சி.ஐ.ஏ இவரைப்பற்றி மேலும் கூறுகையில்,லண்டன் மற்றும் மேற்கத்திய நாடுகளில் எங்கேனும் தாக்குதல் நடைபெறுமாயின் அதன் பின்புலமாக இந்த அவ்லாகி தான் இருப்பார். இவருடைய தந்தை ஏமன் நாட்டை சேர்ந்தவர்.
அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் கொலொரேடோ பல்கலைகழகத்தில் சிவில் எஞ்சினியரிங் படிப்பினை முடித்தார். சான் டீகோவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் டாக்டர் பட்டம் பெறுவதற்காக வாஷிங்டன் சென்றார். ஆப்கானிஸ்தானுக்கு ஒரு முறை சுற்றுப் பயணம் செல்ல நேர்ந்தது. பின்னர் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கூட்டாளிகளுடன் தொடர்பு ஏற்பட்டது.
இவர் ஆங்கிலத்தை சரளமாக பேசும் திறன் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய போதனைகளில், பென்டகன் தாக்குதல் போல் அல்லாமல் சிறு சிறு தாக்குதல்களை அவ்வப்போது நடத்துங்கள். அப்போது தான் அதை பற்றிய பயம் மக்களிடையே நீடித்து இருக்கும் என்று கூறி வருகிறார். தன்னுடைய நடவடிக்கைகளை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் ஏமன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பரப்பி வருகிறார்.
பின்லேடனை போல் அல்லாமல் ஆனால் மெல்ல தன் கொள்கைகளை இணையதளம் வழியாக பரவ செய்து தீவிரவாத போக்கினை வலுப்படுத்தி வருவதால் இவரை உலகளாவிய பயங்கரவாதிகளில் ஒருவராக கடந்த ஏப்ரல் மாதம் சி.ஐ.ஏ. அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக