வெள்ளி, 16 நவம்பர், 2012

ஐ.நாவின் இரகசிய அறிக்கை கறுப்பு மையினால் அழிப்பு! (அறிக்கை இணைப்பு)

இலங்கையில் 2009ம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப் பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிபிசிக்கு கசிந்ததாகக் கூறப்படும் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது தமிழர்களைப் பாதுகா க்க ஐ.நா தவறியமை தொடர்பான அறிக்கையை ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேற்று முன்தினம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். 128 பக்கங்களைக் கொண்ட இந்த இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், ஐ.நா தனது பொறுப்பிலிருந்து தவறியமை குறித்த விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. மேலும் யுத்த வலயத்தில் சிக்குண்ட பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா உயர்மட்ட அதிகாரிகள் தலை யிடவில்லை என்றும் மிகமோசமாக பரந்தவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த தகவல்களையும் ஐ.நா வெளியிட வில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பயந்து இவ்வாறான தகவல்களை ஐ.நா அதிகாரிகள் வெளியிடவில்லை எனவும் அவ்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை யில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட தகவல்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கக் கூடும் எனவும் இந்த விடயத்திலும் ஐ.நா தவறிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Continue reading ‘Executive Summary of UN Internal Report on Sri Lanka’ : The report
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல