகுதி வரை ஓரளவிற்கு உங்களின் முயற்சிகளில் வெற்றி காண முடியும். அதன் பின்னர் அமையும் குருப்பெயர்ச்சி 02.08.2016 முதலாக ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமைவதும் இவ் வருடம் முழுவதும் அட்டமத்து சனி சஞ்சாரம் அமைவதும் சற்று அலைச்சல், இழுபறி நிலைகள் அதிகமாக இருக்கும். குறிப்பாக உடல் நிலையில் சுகவீனங்கள், மருத்துவ செலவுகள் மற்றும் சத்திர சிகிச்சை போன்ற பலன்கள் அமையும். எந்த விடயம் என்றாலும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். புதிய தொழில் சார்ந்த விடயங்களில் தடை, தாமத இழுபறிகள் தொடரும். பணவரவு இடையிடையே இறுக்கமான நிலையை ஏற்படுத்தும். உறவினர், நண்பர்களுடன் மனச் சஞ்சலமான நிலைகள் அமையும். உங்களின் ஜாதக நிலையில் அமையும் மஹா திசைப் பலன்கள் சிறப்பானதாக அமையும் நிலையில் ஓரளவிற்கு நன்மைகளும் அதிபலன்களும் அமையும் நிலை இருக்கும். வருடம் முழுவதும் அமையும் ராகு கேதுவின் கோசார பலன் ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகள் தரும். பெண்களுக்கு மனச் சஞ்சல நிலை சற்று அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் ஊக்கமும் முயற்சியும் மிக முக்கியம். எதையும் முகத்திற்கு நேரே படபடவென பேசித்தீர்த்து விடும் நீங்கள் உங்களின் காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயற்படுவீர்கள். எல்லா விடயங்களிலும் நேர்மையான செயற்திறன் கொண்டிருப்பதால் தெய்வ அனுகூலம் உங்களுக்கு உண்டு. இந்த வருடம் சனீஸ்வரன் குரு கிரஹ வழிபாட்டுடன் அம்பாள் வழிபாடும் மேற்கொண்டு செயற்படுங்கள். அனுகூலமான நன்மை நூற்றிற்கு 55% உண்டு.
இடபராசி
(கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்)
களத்திர காரகன் எனப்படுகின்ற சுக்கிரனின் ஆதிபத்தியம் கொண்ட இடப ராசி அன்பர்களே தனித்துவமான போக்கும் சாதுர்யமான செயற்பாடும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசி நிலைக்கு துர்முகி வருடத்தின் பிற்பகுதி அனுகூலமானதாக அமையும். சுகஸ்தானம் எனப்படுகின்ற 4ஆம் இடத்திலே குருவின் கோசார நிலை அமைகின்றது. அத்தோடு சனீஸ்வரன் சஞ்சாரம் களத்திரஸ்தானம் எனப்படும் 7ஆம் இடம் அமைகின்றது. எனவே ஆண்டின் நடுப்பகுதி வரை சற்று அலைச்சலும் இழுபறி நிலைகளும் இருக்கும். தொழில் நிலைகளில் வேலைப்பழு சற்று அதிகமாக இருக்கும். குடும்ப நிலையிலே சிறு சிறு பிரச்சினைகள், மனச்சஞ்சல நிலைகள் ஏற்படும். தேவையற்ற வீண் பிரச்சினைகள் உங்களை நாடி வருகின்ற நிலை இருக்கும். பண வரவு மத்திமமாகவே அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் 02 முதல் குருவின் கோசார நிலை பஞ்சமஸ்தானமாகிய 05 ஆம் இடம் அமைவதன் மூலமாக தொழில் நிலைகளில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் அமையும். குடும்ப நிலையில் மகிழ்ச்சியும் நன்மைகளும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமானதாக அமையும் நிலையுண்டு. பெண்களுக்கு ஓரளவுக்கு மன நிறைவும் குடும்ப நிலையில் சுமுகமான பலன்களும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய முயற்சி ஓரளவிற்கு வெற்றிகளை தரக்கூடியதாய் இருக்கும். உங்களின் நீண்ட நாள் நண்பர்கள் உறவினர்களின் தொடர்புகள் அமையும். மொத்தத்தில் துர்முகி வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு ஓரளவுக்கு சிறப்புகள் கொடுக்கும். உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு வெற்றிகள் அமையும். பொதுவாகவே எல்லா விடயங்களையும் மனதிற்குள்ளே வைத்து மூடி மறைக்கும் குண இயல்பால் பல விடயங்களிலும் நீங்கள் மந்தமானவர்களாக இருப்பீர்கள். இதை சரி செய்தால் நீங்களே மகத்தான வெற்றியாளர்கள். சனீஸ்வரன் அம்மன் வழிபாடு நல்லது. துர்முகி வருடம் நூற்றிற்கு 65 % நன்மைகள் கொடுக்கும்.
மிதுன ராசி
(மிருகசீரிடம் 3, 4 பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்)
வித்தியாகாரகன் புதனின் ஆதிபத்தியம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே அறிவுத்திறனும் ஆக்கபூர்வ செயற்பாடும் கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடத்தின் சற்று மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு. எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். குடும்ப நிலையில் குழப்ப நிலை அதிகமாயிருக்கும். மனச்சஞ்சல நிலை, யோசனைகள் சற்று அதிகமாயிருக்கும். உங்களின் ராசி நிலைக்கு குருவின் கோசார சஞ்சாரமானது முதற்பகுதி ஆகஸ்ட் 02 வரை ஜெயஸ்த்தானமாகிய 3ஆம் இடம் குருவின் சஞ்சாரம் அமைகின்றது. அதன் பின்னராக சுகஸ்தானமாகிய 4ஆம் இடம் குருசஞ்சாரம் அமைகின்றது. எனவே இந்த இரு நிலைச் சஞ்சாரமும் சற்று மத்திமமான பலன்களையே தரும். எனவே பெரும் சிறப்பான நன்மையான பலாபலன்களை எதிர்பார்க்க முடியாது. சனீஸ்வரனின் சஞ்சாரம் ரோகஸ்த்தானமாகிய 6ம் இடம் அமைவதன் மூலம் இடையிடையே சிறு சிறு நன்மைகளும் அதிர்ஷ்ட பலன்களும் அமையும். எதையும் பொறுமையாக கையாண்டு கொள்வதே மிகவும் நல்லது. தொழில் சார்ந்த தேவையற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். மற்றும் திடீர் வழக்கு விவகாரங்கள் அமையும். கொடுக்கல் வாங்கல் மற்றும் புதிய முயற்சிகளில் மிகப் பொறுமையோடு செயற்பட வேண்டும். பெண்களுக்கு சஞ்சலமான நிலைகள் இருக்கும். வாக்கு வாதங்கள், பகைமை நிலை என்பன ஏற்படும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். மந்தமான நிலை கல்வியில் தொடரும் முயற்சியும் நிதானமுமே மிகவும் வெற்றிகள் கொடுக்கும். உங்களின் ஜாதக மஹா திசை சிறப்பாக அமையும் நிலை இருப்பின் ஓரளவிற்கு அனுகூலமான நன்மைகளும் இருக்கும். பொதுவாகவே உங்களை ஒரு புரியாத புதிராகவே உங்கள் உறவினர் முதல் நண்பர்கள் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு உங்களின் செயற்பாடும் அமைந்திருக்கும். யாருடனும் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் உங்கள் விடயங்களை உங்களுக்குள்ளேயே வைத்து செயற்பட்டு பல பிரச்சினைகளை சந்திப்பீர்கள். விஷ்ணுவை வழிபடவும் எடுக்கும் விடயங்களில் பொறுமை நிதான முடன் செயற்படவும் துர்முகி வருடம் நூற்றிற்கு 50% நன்மைகள் கொடுக்கும்.
கடக ராசி
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்)
மாத்துருகாரகன், சந்திரனின் ஆதிபத்தியம் கொண்ட கடகராசி அன்பர்களே மன நிலையில் சிந்தனையும் மறைமுகமான செயற்பாடும் கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடம் ஓரளவிற்கு அனுகூலமானதாக அமையும். வருட முற்பகுதியில் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றிகள் கொடுக்கும். தொழில் நிலையில் முன்னேற்றகரமான பலன் இருக்கும். புதிய முயற்சிகளிலும் ஓரளவிற்கு அனுகூலமான பலன் இருக்கும். பண வரவு தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை இருக்கும். ஆகஸ்ட் 02 ஆம் திகதியின் மேல் குருவின் நிலை ஜெயஸ்த்தானமாகிய 3ஆம் இடம் அமைவது சற்று அலைச்சல் நிலைகளைக் கொடுக்கும். எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையும் நிதானமும் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க வேண்டி பலன் இருக்கும். குடும்ப நிலையில் மத்திமமான மந்தமான பலன் இருக்கும். சகோதரர்களுடன் சிறு சிறு மனஸ்தாபம் அமையும். எதையும் எண்ணியபடி செய்து முடிக்க இயலாத தடைகள் இருக்கும். இந்த துர்முகி வருடம் முழுவதும் சனீஸ்வரன் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைவதனால் திடீர் சிக்கல் நிலைகள் பணவரவில் தடைகள் கொடுக்கல் வாங்கல் நிலைகளில் இழுபறி நிலைகள் என்பன இருக்கும். ராகு கேது சஞ்சாரமும் சற்று இழுபறி நிலையை இடையிடையே ஏற்படுத்தும். பெண்களுக்கு தாம் நினைக்கும் விடயங்களில் சிறு சிறு பிரச்சினைகள், மனச்சஞ்சல நிலைகள் என்பன அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான நிலை இருப்பினும் பரீட்சைகளில் மந்தமான பலாபலன்கள் இருக்கும். அதற்கு ஏற்ப நிதானமுடன் செயற்பட வேண்டும். பொதுவாகவே கலகலப்பாகவும் எல்லோருடனும் நட்புறவு கொண்டும் பழகும் நீங்கள் முயற்சியும் இலட்சியமும் அதிகம் கொண்டவர்கள். இருப்பினும் உங்களின் செயற்பாட்டினில் முழுமையான ஈடுபாடு இருக்காது. சிறுபிள்ளைத்தனமான உங்களின் நடைமுறை பல விடயங்களிலும் உங்களுக்கு சற்று பிரச்சினைகளை தருவதாகவே இருக்கும். இந்த வருசத்திலே முதல் ஆறு மாத காலம் ஓரளவிற்கு உங்களுக்கு வெற்றிகள் அமையும். பிற்பகுதி சற்று போராட்டமான நிலைகளைக் கொடுக்கும். குருக்கிரஹ வழிபாடு, அம்மன் வழிபாடு அனுகூலம் கொடுக்கும். இந்த துர்முக வருடத்திலே நூற்றிற்கு 50% நன்மையுண்டு.
சிம்ம ராசி
(மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்)
சூரியனின் ஆதிபத்தியம் கொண்ட சிம்மராசி அன்பர்களே எந்த விடயத்தையும் சாணக்கியத்துடன் செய்கின்ற ஆளுமையும் திறமையும் கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடத்தின் முதற்பகுதி சற்று மத்திமமான சுமாரான பலன்களையே கொடுக்கும். குருவின் கோசார சஞ்சார நிலை 2016 ஆகஸ்ட் வரை ஜென்ம குருவாக அமைந்திருப்பது தொழில் நிலைகளில் சற்று அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். தேவையற்ற வீண் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். குடும்ப நிலையில் மனச்சஞ்சல நிலைகள், தேவையற்ற வீண் செலவீனங்கள், உடல் நிலை உபாதைகள், வழக்கு விவகாரங்களில் சிக்கல், இழுபறி நிலைகள் என்பன ஏற்படும். எந்த விடயம் என்றாலும் பொறுமை, நிதானமுடன் செயற்படவும். அத்தோடு இந்த துர்முகி வருடம் முழுவதும் சனீஸ்வரன் சஞ்சாரம், சுகஸ்தானம் எனப்படுகின்ற 4ஆம் இடம் கண்டார்த்த சனியாக அமைவதனால் ஒரு பிரச்சினை நிறைவு பெற மறு பிரச்சினை உருவாகும் நிலை இருக்கும். எனவே அதற்கு ஏற்ப பொறுமையும் நிதானமும் கொண்டு செயற்பட வேண்டும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் பலன் தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான பலன்களைக்கொடுக்கும். குடும்ப ரீதியில் சிறு சிறு நன்மைகள் அமையும். தொழில் நிலை சார்ந்த முன்னேற்றங்கள் அமையும். பெண்களுக்கும் ஓரளவிற்கு அனுகூலமான நிலை அமையும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் முன்னேற்றங்கள் ஏற்படும். பொதுவாகவே உங்களின் செயற்பாடுகளில் அதிகமான அக்கறை கொண்டு செயற்படும் நீங்கள் யாருக்காகவும் இரக்கம் கொண்டு செயற்படமாட்டீர்கள். உங்கள் காரியங்களிலே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். மனநிலையில் எப்போதும் சஞ்சலங்களும் சிந்தனைகளும் கொண்டு செயற்படுவீர்கள். உங்களுக்கு இந்த துர்முகி வருடத்திலே சற்று சுமாரான மத்திம பலன்களே அமையும். அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடு இருக்க வேண்டும். குரு சனி கிரஹ வழிபாடும் சிவன் வழிபாடும் நன்மை தரும். துர்முகி வருடம் நூற்றிக்கு 50% நன்மையுண்டு.
கன்னி ராசி
(உத்தரம், 2,3,4,பாதம், அத்தம், சித்திரை1,2,பாதம்)
புதனின் ஆதிபத்தியம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! எதிர்காலம் உணர்ந்து திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். இதனாலே பல சிக்கல்களையும் எதிர்கொள்வீர்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த துர்முகி வருடத்திலே ஆடி மாதம் வரையும் அனுகூலமான நன்மைகள் அமையும். எதையும் சமாளிக்கும் நிலைகளைக்கொடுக்கும் பலனிருக்கும். இருப்பினும் செலவீனங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். ஆகஸ்ட் மாதம் அமையும் குருப்பெயர்ச்சி ஜென்மஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைவது சற்று மந்தமான பலன்களே அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலைகளில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். வேலைப்பளு, மேலதி காரிகளுடன் மனச்சஞ்சல நிலை என்பன ஏற்படும். குடும்ப நிலையில் உறவினர்களுடன் மனஸ்தாப நிலை, எதிர்பாராத உடல் நிலை உபாதை, பணவரவில் மந்த நிலை போன்ற பலாபலன்கள் இருக்கும். அதற்கு ஏற்ப பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலை இழுபறி நிலை தொடரும். புதிய முயற்சிகளில் பொறுமை, நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். பெண்களுக்கு மந்தமான பலனளிக்கும். திருமணம் போன்ற விடயங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் சற்று மத்திமமாக இருக்கும். இழுபறி தடைகளைக் கொடுக்கும். மாணவர் கல்வி நிலையில் கூடுதலான கவனமும் முயற்சியும் எடுக்க வேண்டும். பொதுவாகவே தேவையில்லாமல் மிக அதிகமாக சிந்தித்து பல பிரச்சினைகளையும் உடல், மனநிலை சோர்வையும் நீங்களே ஏற்படுத்திக்கொண்டு விடுவீர்கள். யாருடனும் நம்பிக்கையோடு பழகமாட்டீர்கள். இதுவும் உங்களுக்கு அதிகமான பிரச்சினைகளை தரும். சனீஸ்வரன் சஞ்சாரம் இந்த வருடம் அனுகூலமாக அமைகின்றது. குருக்கிரஹ வழிபாடும் விஷ்ணு வழிபாடும் நல்லது. இந்த துர்முகி வருடம் உங்களுக்கு நூற்றிற்கு 45% நன்மை.
(தொடரும்)
துலாம் ராசி
( சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
சுக்கிரனின் ஆதிபத்தியம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே எதையும் மனச்சாட்சிப்படி செய்கின்ற மனப்பக்குவம் அதிகம் கொண்டவர்கள். தவறான ஒரு விடயம் செய்தாலும் அதற்காக ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்க்கு பரிகாரம் செய்து விடுவீர்கள்.
உங்களின் ராசி நிலைக்கு துர்முகி வருஷத்திலே ஆகஸ்ட் மாதம் வரை அனுகூலமான பலன்கள் அமையும். அதன் பின்னர் குருவின் சஞ்சாரம் விரயஸ்த்தானமாகிய 12ம் இடம் அமைவதன் காரணமாக அதிகமான செலவுகள் இருக்கும். அத்தோடு இந்த வருஷம் முழுவதுமாக உங்களுக்கு ஏழரைச்சனி சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே ஏழரைச்சனியின் கடைக்கூற்றுப்பலன் என்பதனாலே பெரும் சிரமங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொழில் நிலைகளில் ஓரளவிற்கு அனுகூலமான பலாபலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு இழுபறி, மந்த நிலை இருப்பினும் அனுகூலமான பலன் இருக்கும். பண வரவு ஓரளவிற்கு தேவைகளைப்பூர்த்தி செய்யும். குடும்ப நிலையில் அனுகூலமான பலாபலன்கள் இருக்கும். எதிர்பாராத தல யாத்திரைப் பயணங்கள் அமைகின்ற நிலை இருக்கும். பெண்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்றவர்கட்கு அப்பலன் சிறு சிறு இழுபறி நிலைகளைக்கொடுக்கும். மாணவர்கட்கு கல்வி நிலை அனுகூலமானதாக அமையும். கடன் பிரச்சினைகளில் சற்று இழுபறி தாமத நிலைகள் அமையும். பொதுவாக எந்தவிடயம் என்றாலும் சற்று போராடியே ஜெயிக்க வேண்டும். பொதுவாகவே செய்யும் விடயங்களில் நேர்மைத்திறன் கொண்டவர்கள் நீங்கள் எல்லோரையும் அனுசரித்து செயல்படுவீர்கள். ஒருவர் மீது வெறுப்பு ஏற்பட்டால் கடைசிவரை அது வெறுப்பாகவே கொண்டு செயல்படுவீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த வருடத்தில் சனி குரு வழிபாடும் அம்மன் வழிபாடும் மிகவும் நன்மை தரும். துர்முகி வருடம் நூற்றிற்கு 60% நன்மையுண்டு.
விருட்சிக ராசி
(விசாகம், 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
செவ்வாய் கிரஹ ஆதிபத்தியம் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே! எந்த விடயத்திலும் தேவையற்ற தலையீடுகள் கொடுத்து பிரச்சினைகளை வாங்கிக் கொள்பவர்கள் நீங்கள். உங்கள் ராசி நிலைக்கு துர்முகி வருட பலாபலன்கள் மத்திமமானதாகவே முற்பகுதி அமையும். தொழில் சார்ந்த பிரச்சினைகள், வேலைப்பளு, தொழில் நிலை இடமாற்றம் போன்ற பலாபலன்கள் அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் சஞ்சாரம் லாபஸ்த்தான மாகிய 11ம் இடம் அமைவது ஓரளவிற்கு அனுகூலமான பலன் கொடுக்கும். பண வரவும் அனுகூலமான நிலையிலே அமைகின்ற பலன் இருக்கும். இருப்பினும் ஏழரைச்சனி சஞ்சாரம் ஜென்மச்சனியாக அமைவதனால் எந்தவிடயம் என்றாலும் சற்று பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். தேவையற்ற சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். உடல் நிலையில் சுகயீனங்களும் மருத்துவ செலவுகளும் அமையும். கடன் பிரச்சினைகளில் சிக்கல் நிலைகள், வழக்கு விவகாரங்களில் இழுபறி நிலைகள் என்பன ஏற்பட்டு மறையும் நிலையிருக்கும். பெண்களுக்கு சஞ்சலமான நிலை அமைந்திருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு சிறு சிறு அலைச்சல், இழுபறி என்பன இருக்கும். குருவின் லாபஸ்த்தான சஞ்சார நிலை நற்பலன்களைக் கொடுக்கும் நிலை உண்டு. இருப்பினும் அவை முழுமையாக நிறைவாகப் பெற முடியாத நிலையில் ஜென்மச்சனியாக ஏழரைச்சனியின் சஞ்சாரம் வருடம் முழுவதும் அமைவதனால் இந்த துர்முகி வருஷத்தில் போராட்ட நிலை மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப பொறுமை நிதானத்துடன் செயற்பட வேண்டும். நீங்கள் நினைக்கும் விடயங்களை எப்படியும் செய்து முடிக்கின்ற குண இயல்பு உங்களிடம் அதிகமாக இருக்கும். எந்த நிலையிலும் உங்களுக்கு இஷ்டமான விடயங்களை எப்படியும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டீர்கள். எதையும் உங்களின் எண்ணப்படியே எல்லாவற்றையும் செய்வீர்கள். இதனாலேயே பலவித இன்னல்களைச்சந்தித்து கொள்வீர்கள். இந்த துர்முகி வருடத்திலே நூற்றிற்கு 60% நன்மையுண்டு.
தனுசு ராசி
( மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம்)
குருவின் பூரணமான ஆதிபத்தியம் கொண்ட தனுசுராசி அன்பர்களே! எந்த விடயம் என்றாலும் தன்னம்பிக்கையுடன் செயற்பட்டு போராடும் குண இயல்பு கொண்ட உங்களுக்கு இந்த துர்முகி வருடத்திலே உங்கள் ராசிக்கு முற்பகுதிப்பலன் மிகவும் அனுகூலமானதாக அமைகின்றது. தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் அமையும் நிலை இருக்கும். குடும்ப நிலையில் நற்பலாபலன்களுக்கு இடமிருக்கும். சுபகாரிய பலன்கள் சுமுகமாக அமையும் பலன் இருக்கும். புதிய முயற்சிகளில் ஓரளவிற்கு அனுகூல பலன் அமையும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமைகின்ற குருவின் பலன் ஜீவனஸ்தானமாகிய 10 ஆம் இடம் அமைவதன் மூலமாக எடுக்கும் முயற்சிகளில் அலைச்சல் நிலை அதிகமாக இருக்கும். பணவரவு மந்தமான நிலையில் அமையும். தொழில் நிலைகளில் இடமாற்றம், பதவி மாற்றம், தொழில்சார்ந்த விடயங்கள் என்பன அமைகின்ற நிலையிருக்கும்.
தேவையற்ற அலைச்சல் நிலைகள் அதிகமாக இருக்கும். குடும்ப நிலையிலும் மனச்சஞ்சலம் மந்தமான பலன் என்பன அமைகின்ற நிலை இருக்கும். பொறுமை, நிதானத்தோடு செயற்படுவது மிக நல்லது. இந்த துர்முகி வருடம் முழுவதும் ஏழரைச்சனி சஞ்சாரம் நடைபெறுகின்றது. எனவே எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். திடீர் பணவிரயம், பொருள் விரயம் என்பன ஏற்படுகின்ற நிலைகள் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலையில் தடைகள், இழுபறிகள் அமையும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகளும் குடும்ப நிலையில் குழப்ப நிலைகளும் அமையும். எதையும் சிந்தித்தே நிதானமுடன் செயல்படுத்துங்கள். மாணவர்களின் கல்வி நிலையில் சிறுசிறு மந்த நிலைகள் இருக்கும். பரீட்சைகளில் முயற்சியோடு செயற்பட வேண்டும். பொதுவாக துர்முகி வருடத்தின் பிற்பகுதியில் சுமாரான பலன்களே அமையும் நிலை இருக்கும். அதற்குரிய செயல் கொண்டு உங்களின் காரியங்களை நீங்கள் நகர்த்த வேண்டும். முக்கியமாக புதிய முயற்சிகளில் ஈடுபாடு கொள்ளும் போது ஒன்றிற்கு பலமுறை சிந்தித்து செயல்படுவதே மிக மிக நல்லது. பொதுவாகவே உங்கள் செயற்பாடுகளில் பிடிவாதம் அதிகம் கொண்டிருப்பீர்கள். அந்த பிடிவாத நிலையில் இருந்து இறங்கி வரமாட்டீர்கள். இதனாலேயே அதிக பிரச்சினைகளையும் சந்தித்து கொள்வீர்கள். உங்களின் அணுகுமுறை மற்றவர்களை கோபப்படுத்துவதாகவே அமைந்திருக்கும். சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று எனச்செயல்படுவீர்கள். மற்றவர்களின் மனதை புரிந்து செயல்படும் எண்ணம் அற்றவர்களாகவே இருப்பீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களின் தனித்துவமாகும்.
குரு, சனி கிரஹ வழிபாடும் சிவன் வழிபாடும்
அனுகூலமான பலன் தரும். இந்த துர்முகி வருடத்திலே நூற்றிற்கு 60% நன்மைகள் ஏற்படும்.
மகர ராசி
(உத்தராடம், 2,3,4 ஆம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்)
சனீஸ்வரனின் ஆதிபத்தியம் கொண்ட மகரராசி அன்பர்களே! முகத்திற்கு நேரே எதையும் பேசுகின்ற சுபாவம் கொண்ட நீங்கள் உங்கள் நிலையிலிருந்து இறங்கி வரமாட்டீர்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த துர்முகி வருடத்திலே முதற்பகுதியினிலே அட்டமத்து குருவின் சஞ்சாரம் ஆகஸ்ட் மாதம் வரை எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை, தாமத நிலைகள் அமையும். தொழில் நிலைகளில் தேவையற்ற வீண் பிரச்சினைகளில் சிக்க வேண்டி வரும். பணவரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமையும். குடும்ப நிலையில் மத்திமமான பலன்களும் மனச்சஞ்சல நிலைகளும் இருக்கும். எதையும் திருப்திகரமாக செய்ய முடியாத நிலை இருக்கும். சற்று பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். உடல் நிலையிலே சிறு சிறு சுகயீனங்கள், மருத்துவ செலவு என்பன இருக்கும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் நிதானம் தேவை. கடன் பிரச்சினைகளில் இழுபறி நிலை, வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலை போன்ற பலாபலன்கள் அமையும் நிலை இருக்கும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமையும் குருவின் பலன் பாக்கியஸ்த்தானமாகிய 9ஆம் இடம் அமைவது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்களைக்கொடுக்கும்.
சனீஸ்வரனின் பலன் லாபஸ்த்தானமாகிய 11 ம் இடம் அமைந்து இருப்பதும் சிறப்பான நிலையே. எனவே புதிய முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும் நிலை இருக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய திறன் அமையும். திருமணம் போன்ற சுபகாரியம் எதிர்பார்க்கின்றவர்கட்கு அப்பலன் நிறைவானதாகக் கைகூடும் நிலையுண்டு. மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றகரமான பலன் அமையும். பொதுவாகவே துர்முகி வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு எண்ணங்கள் ஈடேறும் நிலையே அதிகமாக உண்டு. எனவே அதற்கு ஏற்ப செயல்பட்டு நல்ல வெற்றிகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். பிடிவாதமும் வாக்கு வாதம் செய்வதும் உங்களின் முக்கிய குணம். யாரையும் மதிக்கமாட்டீர்கள். உங்கள் முடிவே உங்களுக்கு திருப்தி தரும். குருவழிபாடும் சிவன் வழிபாடும் உத்தமம். இந்த வருடம் நூற்றிற்கு 70% நன்மையுண்டு.
கும்ப ராசி
( அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்)
சனீஸ்வரனின் முழுமையான ஆதிபத்தியம் கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்களை ஒரு அப்பாவி போல காட்டியே பலவித அதிர்ஷ்டங்களையும் பெற்றுக்கொள்ளும் புத்திசாலிகள் நீங்கள். உங்களின் ராசி நிலைக்கு இந்த துர்முகி வருடம் அமையும் பலன்கள் சற்று மத்திமமான பலன்களாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமை, நிதானம் தேவை. குடும்ப நிலையில் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் ஆகஸ்ட் மாதம் வரை அமையும். இக்கால எல்லையிலே உங்களின் புதிய முயற்சிகள் செயற்பாடுகளில் ஓரளவிற்கு நன்மைகள் ஏற்படும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் குருவின் பலன் அட்டமஸ்த்தானமாகிய 8ம் இடம் அமைவது தொழில் நிலைகளில் அலைச்சல் பிரச்சினை என்பன அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. பணவரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமைகின்ற நிலை இருக்கும். கொடுக்கல் வாங்கல் விடயங்களில் இழுபறி, தாமத நிலை தொடரும். எதையும் நினைத்தபடி செய்ய முடியாத நிலை இருக்கும். குடும்ப நிலையிலே மனச்சஞ்சலங்களும் தேவையற்ற பிரச்சினைகளும் அமைகின்ற நிலை இருக்கும். எதையும் நிதானமாகவே செயற்படுத்த வேண்டும். பெண்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் பொறுமை நிதானம் கொண்டு செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் மேல் அதிகாரிகளுடன் பிரச்சினைகள் ஏற்படும். வேலைப்பளு அதிகமிருக்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல் நிலை அமையும். பொதுவாகவே எதையுமே ஒரு அசட்டைத்தனத்தோடு எடுத்து செயற்படுபவர்கள் நீங்கள். ஒரு விடயம் பற்றிய தெளிவு அறிவு இல்லாவிடினும் தெரிந்தது போல் துணிவோடு செயல் ஆற்றும் குணம் உடையவர்கள். உங்களை விஞ்சி மற்றவர் முன்னேற்றம் காண்பதை விரும்ப மாட்டீர்கள். இந்த வருஷம் குரு வழிபாடும் சிவன் வழிபாடும் மிக நல்லது. துர்முகி வருடத்தில் நூற்றிற்கு 50% நன்மையுண்டு.
மீன ராசி
(பூரட்டாதி 4ம் பாதம் உத்தரட்டாதி ரேவதி)
குருவின் பூரணமான ஆதிபத்தியம் கொண்ட மீனராசி அன்பர்களே !எதையும் விளம்பரத்தோடு செய்ய வேண்டும் எனும் எண்ணப்பாங்கு அதிகம் கொண்டவர்கள். நீங்கள் உங்களின் ராசி நிலைக்கு துர்முகி வருடத்திலே ஓரளவு அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. எடுக்கும் முயற்சிகள் சிறு சிறு தடை தாமத நிலைகளை கொடுத்தாலும் அனுகூலமான பலன்களைத்தரும். தொழில் நிலைகளில் நல்ல சுமுகமான பலன்களுக்கு இடமிருக்கும். ஆகஸ்ட் மாதம் வரை சிறு சிறு மந்தமான பலன்கள் இடையிடையே ஏற்பட்டு மறையும். உடல் நிலையிலும் சுகயீனங்கள், மருத்துவ செலவுகள் ஏற்பட்டு மறையும். எதையும் நிதானத்தோடு செய்ய வேண்டும். ஆகஸ்ட் மாதத்தின் மேல் அமையும் பலன்கள் அனுகூலமான நன்மைகள் தரும். குடும்ப நிலையில் மகிழ்வும் உறவினர் மூலம் நன்மைகளும் ஏற்படும். பண வரவு தேவைகளைப்பூர்த்தி செய்யும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும். பெண்களுக்கு மன மகிழ்வும் நன்மைகளும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் முன்னேற்ற பலன் இருக்கும். இந்த துர்முகி வருடம் முழுவதும் சனியின் சஞ்சாரம் பாக்கியஸ்த்தானமாகிய 9ம் இடம் அமைவது அனுகூலமான நன்மைகளைக்கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் அமையும் நிலைகள் ஏற்படும். கடன் பிரச்சினைகளில் சுமுகமான பலன்கள் அமையும். வழக்கு விவகாரங்களும் வெற்றிகளைத்தரும் நிலையுண்டு. பொதுவாகவே உதவி செய்யும் மனோ பாவம் உங்களிடம் இருக்கும். ஆனால் அதை பலரும் அறியக்கூடிய நிலையில் செய்வீர்கள். எங்கு எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்வீர்கள். வாக்குவாதம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள் நீங்கள். குரு வழிபாடும், சிவன், அம்மன் வழிபாடும் அனுகூலமான பலன் தரும். பொதுவாக இந்த துர்முகி வருடத்திலே உங்களுக்கு நூற்றிற்கு 60% நன்மைகள் அமையும்.
ஜோதிட பூஷணம் துன்னையூர் -
ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
(சாரதாபீடம் ஜோதிடம்)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக