வியாழன், 28 நவம்பர், 2013

பிரபாகரன் சுதந்திர போராளியா? சிறிதரன் மீது சம்பந்தன் சீற்றம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராளி என்பதும் தமிழ் மக்களுக்காக வீர மரணத்தை பிரபாகரன் எய்தினார் என்றும் சிவஞானம் சிறிதரன் எம். பி நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு சொந்தக் கருத்து மாத்திரமே ஒழிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல என்று ஆங்கில ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார் இரா. சம்பந்தன்.

சிறிதரன் எம். பி இவ்விதம் பேசப் போகின்றார் என்று தெரிந்து இருந்தால் விட்டிருக்க மாட்டார்கள் என்றும் சம்பந்தன் கூறினார்.

சிறிதரன் எம். பியின் கருத்து நிச்சயமாக கட்சியின் நிலைப்பாடு அல்ல, சிறிதரன் எம். பி பிரபாகரனின் பிறந்த நாளில் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கக் கூடும், தமிழ் கூட்டமைப்பு அவ்வாறான நிலைப்பாட்டில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு இருக்கவில்லை, சிறிதரன்கூட அவ்வாறான நிலைப்பாட்டில் பிரசாரங்கள் செய்து இருக்கவில்லை, முன்பே தெரிந்து இருந்தால் இவ்விதம் உரையாற்ற கட்சியால் அனுமதிக்கப்பட்டு இருக்க மாட்டார் என்று சம்பந்தன் விளக்கி உள்ளார்.

 
 
தாய்நாடு இணையம்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல