ஞாயிறு, 21 ஜூன், 2015

குடி­போ­தையில் நொறுக்குத் தின்­பண்டம் எனக் கருதி கொங்­கி­றீட்டை உண்ட நபர்

நப­ரொ­ருவர் குடி­போ­தையில் வாளி­யொன்­றி­லி­ருந்த நச்சுத் தன்­மை­யுள்ள கொங்­கிறீட் கல­வையை உண்ட நிலை யில் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள் ­ளது.



ஜியாங்ஸு மாகா­ணத்­தி­லுள்ள நன்ஜிங் நகரைச் சேர்ந்த குறிப்­பிட்ட நபர், உள்ளூர் மது­பான நிலை­யத்தில் அள­வுக்­க­தி­க­மாக மது அருந்­திய பின் நிறை போதையில் வீடு திரும்­பிய வேளை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் வழியில் வாளி­யொன்­றி­லி­ருந்த கொங்­கிறீட் கல­வையை நொறு க்குத் தின்­பண்டம் எனக் கருதி அந்­நபர் உண்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட அந்­ந­ப­ருக்கு வயிற்­றி­லி­ருந்து கொங்­கி­றீட்டை அகற்ற அவ­சர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது.

அதிர்ஷ்­ட­வ­ச­மாக கொங்­கிறீட் அவ­ரது வயிற்­றினுள் இறு­கு­வ­தற்கு முன் அகற்­றப்­பட்­டதால் அவ­ரது உயிரைக் காப்­பாற்ற முடிந்­த­தாகக் கூறப்படுகிறது.

அவர் 250 கிராம் நிறையுடைய கொங் கிறீட்டை விழுங்கியுள்ளதாகப் பொலி ஸார் தெரிவிக்கின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல