கிழக்கு ஜேர்மனியில் திரெஸ்டன் நகருக்கு அண்மையிலுள்ள பொஸென்டோர்ப் (Possendorf) எனும் இடத்தைச் சேர்ந்த பிரமச்சாயான உவே மிட்ஸ்செர்லிச் (Uwe Mitzscherlich 39 வயது) என்ற தபால்காரரே இவ்வாறு பூனையை திருமணம் செய்துள்ளார்.
வயது முதிர்ந்த ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் சிசிலியா என்ற தனது பூனை இறப்பதற்கு முன் அதனை திருமணம் செய்து, அதற்கு கௌரவமளிக்க விரும்பியதாக உவே மிட்ஸ்செர்லிச் கூறினார்.
மிருகமொன்றைத் திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் உவே மிடஸ்செர்லிச், தொலைக்காட்சி நடிகையொருவருக்கு 300 யூரோக்களை கட்டணமாக செலுத்தி தனக்கும் பூனைக்குமிடையிலான திருமணத்தில் திருமணப் பதிவாளர் வகிபாகத்தை வகிக்கக் கோயிருந்தார்.
இத்திருமண சாட்சியாக உவே மிட்ஸ் சர்லிச்சின் இரட்டைச் சகோதரரான எறிக் பங்கேற்றார்.
மேற்படி திருமணத்தில் உவே மிட்ஸ் செர்லிச் திருமண ஆடை அணிந்திருந்தார்.
சிசிலியாவுக்கு வெள்ளை ஆடையும் தொப்பியும் அணிவிக்கப்பட்டிருந்தது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக