புதன், 3 நவம்பர், 2010

மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபருக்கு கையடக்கத் தொலைபேசி கொண்டுசென்ற பெண் கைது!

பொரல்லை மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபருக்கு கையடக்கத் தொலைபேசி, மூன்று சிம் அட்டைகள், ஒரு பெட்ரி சார்ஜர் என்பவற்றை உணவுப் பொதியில் மறைத்துவைத்து கொண்டுசென்ற பெண் ஒருவர் நேற்று (02) கைதுசெய்யப்பட்டதாக பொரல்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உணவைக் கொண்டுசென்ற ஐஸ்கீரிம் பெட்டியில் இவை மறைத்துவைத்து கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

தொலைபேசி உட்பட அனைத்து உபகரணங்களும் தனித்தனியான பொதிசெய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். உணவுப் பொதியை சிறை அதிகாரிகள் சோதனையிட்டபோதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொரல்லை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் இந்தப் பெண்ணைக் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மெகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபர் ஒருவரின் உறவினர் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல