வியாழன், 11 அக்டோபர், 2012

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் நவீன ஆவிகள்

இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சிச் செய்திதான். ஆனால் முற்றிலும் உண்மை. இறந்த மனிதன் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக அவருடைய நண்பர்களுடன் தொடர்பைப் பேணி வருகின்றார். இச்செய்தியை உலகின் பிரபல பத்திரிகைகள் பலவும் வெளியிட்டு இருக்கின்றன.

Tim Hart (L) with his pal Jack Froese who has been sending emails from beyond the grave

இந்த மனிதனின் பெயர் Jack Froese. வயது 32. கடந்த வருடம் ஜூன் மாதம் திடீரென்று இறந்து விட்டார். இவர் இதய கோளாறால் பீடிக்கப்பட்டு இருந்தவர்.

ஆனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு இவரது மின்னஞ்சல் முகவரியில் இருந்து மின்னஞ்சல்கள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

இம்மின்னஞ்சல்கள் இவருக்கும் நண்பர்களுக்கும் இடையில் நடைபெற்று இருந்த தனிப்பட்ட சம்பாஷணைகளையும் உள்ளடக்கியனவாக உள்ளன. அத்துடன் தற்போதைய விடயங்களையும் உள்ளடக்கியனவாக உள்ளன.

எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றார் என்று நண்பர்களுக்கு எழுதி இருக்கின்றார். முதல் தடவை மின்னஞ்சலை பார்த்தபோது நண்பர்கள் பேரதிர்ச்சி அடைந்து விட்டனர்.
Mysterious: Tim Hart was spooked when he received an email from his friend five months after he died

இறந்த மனிதனின் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் யாருக்கும் தெரியாது. எனவே இது ஒரு மோசடி வேலையாக இருக்காது என இறந்தவருக்கு நெருக்கமானவர்கள் விசுவாசிக்கின்றனர்.

நண்பர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உரையாடல்கள் மூன்றாவது நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார்கள்.

இம்மின்னஞ்சல்கள் சில நண்பர்களுக்கு ஆறுதல் கொடுத்து இருக்கின்றன. சிலருக்கு சந்தோசத்தை கொடுத்து இருக்கின்றன. சிலரை குழப்பம் அடைய வைத்திருக்கின்றன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல