வெள்ளி, 20 டிசம்பர், 2013

தனது ஃபேஸ்புக் பேஜுக்கு 10 லட்சம் லைக்ஸ் (Likes) வரதட்சனையாக கேட்ட தந்தை

ஏமனில் ஒருவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சனையாக கேட்டுள்ளார்.

ஏமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ். கவிஞர். அவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சனையாக அளித்தால் தான் தனது மகளை திருமணம் செய்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஏமனில் வரதட்சனையாக யாராலும் பணம் கொடுக்க முடியவில்லையாம்.

அதனால் தனது மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் பெற வைக்க வேண்டும் என்பதையே வரதட்சனையாக கேட்டுள்ளார் சலீம்.

தற்போது சலீம் ஃபேஸ்புக் பக்கத்தை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வாலிபர் சலீமின் பக்கத்திற்கு 10 லட்சம் லைக்ஸ் பெற வைக்க ஒரு மாதம் அல்லது 1 இல்லை 2 ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் லைக்ஸ் இல்லாமல் அவரால் சலீமின் மகளை திருமணம் செய்ய முடியாது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல