ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்த ஆர்வம்

புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த அமெ­ரிக்கா ஏற் ­பாடு செய்து வரு­கின்­றது. இந்தத் தக­வலை "நியூயோர்க் இன்­டர்­நெ­ஷ­னல்”­என்ற நாளிதழ் குறிப்­பிட்­டுள்­ளது. பெரும்­பாலும் செப்­டெம்பர் முதல் வாரத்தில் பேச்­சு­வார்த்­தைக்­கான அழைப்­பிதழ் அனு ப்பி வைக்­கப்­ப­டலாம் எனக் ­கு­றிப்­பி­டப்­ப­டு­கின்­றது.


ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொடர் எதிர்­வரும் செப்­டெம்பர் 14இல் ஆரம்­ப­மா­க­வி­ருக்­கின்­றது. ஐ.நா. கூட்­டத்­திற்கு பெரும்­பா­லான புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் வர­வுள்­ளன.

எனவே ஜெனீவா ஐ.நா. பணி­ம­னையில் இப்­பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­புக்கள் அதிகம் எனக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இலங்கை அரசு, தமிழ்த் ­தே­சி யக் கூட்­ட­மைப்பு, புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்கள் ஆகி­யோ­ருடன் அமெ­ரி க்கா ஆலோ­சனை நடத்­தி­யதன் பின் அது ஒரு தீர்­மா­னத்தை எடுக்க இருக்­கின்­றது.

முன்­னைய மஹிந்த ராஜ­பக் ஷ அரசின் காலத்தில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்­பா­கவே இந்தச் சந்­திப்­புக்கள் இடம்­பெ­று­கின்­றன. இது தொடர்­பான ஐ.நா. விசா­ர­ணைக்­குழு அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கூட்­டத்தில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

அந்த அறிக்­கையின் விபரங்­களோ, பரிந்­து­ரை­களோ இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. வெளி­யி­டப்படும் அந்த அறிக்­கையின் விப­ரங்­களை கொண்டு அமெ­ரிக்கா புதிய தீர்­மானம் ஒன்­றைக்­கொண்டு வர­வுள்­ளது.

இது குறித்து இவ்­வாரம் இலங்கை வந்­தி­ருந்த அமெ­ரிக்­காவின் தென்­கி­ழக்கு, மத்­திய ஆசிய நாடு­களின் இரா­ஜாங்க துணை அமைச்சர் நிஸா ரேசாய் பிஸ்வால் சில விப­ரங்­களை வெளி­யிட்­டி­ருந்தார். அது குறித்து இலங்­கையின் நாளி­தழ்­களில் செய்­தி­களும் வெளி­யாகி இருந்­தன.

வலு­வான உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான கருத்தை அவர் அங்கு வெளி­யிட்­ டுள்ளார். விசா­ரணைக் குழுவின் பரிந்­துரைகளின் அடிப்­ப­டையில் இது அமையும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
ஆனால் அவ்­வா­றான உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை எவ்­வாறு சாத்­தி­யப்­படும் என்ற விப­ரங்­களை அமெ­ரிக்கா இன்­னமும் வெளி­யி­ட­வில்லை. உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை ஏற்­ப­டுத்த இலங்கை அரசு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே கடந்த மார்ச் மாதம் வெளி­யி­டப்­ப­ட­வி­ருந்த ஐ.நா. விசா­ர­ணைக்­குழு அறிக்கை செப்­டெம்பர் மாதம் வரை பின் போடப்­பட்­டது என்­பது அனை­வரும் அறிந்த விடயம். ஆனால் அதன் பின் உள்­ளக விசா­ரணை குறித்து இலங்கை அரசு எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.
போர்க்­குற்றம், மனித உரிமை மீறல் தொடர்­பான விசா­ர­ணைக்கு இலங்கை அரசு ஒரு­போதும் ஆத­ர­வ­ளிக்­காது என்றே அதன் அமைச்­சர்கள் அடிக்­கடி குறிப்­பிட்டு வந்­தனர். சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேர்­த­லின்­போது ஆவே­ச­மாக கூறி வந்தார்.

அது மாத்­தி­ர­மல்ல இது தொடர்­பாக இரா­ணு­வத்­தி­ன­ரையோ அல்­லது அதி­கா­ரி­க­ளையோ தாம் காட்­டிக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை என்றும் அவர் சூளு­ரைத்­துள்ளார். எனவே அமெ­ரிக்கா கூறும் வலு­வான உள்­ளக பொறி­முறை இங்கு ஏற்­ப­டுத்­து­வது சாத்­தி­யமா என்ற கேள்­வியும் எழு­கின்­றது. மஹிந்த ராஜபக் ஷ, கோத்தாபய, இராணுவ மேஜர், ஜெனரல்கள் போன்ற உயர் பதவி வகித்தவர்களுக்கு எதிராகவும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் களை அழைத்து விசாரணை செய்ய ரணில் அரசு முன்வருமா?

இவ்­வாறு அழைக்க முற்­பட்டால் உட­ன­டி­யாக நாட்டில் சிங்­கள மக்கள் தூண்டி விடப்­பட்டு கல­வரம் ஏற்­படும் சூழல் உரு­வாகி விடும். அதன் பலன் விசா­ர­ணைகள் முற்று முழு­தாக முடங்கிப் போய்­விடும் நிலையே ஏற்­படும் என புலம்­பெயர் தமிழ் ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

சிங்­கள மக்­களின் பாரிய எதிர்ப்­புக்கு மத்­தியில் தமி­ழ­ருக்கு நியாயம் கிடைக்கும் இந்த விசா­ர­ணையை நடத்த ரணில் அரசு ஒரு போதும் முயற்­சிக்­காது என்­பது விமர்­ச­கர்­களின் ஆணித்­த­ர­மான கருத்து. எனவே ஆறு ஆண்­டுகள் அல்ல மேலும் பல ஆண்­டுகள் சென்­றாலும் உள்­ளக விசா
ரணைப் பொறி­மு­றையில் எவ்­வித தீர்ப் பும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதே புலம்பெயர் தமிழ் அமைப்­புக்­களின் கணிப் ­பாகும்.

இதே­வேளை, தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையில் தமது நம்­பிக்­கை­யீ­னத்தை வெளி­யிட்­டுள்ளார். உள்­ளக விசா­ர­ணைகள் பல­வற்றை நான் அவ­தா­னித்­துள்ளேன். அவை முற்­றுப்­பெ­றாத விசா­ர­ணை­க­ளா­கவே இன்றும் காணப்­ப­டு­கின்­றன.
எனவே, உள்­ளக விசா­ர­ணையில் எவ்­வித பிர­யோ­ச­னமும் இல்லை. இருப்­பினும்அமெ­ரிக்கா இது தொடர்­பாக என்ன கருத்தை வெளி­யி­டப்­போ­கின்­றது என்­பதை அறிந்­ததின் பின்பே எமது செயற்­பாடு அமையும் என குறிப்­பிட்­டுள்ளார்.

ஆனால், வட­மா­காண சபைக்கு காவல்­துறை அதி­காரம் வழங்­கப்­பட்டால் இந்த நாட்டில் இருந்த ஆறு ஓடும் என உதய கம்­பன்­பில பகி­ரங்­க­மாக கூறி­ய­தற்கு இது­வரை அரசு எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

இந்த நிலையில், அரசு உள்­ளக விசா­ர­ ணையை நீதி­யாக நடத்தும் என்­பதில் நம்­பிக்கை கொள்­வது எங்ஙனம்? இருப்­பினும் இலங்கை அர­சுக்கு பூரண ஆத­ர­வ­ளிக்­கப்­படும் என அமெ­ரிக்கா தெரி­விப்­ப­தி­லி­ருந்து உள்­ளக விசா­ர­ணைக்கு அதன் ஆத­ரவு உண்டு என்­பது புரி­கின்­றது.

அதற்கு எதி­ராக இந்­திய அமெ­ரிக்க தூத­ர­கத்தின் முன் மாபெரும் ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடந்த ம.தி.மு.க. பொது செய­லாளர் வைகோ முடிவு செய்­துள்ளார்.
அமெ­ரிக்­காவின் முடிவை அவர் பகிரங் ­க­மாகக் கண்­டித்­துள்ளார். புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­களும் இது குறித்து தற்­போது ஆலோ­சித்து வரு­வ­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. ஐரோப்­பிய நாடு­க­ளி­லுள்ள அமெ­ரிக்க தூத­ரா­ல­யங்­களின் முன் மாபெரும் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வதும் அவர்­களின் திட்­ட­மா­கலாம்.

உள்­ளக விசா­ர­ணையில் நம்­பிக்கை இல்லை. சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­ற த்தில் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும். இவ்­வாறு ஐ.நா.வைக்­கோரும் மனு­வொன் றில் இது­வரை பதி­னைந்து இலட்­சத்­திற்கு அதி­க­மானோர் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.

அம்மனு ஐ.நா.விடம் செப்­டெம்பர் முத லாம் திகதி கைய­ளிக்­கப்­ப­டலாம். இது ஒரு மிக வலு­வான கோரிக்கை என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. இந்த கோரிக்­கையை உதா­சீனம் செய்து அமெ­ரிக்கா உள்­ளக விசா­ர­ணைக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மே­யானால் புலம்­பெயர் தமிழர் தீவி­ர­மான ஜன­நா­யகப் போராட்­டங்­களில் ஈடு­பட திட்­ட­மிட்­டுள்­ளனர்.

செப்­டெம்பர் 21ஆம் திகதி மாபெரும் ஆர்ப்­பாட்டப் பேரணி ஜெனீவா ஐ.நா. முன்­றலில் நடை­பெற ஏற்­பா­டா­கி­யுள்­ளது. ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்து அந்த ஆர்ப்­பாட்டம் நடை­பெ­று­வது குறித்து நாம் ஏற்­க­னவே குறிப்­பிட்­டி­ருந்தோம்.

ஆனால் அதில் முதல் கோரிக்­கை­யாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்ற விசா­ரணைதேவை எனக்­ கேட்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரி க்கா உள்­ளக விசா­ர­ணையில் தொடர்ந்தும் தீவிரம் காட்­டு­மே­யானால் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான தொடர் போராட்­டங்­களில் ஈடு­ப­டவும் புலம்­பெயர் அமைப்­புக்கள் ஆர்வம் காட்டி வரு­கின்­றன.

கடந்த 20ஆம் திக­தியே ஐ.நா. அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும் என ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் ஜெனீவா ஐ.நா. பணி­யகம் அதனை அனுப்­பு­வதில் தொடர்ந்தும் தாமதம் காட்டி வரு­கின்­றது. அதற்­கான உத்­தி­யோ­க­பூர்­வ­மான காரணம் இது­வரை குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. ஆனால் கூட்­டத்­தொடர் ஆரம்­பிப்­ப­தற்கு 48 மணி நேரத்­திற்கு முன்­பாக 47 நாடு­க­ளி­டமும் நேரில் அந்தஅறிக்கை கைய­ளிக்­கப்­படும் என ஜெனீவா ஐ.நா. பணி­மனை அறி­வித்­துள்­ளது.

அதா­வது செப். 11ஆம் திகதி வெள்­ளி ­யன்று பிற்­பகல் அறிக்கை வெளி­யி­டப்­ப டும். ஆனால் அடுத்த இரண்டு நாட்­களும் சனி, ஞாயிறு விடு­முறை என்­பதால் அரசு செய­ல­கங்கள் இந்த அறிக்கை குறித்து ஆரா­யாமல் விடலாம்.
ஆனால் இலங்கை அரசு இவ்­வி­ட­யத் தில் விடு­முறை தின­மான போதும் கூடுதல் அக்­கறை செலுத்தும் எனக்­கு­றிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இந்த விட­யத்தை முற்­றிலும் கிட ப்பில் போட்டு விடவே இலங்கை அரசு விரும்­பு­வ­தா­கவும் சில செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அத­னால்தான் உள்­ளகப் பொறி­முறை விசா­ர­ணைக்கு மாற்­றப்­பட வேண்டும் என அமெ­ரிக்கா முயற்­சிப்­ப­தா­கவும் இணை­யத்­தள செய்தி ஒன்று குறிப்­பி­டு­கின்­றது. அமெ­ரிக்­காவின் முயற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கப்­ப­டு­வ­தற்­கா­கவே ஐ.நா. வின் அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வது தாம­திக்­கின்­றது என் றும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­நே­ரத்தில் செனல் 04 தொலைக்­காட்­சியின் நிகழ்ச்சித் தொகுப்­பாளர் கெலம் மக்ரே அடுத்த வாரம் ஸ்பெய்ன் மொழி பேசும் நாடு­களை நோக்கி பய­ண­ மா­கின்றார். அந்­நா­டு­க­ளி­லுள்ள ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்து இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை போர்க்­குற்­றங் கள் மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­த­வுள்ளார்.

அது தொடர்­பாக தம்மால் வெளி­யி­டப்­பட்ட காணொ­ளி­களின் பிர­தி­க­ளையும் அவர் வழங்­க­வுள்ளார். ஸ்பெய்ன் மொழிபேசும் ஊட­க­வி­ய­லா­ளர்களின் ஒத்துழை ப்பைப் பெறு­வதே அவரின் விஜயத்தின் நோக்­க­மாகும். அதன் மூலம் அந்நாடுக ளின் கொள்கை வகுப்பாளர்களின் ஆதரவை பெறமுடியும் என்றும் அவர் குறிப்பிடுகின் றார்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல