வெள்ளி, 16 நவம்பர், 2012

பரிதி படுகொலை: தலைமைச் செயலகத்தின் விநாயகம் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் விநாயகம் பாரிஸில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவரது வதிவிடத்தை சுற்றி வளைத்து பொலிஸார் இக்கைதை மேற்கொண்டு உள்ளார்கள்.

கடந்த வாரம் இடம்பெற்ற புலி முக்கியஸ்தர் பரிதி படுகொலை தொடர்பாகவே இக்கைது இடம்பெற்று உள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு உள்ள இரு சந்தேக நபர்களுமே இவரைக் காட்டிக் கொடுத்து உள்ளார்கள்.

புலிகளின் தலைமைச் செயலகம் என்கிற அமைப்பின் தலைவராக விநாயகம் செயல்பட்டு வந்திருக்கின்றார்.

இவர் நெடியவன் குழுவுக்கு பெரிய சவாலாக இருந்து வருபவர்.

நெடியவன் குழுவைச் சேர்ந்தவர் என்பதாலேயே பரிதி படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்.

கடந்த இறுதி யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்து இருக்கக் கூடிய புலித் தலைவர்களில் பெயர் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் விநாயகம்.

இவரது மனைவியும், பிள்ளையும் வன்னியில் படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல