- பொலிஸார் தீவிர விசாரணை; வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதை தவிர்க்க விமான நிலையங்களிலும் உசார் -
கிளி நொச்சி, உருத்திரபுரம் - எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தாயார் கிளிநொச்சி பொலிஸாருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பரஸ்பர வேறுபாடுகளையும் இன்னும் சில தடயங்களையும் வைத்து இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ள பொலிஸார், குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர நேற்று நான்காவது நாளாகவும் குழந்தையைத் தேடிய வேட்டை தொடர்ந்ததாக குறிப்பிட்டார்.
இந் நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் கிளிநொச்சி பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் மாயமாகியுள்ளகுழந்தை வெளி நாடொன்றுக்கு கடத்தப்படுவதை தடுக்க அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் கட்டுநாயக்க, மத்தள விமான நிலைய அதிகாரிகளுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
எவ்வாறாயினும் காணாமல் போயுள்ள சிறுமியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கியுள்ள முன்னுக்கு பின் முரணான வாக்கு மூலங்களால் விசாரணைகளை எந்த கோணத்தில் முன்னெடுப்பது என்பதில் தெளிவற்ற நிலைமை நிலவுவதாகவும் எனினும் பல்வேறு கோணங்களில் பல பொலிஸ் குழுக்களைக் கொண்டு குழந்தையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார். குறித்த குழந்தையின் தாயார் குழந்தையை தனது கள்ளக் காதலனிடம் ஒப்படைத்ததாக பொலிஸாருக்கு இறுதியாக வாக்கு மூலம் அளித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த நபரைத் தேடியே தாயாரையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் குழு யாழ். சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும் நேற்று இரவு 9.30 மணி வரை குழந்தை தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
குறித்த சிறுமியின் தாயுடன் அவர் இருந்த போது அவரின் உறவு முறை அண்ணன்மார் எனக் கூறப்படும் இரு இளைஞர்கள் அந்த இடத்துக்கு வந்துள்ளதுடன் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர்கள் தூரத்தில் உள்ள சக்திபுரம் குளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தாய் குளிப்பதற்காக குளத்துக்கு செல்ல தயாராக இருந்ததைத் தொடர்ந்தே அவர்கள் இவ்வாறு அழைத்துச் சென்றுள்ளனர்.
குளத்துக்கு சென்ற இவர்கள் குழந்தையை குளக்கட்டில் வைத்துவிட்டு நீராடியுள்ளனர். இதன் போது அவ்விடத்துக்கு வந்த குழந்தையின் தாய் குழந்தை எங்கே என வினவிய போது அவள் குளக்கட்டில் இருப்பதாக அவர்கள் பதிலளித்த போதும் குழந்தை அங்கிருக்கவில்லை என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இது குறித்து காணாமற்போன குழந்தையின் பெற்றோர், ஒன்றுவிட்ட சகோதரன், பாதிரியார் ஒருவர் உள்ளிட்ட 07 பேரிடம் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
இதனிடையே கிடைக்கப் பெற்ற வாக்கு மூலம் ஒன்றில் குழந்தையை வேறு ஒரு பிரதேசத்தில் தாம் நபர் ஒருவருடன் கண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்று குழந்தையின் தாயிடம் மீண்டும் பொலி ஸார் விசாரணை நடத்தினர். அதன் போது குழந்தையை தான் மாமாவுடன் யாழ்ப்பாணம் அனுப்பியதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் மாமா என கூறப்படும் குறித்த நபர் தாயின் கள்ளக் காதலன் என குறிப்பிடும் பொலிஸார் அவருக்கு குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக் கலாம் என சந்தே கிக்கின்றனர். இதனையடுத்தே குழந்தையைத் தேடி யாழ்ப் பாணத்திற்கு குழந்தையின் தாயையும் உடன் அழைத்துக் கொண்டு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது. ஆனாலும், குழந்தை இதுவரைகிடைக்கவில்லை என தெரிவிக்கும் பொலிஸார், குழந்தை பணத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(எம்.எப்.எம்.பஸீர்)
வீரகேசரி
கிளி நொச்சி, உருத்திரபுரம் - எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போயுள்ள மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குழந்தையின் தாயார் கிளிநொச்சி பொலிஸாருக்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியுள்ள வாக்கு மூலங்களின் பரஸ்பர வேறுபாடுகளையும் இன்னும் சில தடயங்களையும் வைத்து இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ள பொலிஸார், குழந்தை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் யாழ். பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர நேற்று நான்காவது நாளாகவும் குழந்தையைத் தேடிய வேட்டை தொடர்ந்ததாக குறிப்பிட்டார்.
இந் நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் கிளிநொச்சி பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் மாயமாகியுள்ளகுழந்தை வெளி நாடொன்றுக்கு கடத்தப்படுவதை தடுக்க அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் கட்டுநாயக்க, மத்தள விமான நிலைய அதிகாரிகளுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
எவ்வாறாயினும் காணாமல் போயுள்ள சிறுமியின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் பொலிஸாருக்கு வழங்கியுள்ள முன்னுக்கு பின் முரணான வாக்கு மூலங்களால் விசாரணைகளை எந்த கோணத்தில் முன்னெடுப்பது என்பதில் தெளிவற்ற நிலைமை நிலவுவதாகவும் எனினும் பல்வேறு கோணங்களில் பல பொலிஸ் குழுக்களைக் கொண்டு குழந்தையை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார். குறித்த குழந்தையின் தாயார் குழந்தையை தனது கள்ளக் காதலனிடம் ஒப்படைத்ததாக பொலிஸாருக்கு இறுதியாக வாக்கு மூலம் அளித்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த நபரைத் தேடியே தாயாரையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் குழு யாழ். சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும் நேற்று இரவு 9.30 மணி வரை குழந்தை தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
குறித்த சிறுமியின் தாயுடன் அவர் இருந்த போது அவரின் உறவு முறை அண்ணன்மார் எனக் கூறப்படும் இரு இளைஞர்கள் அந்த இடத்துக்கு வந்துள்ளதுடன் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டிலிருந்து 2 கிலோமீற்றர்கள் தூரத்தில் உள்ள சக்திபுரம் குளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தாய் குளிப்பதற்காக குளத்துக்கு செல்ல தயாராக இருந்ததைத் தொடர்ந்தே அவர்கள் இவ்வாறு அழைத்துச் சென்றுள்ளனர்.
குளத்துக்கு சென்ற இவர்கள் குழந்தையை குளக்கட்டில் வைத்துவிட்டு நீராடியுள்ளனர். இதன் போது அவ்விடத்துக்கு வந்த குழந்தையின் தாய் குழந்தை எங்கே என வினவிய போது அவள் குளக்கட்டில் இருப்பதாக அவர்கள் பதிலளித்த போதும் குழந்தை அங்கிருக்கவில்லை என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இது குறித்து காணாமற்போன குழந்தையின் பெற்றோர், ஒன்றுவிட்ட சகோதரன், பாதிரியார் ஒருவர் உள்ளிட்ட 07 பேரிடம் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
இதனிடையே கிடைக்கப் பெற்ற வாக்கு மூலம் ஒன்றில் குழந்தையை வேறு ஒரு பிரதேசத்தில் தாம் நபர் ஒருவருடன் கண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்று குழந்தையின் தாயிடம் மீண்டும் பொலி ஸார் விசாரணை நடத்தினர். அதன் போது குழந்தையை தான் மாமாவுடன் யாழ்ப்பாணம் அனுப்பியதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். எனினும் மாமா என கூறப்படும் குறித்த நபர் தாயின் கள்ளக் காதலன் என குறிப்பிடும் பொலிஸார் அவருக்கு குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக் கலாம் என சந்தே கிக்கின்றனர். இதனையடுத்தே குழந்தையைத் தேடி யாழ்ப் பாணத்திற்கு குழந்தையின் தாயையும் உடன் அழைத்துக் கொண்டு பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது. ஆனாலும், குழந்தை இதுவரைகிடைக்கவில்லை என தெரிவிக்கும் பொலிஸார், குழந்தை பணத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(எம்.எப்.எம்.பஸீர்)
வீரகேசரி



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக