உன் எண்ணத்தின் வண்ணத்திலிருந்து
சில வர்ணங்களை எடுத்து
என் வாழ்வின் ஓவியத்தையும்
வடிவுபடுத்திக் கொண்டவன் நான்....
வருத்தமாய் இருக்கிறது
உன்னைப் பற்றிய விபரீத செய்திகள்
என் விழிகளால் வாசிக்கப்படும் போது !
“கதவைத்திற காற்று வரும்' என
எங்கள் கதவுகளை தட்டிய நீ
உன் கதவுகளை ஏன்
தாழிட்டுக் கொண்டாய்....?
உன் உபதேசங்களை
உற்றுப் பார்த்த தேசம் உன்
குற்றங்களை தொட்டுப் பார்க்கிறது !
உண்மையை உரக்கச் சொல்லாத
உன் மௌனங்கள் எப்படி யெல்லாமோ
இங்கு மொழி பெயர்க்கப்படுகிறது.....
வர்ணம் வாசம் கலந்த ரோஜாவில்
முட்களும் போலவா இதுவும்
இல்லை....
விளங்கவில்லை எங்களுக்கு...!
எங்களை சீர் செய்ய நாங்கள்
சிரமப்படுகையில் நீ
சிதைந்து போனாய் !
சிலுவையும் முள்முடியும்
சாதனையான உலகில் உன்
சிம்மாசனம் உனக்கே
சோதனையானதே !
நித்தியானந்தரே...
எந்த நிலையும் நித்தியமில்லை
மாறும் என்ற உங்கள் சத்தியத்தின்
அர்த்தம் இது தானா ?
கலங்கரை விளக்காய் கருதியோருக்கு
கலங்கமான நீ என்ன நினைத்து
எங்களை இந்த நிலைக்குள்
இட்டுச் சென்றாய் ?
நிர்க்கதி நிலையில்
நிம்மதி தேடி நின் போன்றோரை
நாடுவதும் நிம்மதி
இல்லாத செயல்தானோ...?
சி. முத்து சங்கரன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக