சனி, 25 செப்டம்பர், 2010

தீர்ப்பென்றால் தீர்ப்பு இதுதான் தீர்ப்பு

தனது மகளை ஒரு வருட காலப் பகுதியில் தினசரி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்த தந்தையொருவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றமொன்று வெள்ளிக்கிழமை 14,400 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் மணிலா நகருக்கு அண்மையிலுள்ள லொஸ் பனோஸ் எனும் இடத்தைச் சேர்ந்த மேற்படி நபரின் மனைவி ஹொங்கொங்கிற்கு வீட்டுப் பணியாளராக வேலை பெற்றுச் சென்ற பின், அவர்களது மூன்று பிள்ளைகளும் தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 13 வயதான மகளை தந்தை தினசரி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளதுடன் வாய்மூலமான பாலியலில் ஈடுபடவும் நிர்ப்பந்தித்துள்ளார்.

மேற்படி சிறுமியும் அவரது சகோதரர்களும் தமது தாயின் உறவினர் வீடொன்றுக்கு செல்ல நேர்ந்த சமயம், சிறுமி தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகம் குறித்து தெரிவித்துள்ளார்.

தகவலறிந்த தாயார் நாடு திரும்பி முச்சக்கர வண்டி சாரதியான தனது கணவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

ஆரம்பகட்ட வழக்கு விசாரணைகளின் போது மேற்படி தந்தைக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில் அத்தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்ட மேன்றையீட்டை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், 14,400 வருட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல