அதிசயிக்கத்தக்க வகையில் விழித்தெழுந்த தாய்
கார் விபத்தில் கோமா மயக்க நிலைக்கு சென்ற பெண்ணொருவர், தனது 2 வயது மகன் வாயால் மென்ற உணவை அவருக்கு தனது வாய்மூலமாக ஊட்ட முயற்சித்தவேளை அதிசயிக்கத்தக்க வகையில் விழித்தெழுந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஜியாங்ஸு மாகாணத்திலுள்ள ஷுயாங் நகரைச் சேர்ந்த ஸாங் ரோங்ஸியாங் என்ற மேற்படி பெண், மூன்று வருடங்களுக்கு முன் கர்ப்பிணியாக இருந்த வேளை விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு சென்றார்.
இந்நிலையில் கோமா மயக்க நிலையிலிருந்து மீளாத நிலையிலேயே அவர் 2011 ஆம் ஆண்டு ஆண் குழந்தையை பிரசவித்தார்.
பிறந்த அந்தக் குழந்தைக்கு கவோ கியன்போ என பெயர் சூட்டப்பட்டது
இதன்போது ரோங்ஸியாங் ஒரு போதும் சுய நினைவுக்கு திரும்பமாட்டார் என மருத்துவர்களால் கூறப்பட்டது.
இதனையடுத்து கவோ கியன்போ தனது தாயின் படுக்கையருகே பொழுதைக் கழித்து வந்தான்.
அவருக்கு உணவை விழுங்க முடிந்தாலும் அதனை மெல்ல முடியாததால் பாலகனான கவோ கியன்போவின் உதவியுடன் அவனால் மெல்லப்பட்ட உணவை அவருக்கு ஊட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் சம்பவ தினம் கவோ கியன்போ தனது வாயால் மென்ற உணவை வாய்மூலமாகவே தனது தாய்க்கு ஊட்ட முயற்சித்தவேளை ரோங்ஸியாங் திடீரென விழித்து எழுந்துள்ளார். தனது சின்னஞ்சிறு மகனின் அன்பே தன்னை கோமா நிலையிலிருந்து மீளச் செய்து தனக்கு புதுவாழ்வைத் தந்துள்ளதாக ரோங்ஸியாங் தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக