திங்கள், 25 அக்டோபர், 2010

காரில் சடலத்துடன் பல மாத காலமாக பயணம் செய்த அமெரிக்கப் பெண்

பல மாத காலமாக வீடு வாசல் அற்ற பெண்ணொருவரின் சடலம் காரின் பயணிகள் ஆசனத்தில் இருக்க காரைச் செலுத்தி வந்த பெண்ணொருவர் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விசித்திர சம்பவம் அமெரிக்க தென் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
வாகனம் செல்லும் பாதைக்கு முட்டுக் கட்டையாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை கிடைத்த முறைப் பாட்டையடுத்து குறிப்பிட்ட கார் சோதனையிடப்பட்டது.

இந்நிலையில் காரின் பயணிகள் ஆசனத்தில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் பகுதியாக பதப்படுத்தப்பட்ட சடலம் இருப்பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் காரின் உமையாளரான பெண் பொலிஸாருக்கு விபரிக்கையில், வீடுவாசலற்ற குறிப்பிட்ட பெண் தனது காரில் படுத்துறங்கிய வேளையில் உயிழந்ததாகவும் பொலிஸாரை தொடர்பு கொள்வதற்கு தனக்கிருந்த அச்சம் காரணமாக இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேற்படி பெண்ணின் சடலம் 3 மாதங்கள் தொடக்கம் 10 மாதங்கள் வரை காரில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கான எதுவித அடையாளமும் காணப்படவில்லை எனவும் அப்பெண்ணின் மரணத்தை இயற்கை மரணம் என்றே கருதுவதாகவும் பிராந்திய பொலிஸ் உத்தியோகத்தரான எட் எவெரெட் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல