அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்
வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்று சுகநலன்களை விசாரித்து விட்டு, தேநீர் குடிக்கிறீர்களா? உங்களுக்குச் சீனி எப்படி? கூடவா, குறையவா போடவேண்டும்?” என்று கேட்டு உபசரிக்கும் வழக்கம் நம்மிடையே வந்துவிட்டது. ஆனால் விருந்து கொடுத்து உபசரிக்கும் விடயத்தில், உணவில் உங்களுக்கு எவ்வளவு உப்புப் போட வேண்டுமென்று கேட்பது நம்மிடையே இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை.
ஆனால் அண்மையில் உலக உயர் இரத்த அழுத்த நோய் தினத்தை அனுட்டித்த உலக சுகாதார ஸ்தாபனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கிய காரணிகளிலொன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கின்றது. அட, சாதாரண உப்புத்தானே? அது நமக்கு என்ன செய்து விடப்போகிறது? என்ற நமது அலட்சிய மனோபாவத்தின் சட்டையைப் பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல்!
“நீங்கள் உலகின் உப்பாயிருக்கிறீர்கள்! உப்பானது சாரமற்றுப் போனால் எதனைக் கொண்டு அதனைச் சாரப்படுத்துவது?” என்ற புனித விவிலியத்தின் கேள்வியானது, பலநூறு வருடங்களின் முன்பிருந்தே உப்பு மனிதவாழ்வில் இன்றியமையாததாய் உலக பாவனையில் இருந்து வருவதை உணர்த்துகிறது. ‘உப்பிட்ட வரை உள்ளளவும் நினை’ என்ற முதுமொழி உப்பை உணவாகவே கொள்கிறது. அது இல்லாமல் உணவே கிடையாது என்பதே இதன் அர்த்தம். ‘நீ சோற்றில் உப்பு போட்டுத் தின்பவனா?” என்பது ஒருவரின் ரோஷ உணர்வை, தன்மானத்தை சீண்டும் கேள்வியாகும். இதன் மூலமாகவெல்லாம் உப்பின் மகத்துவம் நமக்கு உணர்த்தப்படுகிறது.
எல்லோரது உடம்புக்கும் உப்பு தேவையானது. ஆனால் அது கொஞ்சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால மனிதர்கள் உணவில் நிறைய உப்பைச் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் உடல் உழைப்பால் வியர்வை வழியாக அதனை வெளியேற்றினார்கள். இன்றைய குளிர்சாதனங்களுக்குள்ளமைந்த வியர்க்காத சொகுசு வாழ்க்கை முறையில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஆனால் நவீன உணவு வகைகள் உப்பே கரிக்காத வகையில் விதவிதமான உப்பு வகைகளை நம்முடலில் திணிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
நம்முடலில் ஒவ்வொரு இரத்த அணுவுக்குள்ளும் ‘பொட்டாசியம்’என்னும் உப்பு உள்ளது. அணுவுக்கு வெளியே ‘சோடியம்’ என்ற உப்பும் உள்ளது. இந்த இரண்டுமே சமமான அளவுகளில் இருந்தால்தான் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிக உப்புச் சேர்வதால் இந்த சமன்பாடு கெட்டு இரத்தச் சுற்றோட்டம் சரியாக நிகழாமல் போகும். இதைத்தான் இரத்த அழுத்தம் என்கிறோம். இரத்த அழுத்தம் வந்து விட்டால் அது இருதய நோய்களையும், சிறு நீரகப் பிரச்சினைகளையும், பக்கவாதத்தையும் காலப் போக்கில் கூடவே அழைத்து வந்து விடும். ஆகவே உப்பு விடயத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
உப்பென்றால், நாளாந்தம் ஏதோ சோற்றில் தெளித்துவிட்டுச் சாப்பிடுவது மட்டுமேயென்று பலரும் நினைக்கிறார்கள். அதை மாத்திரமல்ல, உண்மையில் எல்லாவித உப்புக்களையும் குறைத்துப் பயன்படுத்த வேண்டும். இன்றைய பக்கெட் உணவுகளில் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக Sodium Bensoate என்ற இரசாயனம் சேர்க்கப்படுகிறது. சுவையைக் கூட்டுவதற்காக Monosodium cludomate போன்ற உப்புப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பேக்கிங் சோடா, அப்பச்சோடா போன்றவைகளும் மிருதுத்தன்மைக்காக சேர்க்கப்படுகின்றன. இவைகளெல்லாம் உப்புத்தான். ஓர் உணவுப் பண்டத்தில் இருக்க வேண்டிய உப்பின் அளவை இவை கண்ணுக்குத் தெரியாமல் கூட்டிவிடுகின்றன.
சாதாரணமாக நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவு, அதாவது 5 கிராம் உப்பைத்தான் உண்ண வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. ஆனால் பக்ெகட் உணவுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உள்ள உப்பின் அளவு இதைவிடப் பத்துமடங்கு அதிகம். சாதாரணமாக நாம் வீட்டில் தயாரிக்கும் 200 மில்லிகிராம் சூப்பில் 2 மில்லி கிராம் உப்புத்தான் இருக்கும். ஆனால், பக்கட்டுகளில் விற்கப்படும் 200 மில்லி கிராம் சூப்புகளில் 20 மில்லிகிராம் உப்பு இருக்கும். காரணம் இவற்றில் இருக்கும் பலவகையான உப்புச் சேர்க்கைகள் தான்.
இரத்த அழுத்தம் இருக்கும் பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது இலங்கையில், அதுவும் போர் பாதித்துள்ள வடக்கிலும் கிழக்கிலும் குறைவாக இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அப்படியே டாக்டர்களிடம் போனாலும் ‘ஊறுகாயைச் சாப்பிடாதே’, சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்க்காதே, என்றுதான் புத்திமதி சொல்வார்கள். ‘பக்ெகட் உணவைத் திண்ணாதே’ ‘ரெடிமேட் உணவுகளைத் தொடாதே’ என்று யாரும் கூறுவதில்லை. உப்புப் பற்றிய விழிப்புணர்வு இங்கு குறைவாகவே இருக்கிறது. அத்தோடு உப்பின் தரமும் இன்று கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது என மருத்துவர்கள் மேலும் கூறுகின்றனர்.
அந்நாளில் நாம் பயன்படுத்திய கல் உப்பு உண்மையிலேயே சிறந்ததாக இருந்தது. அதில் நிறம் குறைவாக இருந்தாலும் எல்லாவித சத்துக்களும் நிறைந்திருந்தன. இன்று வெள்ளை வெளேரென்று எதுவும் இருக்க வேண்டுமென்பதற்காக பெரிய நிறுவனங்கள் விற்கும் தூள் உப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அவர்கள் கல்லுப்பை வெள்ளையாக்குவதாகக் கூறி அதிலுள்ள இயற்கைச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறார்கள். அவைகளில் சத்துமில்லை அளவுமில்லை என்றும் கவலை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு நாளில் ஒருவர் சாப்பிட வேண்டிய உப்பின் அளவு ஐந்து கிராம் என்றால், அந்த அளவுக்கும் அப்பால் போய் ஒரு சராசரி இலங்கையர் 12 முதல் 18 கிராம் வரை உப்புச் சாப்பிடுகிறாரென்று கூறுகிறது பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு ஒன்று. இந்த மாற்றத்திற்கான காரண கர்த்தா Fast-food உணவு!
பக்ெகட் உணவுகள் மூலம் உடம்பில் நாளாந்தம் மறைமுகமாக உப்புச் சேர்வதே விபரீதங்களுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. உலக மக்கள் இப்போது அருந்தும் உப்பில் 30 சத வீதத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாய்க் குறைக்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உப்புப் பெறாத, உருப்படாத விடயத்திற்கெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு இனி நாம் உப்புக்காகக் கவலைப்படுவோம்.
வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்று சுகநலன்களை விசாரித்து விட்டு, தேநீர் குடிக்கிறீர்களா? உங்களுக்குச் சீனி எப்படி? கூடவா, குறையவா போடவேண்டும்?” என்று கேட்டு உபசரிக்கும் வழக்கம் நம்மிடையே வந்துவிட்டது. ஆனால் விருந்து கொடுத்து உபசரிக்கும் விடயத்தில், உணவில் உங்களுக்கு எவ்வளவு உப்புப் போட வேண்டுமென்று கேட்பது நம்மிடையே இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை.
ஆனால் அண்மையில் உலக உயர் இரத்த அழுத்த நோய் தினத்தை அனுட்டித்த உலக சுகாதார ஸ்தாபனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கிய காரணிகளிலொன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கின்றது. அட, சாதாரண உப்புத்தானே? அது நமக்கு என்ன செய்து விடப்போகிறது? என்ற நமது அலட்சிய மனோபாவத்தின் சட்டையைப் பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல்!
“நீங்கள் உலகின் உப்பாயிருக்கிறீர்கள்! உப்பானது சாரமற்றுப் போனால் எதனைக் கொண்டு அதனைச் சாரப்படுத்துவது?” என்ற புனித விவிலியத்தின் கேள்வியானது, பலநூறு வருடங்களின் முன்பிருந்தே உப்பு மனிதவாழ்வில் இன்றியமையாததாய் உலக பாவனையில் இருந்து வருவதை உணர்த்துகிறது. ‘உப்பிட்ட வரை உள்ளளவும் நினை’ என்ற முதுமொழி உப்பை உணவாகவே கொள்கிறது. அது இல்லாமல் உணவே கிடையாது என்பதே இதன் அர்த்தம். ‘நீ சோற்றில் உப்பு போட்டுத் தின்பவனா?” என்பது ஒருவரின் ரோஷ உணர்வை, தன்மானத்தை சீண்டும் கேள்வியாகும். இதன் மூலமாகவெல்லாம் உப்பின் மகத்துவம் நமக்கு உணர்த்தப்படுகிறது.
எல்லோரது உடம்புக்கும் உப்பு தேவையானது. ஆனால் அது கொஞ்சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால மனிதர்கள் உணவில் நிறைய உப்பைச் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் உடல் உழைப்பால் வியர்வை வழியாக அதனை வெளியேற்றினார்கள். இன்றைய குளிர்சாதனங்களுக்குள்ளமைந்த வியர்க்காத சொகுசு வாழ்க்கை முறையில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஆனால் நவீன உணவு வகைகள் உப்பே கரிக்காத வகையில் விதவிதமான உப்பு வகைகளை நம்முடலில் திணிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
நம்முடலில் ஒவ்வொரு இரத்த அணுவுக்குள்ளும் ‘பொட்டாசியம்’என்னும் உப்பு உள்ளது. அணுவுக்கு வெளியே ‘சோடியம்’ என்ற உப்பும் உள்ளது. இந்த இரண்டுமே சமமான அளவுகளில் இருந்தால்தான் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிக உப்புச் சேர்வதால் இந்த சமன்பாடு கெட்டு இரத்தச் சுற்றோட்டம் சரியாக நிகழாமல் போகும். இதைத்தான் இரத்த அழுத்தம் என்கிறோம். இரத்த அழுத்தம் வந்து விட்டால் அது இருதய நோய்களையும், சிறு நீரகப் பிரச்சினைகளையும், பக்கவாதத்தையும் காலப் போக்கில் கூடவே அழைத்து வந்து விடும். ஆகவே உப்பு விடயத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
உப்பென்றால், நாளாந்தம் ஏதோ சோற்றில் தெளித்துவிட்டுச் சாப்பிடுவது மட்டுமேயென்று பலரும் நினைக்கிறார்கள். அதை மாத்திரமல்ல, உண்மையில் எல்லாவித உப்புக்களையும் குறைத்துப் பயன்படுத்த வேண்டும். இன்றைய பக்கெட் உணவுகளில் அவை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக Sodium Bensoate என்ற இரசாயனம் சேர்க்கப்படுகிறது. சுவையைக் கூட்டுவதற்காக Monosodium cludomate போன்ற உப்புப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பேக்கிங் சோடா, அப்பச்சோடா போன்றவைகளும் மிருதுத்தன்மைக்காக சேர்க்கப்படுகின்றன. இவைகளெல்லாம் உப்புத்தான். ஓர் உணவுப் பண்டத்தில் இருக்க வேண்டிய உப்பின் அளவை இவை கண்ணுக்குத் தெரியாமல் கூட்டிவிடுகின்றன.
சாதாரணமாக நாளொன்றுக்கு ஒரு தேக்கரண்டியளவு, அதாவது 5 கிராம் உப்பைத்தான் உண்ண வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. ஆனால் பக்ெகட் உணவுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உள்ள உப்பின் அளவு இதைவிடப் பத்துமடங்கு அதிகம். சாதாரணமாக நாம் வீட்டில் தயாரிக்கும் 200 மில்லிகிராம் சூப்பில் 2 மில்லி கிராம் உப்புத்தான் இருக்கும். ஆனால், பக்கட்டுகளில் விற்கப்படும் 200 மில்லி கிராம் சூப்புகளில் 20 மில்லிகிராம் உப்பு இருக்கும். காரணம் இவற்றில் இருக்கும் பலவகையான உப்புச் சேர்க்கைகள் தான்.
இரத்த அழுத்தம் இருக்கும் பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது இலங்கையில், அதுவும் போர் பாதித்துள்ள வடக்கிலும் கிழக்கிலும் குறைவாக இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. அப்படியே டாக்டர்களிடம் போனாலும் ‘ஊறுகாயைச் சாப்பிடாதே’, சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்க்காதே, என்றுதான் புத்திமதி சொல்வார்கள். ‘பக்ெகட் உணவைத் திண்ணாதே’ ‘ரெடிமேட் உணவுகளைத் தொடாதே’ என்று யாரும் கூறுவதில்லை. உப்புப் பற்றிய விழிப்புணர்வு இங்கு குறைவாகவே இருக்கிறது. அத்தோடு உப்பின் தரமும் இன்று கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது என மருத்துவர்கள் மேலும் கூறுகின்றனர்.
அந்நாளில் நாம் பயன்படுத்திய கல் உப்பு உண்மையிலேயே சிறந்ததாக இருந்தது. அதில் நிறம் குறைவாக இருந்தாலும் எல்லாவித சத்துக்களும் நிறைந்திருந்தன. இன்று வெள்ளை வெளேரென்று எதுவும் இருக்க வேண்டுமென்பதற்காக பெரிய நிறுவனங்கள் விற்கும் தூள் உப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அவர்கள் கல்லுப்பை வெள்ளையாக்குவதாகக் கூறி அதிலுள்ள இயற்கைச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறார்கள். அவைகளில் சத்துமில்லை அளவுமில்லை என்றும் கவலை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.
ஒரு நாளில் ஒருவர் சாப்பிட வேண்டிய உப்பின் அளவு ஐந்து கிராம் என்றால், அந்த அளவுக்கும் அப்பால் போய் ஒரு சராசரி இலங்கையர் 12 முதல் 18 கிராம் வரை உப்புச் சாப்பிடுகிறாரென்று கூறுகிறது பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு ஒன்று. இந்த மாற்றத்திற்கான காரண கர்த்தா Fast-food உணவு!
பக்ெகட் உணவுகள் மூலம் உடம்பில் நாளாந்தம் மறைமுகமாக உப்புச் சேர்வதே விபரீதங்களுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. உலக மக்கள் இப்போது அருந்தும் உப்பில் 30 சத வீதத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாய்க் குறைக்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உப்புப் பெறாத, உருப்படாத விடயத்திற்கெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு இனி நாம் உப்புக்காகக் கவலைப்படுவோம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக