ஆடம்பர நகைக்கடையொன் றிலிருந்து 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான கழுத்தில் அணியும் வைர ஆபரணத்தை களவாடிய 12 வயது சிறுமியொருவரை ஹொங்கொங் பொலி ஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேற்படி திட்டமிட்ட கொள்ளையில் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் இருவரும் ஆணொருவரும் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
செல்வந்தர்கள் போன்று ஆடையணிந்து வந்த மேற்படி மூவரும் எம்பரர் நகைக்கடை உத்தியோகத்தர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தவேளை, 12 வயது சிறுமி அந்த நகைக்கடையின் அலுமாரி இழுப்பறையிலிருந்த சாவியொன்றை திருடி கண்ணாடி அலுமாரியைத் திறந்து கழுத்து ஆபரணத்தைக் களவாடி தனது சட்டைப் பையில் மறைத்து வைத்துக் கொண்டு ள்ளார். அதன் பின் சிறுமி அந்த நகைக்கடையை விட்டு வெளியேறியதும் தனது தோற்றத்தை வேகமாக மாற்றிக்கொண்டு வாடகைக் காரொன்றில் தப்பிச்செல்வது அங்கிருந்த சிசிரிவி கண்காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளது.
சிறுமியால் களவாடிச் செல்லப்பட்ட நகையில் சுமார் 100 கரட் அளவான 30 க்கு மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி திட்டமிட்ட கொள்ளையில் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் இருவரும் ஆணொருவரும் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
செல்வந்தர்கள் போன்று ஆடையணிந்து வந்த மேற்படி மூவரும் எம்பரர் நகைக்கடை உத்தியோகத்தர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தவேளை, 12 வயது சிறுமி அந்த நகைக்கடையின் அலுமாரி இழுப்பறையிலிருந்த சாவியொன்றை திருடி கண்ணாடி அலுமாரியைத் திறந்து கழுத்து ஆபரணத்தைக் களவாடி தனது சட்டைப் பையில் மறைத்து வைத்துக் கொண்டு ள்ளார். அதன் பின் சிறுமி அந்த நகைக்கடையை விட்டு வெளியேறியதும் தனது தோற்றத்தை வேகமாக மாற்றிக்கொண்டு வாடகைக் காரொன்றில் தப்பிச்செல்வது அங்கிருந்த சிசிரிவி கண்காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளது.
சிறுமியால் களவாடிச் செல்லப்பட்ட நகையில் சுமார் 100 கரட் அளவான 30 க்கு மேற்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக