கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் தான் இருக்க வேண்டும் என்று விசாரணையாளர்கள் நம்புகிறார்கள்.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய எம்.ஹெச். 370 விமானம் மாயமானது. விமானம் மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அது எங்கு உள்ளது, அதற்கு என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதி நோக்கி பறந்து மேலும் தெற்கு நோக்கியே சென்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள இந்திய பெருங்கடல் வரை விமானத்தை தேட வேண்டும்.
இதற்கிடையே இரண்டு பொருட்கள் கடல் பகுதியில் கிடைத்துள்ளதாகவும், அவற்றுக்கும், மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தை தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
தொடர்புடைய பக்கங்கள்
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய எம்.ஹெச். 370 விமானம் மாயமானது. விமானம் மாயமாகி 12 நாட்கள் ஆகியும் அது எங்கு உள்ளது, அதற்கு என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதி நோக்கி பறந்து மேலும் தெற்கு நோக்கியே சென்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள இந்திய பெருங்கடல் வரை விமானத்தை தேட வேண்டும்.
இதற்கிடையே இரண்டு பொருட்கள் கடல் பகுதியில் கிடைத்துள்ளதாகவும், அவற்றுக்கும், மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தை தேடும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
தொடர்புடைய பக்கங்கள்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக