சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஆனால் வத்ராவின் பெயரைக் கேட்டு ஆச்சரியப்படுவது புதிதல்ல, டெல்லி மக்களுக்கு. மாறாக அவரை பிரியங்கா காதலித்தபோதும் சரி, அவரை கல்யாணம் செய்தபோதும் இவரைப் போய் எப்படி பிரியங்கா திருமணம் செய்து கொண்டார் என்றே ஆச்சரியப்படுகின்றனர் டெல்லி மக்கள். ஏனென்றால் வத்ராவின் பின்னணி அப்படி.
வத்ராவின் பின்னணி தெரியுமா?
மொராதாபாத்தைச் சேர்ந்த சாதாரண வர்த்தகர்தான் வத்ரா. பிரியங்காவுக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் படு சாதாரணமாகத்தான் தெரிவார் வத்ரா. அவரைவிட அழகிலும் சரி உயரத்திலும் சரி ஒரு படி குறைவுதான். நேரு- இந்திரா காந்தி குடும்பத்துக்கும் இவருக்கும் சற்றும் பொருத்தம் கிடையாது. ஆனால் இவர் இந்திரா காந்தி குடும்பத்துடன் வந்து சேர்ந்ததுதான அனைவரையும் அன்றே ஆச்சரியப்படுத்தியது.
ஆயிரத்தில் கடைசி கூட கிடையாது.....
இந்தியாவின் 1000 தகுதி வாய்ந்த பேச்சலர்கள் பட்டியலைத் தயாரித்தால் அதில் கடைசி இடம் கூட வத்ராவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் ரியாலிட்டி. இப்படி 1997ம் ஆண்டு அவுட் லுக் பத்திரிக்கை வத்ராவை வர்ணித்தது. படு சாதாரண நபரான வத்ராவை எப்படி காந்தி குடும்பத்தின் மருமகனாக கருத முடியும் என்று தெரியவில்லை என்றும் அவுட்லுக் வர்ணித்தது.
சுமாரான வத்ரா... டென்சனான நண்பர்கள்...
வத்ராவை பிரியங்கா மணக்க முடிவு செய்தபோது வத்ராவின் நெருங்கிய நண்பர்களே டென்ஷனாகி விட்டார்களாம். எப்படி வத்ராவை பிரியங்கா மணக்க முடிவு செய்தார் என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார்களாம். ஏனெனில் வத்ரா படிப்பில் படு சுமாராம். விளையாட்டிலும் பெரிய ஆள் கிடையாது. அவர் ஒன்றும் அவ்வளவு பெரியஆள் இல்லையே என்பதுதான் பிரியங்காவின் நண்பங்களின் ஆச்சரியம்.
நேரு குடும்பத்திற்கு இது புதுசில்லை
நேரு குடும்பத்தில் சாதாரணர் ஒருவர் வருவது புதிதல்ல. முன்பு பெரோஸ் காந்தி, இந்திராவை மணந்தார். அதேபோல சஞ்சய் காந்தி மேனகாவை மணந்தார். ராஜீவ் காந்தி, இந்தியாவுக்குச் சம்பந்தமே இல்லாத சோனியா காந்தியை மணந்தார். இவர்கள் வழியில் ராபர்ட் வத்ராவை பிரியங்கா மணந்தார். ஆனால் பெரோஸ், மேனகா, சோனியாவுடன் ஒப்பிட்டால் அவர்களுக்குப் பக்கத்தில் கூட வர மாட்டார் வத்ரா.
பிரியங்காவை திருமணம் செய்த பின்னர் .....
எப்படி இருந்த வத்ரா இப்படி பணக்காரர் ஆனார் என்பது இன்னொரு ஆச்சரியம். காரணம் அவரது குடும்பப் பின்னணி அவ்வளவு சாதாரணமானது. பிரியங்காவின் கணவராக மாறிய பிறகே பெரும் பணக்காரர் ஆனார் வத்ரா.
தினந்தோறும் பேராட்டம்தானாம்....
ஒருமுறை பிரியங்கா குறித்து வத்ரா கூறுகையில், பிரியங்காவுக்காக நான் எனது வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டேன். என்னை எல்லோரும் பிரபலமானவன் என்கின்றனர் ஆனால் தினம் தினம் நான் போராடி வருகிறேன் என்றார் வத்ரா.
இன்னமும் விலகிடாத மர்மம்தான்
ராபர்ட் வத்ரா எப்படி சொத்து சேர்த்தார் என்பதை, டிஎல்எப்புக்குள் அவர் எப்படி புகுந்தார் என்பதை விட பிரியங்காவை அவர் எப்படி ஈர்த்தார் என்பதுதான் மாபெரும் மர்மம் என்பதில் சநதேகமே இல்லை.

வத்ராவின் பின்னணி தெரியுமா?
மொராதாபாத்தைச் சேர்ந்த சாதாரண வர்த்தகர்தான் வத்ரா. பிரியங்காவுக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் படு சாதாரணமாகத்தான் தெரிவார் வத்ரா. அவரைவிட அழகிலும் சரி உயரத்திலும் சரி ஒரு படி குறைவுதான். நேரு- இந்திரா காந்தி குடும்பத்துக்கும் இவருக்கும் சற்றும் பொருத்தம் கிடையாது. ஆனால் இவர் இந்திரா காந்தி குடும்பத்துடன் வந்து சேர்ந்ததுதான அனைவரையும் அன்றே ஆச்சரியப்படுத்தியது.
ஆயிரத்தில் கடைசி கூட கிடையாது.....
இந்தியாவின் 1000 தகுதி வாய்ந்த பேச்சலர்கள் பட்டியலைத் தயாரித்தால் அதில் கடைசி இடம் கூட வத்ராவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதுதான் ரியாலிட்டி. இப்படி 1997ம் ஆண்டு அவுட் லுக் பத்திரிக்கை வத்ராவை வர்ணித்தது. படு சாதாரண நபரான வத்ராவை எப்படி காந்தி குடும்பத்தின் மருமகனாக கருத முடியும் என்று தெரியவில்லை என்றும் அவுட்லுக் வர்ணித்தது.
சுமாரான வத்ரா... டென்சனான நண்பர்கள்...
வத்ராவை பிரியங்கா மணக்க முடிவு செய்தபோது வத்ராவின் நெருங்கிய நண்பர்களே டென்ஷனாகி விட்டார்களாம். எப்படி வத்ராவை பிரியங்கா மணக்க முடிவு செய்தார் என்று அவர்கள் ஆச்சரியத்துடன் கேட்டார்களாம். ஏனெனில் வத்ரா படிப்பில் படு சுமாராம். விளையாட்டிலும் பெரிய ஆள் கிடையாது. அவர் ஒன்றும் அவ்வளவு பெரியஆள் இல்லையே என்பதுதான் பிரியங்காவின் நண்பங்களின் ஆச்சரியம்.
நேரு குடும்பத்திற்கு இது புதுசில்லை
நேரு குடும்பத்தில் சாதாரணர் ஒருவர் வருவது புதிதல்ல. முன்பு பெரோஸ் காந்தி, இந்திராவை மணந்தார். அதேபோல சஞ்சய் காந்தி மேனகாவை மணந்தார். ராஜீவ் காந்தி, இந்தியாவுக்குச் சம்பந்தமே இல்லாத சோனியா காந்தியை மணந்தார். இவர்கள் வழியில் ராபர்ட் வத்ராவை பிரியங்கா மணந்தார். ஆனால் பெரோஸ், மேனகா, சோனியாவுடன் ஒப்பிட்டால் அவர்களுக்குப் பக்கத்தில் கூட வர மாட்டார் வத்ரா.
பிரியங்காவை திருமணம் செய்த பின்னர் .....
எப்படி இருந்த வத்ரா இப்படி பணக்காரர் ஆனார் என்பது இன்னொரு ஆச்சரியம். காரணம் அவரது குடும்பப் பின்னணி அவ்வளவு சாதாரணமானது. பிரியங்காவின் கணவராக மாறிய பிறகே பெரும் பணக்காரர் ஆனார் வத்ரா.
தினந்தோறும் பேராட்டம்தானாம்....
ஒருமுறை பிரியங்கா குறித்து வத்ரா கூறுகையில், பிரியங்காவுக்காக நான் எனது வாழ்க்கையை விட்டுக் கொடுத்துவிட்டேன். என்னை எல்லோரும் பிரபலமானவன் என்கின்றனர் ஆனால் தினம் தினம் நான் போராடி வருகிறேன் என்றார் வத்ரா.
இன்னமும் விலகிடாத மர்மம்தான்
ராபர்ட் வத்ரா எப்படி சொத்து சேர்த்தார் என்பதை, டிஎல்எப்புக்குள் அவர் எப்படி புகுந்தார் என்பதை விட பிரியங்காவை அவர் எப்படி ஈர்த்தார் என்பதுதான் மாபெரும் மர்மம் என்பதில் சநதேகமே இல்லை.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக