முன்னாள் தென் ஆபிரிக்கா ஜனாதிபதி நெல் சன் மண்டேலாவின் மரணச் சடங்கு இன்று நடைபெறுகிறது.இறுதி அஞ்சலி நிகழ்வில் 60 இற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்
தென்னாபிரிக்காவில் சோஸா என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினர் தெம்பு மக்கள் என்று அழைக்கப்பட்டனர். தெம்பு இன அரசர், தெம்பு மக்களின் தலைவராக காட்லா அவர்களை நியமித்திருந்தார். நியமனம் செய்த அரசர் பிரித்தானியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவர். மரியாதைக்குரிய பதவி, செல்வாக்குள்ள மனிதர், தன் இன மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்த தலைவர் என்றாலும் பிரித்தானியாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைமையிலேயே அவர் இருந்தார்.
காட்லாவுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். ஒரு ஆபிரிக்கர் பல பெண்களை மணந்துகொள்வது ஆபிரிக்காவில் வழமையாக இருந்தது. அவர்களது இன வழக்கப்படி, முதலாவது மனைவி மதிப்புக்குரிய மனைவி என்றும் இரண்டாவது மனைவி வலது கை மனைவி என்றும் மூன்றாவது மனைவி இடது கை மனைவி என்றும் நான்காவது மனைவி பணி செய்யும் மனைவி என்றும் அழைக்கப்பட்டனர். காட்லாவுக்கும் இடது கை மனைவிக்கும் மகனாக 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி “குலு என்னும் கிராமத்தில் பிறந்தவர்தான் நெல்சன் மண்டேலா.
காட்லா மகன் மண்டேலாவுக்கு வைத்த பெயர் ரோலிலாலா மண்டேலா. (பாட்டனார் பெயர் மண்டேலா). கறுப்பின மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த நெல்சன் மண்டேலா ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது முதன் முதலில் ஒரு வெள்ளையனைக் கண்டு திகைத்து நின்று விட்டான். நான் அறிந்த யாரும் இத்தனை வெளுப்பாக இருந்ததில்லை, இவர்கள் நிச்சயம் கடவுளாகத்தான் இருக்க வேண்டுமென்று தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்.
ஏழு வயது வரை அவர் ஒரு போர்வையை மட்டுமே ஆடையாக அணிந்திருந்தார். போர்வையை தோள் பக்கமாக போர்த்தி, இடுப்பில் ஊசி மூலம் செருகியிருப் பார். ஓடினாலும் ஆடினாலும் அவிழாது. சிறு பராயத்தில் துடிப்பு மிக்க சிறுவனாகவே இருந்துள்ளார். கூடுகளில் இருந்து தேன் சேகரித்தார், மாட்டின் மடியிலிருந்து நேரடியாக பால் குடித்தார், கூரான குச்சியைக் கொண்டு மீன்களைக் குத்திப் பிடித்தார். உண்டி கோல் வைத்து பறவைகளை அடித்து வீழ்த்தினார், குளிரான ஆறுகளில் குதித்து உடல் நடுங்க நடுங்க நீந்தி கரை யைத் தொட்டார். தனக்கான பொம்மைகளை களி மண், மரப்பட்டைகள் கொண்டு தானே செய்து கொண்டார். அத்துடன் ஒவ்வொரு ஆபிரிக்க சிறுவ னும் தெரிந்துகொள்ள வேண்டிய குச்சிச் சண்டை யை கற்றுக்கொண்டு சிறு வயதிலேயே வீரமிக்க சிறுவனாக திகழ்ந்தார். ஆரம்ப முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்தது.
சோஸா மக்கள் மானசீக கடவுளாக “கமாடா” எனும் கடவுளையே வணங்கி வந்தனர். கிறிஸ்தவ மதம் அறிமுகப்படுத்தப்பட்ட போது இவர்களில் முதன் முதலில் மண்டேலாவின் தாயாரே கிறிஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டார். இவருக்கு ஃபேனி என்று பெயர் மாற்றப்பட்டது. இதனையடுத்து மண்டேலாவை மெதடிஸ்ட், வெஸ்லியன் தேவாலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டு கிறிஸ்தவ ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. காட்லாவின் வம்சத்தில் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. நெல்சன் மண்டேலாவே ஏழு வயதில் முதன் முதலாக பாடசாலைக்கு சென்றார். அவரைப் படிக்க வைத்து சோஸா மக்கள் மத்தியில் ஒரு பெரும்தலைவராக ஆக்க வேண்டுமென்பதே தந்தை காட்லாவின் அவாவாக இருந்தது.
“படிக்கப்போவது ஆங்கிலப் பாடங்களை, கற்கப்போவது பிரிட்டிஷ் சரித்திரத்தை, பழகிக்கொள்ளப் போவது ஆங்கிலேயப் பழக்க வழக்கங்களை, அநாவசியமாக உனக்கேன் ஆபிரிக்கப் பெயர்?” என்று ஆசிரியர் கடிந்துகொண்டு ரோலிலாலா எனும் பெயரை நெல்சன் என்று மாற்றம் செய்தார். அன்றிலிருந்து இன்றுவரை ரோலிலாலா மண்டேலா, நெல்சன் மண்டேலா எனும் பெயருடனே வாழ்ந்து வந்தார்.
சோஸா வழக்கப்படி விருத்த சேதனம் நடைபெற்ற பிறகே ஒருவன் இளைஞனாகிறான். மண்டேலாவுக்கு பதினாறு வயதில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
அந்தக் காலத்தில் சோஸா மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாகவே நடத்தினர். தங்கச் சுரங்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கறுப்பின மக்களை அடிமைகளாக வேலை வாங்கி, வேலைக்கேற்ற ஊதியத்தை அவர்களுக்கு கொடுக்காமல் அவர்களை இம்சித்தனர். இவ்வாறான பல இன்னல்களுக்கு மத்தியில் கறுப்பின மக்கள் செய்வதறியாது திண்டாடினர். சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும் கேவலமாக நடத்தப்படுவதையும் அவதானித்துக்கொண்டிருந்த இளைஞனான நெல் சன் மண்டேலாவின் இரத்தம் கொதித்தது, விடுதலை வேட்கை உணர்வு மனதில் குடிகொண்டது. வெள்ளையர்களிடமிருந்து கறுப்பின மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற மனப் பாங்கும் உத்வேகமும் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெள்ளையர்களால் நெல்சன் மண்டேலா அவமானப்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்களுமுண்டு.
வெள்ளையர்களிடமிருந்து தம்மின மக்களை எவ்வாறு காப்பாற்றலாமென சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு லாஸர் சிடெல்ஸ்கி எனும் ஒரு யூத உயர் அதிகாரியின் நட்பு ஏற்பட்டது. அவரிடம் மண்டேலா தன் இன மக்களின் அடிமை வாழ்க்கை பற்றிய தன் மனக்கவலைகளை பகிர்ந்துகொண்டார். அதற்கு அந்த யூத நண்பர் “நீ ஒரு வழக்கறிஞராக மாறி உன் இன மக்களுக்கு நீ உதவ வேண்டும். அப்போதுதான் வெள்ளையர்களின் ஆதிக்கத்திலிருந்து உன் இன மக்கள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள். அதற்கு நீ இப்போதிருந்தே போராட வேண்டும்” என்று விடுதலைத் தாகத்தை ஊட்டினார். அதிலிருந்துதான் நெல்சன் மண்டேலாவின் மனதில் விடுதலை வேட்கை வேர் விடத் தொடங்கியது. வெள்ளையர்களின் அடிமைத்தனத்திலிருந்து தம் இன மக்களை விடுவிக்க வேண்டுமென்ற உத்வேகமும் உற்சாகமும் பிறந்து வெறிகொண்ட வேங்கையும் சினங்கொண்ட சிங்கமுமாக செயற்படத் தொடங்கினார்.
1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியைக் கற் றார். 1943 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து போராடத் தொடங்கினார். 1956ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அர சைக் கவிழ்க்க சதி செய்ததாகவும் வன்முறை யைத் தூண்டிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவுடன் சேர்த்து 155 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
1960 ஆம் ஆண்டு ஷார்ப்வில் சம்பவத்தில் 69 போராளிகள் கொல்லப்படுகிறார்கள். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுகிறது, இனி அஹிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும் அவரது நண்பர்களும் ஆயுதமேந்தி போராட முடிவெடுத்து இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். மண்டேலா தலைமறைவாகிறார். ஆபிரிக்காவின் 'ஈட்டி' எனும் இயக்கத்தை தொடங்குகிறார்.1961 ஆம் ஆண்டு மண்டேலா வன்முறைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.
புதிய இயக்கத்தின் தலைவராகிறார். பதினேழு மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மண்டேலா ஜொகனஸ்பேர்க் கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார். அக்டோபர் 25 ஆம் திகதி வாசிக்கப்பட்ட தீர்ப்பில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை கிடைக்கிறது. இராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 1964 ஆம் ஆண்டு ஜுன் பன்னிரெண்டாம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ரோபன் தீவில் 18 ஆண்டுகள் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.
1968ஆம் ஆண்டு தாயார் மரணமடைந்தபோது அவரின் இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973 ஆம் ஆண்டும் 1983 ஆம் ஆண்டும் தென்னாபிரிக்க அதிபர் கேட்டும் கூட அதனை ஏற்க மறுத்துவிட்டார் மண்டேலா. அவரது மனவுறுதி கறுப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. மண்டேலாவை விடுவிக்கக் கோரி உலக நாடுகளும் தென்னாபிரிக்காவை நெருக்கத் தொடங்கின. பணிய மறுக்கவே உலக நாடுகள் தென்னாபிரிக்காவின் மீது 1986 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தனது அட்டூழியங்களை உணர்ந்தது தென்னாபிரிக்க அரசு .
இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாபிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கறுப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா தன் கொள்கைக்காக இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி விடுதலை பெற்றார். அதனை தொடர்ந்து அன்றைய பிரதமர் டி. கிளார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீதான தடையை அகற்றினார். ஜனநாயக அமைப்பை தோற்றுவிக்கும் முயற்சியில் அரசாங்கமும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தைகள் நடத்தின.
அதே ஆண்டில் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா 1991 ஆம் ஆண்டு அக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இருபத்தொரு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவுக்கு ஒலிம்பிக் கமிட்டி விதித்திருந்த தடையை நீக்கியது. 1993 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக கறுப்பின மக்கள் வாக்களித்தார்கள். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நெல்சன் மண்டேலா மே மாதம் 10 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார். அன்றுதான் மண்டேலாவின் தந்தை காட்லாவின் கனவு நனவாகிறது.
நெல்சன் மண்டேலா ஒன்றன்பின் ஒன்றாக மூன்று மனைவிகளை மணந்தார். 1944 ஆம் ஆண்டு எவிலின் மேசேயை மணந்தார். இத் தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். 1958 ஆம் ஆண்டு எவிலினை விவாகரத்து செய்துவிட்டு வின்னியை மணந்தார். இத் தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். 1998 ஆம் ஆண்டு வின்னியை விவாகரத்து செய்துவிட்டு மொசாம்பிகா நாட்டின் முன்னாள் அதிபரின் விதவை மனைவியான கிரேக்கா மேச்சலை தனது எண்பதாவது பிறந்த நாளன்று மணந்தார்.
1998 ஆம் ஆண்டு ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க பாடசாலைகளில் தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
1999 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் பதவியை விட்டு விலகினார். 2013 ஆம் ஆண்டு ஜுன் எட்டாம் திகதி மண் டேலா நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மண்டேலா, 2013 ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் ஐந்தாம் திகதி தனது 95 ஆவது வய தில் காலமானார். அவர் மறைந்து சென்றாலும் அவர் செய்த தியாகங்களும் போராட்டங்களும் கறுப்பின மக்களின் மனங்களின் நீங்காத நினைவுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.
அல்ஹாஜ் எம்.எப்.எம்.இக்பால்,
யாழ்ப்பாணம்.

தென்னாபிரிக்காவில் சோஸா என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினர் தெம்பு மக்கள் என்று அழைக்கப்பட்டனர். தெம்பு இன அரசர், தெம்பு மக்களின் தலைவராக காட்லா அவர்களை நியமித்திருந்தார். நியமனம் செய்த அரசர் பிரித்தானியாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டவர். மரியாதைக்குரிய பதவி, செல்வாக்குள்ள மனிதர், தன் இன மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்த தலைவர் என்றாலும் பிரித்தானியாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைமையிலேயே அவர் இருந்தார்.
காட்லாவுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். ஒரு ஆபிரிக்கர் பல பெண்களை மணந்துகொள்வது ஆபிரிக்காவில் வழமையாக இருந்தது. அவர்களது இன வழக்கப்படி, முதலாவது மனைவி மதிப்புக்குரிய மனைவி என்றும் இரண்டாவது மனைவி வலது கை மனைவி என்றும் மூன்றாவது மனைவி இடது கை மனைவி என்றும் நான்காவது மனைவி பணி செய்யும் மனைவி என்றும் அழைக்கப்பட்டனர். காட்லாவுக்கும் இடது கை மனைவிக்கும் மகனாக 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி “குலு என்னும் கிராமத்தில் பிறந்தவர்தான் நெல்சன் மண்டேலா.
காட்லா மகன் மண்டேலாவுக்கு வைத்த பெயர் ரோலிலாலா மண்டேலா. (பாட்டனார் பெயர் மண்டேலா). கறுப்பின மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த நெல்சன் மண்டேலா ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது முதன் முதலில் ஒரு வெள்ளையனைக் கண்டு திகைத்து நின்று விட்டான். நான் அறிந்த யாரும் இத்தனை வெளுப்பாக இருந்ததில்லை, இவர்கள் நிச்சயம் கடவுளாகத்தான் இருக்க வேண்டுமென்று தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டான்.
ஏழு வயது வரை அவர் ஒரு போர்வையை மட்டுமே ஆடையாக அணிந்திருந்தார். போர்வையை தோள் பக்கமாக போர்த்தி, இடுப்பில் ஊசி மூலம் செருகியிருப் பார். ஓடினாலும் ஆடினாலும் அவிழாது. சிறு பராயத்தில் துடிப்பு மிக்க சிறுவனாகவே இருந்துள்ளார். கூடுகளில் இருந்து தேன் சேகரித்தார், மாட்டின் மடியிலிருந்து நேரடியாக பால் குடித்தார், கூரான குச்சியைக் கொண்டு மீன்களைக் குத்திப் பிடித்தார். உண்டி கோல் வைத்து பறவைகளை அடித்து வீழ்த்தினார், குளிரான ஆறுகளில் குதித்து உடல் நடுங்க நடுங்க நீந்தி கரை யைத் தொட்டார். தனக்கான பொம்மைகளை களி மண், மரப்பட்டைகள் கொண்டு தானே செய்து கொண்டார். அத்துடன் ஒவ்வொரு ஆபிரிக்க சிறுவ னும் தெரிந்துகொள்ள வேண்டிய குச்சிச் சண்டை யை கற்றுக்கொண்டு சிறு வயதிலேயே வீரமிக்க சிறுவனாக திகழ்ந்தார். ஆரம்ப முதலே அவரது வாழ்க்கை முட்புதர்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்தது.
சோஸா மக்கள் மானசீக கடவுளாக “கமாடா” எனும் கடவுளையே வணங்கி வந்தனர். கிறிஸ்தவ மதம் அறிமுகப்படுத்தப்பட்ட போது இவர்களில் முதன் முதலில் மண்டேலாவின் தாயாரே கிறிஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டார். இவருக்கு ஃபேனி என்று பெயர் மாற்றப்பட்டது. இதனையடுத்து மண்டேலாவை மெதடிஸ்ட், வெஸ்லியன் தேவாலயத்துக்கு அழைத்து செல்லப்பட்டு கிறிஸ்தவ ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. காட்லாவின் வம்சத்தில் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. நெல்சன் மண்டேலாவே ஏழு வயதில் முதன் முதலாக பாடசாலைக்கு சென்றார். அவரைப் படிக்க வைத்து சோஸா மக்கள் மத்தியில் ஒரு பெரும்தலைவராக ஆக்க வேண்டுமென்பதே தந்தை காட்லாவின் அவாவாக இருந்தது.
“படிக்கப்போவது ஆங்கிலப் பாடங்களை, கற்கப்போவது பிரிட்டிஷ் சரித்திரத்தை, பழகிக்கொள்ளப் போவது ஆங்கிலேயப் பழக்க வழக்கங்களை, அநாவசியமாக உனக்கேன் ஆபிரிக்கப் பெயர்?” என்று ஆசிரியர் கடிந்துகொண்டு ரோலிலாலா எனும் பெயரை நெல்சன் என்று மாற்றம் செய்தார். அன்றிலிருந்து இன்றுவரை ரோலிலாலா மண்டேலா, நெல்சன் மண்டேலா எனும் பெயருடனே வாழ்ந்து வந்தார்.
சோஸா வழக்கப்படி விருத்த சேதனம் நடைபெற்ற பிறகே ஒருவன் இளைஞனாகிறான். மண்டேலாவுக்கு பதினாறு வயதில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
அந்தக் காலத்தில் சோஸா மக்களை வெள்ளையர்கள் அடிமைகளாகவே நடத்தினர். தங்கச் சுரங்கங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கறுப்பின மக்களை அடிமைகளாக வேலை வாங்கி, வேலைக்கேற்ற ஊதியத்தை அவர்களுக்கு கொடுக்காமல் அவர்களை இம்சித்தனர். இவ்வாறான பல இன்னல்களுக்கு மத்தியில் கறுப்பின மக்கள் செய்வதறியாது திண்டாடினர். சொந்த மண்ணில் தம் மக்கள் அடிமைப்படுத்தப்படுவதையும் கேவலமாக நடத்தப்படுவதையும் அவதானித்துக்கொண்டிருந்த இளைஞனான நெல் சன் மண்டேலாவின் இரத்தம் கொதித்தது, விடுதலை வேட்கை உணர்வு மனதில் குடிகொண்டது. வெள்ளையர்களிடமிருந்து கறுப்பின மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற மனப் பாங்கும் உத்வேகமும் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெள்ளையர்களால் நெல்சன் மண்டேலா அவமானப்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்களுமுண்டு.
வெள்ளையர்களிடமிருந்து தம்மின மக்களை எவ்வாறு காப்பாற்றலாமென சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு லாஸர் சிடெல்ஸ்கி எனும் ஒரு யூத உயர் அதிகாரியின் நட்பு ஏற்பட்டது. அவரிடம் மண்டேலா தன் இன மக்களின் அடிமை வாழ்க்கை பற்றிய தன் மனக்கவலைகளை பகிர்ந்துகொண்டார். அதற்கு அந்த யூத நண்பர் “நீ ஒரு வழக்கறிஞராக மாறி உன் இன மக்களுக்கு நீ உதவ வேண்டும். அப்போதுதான் வெள்ளையர்களின் ஆதிக்கத்திலிருந்து உன் இன மக்கள் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிப்பார்கள். அதற்கு நீ இப்போதிருந்தே போராட வேண்டும்” என்று விடுதலைத் தாகத்தை ஊட்டினார். அதிலிருந்துதான் நெல்சன் மண்டேலாவின் மனதில் விடுதலை வேட்கை வேர் விடத் தொடங்கியது. வெள்ளையர்களின் அடிமைத்தனத்திலிருந்து தம் இன மக்களை விடுவிக்க வேண்டுமென்ற உத்வேகமும் உற்சாகமும் பிறந்து வெறிகொண்ட வேங்கையும் சினங்கொண்ட சிங்கமுமாக செயற்படத் தொடங்கினார்.
1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியைக் கற் றார். 1943 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து போராடத் தொடங்கினார். 1956ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அர சைக் கவிழ்க்க சதி செய்ததாகவும் வன்முறை யைத் தூண்டிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவுடன் சேர்த்து 155 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
1960 ஆம் ஆண்டு ஷார்ப்வில் சம்பவத்தில் 69 போராளிகள் கொல்லப்படுகிறார்கள். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுகிறது, இனி அஹிம்சை வழி பலன் தராது என்று நம்பிய மண்டேலாவும் அவரது நண்பர்களும் ஆயுதமேந்தி போராட முடிவெடுத்து இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினர். மண்டேலா தலைமறைவாகிறார். ஆபிரிக்காவின் 'ஈட்டி' எனும் இயக்கத்தை தொடங்குகிறார்.1961 ஆம் ஆண்டு மண்டேலா வன்முறைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.
புதிய இயக்கத்தின் தலைவராகிறார். பதினேழு மாத தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட மண்டேலா ஜொகனஸ்பேர்க் கோட்டையில் சிறை வைக்கப்படுகிறார். அக்டோபர் 25 ஆம் திகதி வாசிக்கப்பட்ட தீர்ப்பில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை கிடைக்கிறது. இராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 1964 ஆம் ஆண்டு ஜுன் பன்னிரெண்டாம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ரோபன் தீவில் 18 ஆண்டுகள் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.
1968ஆம் ஆண்டு தாயார் மரணமடைந்தபோது அவரின் இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இனி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் விடுதலை செய்வதாக 1973 ஆம் ஆண்டும் 1983 ஆம் ஆண்டும் தென்னாபிரிக்க அதிபர் கேட்டும் கூட அதனை ஏற்க மறுத்துவிட்டார் மண்டேலா. அவரது மனவுறுதி கறுப்பினத்தவர்களை ஒன்றுபட ஊக்கமூட்டியது. நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தன. மண்டேலாவை விடுவிக்கக் கோரி உலக நாடுகளும் தென்னாபிரிக்காவை நெருக்கத் தொடங்கின. பணிய மறுக்கவே உலக நாடுகள் தென்னாபிரிக்காவின் மீது 1986 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. உலகமே போர்க்கொடி தூக்கிய பிறகு தனது அட்டூழியங்களை உணர்ந்தது தென்னாபிரிக்க அரசு .
இன ஒதுக்கல் என்ற அசிங்கத்தால் இருண்டு போயிருந்த தென்னாபிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கறுப்பினத்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா தன் கொள்கைக்காக இருபத்தேழு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி விடுதலை பெற்றார். அதனை தொடர்ந்து அன்றைய பிரதமர் டி. கிளார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீதான தடையை அகற்றினார். ஜனநாயக அமைப்பை தோற்றுவிக்கும் முயற்சியில் அரசாங்கமும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தைகள் நடத்தின.
அதே ஆண்டில் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா 1991 ஆம் ஆண்டு அக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இருபத்தொரு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவுக்கு ஒலிம்பிக் கமிட்டி விதித்திருந்த தடையை நீக்கியது. 1993 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக கறுப்பின மக்கள் வாக்களித்தார்கள். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. நெல்சன் மண்டேலா மே மாதம் 10 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக பதவியேற்றார். அன்றுதான் மண்டேலாவின் தந்தை காட்லாவின் கனவு நனவாகிறது.
நெல்சன் மண்டேலா ஒன்றன்பின் ஒன்றாக மூன்று மனைவிகளை மணந்தார். 1944 ஆம் ஆண்டு எவிலின் மேசேயை மணந்தார். இத் தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள். 1958 ஆம் ஆண்டு எவிலினை விவாகரத்து செய்துவிட்டு வின்னியை மணந்தார். இத் தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். 1998 ஆம் ஆண்டு வின்னியை விவாகரத்து செய்துவிட்டு மொசாம்பிகா நாட்டின் முன்னாள் அதிபரின் விதவை மனைவியான கிரேக்கா மேச்சலை தனது எண்பதாவது பிறந்த நாளன்று மணந்தார்.
1998 ஆம் ஆண்டு ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க பாடசாலைகளில் தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
1999 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் பதவியை விட்டு விலகினார். 2013 ஆம் ஆண்டு ஜுன் எட்டாம் திகதி மண் டேலா நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டோரியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மண்டேலா, 2013 ஆம் ஆண்டு டிசம் பர் மாதம் ஐந்தாம் திகதி தனது 95 ஆவது வய தில் காலமானார். அவர் மறைந்து சென்றாலும் அவர் செய்த தியாகங்களும் போராட்டங்களும் கறுப்பின மக்களின் மனங்களின் நீங்காத நினைவுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.
அல்ஹாஜ் எம்.எப்.எம்.இக்பால்,
யாழ்ப்பாணம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக