ஞாயிறு, 15 டிசம்பர், 2013

நான் கடவுளை விட ஆட்களை கையெடுத்து கும்பிட்டதே அதிகம்!

"23 வருடங்களாக என் பிள்ளையை தேடி அலைகிறேன்"

நான் கட­வுளைக் கும்­பிட்­டதை விட ஆட்­களை கையெ­டுத்துக் கும்­பிட்­டது தான் அதிகம். என் பிள்­ளையைத் தாருங்கள் என்று 23 வரு­டங்­க­ளாக பிள்­ளையைத் தேடித் திரி­கிறேன். இவ்­வாறு சொல்லி புலம்­பினார் 75 வயது மதிக்­கத்­தக்க மூதாட்­டி­யொ­ருவர்.



சர்­வ­தேச மனித உரிமை தினத்தை முன்­னிட்டு 10.12.2013 அன்று திரு­கோ­ண­மலை மணிக்­கூட்டு கோபு­ரத்­த­டியில் காணாமல் போனோரை தேடி­ய­றியும் அமைப்பின் ஏற்­பாட்டில் நடத்­தப்­பட்ட கவ­ன­ஈர்ப்பு போராட்­டத்தில் கலந்து கொண்ட உற­வி­னர்­களில், தாய் ஒருத்தி இவ்­வாறு கத­றி­ய­ழு­ததை பார்த்த எல்­லோரும் உறைந்து போய் நின்­றார்கள்.

மணிக்­கூட்டு கோபு­ரத்­த­டியில் காலை 11 மணி­ய­ளவில் மேற்­படி கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஆரம்­ப­மா­கி­யது. ஏற்­பாட்­டா­ளர்­களில் ஒரு சிலரும் பல தாய்­மாரும் உற­வி­னர்­களும் அங்கு ஒன்று கூடி­யி­ருந்­தார்கள்.

அவர்­களின் கைகளில் பல புகைப்­ப­டங்கள் காணப்­பட்­டன. மகனை, மகளை இழந்த தாய் தகப்பன், சகோ­த­ரர்­களை இழந்த உற­வி­னர்கள் தமது உற­வி­னர்­களின் படங்­களை தாங்­கி­யி­ருந்­தார்கள். இன்னும் சிலர் பல்­வேறு வாச­கங்கள் அடங்­கிய அட்­டை­களைத் தாங்கி நின்­றார்கள். ஒரு தாய் மூன்று பிள்­ளை­களின் படங்­களை தாங்­கிய வண்ணம் அழுது வடிந்த கண்­ணோடு காணப்­பட்டார். நான் நாலு ஆண் பிள்­ளை­களைப் பெற்றேன். மூன்று பிள்­ளைகள் கடத்­தப்­பட்டும் காணா­மலும் போயுள்­ளார்கள். 2008 ஆம் ஆண்டு சதா­னந்தம் அருள் சீலன், சதா­னந்தம் நிஷாந்தன், சதா­னந்தம் சிவ­குமார் என்ற மூன்று பிள்­ளை­களை இழந்து விட்டேன் என சாம்­பல்­தீவு ஊரைச் சேர்ந்த அந்த தாய் கத­றி­ய­ழுதார்.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் கடந்த காலங்­களில் பல்­வேறு இடங்­களில், பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் கடத்­தப்­பட்டோர் காணாமல் போனோரின் உற­வி­னர்கள் ஒன்று கூடி நின்­றார்கள். இந்தக் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை ஆரம்­பித்து வைத்து கருத்துத் தெரி­வித்த சுந்­தரம் மகேந்­திரன் தலைமை தாங்கி கோஷங்­களை எழுப்­பிய வண்ணம் நின்று கொண்­டி­ருந்தார். ஆரம்­பத்தில் போராட்­டத்தில் கலந்து கொண்­ட­வர்கள் குறை­வாக இருந்த போதும் நேரம் செல்லச் செல்ல சனங்கள் கூடி­யது. இந்த வேளையில் பொலிஸ் படை­யினர் சுற்­றி­வ­ளைத்து நின்­றார்கள். அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு சுமார் பத்துப் பதி­னொரு பேர் நின்­றார்கள். இவர்கள் யார் என்று அடை­யாளம் காணு­வது கஷ்­ட­மாக இருந்­தது. பொலிஸார் போக்­கு­வ­ரத்து ஒழுங்கை தீவி­ர­மாக கவ­னித்துக் கொண்­டி­ருந்­தார்கள். கவன யீர்ப்புப் போராட்­டத்தை நடத்­தி­ய­வர்கள் நின்­ற­தற்கு எதிர்ப்­பு­ற­மாக யார் யாரோ­வெல்லாம் நின்­றார்கள். இரண்­டொரு பெளத்த பிக்­கு­மா­ரையும் காண முடிந்­தது.

ஊட­க­வி­ய­லா­ளர்­களோ ஓடி­யோடிப் படம் எடுத்துக் கொண்­டி­ருந்­தார்கள். வீடியோ எடுத்துக் கொண்­டி­ருந்­தார்கள். சிங்­க­ளத்­திலும் தமி­ழிலும் பல்­வேறு கோஷங்கள் எழுப்பிக் கொண்­டி­ருந்­தார்கள். கடத்­தப்­பட்டோர் எங்கே, காணாமல் போனோரைக் காட்டு, எங்­களை எங்கள் சொந்த மண்ணில் வாழ விடு, சிறையில் இருக்கும் தமிழ்க் கைதி­களை விடு­தலை செய், சம்பூர் மக்­களைக் குடி­யேற்று என்ற வாச­கங்கள் தாங்­கிய அட்டைகளை கையில் ஏந்­திய வண்ணம் கோஷ­மிட்டுக் கொண்­டி­ருந்­தார்கள். சுமார் 4 நிமிட நேரம் இந்த கவ­ன­யீர்ப்புப் போராட்டம் அமை­தி­யாக நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­தது.

பொலிஸ் உயர் அதி­கா­ரிகள் ஒரு சிலரும் பிர­சன்­ன­மாகி இருந்­தார்கள். கோஷ­மிட்டுக் கொண்­டி­ருந்த உற­வினர் பக்­கத்­துக்கு ஒருவர் ஓடி வந்தார். கோஷ­மிட்டுக் கொண்­டி­ருந்த உற­வி­னர்­களைப் பார்த்து சிங்­கள மொழியில் அவர் கத்­தினார். நீங்கள் யாழ்ப்­பா­ணத்தில் கத்­துங்கோ, மட்­டக்­க­ளப்பில் கோஷ­மி­டுங்கோ, திரு­கோ­ண­ம­லையில் கோஷ­மிடக் கூடாது என பலத்த தொனியில் கத்தி தாக்­கு­வது போல் பாய்ந்தார். ஆனால், அங்­கி­ருந்த பொலிஸார் அவரைத் தடுத்து விட்­டார் கள். இவற்­றை­யெல்லாம் பொருட்­ப­டுத்­தாமல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்­திய உற­வினர்கள் மிக அமை­தி­யா­கவும் ஆர்ப்­பாட்டம் இன்­றியும் கோஷ­மிட்டுக் கொண்­டி­ருந்­தார்கள்.

காணாமல் போன, கடத்­தப்­பட்ட தங் கள் தங்கள் உற­வு­களின் படங்­களை ஏந் ­திய வண்ணம் நின்­ற­வர்­களை ஊட­க­வி­ய­லா­ளர்கள் பேட்டி கண்டு கொண்­டி­ருந்­தார்கள். படம் எடுத்துக் கொண்­டி­ருந்­தார் கள்.

ஒரு தாய் மிகக் கண்­க­லங்­கிய வண்ணம் தனது மகளின் படத்தை ஏந்­தி­ய­வாறு இவ்­வாறு கூறினார். 2008 ஆம் ஆண்டு நேர்­முகப் பரீட்­சைக்கு திரு­மலை மட்­டிக்­களி என்னும் இடத்­தி­லி­ருந்து போன எனது மகளை இது­வரை காண­வில்லை எனக்­கூறி தேம்­பித்­தேம்பி அழுதார். இதற்­கி­டையில் இன்­னு­மொரு தந்தை ஊட­க­வி­ய­லாளர் மத்­தியில் ஓடி வந்து குறித்த பொலிஸ் நிலை­யத்தின் பெய­ரைச்­சொல்லி இதற்கு முன் அமைக்­கப்­பட்­டி­ருந்த சோதனைச் சாவ­டியில் வைத்து கைது செய்­யப்­பட்ட 32 வய­தான மு.அசோக்­குமாரை இது­வரை காண­வில்லை. என்ன ஆனான்? என்ன நடந்­தது? என்­பது எமக்குத் தெரி­யாது என வாய் விட்டுக் கதறி அழுதார். இவ்­வாறு முரு­கா­பு­ரியைச் சேர்ந்­த­வர்கள், 6 ஆம் கட்டை இலப்பைக் குளத்தை சேர்ந்­தவர், வவு­னி­யாவை சேர்ந்­தவர், கட்­டைப்­ப­றிச்சான், பெரி­ய­குளம், அன்பு வழி­புரம் என திரு­கோ­ண­மலை மாவட்­டத்தைச் சேர்ந்த பல்­வேறு உற­வி­னர்­களும் கத­றி­ய­ழுது கண்ணீர் விட்டு கோஷம் போட்­ட­ படி நின்­றார்கள்.

இதன் நடுவே கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான கு.நாகேஸ்­வரன், ஜே.ஜனார்த்­தனன் மற்றும் முன்னாள் மூதூர் பிர­தேச சபை எதிர்க்­கட்சித் தலைவர் திருச்­செல்வம், கூட்­ட­மைப்பின் பிர­முகர் ஜேசு­தாசன் ஆகியோர் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்­தி­ய­வர்­க­ளுடன் சங்­க­மித்­துக்­கொண்­டனர்.

ஏற்­பாட்­டாளர் மகேந்­திரன் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பேட்டி அளித்த போது பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். வடக்கு கிழக்கில் காணாமல் போனோர், கடத்­தப்­பட்டோர் ஆகி­யோரை கண்­ட­றி­வ­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் ஆணைக்­கு­ழுவில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. இவர்­களை கண்­ட­றி­வ­தற்கு சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றே தேவை­யென அழுத்தம் திருத்­த­மாகக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறு­கையில், கடந்த காலங்­களில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல்­வேறு இடங்­களில் காணாமல் போனோர், கடத்­தப்­பட்டோர் ஆகி­யோரின் உற­வி­னர்கள் இந்த கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடத்­து­கின்­றார்கள்.

காணாமல் போனோ­ரையும் கடத்­தப்­பட்­டோ­ரையும் அர­சாங்கம் கண்­டு­பி­டித்து தர வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்தே இப்­போ­ராட்டம் நடத்­தப்­ப­டு­கி­றது. அர­சாங்கம் கடந்த காலங்­களில் காணாமல் போனோர், கடத்­தப்­பட்டோர் என்று இலங்­கையில் யாரு­மில்­லை­யென்று கூறி வந்­தது ஆனால் பொது நல­வாய மாநாட்டின் பின்பு காணாமல் போனோர் தொடர்­பாக கண்­ட­றி­வ­தற்கு கணக்­கெ­டுப்­பொன்றை ஆரம்­பித்­துள்­ளார்கள்.

ஜனா­தி­பதி, ஆணைக்­கு­ழு­வொன்­றையும் கண்­ட­றிய நிய­மித்­துள்ளார். காணாமல் போனோர் கடத்­தப்­பட்டோர் என்று யாரு­மில்­லை­யென கூறி வந்த இலங்கை அர­சாங்கம் ஏன் இப்­படி நிய­மித்­துள்­ளது? அது மாத்­தி­ர­மின்றி இந்த நடவடிக்கைகளினால் தமிழ் மக்­க­ளுக்கு எந்த நியா­ய­மான தீர்வும் கிடைக்கப் போவ­தில்லை. எனவே தான் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று கொண்டு வரப்­பட வேண்­டு­மென்ற கருத்தை மகேந்­திரன் கூறி முடித்தார்.

பேரினச் சமூ­கத்தின் வரவு வர­வ­ரக்­கூடிக் கொண்­டி­ருந்­தது. இந்­நி­லையில் மரக்­கறி சந்­தைப்­பக்­கத்­தி­லி­ருந்து சுமார் நாலைந்து பேர் சிங்­கள மொழியில் கடு­மை­யாகப் பேசிய வண்ணம் பாய்ந்து வந்­தார்கள். இதற்­கி­டையில் ஏலவே முகத்தை மூடி மறைத்துக் கொண்­டி­ருந்­த­வர்­களும் பர­ப­ரப்­பாக காணப்­பட்­டார்கள். அந்த நாலைந்து பேரும் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை நடத்திக் கொண்­டி­ருந்­த­வர்­களின் கையில் வைத்­தி­ருந்த வாசக அட்­டை­க­ளையும் புகைப்­ப­டங்­க­ளையும் பறித்து கிழித்து எறிந்­தார்கள். தாய்­மார்கள் மற்றும் பெண்­களின் கரங்­க­ளி­லி­ருந்த மேற்­படி படங்­க­ளையும் வாசக அட்­டை­க­ளையும் பிடுங்கி எடுத்­தார்கள். அங்­கி­ருந்த உற­வி­னர்கள் கொய்யோ முறையோ எனக் கத்­தி­னார்கள். பார்த்துக் கொண்­டி­ருந்த பொது­மக்கள் ஓடி­னார்கள். ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கையி­லுள்ள கம­ராக்­களை பறித்­தெ­றிய முற்­பட்­டார்கள். தெய்வாதீன­மாக ஏதும் அகப்­ப­ட­வில்லை. அவர்­களின் அட்­ட­கா­சத்தை அடக்க அங்­கி­ருந்த யாரும் முன் வர­வில்லை.

வாசகம் தாங்கிக் கொண்­டி­ருந்த முன் னாள் பிர­தேச சபை எதி­ர்க்­கட்சித் தலை வர் திருச்­செல்வம் நின்ற இடத்­துக்கு பாய்ந்து சென்று தாக்­கி­னார்கள். சர­மா­ரி­யாகக் கைகளால் எல்­லோ­ரையும் தாக்­கி­னார்கள். எல்­லோரும் நாலா திசையும் சித­றுண்டு ஓட்டம் பிடித்­தார்கள். ஏற்­பாட்­டாளர் சுந்­தரம் மகேந்­திரன் தாக்­கப்­பட்டார். திரு­கோ­ண­ம­லைக்கு சாபமோ என்­னமோ 1958ஆம் ஆண்டு தொட்டு மணிக்­கூட்­டுக்­கோ­புரம் இனக்­கோ­பு­ரத்தின் அடை­யா­ள­மா­கவே இன்­றைய சம்­ப வம் வரை காணப்­ப­டு­கி­றது. வயது போன தாய்மார், பெண்கள் என்று கூடப்­பார்க்­காமல் தாக்­கப்­பட்­டார்கள். மொத்­தத்தில் அம­ளி­து­ம­ளி­யாகி விட்ட இந்த அமை­தி­யான கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் நடந்த இந்த அட்­டூ­ழி­யத்தை தடுக்க அங்கு நின்று கொண்­டி­ருந்த எந்த சீரு­டைக்­கா­ரரும் முயற்சி செய்­ய­வில்லை.

சுமார் 70 நிமிட நேரத்­துக்குள் இவ்­வ­ளவும் நடந்து முடிந்து விட்­டது. மீண்­டு­மொரு இனக்­க­ல­வரம் தோன்­றி­விட்­டதோ என்ற பயப்­பாட்­டுடன் மணிக்­கூட்டுக் கோபு­ரத்­தடி பிர­தான பஸ் நிலையம், மரக்­கறி சந்­தை­யடி, மீன் சந்­தை­யடி பர­ப­ரப்­பாகக் காணப்­பட்­டது. சில வினா­டி­களில் கூட்­ட­மைப்பின் பிர­முகர் திருச்­செல்­வமும், ஏற்­பாட்­டாளர் மகேந்­தி­ரனும் தாக்­கப்­பட்டு அவ­சர சிகிச்­சைப்­பி­ரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பதை அறியக் கூடியதாக இருந்தது.

சர்வதேச மனித உரிமை தினமொன் றில் தமது உறவுகளைப் பறிகொடுத்த உடன் பிறப்புக்கள் அமைதியான முறை யில் தங்கள் வேதனைகளை உச்ச ரிக்கக் கூட இந்த நாட்டில் ஜனநாய கம் இல்லையென்ற கவலை எல் லோர் மனச்சாட்சியையும் குடைந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத் தில் குறைவான எண்ணிக்கை கொண்ட உறவுகள் வந்திருந்த போதும், மேற்படி சம்பவம் கூடுதலானோர் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து விட்டது என்றும் கூறலாம். ஊடகங்கள் உயர்ந்த குரலில் அதை வெளிக்காட்டியது.

இதேவேளை சம்பவம் நடைபெற்ற அன்றைய தினமே நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இச்சம் பவம் பற்றி கூறுகையில்,

இன்று மனித உரிமை தினம். இன்றைய தினத்தில் திருகோணமலையில் நடை பெற்ற சம்பவம் இந்த நாட்டில் மனித உரிமை இல்லையென்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது எனச் சுட்டிக் காட் டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 சாணக்கியன்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல