வெள்ளி, 30 மார்ச், 2012

“பேஸ்புக்' இணையத்தளத்தில் தொடர்பை ஏற்படுத்திய நிலையில் பெண் தற்கொலை

தாய்வானிய பெண்ணொருவர் “பேஸ்புக்' இணையத்தளத்தில் நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்த வேளையில் நச்சுப் புகையை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிளயர் லின் “பேஸ் என்ற மேற்படி பெண் தனது 31 ஆவது பிறந்த தினத்தன்றே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொண்டபோது 9 நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.




கிளயர் லின் இறப்பதற்கு முன்னர், ““நான் உங்களை கெஞ்சிக் கேட்கிறேன், நச் சுப் புகையால் எனக்கு மூச்சுத் திணறுகிறது. தற்போது நேரம் கடந்துவிட்டது.
எனக்கு “பேஸ்புக்' இப் போது கூட தேவையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

அவர் 67 நிமிடங்களாக தனது மரணம் தொடர்பில் தனது நண்பர்களுக்கு விபரித் துக் கொண்டிருந்தபோது அவருடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்த எந்தவொரு நண்பரும் அச்சமயத்தில் உடனடியாக பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு அறிவித்திருந்தால் கிளயர் லின்னின் உயிரைக் காப்பாற்றி யிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல