ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடம்

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது அவரது ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உடல் சேர்வுவாதமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். முற்றாக சுய நினைவை இழந்த நிலையிலேயே பார்வதி அம்மாள் காணப்படுவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். எண்பது வயதான பார்வதி அம்மாள் தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பார்வதி அம்மாளின் கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமே அவரை பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல