ஞாயிறு, 29 டிசம்பர், 2013

உலகின் இளைய தேசத்தை ஆட்டிப் படைக்கும் இன­மு­ரண்­பாடு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்­பார்கள். இந்தக் கதையை மீண்டும் ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. அன்­றைய சூடா­னிய தேசத்தில் இருந்­த­வர்­களால் கூடி வாழ முடி­ய­வில்லை. வடக்­கிற்கும் தெற்­கிற்கும் இடையில் பிரச்சினைகள் நீடித்­தன. கூடி வாழ்­வதை விட தனித்து வாழ்ந்தால் தான் நல்­ல­தென வடக்கும், தெற்கும் தீர்­மா­னித்­தன. கூடி வாழ்­வதால் கிடைக்கும் நன்­மையை விட தனித்­த­னி­யாக வாழ்­வதால் கிடைக்கும் அனு­கூ­லங்கள் அதி­க­மென உலக நாடுகள் கரு­தின.



இதன் கார­ண­மாக சர்­வ­தேச சமூ­கத்தின் துணை­யுடன் சூடான் என்ற தேசத்தில் இருந்து தென்­சூடான் என்ற புதிய நாடு உரு­வா­னது. வடக்­கிற்கு எதி­ராக தெற்கு முன்­னெ­டுத்த ஆயுதப் போராட்டம், சர்­வ­தேச மத்­தி­யஸ்­தத்­து­ட­னான சம­ரசப் பேச்­சு­வார்த்தை, அதி­காரப் பகிர்வு ஏற்­பா­டுகள், தென்­சூடான் தனி­யாகப் பிரிந்து செல்­வதைத் தீர்­மா­னிக்­கக்­கூ­டிய கருத்துக் கணிப்பு என்ற படி­மு­றை­க­ளுக்கு அமைய தென்­சூடான் தனி­நா­டாக உரு­வாகும் வரை சகல விட­யங்­களும் சரி­யாகத் தான் நடந்­தன.

இன்று தென்­சூடான் சின்­னா­பின்­ன­ம­டைந்து இருக்­கி­றது. அங்கு இன­நெ­ருக்­கடி தலை­வி­ரித்­தா­டு­கி­றது. சிவில் யுத்தம் பற்றி அச்சம் மேலோங்­கி­யி­ருக்­கி­றது. ஒரு வாரத்­திற்கு மேலாக நீடிக்கும் வன்­மு­றை­களில் ஆயிரம் பேரா­வது கொல்­லப்­பட்­டி­ருக்கக் கூடு­மென சர்­வ­தேச ஊட­கங்கள் அறி­வித்­துள்­ளன. ஒரு இலட்­சத்­திற்கு மேலா­ன­வர்கள் இடம்­பெ­யர்ந்­தி­ருப்­ப­தாக ஐ.நா. தக­வல்கள் கூறு­கின்­றன. இடம்­பெ­யர்ந்த மக்கள் உயி­ருக்கு அஞ்சி ஐ.நா. அலு­வ­லக வளா­கத்தில் தஞ்சம் கோரிய சம­யத்தில், அந்த வளா­கமும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது. ஒரு நகரில் 34 சடலங்­க­ளுடன் கூடிய பாரிய மனிதப் புதைக்­குழி­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

ஒரு புறத்தில் சண்­டைக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தற்­கான சம­ரச முயற்­சிகள். கென்யா, எத்­தி­யோப்­பியா ஆகிய நாடு­களின் தலை­வர்கள் தென்­சூ­டானின் தலை­ந­க­ருக்குச் சென்று திரும்­பி­யி­ருக்­கி­றார்கள். கிழக்கு ஆபி­ரிக்க நாடுகள் கென்யத் தலை­ந­கரில் கூடி பிரச்சினையைத் தீர்ப்­பது பற்றி ஆராய்ந்­தி­ருக்­கி­றார்கள். அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடுகள் தென்­சூ­டானில் உள்ள தமது பிர­ஜை­களைப் பாது­காப்­பாக திருப்பி அழைக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன.

தென்­சூ­டானில் நிலை­நாட்­டப்­பட்­டுள்ள அமைதி காக்கும் படை­வீ­ரர்­களின் எண்­ணிக்­கையை இரு­ம­டங்­காக அதி­க­ரிப்­ப­தற்கு ஐ.நா. பாது­காப்புச் சபை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. அங்கு 12,500 படை­வீ­ரர்­கள் நிலை­நிறுத்தப்பட உள்­ளனர். அதன் பிர­காரம், மற்­றொரு படை­யணி தென்­சூ­டானை அடைந்­தி­ருக்­கி­றது.

சமா­தான முயற்­சிகள் பற்றி சண்­டை­யிடும் தரப்­புக்­களில் இருந்து மாறு­பட்ட கருத்­துக்கள். ஜனா­தி­பதி சல்வா கீர் நிபந்­த­னை­யுடன் கூடிய போர் நிறுத்­தத்­திற்கு விருப்பம் தெரி­வித்­துள்ளார். முறை­யான பேச்­சு­வார்த்­தைகள் இன்றி ஆயு­தங்­க­ளுக்கு ஓய்வு கொடுக்க முடி­யா­தென முன்னாள் துணை ஜனா­ப­தி­பதி ரீக் மாச்சார் குறிப்­பிட்­டுள்ளார். இந்த முரண்­பாடு தென்­சூ­டானில் அமை­தியை நிலை­நாட்டும் முயற்­சிகள் மீது சந்­தே­கத்தின் சாயலைப் படிய வைத்­துள்­ளது.

உலகின் இளைய தேசத்­திற்கு ஏனிந்த கதி? இதற்கு இரண்டு விடைகள் சொல்­லப்­ப­டு­கின்­றன. சர்­வ­தேச சமூகம் சொல்லும் முத­லா­வது விடையை ஆராய்ந்தால், இது ஜனா­தி­பதி சல்வா கீருக்கும், முன்னாள் துணை ஜனா­தி­பதி ரீக் மாச்­சா­ருக்கும் இடை­யி­லான அதி­காரப் போராட்­டத்தின் விளைவு என்­ப­தாக இருக்கும். தென்­சூ­டானின் விடு­தலைப் போராட்­டத்தில் அக்­கறை கொண்­ட­வர்கள் சொல்­வதை இரண்­டா­வது விடை­யாகக் கரு­தலாம்.

தென்­சூ­டானின் சமூகக் கட்­ட­மைப்பை சரி­யாக புரிந்து கொள்­ளாமல் சர்­வ­தேச சமூகம் வலிந்து திணித்த பொருத்­த­மற்ற தீர்வுத் திட்டம் பிரச்சினை­களின் மூல­கா­ரணம் என்­பது இரண்­டா­வது விடை­யாகும்.

முத­லா­வது விடையை ஆரா­யலாம். ஜனா­தி­பதி கீர் கடந்த ஜூலை மாதம் துணை ஜனா­தி­பதி மாச்­சா­ருடன் ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வையை பதவி நீக்கம் செய்தார். இரா­ணு­வத்தில் இருந்து பிரிந்து சென்ற படை­வீ­ரர்­களை ஒன்று திரட்டி தமக்கு எதி­ராக சதிப்­பு­ரட்­சியில் ஈடு­பட்டார் என்­பது ஜனா­தி­ப­தியின் குற்­றச்­சாட்டு. அதில் உண்­மை­யில்லை என்­கிறார், மாச்சார். இவர்­க­ளது அதி­காரப் போராட்­டத்தின் பின்­ன­ணியில் இருப்­பது இனக்­கு­ழும கசப்­பு­ணர்­வுகள் தானென பர­வ­லாகக் கூறப்­ப­டு­கி­றது.

தென்­சூடான் என்­பது அறு­ப­துக்கு மேற்­பட்ட இனக்­கு­ழு­மங்­களைக் கொண்ட தேசம். இங்கு ஒரு கோடிக்கு மேற்­பட்ட மக்கள் வாழ்­கி­றார்கள். இவர்­களில் 15 இலட்சம் பேர் டிங்கா குழு­மத்தைச் சேர்ந்­த­வர்கள். இவர்­களில் ஜனா­தி­பதி கிர்ரும் அடங்­கு­கிறார். சுமார் 8 இலட்சம் மக்கள் நெயூர் குழு­மத்தைச் சேர்ந்­த­வர்கள். ஜனா­தி­ப­திக்கு எதி­ராக ஆயுதப் போராட்­டத்தை முன்­னெடுக்கும் மாச்சார் - நெயூர் இனக்­கு­ழு­மத்­தவர். இரு தரப்­பி­ன­ருக்கும் இடை­யி­லான சண்­டையே சம­கால நெருக்­க­டிக்கு மூல­கா­ர­ண­மாக அமைந்­துள்­ளது எனவும், இதன் விளை­வாக டிங்கா, நெயூர் இனக்­கு­ழு­மங்­களைச் சேர்ந்­த­வர்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­கி­றார்கள் எனவும் பர­வ­லாகக் கூறப்­ப­டு­கி­றது.

டிங்கா, நெயூர் இனக்­கு­ழு­மங்­க­ளுக்கு இடை­யி­லான பகைமை இன்று நேற்று தொடங்­கி­யது அல்ல. இன்று ஆகக்­கூ­டு­த­லான உயி­ரி­ழப்­புக்கள் பதிவு செய்­யப்­படும் ஜொங்லி என்ற மாநி­லத்தின் தலை­ந­க­ராகத் திகழும் பொர் நகரின் கடந்த காலத்தை ஞாப­கப்­ப­டுத்­தலாம். அன்று தென்­சூ­டானின் விடு­த­லைக்­காக ஆயு­த­மேந்திப் போரா­டிய கிளர்ச்சிக் குழுவில் இருந்து மாச்சார் பிரிந்து சென்ற சம­யத்தில், நெயூர் குழு­மத்தைச் சேர்ந்த ஆயு­த­பா­ணிகள் பொர் நகரில் பெரும் வன்­மு­றையைக் கட்­ட­விழ்த்து விட்டார்கள். இந்த வன்­மு­றை­களில் டிங்கா சமூ­கத்தைச் சேர்ந்த இரண்­டா­யிரம் பேர் வரை பலி­யா­ன­தாக சர்­வ­தேச பொது­மன்­னிப்­புச்­சபை மதிப்­பீடு செய்­தி­ருந்­தது. இதனை விட அதி­க­மா­ன­வர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லா­மென சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

அடுத்­த­தாக இரண்­டா­வது விடையை ஆராய்வோம். தென்­சூ­டானின் சமீ­பத்­திய வர­லாற்றை ஆராய்ந்தால், இனக்­குழு­மங்­க­ளுக்கு இடை­யி­லான வன்­மு­றை­யா­னது டிங்கா - நெயூர் சமூ­கங்­களைத் தாண்டிச் செல்­வதை அறியக் கூடி­ய­தாக இருக்கும். தென் சூடான் சுதந்­திர நாடாக பிரிந்து செல்ல வேண்­டுமா? என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தற்­காக கருத்துக் கணிப்பு நடத்­தப்­பட்டு, தனி­நா­டாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து முர்லே என்ற இனக்­கு­ழு­மத்­திற்கும் டிங்கா குழு­மத்­திற்கும் இடையில் தலை­தூக்­கிய சண்­டையைக் குறிப்­பிட முடியும்.

இந்த சண்­டையின் தொடர் விளை­வு­களால் ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்கள் பலி­யா­ன­தாக புள்­ளி­வி­ப­ரங்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.இங்கு இன்­னொரு விட­யத்தைக் குறிப்­பிட்­டாக வேண்­டி­யி­ருக்­கி­றது. இன்று ஜனா­தி­பதி கிர்­ருக்கு எதி­ரான சண்­டையில் முன்னாள் துணை ஜனா­தி­பதி மாச்­சாரின் படை­யணி மாத்­தி­ர­மன்றி மற்­றொரு படை­ய­ணியும் உள்­ளது. இந்தப் படை­ய­ணிகள் ஜெனரல் பீற்றர் காடெட் என்­ப­வ­ருக்கு சொந்­த­மா­னவை.

ஜெனரல் பீற்றர் வல்­லமை மிக்க படைத்­த­ள­பதி. அவர் தென்­சூ­டானின் விடு­த­லைக்­காக ஆயுதப் போராட்டம் நடத்­திய ‘சூடா­னிய மக்கள் விடு­தலைச் சேனை’யை (SPLA) வழி­ந­டத்­தி­யவர்.

தென்­சூடான் விடு­தலை பெற்ற பின்னர், இவர் சூடா­னிய அர­சாங்­கத்­திற்கு சார்­பாக செயற்­பட்­டி­ருந்தார் என்­பது மிகவும் முக்­கி­ய­மான விடயம். தென்­சூ­டானில் யுனிட்டி ஸ்ரேட் என்ற மாநிலம் உள்­ளது. இந்த மாநிலம் எண்ணெய் வளம் செறிந்­தது. இந்த மாநி­லத்தில் SPLA யிற்கு எதி­ராக ஆயு­த­மேந்தும் கிளர்ச்­சிக்­கு­ழு­விற்கு ஜெனரல் பீற்றர் தலைமை தாங்கி வழி­ந­டத்­தினார். இதற்கு முக்­கி­ய­மான காரணம், தென்­சூ­டானின் உரு­வாக்­கத்­திற்கு வித்­திட்ட உடன்­ப­டிக்­கையில் முன்னாள் கிளர்ச்­சி­யா­ளர்­களை தேசிய இரா­ணு­வத்தில் முறை­யாக இணைத்துக் கொள்­ளக்­கூடிய ஏற்­பா­டுகள் இல்­லா­தி­ருந்­தமை தான். சூடா­னிய மக்கள் விடு­தலை இயக்கம் என்ற ஆளும் கட்­சியின் தலை­மை­யி­லான இரா­ணு­வத்தில் தாம் பாது­காப்­பாக இல்­லை­யென முன்னாள் கிளர்ச்­சி­யா­ளர்கள் கரு­தி­னார்கள். அதன் விளை­வாக, ஜெனரல் காடெட் முத­லா­ன­வர்கள் வெளி­யே­றி­னார்கள்.

இங்கு ஜெனரல் காடெட் என்­பவர் நெயூர் இனக்­கு­ழு­மத்தை சேர்ந்­த­வ­ராக இருக்­கிறார். அவர் முன்னாள் துணை ஜனா­தி­பதி மாச்­சா­ருடன் சேர்ந்து செயற்­ப­டு­கி­றாரா அல்­லது தனி­யாக இயங்­கு­கி­றாரா என்­பது தெளி­வாகத் தெரி­ய­வில்லை.

எனினும், தலை­நகர் ஜூபாவில் டிங்கா ஆயு­த­பா­ணி­களால் நெயூர் மக்கள் கொல்­லப்­பட்­டதால் ஜெனரல் காடெட் ஆத்­தி­ர­ம­டைந்­துள்ளார் என்­பது தெரி­கி­றது. அவ­ரது நெயூர் படை­வீரர்கள் பொர் நகரில் டிங்கா மக்­களைத் தாக்­கி­யி­ருக்­கி­றார்கள். அந்தத் தாக்­கு­தலின் விளை­வாக அதிக மர­ணங்கள் சம்­ப­வித்­துள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் அறி­வித்­துள்­ளன.

சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணிந்து ஜனா­தி­பதி கீர், முன்னாள் துணை ஜனா­தி­பதி மாச்சார் ஆகியோர் போர் நிறுத்­தத்­திற்கு உடன்­படும் பட்­சத்தில் மற்­று­மொரு அபாயம் நிகழ வாய்ப்ப்­புண்டு. ஜெனரல் காடெட் விரைவில் முர்லே இனக்­கு­ழு­மத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுடன் கைகோர்க்­கக்­கூடிய அபாயம் அது­வாகும். அவ்­வாறு நடந்தால் தென்­சூ­டானின் பிரச்­சனை மற்­று­மொரு திசையை நோக்கி நக­ரக்­கூடிய வாய்ப்பு இருக்­கி­றது.

சூடான் தனி­யொரு நாடாக இருந்த சம­யத்தில், வட­சூடான் - தென்­சூடான் பிரச்­ச­னையைத் தீர்ப்­ப­தற்­காக அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்­கையை உருவாக்கிய சர்வதேச சமூகம், தென்சூடான் என்ற தனிநாட்டின் மீது வலிந்து திணித்த தீர்வுத் திட்டம் பொருத்தமானதாக இருக்கவில்லை என்பது பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தென்சூடான் என்ற நாட்டுக்குள் யுனிட்டி ஸ்டேட் மாநிலத்தின் வளங்களை முறையாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஏற்பாடுகளுடன் அதற்கு சரியானதொரு அந்தஸ்து கிடைத்திருந்தால், ஜெனரல் காடெட் தனித்துச் சென்றிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது.

அதுபோன்று, முன்னாள் கிளர்ச்சி யாளர்களை தேசிய இராணுவத்தில் இணைப்பதற்குரிய ஏற்பாடுகள் சரியாக இருந்திருக்குமானால், படை வீரர்கள் ஜெனரல் காடெட்டையோ, மாச்சாரையோ பின்தொடர்ந்து சென்றி ருக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, தென்சூடானிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்கும் நடைமுறையில் பல்வேறு இனக்குழுமங்களின் உரிமைகளை அங்கீகரிக்கக்கூடிய சரியானதொரு தீர்வுத் திட்டத்தை சர்வதேச சமூகம் முன்வைத்திருந்தால், இன்று இனக்குழும பிரச்சனை பூதாகரமானதாக தலைதூக்கியிருக்க மாட்டாது.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல