திங்கள், 26 ஜனவரி, 2015

பல் துவாரங்களை அடைக்கச் சென்ற பெண் மேல் தாடை பற்கள் அனைத்தையும் இழந்த விபரீதம் (படங்கள் இணைப்பு)

பற்­க­ளி­லுள்ள துவா­ரங்­களை அடைப்­ப­தற்கு பல் வைத்­தியர் ஒரு­வ­ரிடம் சென்ற பெண்­ணொ­ருவர், தனது மேல் தாடை­யி­லுள்ள அனைத்து பற்­க­ளையும் அந்த மருத்­துவர் அகற்­றி­யுள்­ளதை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.



நிக்கி ஸ்டான்லி (46 வயது) என்ற மேற்­படி பெண், தனது சீரற்ற பற்­களை சீர்செய்ய குறிப்­பிட்ட மருத்­து­வரை அணு­கி­யி­ருந்தார்.

இதன் போது அந்த மருத்­து­வரால் அவ­ருக்கு வழங்­கப்­பட்ட கடு­மை­யான விறைப்­பூசி கார­ண­மாக அவர் ஆழ்ந்த உறக்­கத்­திற்கு சென்­றுள்ளார்.

தொடர்ந்து அவர் மீளவும் விழித்­தெ­ழுந்த போது, தனது மேற்­தாடைப் பற்கள் அனைத்தும் அகற்­றப்­பட்­டுள்­ளதை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

இந்­நி­லையில் லண்­டனில் ஹார்லி வீதி­யி­லுள்ள டோடல் டென்ரல் கெயார் பல் மருத்­து­வ­ம­னையை சேர்ந்த மருத்­து­வர்கள் அவ­ருக்கு 8 மணி நேரத்தை செல­விட்டு புதிய செயற்கைப் பற்­களைப் பொருத்­தி­யுள்­ளனர். இந்த பற்களை பொருத்துவதற்கு 30,000 ஸ்ரேலிங் பவுண் செலவிடப்பட்டுள்ளது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல