ஒரு பெண் கருத்தரித்து சிசுவைப் பிரசவிக்கும் காலம் வரையான அந்த 40 வாரங்களில் பலவித சிக்கல்களுக்கு முகங் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது. இவ்வாறான சிக்கல்களில் ஒன்றுதான் கர்ப்ப காலத்தில் ஏற்படும் குருதிக்கசிவுகளாகும். அதிலும் ஆரம்ப கர்ப்ப காலத்தில் அதாவது முதல் வரும் 28 வாரங்களில் ஏற்படும் குருதிக்கசிவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.
ஒரு பெண் கர்ப்பந்தரித்து பலவித எதிர்பார்ப்புகளுடன் அவளின் குடும்பத்தவர்களும் அவளும் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, இவ்வாறான ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக்கசிவுகள் அவர்களை வெகுவாக தாக்கத்திற்குள்ளாக்குகின்றன. இவ்வாறு ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக்கசிவிற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெண்கள் நினைப்பது கரு கலைந்து போவதற்கான அறிகுறியாகவே அது உள்ளதென. ஆகையினால் இவ்வாறு ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக்கசிவெல்லாம் கரு கலைவதற்கான (Miscarriage) அறிகுறியல்ல என்பதனை விளங்க வேண்டும். எனவே ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக் கசிவிற்கான காரணங்களை ஆராய்வோம்.
இயற்கையாக ஏற்படும் கருக்கலையும் நிலை
கருத்தரித்த ஒரு பெண்ணில் ஆரம்ப கர்ப்பகாலத்தில் இயற்கையாகவே குருதிக்கசிவு ஏற்பட்டு கருக்கலைந்து போகின்றது. இந்த ஆரம்ப காலம் எமது நாட்டில் முதல் 28 வாரங்கள் என வரையறுக்கப்பட்டாலும், மேலை நாடுகளில் முதல் 24 வாரங்கள் என வரையறுத்துள்ளனர். இதற்குக் காரணம் 24 வாரங்களின் பின் கரு ஒன்று பிரசவிக்கப்பட்டால் அதனைக் காப்பாற்றக் கூடிய வசதிகள் அந்நாட்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எமது நாட்டில் காணப்படும் மருத்துவ வசதிகள் ஒரு கரு 28 வாரங்களின் பின்னர் பிரசவிக்கப்பட்டால் மட்டுமே அதனை காப்பாற்றப் போதுமானவையாக உள்ளன.
இயற்கையாகக் கரு கலைந்து போகும் நிலையின் வகைகள்
ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு ஏற்பட்டு எந்தவித வயிற்று வலியும் இல்லாமல் உள்ளே இருக்கும் கருவும் எந்தவித சிக்கல் இல்லாமல் தொடர்ந்து ஆரோக்கியமாக வளரும். இதனை ஒரு அச்சுறுத்தும் வகை என குறிப்பிடலாம். இவ்வாறு குருதிக்கசிவு ஏற்படும் போது தமது கருவுக்கு ஏதோ சிக்கல் என பெண்கள் அஞ்சுவதும், பின்னர் ஒரு ஸ்கேன் (Scan) பரிசோதனையை செய்து பார்க்கும் போது கரு எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதும் வழக்கம். இதற்கு மேலதிக சிகிச்சைகள் தேவையில்லை. இந்நிலையில் மேலும் அவரது கர்ப்பகாலம் எவ்வித சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளது. இவ்வகையை நாம் அச்சப்படுத்திய குருதிக்கசிவு என அழைப்போம் (Threatend Miscarriage)
இரண்டாவது வகையில் கருவானது தாயின் வயிற்றினுள்ளே இறந்து அல்லது கலைந்து போயிருக்கும். பெரிதளவில் வயிற்று வலியோ அல்லது குருதிக் கசிவோ ஏற்படாது. ஆனால் சாதாரண மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் வரும் போது நாம் ஸ்கேன் செய்தால், கரு இவ்வாறு வளர்ச்சியற்று உள்ளே இறந்து அல்லது கலைந்து இருப்பதனைக் காணக் கூடியதாக இருக்கும். இது பெண்ணினது தவறினாலோ அல்லது அவரது கணவரது தவறினாலோ ஏற்பட்டதல்ல எனும் விடயத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் வழங்குவது எமது கடமை. இவர்களுக்கு அடுத்த முறை நிச்சயம் சிறந்த கரு உருவாக வாய்ப்புள்ளது. இவ்வகையான கரு கலையும் நிலையை அமைதியான கருக்கலைவு என அழைப்போம். (Silent Miscarriage)
மூன்றாவது வகையான கருக்கலையும் நிலை மிக முக்கியமான வகை. இதன்போது அதிகூடிய வயிற்றுவலி மற்றும் குருதிப்போக்கு என்பவற்றுடன் அவசரமாக வைத்தியசாலைக்கு வருவார்கள். இதன்போது இவர்களது கரு கலைந்து இரத்தமாகவும் சிறு சிறு துண்டுகளாகவும் வெளியேறும். இந்நிலையில் இவர்களது வயிற்று வலி மற்றும் குருதிப்போக்கிற்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்குவது அவசியம். இவ்வகை (Incomplete Miscarriage) என அழைப்போம்.
சிலவேளைகளில் கலைந்து போன கரு துண்டுகளாக தாமாகவே இரத்தப் போக்குடன் வெளியேறி இறுதியில் மிகுதி எதுவும் கர்ப்பப்பையில் தங்காமல் பூரணமாக வெளியேறி விடும். இவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை.
இயற்கையாக கரு கலைந்து போவதற்கான காரணங்கள்
இயற்கையாக கருக்கலைதல் ஒரு பொதுவான பிரச்சினை. கர்ப்பம் தரித்த 5 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறு இயற்கையாக கருக்கலைந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது ஒரு பொதுவான பிரச்சினை. இதற்குக் காரணங்களாக இருக்கக்கூடியது உருவான கருவின் நிறமூர்த்தங்களின் அதாவது பரம்பரை அலகுகளின் பலவீனமும் குறைபாடுமே ஆகும். இது சற்று வயது கூடிய பெண்கள் கருத்தரிக்கும்போது கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏனைய காரணிகளாக நுண்ணுயிர் தொற்று, கர்ப்பப்பையின் உட்கட்டமைப்பு குறைபாடுகள், நீரிழிவு நோய், சில மருந்துப் பதார்த்தங்கள் என்பன அமையும்.
இயற்கையாக ஏற்படும் கருக்கலைதலுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்.
கருக்கலைதலை உறுதிப்படுத்த ஸ்கேன் பரிசோதனை மற்றும் குருதி வர்க்கம் என்பவற்றை அறியும் பரிசோதனைகள் அவசியம். ஒரு முறை கரு கலைந்தவர்களில் கருக்கலைதலை ஏற்படுத்திய காரணிகளை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்வதில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கரு கலைந்தால் இதற்கான பின்னணி காரணிகளைக் கண்டறியும் விசேட இரத்தம் மற்றும் ஹோர்மோன் பரிசோதனைகள் அவசியம்.
இயற்கையாகக் கரு கலைந்தவருக்குத் தேவையான சிகிச்சை
கரு ஒன்று இறந்ததாக அல்லது கலைந்து விட்டதாக உறுதிப்படுத்திய பின்னர் இதற்கான சிகிச்சைகள் 3 வழிகளில் மேற்கொள்ளப்படும்.
முதலாவது: இவர்களை இரு வாரங்களுக்கு எவ்வித சிகிச்சைகளும் மேற்கொள்ளாது காத்திருக்கும்போது உள்ளே உள்ள கலைந்த கரு தானாகவே மாதவிடாய் போன்ற இரத்தப்போக்குடன் வெளியேறக்கூடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு வெளியேறிய பின் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படாது.
அடுத்த சிகிச்சை வகை:
இவ்வாறு கரு கலைந்து உள்ளவர்களுக்கு சிலவகை மருந்துகளை வழங்கி அவற்றை கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்ற முடியும் இதுவும் கூடுதலானவர்களுக்கு வெற்றியளிக்கும்.
இறுதியாகவுள்ள சிகிச்சை முறை: வயிறு கழுவுதல் என அழைக்கப்படும் சத்திர சிகிச்சை முறையில் கலைந்துள்ள கருவின் பாகங்களை முற்றாக அகற்றுதல் ஆகும். இது ஒரு சத்திரசிகிச்சை முறையாக இருப்பதால் இதனை இறுதித்தீர்வாக முன்வைப்போம்.
எனவே இயற்கையாக நடைபெறும் கருக்கலையும் நிலை கர்ப்பமாகும் பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை இது குறித்து மனம் சோர்ந்து விடாது இருக்க வேண்டும். இது ஆரோக்கியமற்ற நிறமூர்த்த அலகுகளின் குறைபாடுகள். கருவே கலைந்து போகின்றதே தவிர இது உங்களின் தவறினால் நடப்பதில்லை.
இது ஒரு முறை நடத்தால் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு மிகமிகக்குறைவு. இது துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் நடைபெற்றால் இதற்கான காரணங்களை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
டாக்டர் கு.சுஜாகரன்
மகப்பேற்று பெண் நோயியல்
சத்திரசிகிச்சை நிபுணர்
ஒரு பெண் கர்ப்பந்தரித்து பலவித எதிர்பார்ப்புகளுடன் அவளின் குடும்பத்தவர்களும் அவளும் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது, இவ்வாறான ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக்கசிவுகள் அவர்களை வெகுவாக தாக்கத்திற்குள்ளாக்குகின்றன. இவ்வாறு ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக்கசிவிற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெண்கள் நினைப்பது கரு கலைந்து போவதற்கான அறிகுறியாகவே அது உள்ளதென. ஆகையினால் இவ்வாறு ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக்கசிவெல்லாம் கரு கலைவதற்கான (Miscarriage) அறிகுறியல்ல என்பதனை விளங்க வேண்டும். எனவே ஆரம்ப கர்ப்ப காலத்திலேற்படும் குருதிக் கசிவிற்கான காரணங்களை ஆராய்வோம்.
இயற்கையாக ஏற்படும் கருக்கலையும் நிலை
கருத்தரித்த ஒரு பெண்ணில் ஆரம்ப கர்ப்பகாலத்தில் இயற்கையாகவே குருதிக்கசிவு ஏற்பட்டு கருக்கலைந்து போகின்றது. இந்த ஆரம்ப காலம் எமது நாட்டில் முதல் 28 வாரங்கள் என வரையறுக்கப்பட்டாலும், மேலை நாடுகளில் முதல் 24 வாரங்கள் என வரையறுத்துள்ளனர். இதற்குக் காரணம் 24 வாரங்களின் பின் கரு ஒன்று பிரசவிக்கப்பட்டால் அதனைக் காப்பாற்றக் கூடிய வசதிகள் அந்நாட்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் எமது நாட்டில் காணப்படும் மருத்துவ வசதிகள் ஒரு கரு 28 வாரங்களின் பின்னர் பிரசவிக்கப்பட்டால் மட்டுமே அதனை காப்பாற்றப் போதுமானவையாக உள்ளன.
இயற்கையாகக் கரு கலைந்து போகும் நிலையின் வகைகள்
ஆரம்ப கர்ப்ப காலத்தில் குருதிக்கசிவு ஏற்பட்டு எந்தவித வயிற்று வலியும் இல்லாமல் உள்ளே இருக்கும் கருவும் எந்தவித சிக்கல் இல்லாமல் தொடர்ந்து ஆரோக்கியமாக வளரும். இதனை ஒரு அச்சுறுத்தும் வகை என குறிப்பிடலாம். இவ்வாறு குருதிக்கசிவு ஏற்படும் போது தமது கருவுக்கு ஏதோ சிக்கல் என பெண்கள் அஞ்சுவதும், பின்னர் ஒரு ஸ்கேன் (Scan) பரிசோதனையை செய்து பார்க்கும் போது கரு எவ்வித சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதும் வழக்கம். இதற்கு மேலதிக சிகிச்சைகள் தேவையில்லை. இந்நிலையில் மேலும் அவரது கர்ப்பகாலம் எவ்வித சிக்கலும் இல்லாமல் தொடர வாய்ப்புள்ளது. இவ்வகையை நாம் அச்சப்படுத்திய குருதிக்கசிவு என அழைப்போம் (Threatend Miscarriage)
இரண்டாவது வகையில் கருவானது தாயின் வயிற்றினுள்ளே இறந்து அல்லது கலைந்து போயிருக்கும். பெரிதளவில் வயிற்று வலியோ அல்லது குருதிக் கசிவோ ஏற்படாது. ஆனால் சாதாரண மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் வரும் போது நாம் ஸ்கேன் செய்தால், கரு இவ்வாறு வளர்ச்சியற்று உள்ளே இறந்து அல்லது கலைந்து இருப்பதனைக் காணக் கூடியதாக இருக்கும். இது பெண்ணினது தவறினாலோ அல்லது அவரது கணவரது தவறினாலோ ஏற்பட்டதல்ல எனும் விடயத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு தேவையான ஆறுதலையும் ஆலோசனைகளையும் வழங்குவது எமது கடமை. இவர்களுக்கு அடுத்த முறை நிச்சயம் சிறந்த கரு உருவாக வாய்ப்புள்ளது. இவ்வகையான கரு கலையும் நிலையை அமைதியான கருக்கலைவு என அழைப்போம். (Silent Miscarriage)
மூன்றாவது வகையான கருக்கலையும் நிலை மிக முக்கியமான வகை. இதன்போது அதிகூடிய வயிற்றுவலி மற்றும் குருதிப்போக்கு என்பவற்றுடன் அவசரமாக வைத்தியசாலைக்கு வருவார்கள். இதன்போது இவர்களது கரு கலைந்து இரத்தமாகவும் சிறு சிறு துண்டுகளாகவும் வெளியேறும். இந்நிலையில் இவர்களது வயிற்று வலி மற்றும் குருதிப்போக்கிற்கு அவற்றைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் வழங்குவது அவசியம். இவ்வகை (Incomplete Miscarriage) என அழைப்போம்.
சிலவேளைகளில் கலைந்து போன கரு துண்டுகளாக தாமாகவே இரத்தப் போக்குடன் வெளியேறி இறுதியில் மிகுதி எதுவும் கர்ப்பப்பையில் தங்காமல் பூரணமாக வெளியேறி விடும். இவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை.
இயற்கையாக கரு கலைந்து போவதற்கான காரணங்கள்
இயற்கையாக கருக்கலைதல் ஒரு பொதுவான பிரச்சினை. கர்ப்பம் தரித்த 5 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறு இயற்கையாக கருக்கலைந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது ஒரு பொதுவான பிரச்சினை. இதற்குக் காரணங்களாக இருக்கக்கூடியது உருவான கருவின் நிறமூர்த்தங்களின் அதாவது பரம்பரை அலகுகளின் பலவீனமும் குறைபாடுமே ஆகும். இது சற்று வயது கூடிய பெண்கள் கருத்தரிக்கும்போது கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏனைய காரணிகளாக நுண்ணுயிர் தொற்று, கர்ப்பப்பையின் உட்கட்டமைப்பு குறைபாடுகள், நீரிழிவு நோய், சில மருந்துப் பதார்த்தங்கள் என்பன அமையும்.
இயற்கையாக ஏற்படும் கருக்கலைதலுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள்.
கருக்கலைதலை உறுதிப்படுத்த ஸ்கேன் பரிசோதனை மற்றும் குருதி வர்க்கம் என்பவற்றை அறியும் பரிசோதனைகள் அவசியம். ஒரு முறை கரு கலைந்தவர்களில் கருக்கலைதலை ஏற்படுத்திய காரணிகளை கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்வதில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கரு கலைந்தால் இதற்கான பின்னணி காரணிகளைக் கண்டறியும் விசேட இரத்தம் மற்றும் ஹோர்மோன் பரிசோதனைகள் அவசியம்.
இயற்கையாகக் கரு கலைந்தவருக்குத் தேவையான சிகிச்சை
கரு ஒன்று இறந்ததாக அல்லது கலைந்து விட்டதாக உறுதிப்படுத்திய பின்னர் இதற்கான சிகிச்சைகள் 3 வழிகளில் மேற்கொள்ளப்படும்.
முதலாவது: இவர்களை இரு வாரங்களுக்கு எவ்வித சிகிச்சைகளும் மேற்கொள்ளாது காத்திருக்கும்போது உள்ளே உள்ள கலைந்த கரு தானாகவே மாதவிடாய் போன்ற இரத்தப்போக்குடன் வெளியேறக்கூடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு வெளியேறிய பின் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படாது.
அடுத்த சிகிச்சை வகை:
இவ்வாறு கரு கலைந்து உள்ளவர்களுக்கு சிலவகை மருந்துகளை வழங்கி அவற்றை கர்ப்பப்பையிலிருந்து வெளியேற்ற முடியும் இதுவும் கூடுதலானவர்களுக்கு வெற்றியளிக்கும்.
இறுதியாகவுள்ள சிகிச்சை முறை: வயிறு கழுவுதல் என அழைக்கப்படும் சத்திர சிகிச்சை முறையில் கலைந்துள்ள கருவின் பாகங்களை முற்றாக அகற்றுதல் ஆகும். இது ஒரு சத்திரசிகிச்சை முறையாக இருப்பதால் இதனை இறுதித்தீர்வாக முன்வைப்போம்.
எனவே இயற்கையாக நடைபெறும் கருக்கலையும் நிலை கர்ப்பமாகும் பெண்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை இது குறித்து மனம் சோர்ந்து விடாது இருக்க வேண்டும். இது ஆரோக்கியமற்ற நிறமூர்த்த அலகுகளின் குறைபாடுகள். கருவே கலைந்து போகின்றதே தவிர இது உங்களின் தவறினால் நடப்பதில்லை.
இது ஒரு முறை நடத்தால் மீண்டும் நடைபெறும் வாய்ப்பு மிகமிகக்குறைவு. இது துரதிர்ஷ்டவசமாக மீண்டும் மீண்டும் நடைபெற்றால் இதற்கான காரணங்களை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
டாக்டர் கு.சுஜாகரன்
மகப்பேற்று பெண் நோயியல்
சத்திரசிகிச்சை நிபுணர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக