திங்கள், 4 பிப்ரவரி, 2013

விந்தனுவை மாற்றிச் செலுத்திய டாக்டர்!

செயற்கை கருவூட்டலுக்காக வந்த பெண்களுக்கு அவர்களது கணவர்களின் விந்தனுவுக்குப் பதில் வேறு சிலரின் விந்தனுவைத் தவறுதலாக செலுத்தி விட்டார் கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டர். தான் செய்தது தவறு என்பதை தற்போது அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

கனடாவைச் சேர்ந்த டாக்டர் நார்மன் பர்வின். இவர் மிகச் சிறந்த, புகழ் பெற்ற மகப்பேறு குறைபாடு நீக்கு மருத்துவர் ஆவார். கனடாவில் மிகவும் பிரபலமானவர். இவரது மருத்துவ அறிவும், திறமையும் மிகவும் பிரபலமானது. மேலும், கருக்கலைப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அதைப் பெண்களின் உரிமையாக கூறி வருபவர்.

இந்த நிலையில் இவர் மிகப் பெரிய தவறு ஒன்றைச் செய்துள்ளார். அது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்தத் தவறை அவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்துள்ளார். அதாவது தன்னிடம் செயற்கை கருத்தரிப்புக்காக வந்த 3 பெண்களுக்கு அவர்களது கணவர்களின் விந்தனுவுக்குப் பதில் வேறு சிலரின் விந்தனுக்களை தவறுதலாக இவர் செலுத்தி விட்டார். இதுதொடர்பாக பின்னர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின்போது தனது தவறை டாக்டர் நார்மன் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்த மூவரில் ஒருவருக்குமே மட்டுமே தன மகனுக்கு 23 வயதான பின்னர் அவன் தந்தை போலும் இல்லை, தாய் போலும் இல்லை எனத் தெரிய வந்ததால் மரபணுச் சோதனை செய்துள்ளனர். மகனின் மரபணு பெற்றோர் இருவரின் மரபணுவையுமே ஒத்துப் போகவில்லை. இதையடுத்தே டாக்டரின் தவறு தெரிய வந்தது. மற்ற இரு பெண்கள் யார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல