ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கருச் சிதைவை ஏற்­ப­டுத்தும் தவறான உணவுப் பழக்கம்

கர்ப்பம் தரித்த ஆரம்­பத்தில் பப்­பாசி, அன்­னாசி, வெரலு ஆகி­ய­வற்றை உண்­பதை தவிர்த்துக் கொள்க. உடல் அழ­குக்­காக அருந்தும் மருந்து வகைகள் கர்ப்பச் சிதை­வையும் அல்­லது விகா­ர­மான குழந்தை பிறக்கும் வாய்ப்பையும் அதி­க­ரிக்கும்.

கர்ப்பம் தரித்­தது முதல் குழந்தை பிறக்கும் வரை கண­வனும் மனை­வியும் பல்­வேறு கன­வு­க­ளுடன் காணப்­ப­டுவர். கர்ப்­ப­முற்று மூன்று மாதங்கள் கடந்த பின்­னரே கர்ப்பம் நிரந்­த­ர­மா­ன­தெனக் கருத முடியும். கர்ப்­ப­முற்று மூன்று மாதங்­க­ளுக்குள் கர்ப்பச் சிதைவு ஏற்­படும் வாய்ப்­புகள் அதி­க­முள்­ளன. இது போன்ற நிலைமை தாய் - தந்தை என்ற ரீதியில் உங்­களால் தாங்கிக் கொள்ள முடி­யாது.

கருச்­சி­தைவு என்­பது கரு­வி­லுள்ள குழந்தை பிறப்­ப­தற்கு முன்­னரே கரு­வி­லேயே சிதைந்து விடு­வதே கருச்­சி­தை­வாகும். அதன் பின்னர் அக்­கரு உதி­ர­மாக வெளி­யேறும். கருச்­சி­தைவு உடல் ரீதி­யா­கவும் உள ரீதி­யாகும் தாங்கிக் கொள்ள முடி­யாத நிலை­மை­யாகும்.

கருச்­சி­தைவு ஏற்­ப­டு­வ­தற்கு பல்­வேறு கார­ணங்கள் இருக்­கின்­றன. ஒன்றரை மாதத்­துக்குள் எச்­சந்­தர்ப்­பத்­திலோ கருச்­சி­தைவு ஏற்­ப­டலாம்.

அடிப்­படை கார­ணங்­க­ளாக உடல் ரீதி­யான உள ரீதி­யான பாதிப்­புக்­களும், ஆயுர்­வே­தத்­தின்­படி பித்தம், சளி போன்ற கார­ணங்­க­ளாலும் இரத்தக் குறை­பாடு, கர்ப்­பப்பை உயர்­வது, உடற்­கூறு அதி­க­ரிப்­பது கர்ப்பச் சிதை­வுக்கு கார­ண­மாக இருக்­கலாம்.

உள­ரீ­தி­யான கார­ணங்கள்

மாதாந்தம் பெண்­க­ளுக்கு ஏற்­படும் மாத­விடாய் கர்ப்பம் தரித்­த­வுடன் நின்று விடும். இருந்தும் பல இளம் தாய்மார் கர்ப்­ப­ம­டைந்த பின்­னரும் இது குறித்து நினைக்­கின்­றனர். மாத­வி­டாய்க்கு தயா­ரா­கின்­றனர். இதனால் ஏற்­படும் மன அழுத்தம் கார­ண­மாக மாத­விடாய் ஏற்­பட்டு கரு கலைந்து விடு­வ­து­முண்டு.

இதேபோல், உள­ரீதி­யான களைப்பு பல பெண்­களை பாதிக்­கின்­றது. குழந்தை பிறக்கும் போது கடு­மை­யான வேத­னைகள் ஏற்­ப­டுமா உயி­ரா­பத்து ஏற்­ப­டுமா? போன்ற எண்­ணங்­களால் மனக்­கி­லே­சத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­கின்­றனர். இதுவும் கருச்­சி­தைவு ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது.

இதேபோல், குடும்ப சூழ­லுக்குள் மாமி- மச்­சாள்­மா­ருக்­கி­டையில் ஏற்­படும் சச்­ச­ரவு, குடி­காரக் கண­வனால் ஏற்­படும் மனக்­க­வலை மற்றும் பொரு­ளா­தாரக் கஷ்­டத்தால் ஏற்­படும் கவ­லையும் கருச்­சி­தைவு ஏற்­படக் கார­ண­மாக இருந்து விடலாம்.

பிழை­யான உணவுப் பழக்­கங்கள்

பல தாய்மார் கரு­வுற்­றதும் அதிக அமி­லங்கள் மற்றும் மிளகாய் கார மடங்­கிய உணவு வகைகள், அன்­னாசி, வெர­லு ஆகி­ய­வற்றை உட்­கொள்­ளக்­கூ­டாது. இவற்றை தவிர்த்து விட வேண்டும். இதேபோல் இந்த அமில உணவு வகை­களில் உப்பு, மிளகாய் போன்­ற­வற்றை கலந்து உண்­பது பெண்­க­ளுக்கு மிகவும் பிடிக்கும். இது போன்­றவை கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு உகந்­த­தல்ல.

அதேபோல் செயற்கை சுவை­யூட்­டிகள் கலந்த அஜி­னோ­மோட்டோ செயற்கை வர்ண மூட்­டிய நாவுக்கு சுவை­யான உணவு வகைகள் உட்­கொள்­வ­தாலும் கருச்­சி­தைவு ஏற்­படும்.

இதே போல் மாட்­டி­றைச்­சியை அதி­க­மாக உண்­பதும் தவிர்க்­கப்­பட வேண்டும். பழங்கள் உண­வு­களை நீண்ட காலம் வைத்­தி­ருப்­ப­தற்­காக பாவிக்­கப்­படும் போமலின் அடங்­கிய உணவு வகை­களும் கர்ப்­பந்­த­ரித்­தி­ருக்கும் போது தவிர்க்­கப்­பட வேண்டும். சொசேஜஸ், மீட்போல்ஸ் போன்ற தயா­ரிக்­கப்­பட்ட உணவு வகைகள், ஏற்­க­னவே சமைத்த உண­வுகள் கருச்­சி­தைவை ஏற்­ப­டுத்­தலாம்.

அதேபோல் பழ­வர்க்­க­மான பப்­பா­சியை கர்ப்­ப­ம­டைந்து சில மாதங்கள் உண்­ணக்­கூ­டாது. பப்­பாசிப் பால் நேர­டி­யாக கர்ப்­பப்­பைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

செயற்கை மருந்து வகைகள்

மேற்­கத்­திய வைத்­திய விஞ்­ஞான செயற்கை மருந்து வகை­களும் கருச்­சி­தைவை ஏற்­ப­டுத்­தலாம் தலை­மயிர் வளர்­வ­தற்கு சரு­மத்தின் நிறத்தை பளிச்­சிடச் செய்ய, உடம்பை பாது­காக்­க­வென லேபல்­க­ளுடன் சந்­தையில் விற்­ப­னைக்கு வரும் மருந்து வகைகள் இதில் குறிப்­பி­டத்­தக்­க­வை­யாகும். இதற்கு மேல­தி­க­மாக சேர்க்­கை­யான வலி நிவா­ர­ணிகள் கர்ப்பச் சிதைவை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வை­யாகும்.

கர்ப்ப காலத்தில் ஏதோ­வொரு கார­ணத்­துக்­காக செயற்­கை­யான மருந்து வகை­களை பாவித்தால் கர்ப்­பச்­சி­தைவு ஏற்­ப­டலாம். அல்­லது கர்ப்பம் விகா­ர­ம­டையக் கூடு­மென்­பதால் வைத்­தி­யரின் ஆலோ­ச­னை­யின்­படி மருந்து வகை­களை பாவிக்க வேண்டும்.

அதேபோல் சிற்­சில கார­ணங்­களால் முன்னர் கருச்­சி­தை­வுக்­குள்­ளான மற்றும் கருச்­சி­தைவு ஏற்­பட்ட தாய்மார் மீண்டும் கருச்­சி­தை­வுக்கு முகம் கொடுக்கும் சந்­தர்ப்பம் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. பெரும்­பாலும் 100 சத­வீ­தத்­தி­ன­ருக்கு இந்த நிலை ஏற்­படா விட்­டாலும் பெரும்­பா­லா­னோ­ருக்கு கருச்­சி­தைவு ஏற்­பட இட­முள்­ளது.

கர்ப்­பச்­சி­தைவை தவிர்க்க

வைத்­திய நிபு­ண­ரொ­ரு­வரின் ஆலோ­ச­னையைப் பெற்று மருந்து வகை­களைப் பாவிப்­பது கர்ப்­பச்­சி­தைவை தடுக்கக் கூடி­ய­தா­க­வி­ருக்கும்.

அதேபோல் பஸ் வண்­டி­களில் மோட்டார் சைக்­கிள்­களில் செல்­வதால் கர்ப்­பப்பை அதிர்­வதை தவிர்த்துக் கொள்ள ேவண்டும். கர்ப்­பி­ணிகள் ஆரம்ப காலத்தில் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உடம்பின் உஷ்­ணத்தை அதி­க­ரிக்கக் கூடிய இறால், கணவாய், வினா­கிரி ஆகி­யன அடங்­கிய உணவு வகைகள் கர்ப்­பப்­பையில் அதிக உஷ்­ணத்தை ஏற்­ப­டுத்தி கருச்­சி­தை­வுக்கு வழி­வ­குக்­கலாம் என்­பதால் இது போன்ற உணவு வகை­களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பர­ப­ரப்­பான வாழ்க்கைச் சூழலில் கர்ப்­பிணித் தாய்மார் சுதந்­தி­ர­மாக நிம்­ம­தி­யாக காலத்தைக் கழிக்க வேண்டும். அதிக களைப்பை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டக்­கூ­டாது. உடல் ரீதி­யா­கவும் உள ரீதி­யா­கவும் மிக சுதந்­தி­ர­மாக இருக்க வேண்­டி­யது அவ­சியம்.

ஆடைத் தொழிற்­சாலை போன்ற இடங்­களில் கட­மை­யாற்றும் கர்ப்­பிணித் தாய்­மாரும் நடந்து கொண்டே தொழில் புரியும் கர்ப்­பிணித் தாய்­மாரும் கர்ப்­பச்­சி­தை­வுக்­குள்­ளாகும் சந்­தர்ப்பம் அதி­க­மா­க­வி­ருப்­பதால் இத்­தாய்மார் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கருச்­சி­தை­வுக்கு ஆயுர்­வேத சிகிச்சை

வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்வது குறித்து கர்ப்பிணிகள் ஆரம்பம் முதலே கவனம் செலுத்த வேண்டும்.

கர்ப்பிணிகள் உள ரீதியாக நிம்மதியாகவும் ஓய்வாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் கருச்சிதைவு ஏற்படும் போது உடம்பிலிருந்து பெருமளவு உதிரம் வெளியேறுவதால் மீண்டும் கருத்தரிக்கவோ அல்லது சாதாரண நிலையில் இருக்க முடியாதவாறு உடல்நிலை பலவீனமடையும் என்பதால்.

எனவே பால் சுறாமீன், கடல் மீன் வகைகள் மற்றும் இரும்புச் சத்து அடங்கிய உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வெள்ளைப் பூண்டு, வெந்தயம், மிளகு, சீரகம் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் கருச்சிதைவின் பின்னர் கருப்பப்பையை சுத்தப்படுத்த ஏதுவாய் இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல