ராமேஸ்வரம் அருகே கிருத்துவ ஆலயத்தின் தரையில் இயேசு, மாதா உருவங்கள் தோன்றி மறைவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் அற்புத குழந்தை யேசு ஆலயம் கடந்த ஏப்.18ம் தேதி திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு, இப்பகுதியை சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் வழிபாடு நடத்த சென்றார். பிரார்த்தனை முடித்து அவர் கண் விழித்து பார்த்த போது, சர்ச்சின் டைல்ஸ் பதித்த தரையில் ஒன்றரை அடி நீள அகலத்தில் இயேசு, மாதா உருவங்கள் மாறி, மாறி தெரிந்துள்ளது.
இதைப்பார்த்து அதிசயித்த ஜனார்த்தனன் ஓடிச்சென்று, அங்குள்ள பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான், உதவி பங்கு தந்தை பாக்யநாதன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து அந்த இடத்தை பார்த்துள்ளனர். அவர்களுக்கும் இயேசு, மாதா உருவங்கள் தெரியவே, ஆச்சரியப்பட்டனர். இத்தகவல் ராமேஸ்வரம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது.
இதையடுத்து, ராமேஸ்வரம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் சர்ச்சை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் செல்போனிலும், கேமராவிலும் அந்த உருவங்களை படம் எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக