ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

யாருக்கு செயற்கை கருத்தரிப்பு (IVF)

அற்­பு­தங்கள் நடை­பெ­று­வ­தற்­கான சான்றே குழந்­தைகள். மகிழ்ச்­சியின் குவி­ய­லான இந்த அற்­பு­தத்தை அடை­யவே எல்லா தம்­ப­தி­யரும் விரும்­பு­கின்­றனர். ஆனால் சில வேளை­களில் தம்­ப­தி­யி­னரின் இந்தக் கனவு நிறை­வே­று­வதில் சிரமம் ஏற்­ப­டு­கி­றது.



மலட்­டு­த்தன்மை தொடர்­பான குறை­பா­டு­க­ளுக்கு சிகிச்சை அளிப்­பதில் வல்­லமை பெற்­றவர் மருத்­துவர் சாமுண்டி சங்­கரி. கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக ஆண்கள் மற்றும் பெண்கள் இரு­வ­ருக்­கு­மான மலட்டுத்தன்மை பிரச்­ச­ினை­களில் 20–-30 சத­வி­கிதம் அதி­க­ரித்­துள்­ளது.

ஒரு காலத்தில் மலட்டுத்தன்மை என்­பது பெண்­க­ளுக்கு மட்­டுமே வரை­ய­றுக்­க­பட்­டது. ஆனால் இப்­போது 40 சத­வி­கிதம் ஆண்­களும் மலட்டுத்தன்­மையால் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் சில தம்­ப­தி­யி­னரால் இயற்­கை­யான முறையில் கருத்­த­ரிக்க முடி­ய­வில்லை.

45 சத­வி­கிதம் தம்­ப­தி­யி­ன­ருக்கு மலட்­டுத்­தன்­மையால் ஏற்­படும் பிரச்­ச­ினை­களை செயற்கை கருத்­த­ரிப்பு முறை (IVF) மூலம் குணப்­ப­டுத்த முடியும் என்­கிறார் மருத்­து வர் சாமுண்டி சங்­கரி.

பெண்­களின் கருத்­த­ரிப்­பிற்கு மிக முக்கிய பங்கு வகிப்­பது பெண்ணின் (FALLOPIAN TUPES) கருக்­குழாய் ஆகும்.

குழந்தை பாக்­கியமில்­லாத பெண்களில் 35% பேர் (FALLOPIAN TUPES ABN ORMALITIES) கருக்­குழாய் அடைப்­பினால் அவ­திப்­ப­டு­கி­றார்கள். பெண்ணின் கரு முட்டையும் ஆணின் விந்­த­ணுவும் சந்திக் கும் இக்குழாயில் காணப்­படும் சில அடைப்­பு­களால் ஒரு பெண் கருத்­த­ரிக்க முடி­யாமல் அவ­திப்­ப­டு­கிறாள்.

IVF முறை, கருக்­குழாய் அடைப்பு, ஆணின் மலட்­டுத்­தன்மை, கருப்பைச் சுவரின் தடிப்­பு­ப­டலம், சினை முட்டை குறை­பாடு, சினைப்­பையின் செயற்றிறன் குறைவு, 30 வய­திற்கு மேற்­பட்டு கரு­வு ­றுதல், தொடர் கருச்­சி­தைவு மற்றும் கார ணம் அறிய முடி­யாத கரு­வுற முடி­யாமை போன்­ற­வை­க­ளுக்கு தேவைப்­ப­டு­கின்­றது.

கர்ப்­பத்­திற்கு முன்­பாக மர­பணு பரி­சோ­தனை செய்து பார்க்க விரும்பும் பெற்­றோ­ருக்கும், கரு­முட்டை மற்றும் கருவை உறையச் செய்து பாது­காத்து வைத்து பின்னர் குழந்தை பெற்­றுக்­கொள்ள விரும்­பு­ப­வர்­க­ளுக்கும் IVF முறை பய­னுள்­ள­தாகும். ஒரு முழு­மை­யான IVF சுழற்சி என்­பது 3-4 வார கால சிகிச்­சை ­மு­றை­யாகும்.

LAPROSCOPY மற்றும் HYSTEROSAL PINGOGRAM மூலம் நீங்கள் FALLOPIAN TUPES ABNORMALITIES- ஆல் பாதிக்­கப்­பட்­ட­வரா என்­பதை கண்­ட­றி­ய­மு­டியும். LAPROSCOPY மூலம் மருத்­துவர் உங்­க­ளு­டைய கருக்­கு­ழாயில் எந்த இடத்தில் அடைப்­புள்­ளது என்­பதை கண்­ட­றிய முடி யும்.

21–30 வயது வரை பெண்கள் கருக்­குழாய் மறு இணைப்பு (TUBOPLASTY) சிகிச்சை மூலம் இயற்­கை­யாக கருத்­த­ரிக் கும் வாய்ப்பு அதிகம். 30 வய­திற்கு மேல் உள்ள அல்­லது இச்­சி­கிச்சை மூலம் இயற்­கை­யாகக் கருத்­த­ரிக்க இய­லாத பெண்கள் செயற்கை கருத்­த­ரிப்­பு­முறை (IVF) மூலம் எளி­தாகக் கருத்­த­ரிக்­கலாம்.

கருத்­தடை செய்த பெண்கள், விபத்­தி­னாலும் வேறு ஏதேனும் நோய்­களின் தாக்­கத்­தி­னாலும் கருக்­குழாய் இழப்பு நேர்ந்­த­வர்­க­ளுக்கும், கருக்­குழாய் மறு இணைப்பு சிகிச்சை முறை­யா­னது மிகவும் பய­னுள்­ள­தாக இருக்கும்.

இப்­போது சுனாமி போன்ற இயற்கை சீற்­றங்­களால் குழந்­தையை இழந்­த­வர்­க­ளுக்கும் மறு­மணம் செய்த பெண்­க­ளுக்கும் கருக்­குழாய் மறு இணைப்பு சிகிச்சை மிகவும் பய­னுள்­ள­தாகும். இச்­சி­கிச்­சையின் மூலம் எங்கள் மருத்­து­வ­ம­னையில் பலர் பய­ன­டைந்­து­ உள்­ளனர்.

இட­மகல் கருப்பை அகப்­ப­டலம் (ENTO METRIOSIS) 15 விழுக்­கா­டுகள் வரை கரு­வு­றாமல் இருக்கும் பெண்களுக்கு கார­ண ­மாக உள்­ளது. இப்­படி ஏற்­படும் இட­மகல் பட­லங்கள் கருப்­பையின் வெளி­யிலோ, கருக்­குழாய் அல்­லது கரு­வ­னு­வ­கத்­திலோ காணப்­படும். இதில் பெரும்­பான்­மையா ­னவை கரு­வ­னு­வ­கத்தில் அமை­யப்­பெற்று இட­மகல் பட­ல­கட்­டிகள் உரு­வாகி (CHOC LATE CYST OF OVARY) ஒவ்வொரு மாத­வி­லக்கின் போதும் கடு­மை­யான வயிற்று வலி­யுடன் இப்­பெண்கள் அவ­தி ­யுறக்­கூடும். மேலும், இந்தப் பட­லக்­கட்­டிகள் கரு­வு­றா­மைக்கு முக்­கிய கார­ணமாக அமைந்து விடு­கின்­றது. பொது­வாக 30 வய­திற்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு இந்தப் படல கட்­டிகள் காணப்­படும்.

இட­மகல் கருப்பை அக­ப்ப­ட­லத்தின் அறி­கு­றிகள்:
· கரு­வுறாமை
· வலி­மிக்க, சில நேரங்­க­ளில்­ செ­ய­லி­ழக்­க­செய்­யும்­ த­சைப்­பி­டிப்பு ஏற்­ப­டலாம்.
· பாலு­றவின் போது வலி
· சிறிய அல்­லது பெரிய இரத்­தக்­கட்­டி­க­ளுடன் கூடிய, கடி­ன­மான அல்­ல­து­கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நீண்­ட­மா­த­விடாய்.
· முதுகு மற்­றும்­ இ­டுப்­பு­வலி
· தசை­பி­டிப்­புடன் கூடிய சோர்வு
· மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வலி

இட­மகல் கருப்பை அகப்­ப­ட­ல­திற்கு குண­ம­ளிக்கும் சிகிச்சை:

நோயின் தன்மை அறிந்து செயற்­பட வேண்டும். ஹோர் மோன் மருத்­துவம், பிற மருந்­துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம்­ இதை குணப்­ப­டுத்­தலாம்.

முக்­கி­ய­மாக, LAPROSCOPY அறுவை சிகிச்சை மூலம் ­கு­ணப்­ப­டுத்­தலாம் (CHOC OLATE CYST) சொக்லேட் நீர்­கட்­டியை நாம் லாப்­ரோக்­டோமி மூலம் குணப்­ப­டுத்­தலாம். அதன் பிறகு IUI அல்­லது IVF மூலம் குழந்­தைப்­பேறு உண்­டாக்க முடியும்.

ஆண்­க­ளுக்கு ஏற்­படும் பொது­வான பிரச்­சி­னைகள்: குறை­வான விந்­த­ணுக்க ளின் எண்­ணிக்கை, அமைப்­பியல், குறை­பா­டு­க­ளு­டைய விந்­து­ணுக்கள் மற்றும் விந்து இயக்கம் ஆகும்.

இந்தக் குறை­பா­டு­க­ளு­டைய ஆண்கள் வாழ்க்கை முறை மற்­றும்­ உ­ணவில் மாற்­ற ங்கள், நல்ல பழங்கள் மற்றும் காய்­க­றிகள், மித­மான உடற்­ப­யிற்­சிகள் மற்றும் யோகா ஆகி­ய­வற்றை பின்­பற்­று­வதின் மூலம் விந்து டி.என்.ஏ. (DNA)- வை மேம்­ப­டுத்­த வும், குழந்­தை­யின்­மைக்கு முக்­கிய கார­ண­ மான விந்துக் குறை­பா­டு­களை தவிர்க்க உத­வு­கி­றது. மேலும் உள­வியல் மன அழுத்தம் விந்து தரத்­திற்கு ஒரு சரிவை ஏற்­ப­டுத்தும்.

சிருஷ்டி பற்றி தாய்­மைப்­பேறு எவ்­வ­ளவு முக்­கி­ய­மா­னது என்­பதை நாங்கள் உண­ரு­கிறோம். என­வேதான், 1993 முதல் பல தம்­ப­தியர் களின் மகப்­பேற்று சிக்­கல்­களை தீர்த்து அவர்களின் குழந்தைப் பேற்றுக் கனவை நன­வாக்­க­ உ­த­வி­யி­ருக்­கிறோம்.

மகப்­பேறு சிகிச்­சையில் பல நவீன சேவைகள் மூலம் உங்­க­ளுக்கு ஓவ்­வொரு நிலை­யிலும் துணை புரி­வதை எங்கள் நோக்­க­மாகக் கொண்­டுள்ளோம். சிருஷ்டி யின் அமை­தி­யான சூழலும், குறிப்­ப­றிந்து செயற்­படும் மருத்­து­வர்­களும் உங்கள் அனு­ப­வத்தை இனி­மை­யா­ன­தாக்­கு­கின்­றனர்.

ARTயில் 30 வருட ஆழ்ந்த அனு­பவத்­ துடன் முன்­னோ­டி­யாகத் திகழ்­கிறார் டாக்டர் சாமுண்­டி­சங்­கரி. சிருஷ்டி அவ­ர­வரின் தனித் தன்­மைக்கு ஏற்ப சிகிச்சை பரிந்­து­ரைக்­கப்­ப­டு­வதால் IVF முறையில் 55 சத­வி­கி­தத்­திற்கும் மேல் கரு­வு­ரு­வதில் வெற்­றி­ கி­டைக்­கி­றது.

IVF முறையை மேலும் சிறப்­பாக்க பல புது­மை­யான சிகிச்சை முறை­க­ளையும் புகுத்தி டாக்டர் சங்­கரியின் மேற்­பார்­வை யில் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்­பையும் பன்­ம­டங்கு அதி­கப்­ப­டுத்­தி­வ­ரு­கி றோம்.

பல நவீன வச­தி­க­ளு­டனும், அர்ப்­ப­ணிப் பும் அனு­ப­வமும் கொண்ட சிறந்த மருத்­துவ குழு­வி­ன­ரையும் கொண்டு கடந்த 20 வரு­டங்­க­ளாக மகப்­பேறு சிகிச்­சையில் சிறந்து விளங்­கு­கி­றது என்றால் இதற் கான காரணம் IVF சிகிச்­சையில் முன்னோ ­டி­யாக விளங்கும் டாக்டர் சாமுண்டி சங்­க ­ரியே. சிருஷ்­டியின் நிறு­வனர் மற்றும் மருத்­துவ இயக்­குநர் என்­ப­து­ மட்­டு­மன்றி அவர், குழந்­தை­யின்மை, புற்­றுநோய், எய்ட்ஸ், பெண் சிசுக்கொலை மற்றும் கர்ப்பிணி, இளம் தாய்மார்களின் சத்துக் குறைபாடு போன்றவைகளின் காரணங் களை ஆராயும் SRUSHTI MEDICAL RESEARCH FOUNDATION என்ற அரசு சாரநிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக உறுப்பினருமாவார்.

சிருஷ்டி மகப்பேறு மையத்தின் மற்றும் மரபியல் துறையின் மருத்துவ இயக்குந ராக இருக்கும் இவர், குழந்தைப்பேறு, மரபி யல் மற்றும் ஆடவர் நோய்களுக்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு கீழ்க்கண்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

"சிறந்த புகழ்பெற்ற மருத்துவர் விருது அமெரிக்காவில் இருந்து -ஆர்லாண்டோ" வும் "வாழ்நாள் சாதனையாளர் விருது" தமிழ்நாட்டிலிருந்து -கவர்னரும் வழங்கினார் கள்.

தொடர்புகளுக்கு:
சிருஷ்டி மகப்பேற்று மையம்
இந்தியா: 00 91 9840 669669
இலங்கை: 0772646800
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல