ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மறைந்தும் மறையாத துணிகரமிக்க மாமனிதர் குமார் பொன்னம்பலம்

மாம­னிதர் குமார் பொன்­னம்­பலம் தமி­ழிலும் ஆங்­கி­லத்­திலும் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் பல நினைவுக் கட்­டு­ரைகள் வெளி­வந்­தன. அவற்றில் ஒரு சில­வற்றை இங்கு வெளிப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.



டெஸ்­மன்ட்­பெர்­னான்டோ சிரேஷ்ட மனி­த­ உ­ரிமை சட்­டத்­த­ரணி - 2000.8.12

இன்று உங்­க­ளுடன் கூடி­யி­ருக்க எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் பெரும்­பே­றாகும். குமார் பொன்­னம்­பலம் எமது சந்­த­தியைச் சேர்ந்த இலங்­கை­யர்­களில் ஒரு மாம­னிதர். ஒரு தமி­ழ­ரல்­லா­த­வ­ராக நான் பேசு­கின்­ற­போது, எனது கருத்­துப்­படி அவர் அர்ப்­ப­ணிப்பும் துணிவும் ஒளி­வும­றை­வின்றிப் பேசும் பாங்கும் கொண்ட ஆகச் சிறந்த தமிழ் அர­சியல் தலை­வ­ராகத் திகழ்ந்­தவர்.

குமார் லண்டன் கிங்ஸ் கல்­லூ­ரியில் கல்­வி­கற்றுப் பின்னர் கேம்­பிரிட்ஜ் பிட்ஸ்­வில்­லியம் கல்­லூ­ரியில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டார். அதனைத் தொடர்ந்து லண்டன் லிங்கன்ஸ் இன் இங்­கி­லாந்து வழக்­க­றிஞர் குழுவில் அவரை இணைத்துக் கொண்­டது. இலங்­கைக்குத் திரும்பி வந்­ததன் பேரில் அவர் உயர்­நீ­தி­மன்ற வழக்­கு­ரை­ஞ­ராக அங்­கீ­க­ரிக்­கப்­பட்டார்.

அன்­றைய காலத்தின் முதன்­மை­யான தமிழ்த் தலை­வரும் இராணி வழக்­க­றி­ஞ­ரு­மான காலஞ்­சென்ற ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லத்தின் ஒரே மகன் தான் குமார். ஜீ.ஜீ.பொன்­னம்­பலம். இலங்­கையின் மிகச் சிறந்த பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ராகத் திகழ்ந்­த­துடன், சுதந்­தி­ரத்­துக்கு முன்னர் அரச சபை உறுப்­பி­ன­ரா­கவும் பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் இருந்­தவர். 1965இல் டட்லி சேன­நா­யக்­கவின் அர­சாங்கம் ஆட்­சி­யி­லி­ருந்­த­போது ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்­கையின் பேராளர் குழு­வுக்கு அவர் தலைமை தாங்கிச் சென்றார். குமாரின் தந்­தையார் அவரின் காலத்தில் தலை­சி­றந்த கிரி­மினர் வழக்­க­றி­ஞ­ரா­கவும் புகழ்­பெற்­றி­ருந்தார்.

1970களில் குமாரை நன்­க­றியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தது. நாம் இரு­வரும் குடி­யியல் உரி­மைகள் இயக்­கத்தின் தாபக உறுப்­பி­னர்­க­ளா­யி­ருந்தோம். குமார் மனித உரி­மை­க­ளின்பால் ஆழ­மான ஈடு­பாட்டைக் கொண்­டி­ருந்தார். குடி­யியல் உரி­மைகள் இயக்கக் கூட்­டங்­களில் அவர் கிர­மம்­த­வ­றாமல் பங்­கு­பற்­றி­ய­துடன், சீரிய சிந்­த­னை­யுடன் பய­னுள்ள முறையில் தமது பங்­க­ளிப்­பு­க­ளையும் செய்தார். குடி­யியல் உரி­மைகள் இயக்­கத்தின் அந்த ஆரம்ப நாட்­களில் மனித உரிமை மீறல்­க­ளுக்குப் பலி­யா­ன­வர்கள் சிங்­கள இளை­ஞர்­க­ளா­யி­ருந்­தனர். குமார் அச்­சிங்­கள இளை­ஞர்­க­ளுக்­கெ­தி­ரான வழக்­கு­களில் கட்­டணம் எது­வு­மின்றி அவர்­க­ளுக்­காக வாதா­டினார். பிர­பல்யம் பெற்ற தர்­ம­சே­கர சம்­ப­வத்தின் கார­ண­மாக அமெ­ரிக்கத் தூதர்­க­ளுக்கு வெளியே நடத்­தப்­பட்ட ரகத்து ஆர்ப்­பாட்­ட­மொன்றில் கொல்­லப்­பட்ட ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் தொடர்­பான ஒரு சிக்­க­லான வழக்கில் அவ­ருக்குக் கிடைத்த வெற்றி அவரின் ஆரம்­ப­கால வெற்­றி­களில் ஒன்­றாகும். குமார் அச்­சிக்­க­லான வழக்கைத் தமக்­கே­யு­ரிய வழ­மை­யான ஆற்­ற­லு­டனும் பொறு­தி­யு­டனும் சிங்­க­ளத்தில் நடத்தி வெற்­றி­கண்டார். குற்­ற­வியல் நீதி ஆணைக்­குழு சட்ட ஆட்­சி­யையும் நேர்­மை­யான வழக்கு விசா­ர­ணைக்­கான உரி­மை­யையும் மீறு­கின்­ற­தென்று அவர் அதனைக் கடு­மை­யாக எதிர்த்தார். அது சம்­பந்­த­மான இரு நீதி முறை­மை­களைத் தோற்­று­வித்­தி­ருப்­ப­தனால் மோச­மான ஒரு முன்­மா­தி­ரி­யென்றும், அதுவே பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்­டத்தில் பின்­பற்­றப்­படக் கூடிய ஒரு முன்­மா­தி­ரி­யா­கி­வி­டு­மென்றும் அவர் உணர்ந்தார். அதன்­படி செயற்­பட்டார்.

குமார் பொன்­னம்­ப­லத்தின் குரல் அல்­லது மௌனித்­தது குமார் பொன்­னம்­ப­லத்தின் குரல்

- எஸ்.சிவ­சே­கரம் பேரா­சி­ரியர் - 2000ஆம் ஆண்டு (இட­து­சாரி)

குமார் பொன்­னம்­ப­லத்தின் ஈமச் சடங்­கின்­போது ஆற்­றப்­பட்ட இரங்­க­லு­ரைகள் குறித்து மனச் சோர்­வ­ளிக்கும் விடயம் யாதெனில், கொலையைக் கொலைதான் என்று அடித்­துக்­கூறி அதைக் கண்­டனம் செய்ய அங்கு உரை­யாற்­றி­ய­வர்கள் பலரும் காட்­டிய தயக்­க­மே­யாகும். தமிழ் மக்­களின் பல்­வேறு பிரி­வினர் சார்­பா­கவும் குரல் தர­வல்­ல­வர்­களின் தலை­மைத்­து­வத்தின் தாழ்­நிலை தரத்தின் ஒரு பிர­தி­ப­லிப்­பா­கவே அதை நான் பார்த்தேன். எதிர்­பார்க்­கப்­பட்ட வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தான் ஒரு சில மறைவை தங்­க­ளுக்கே ஏற்­பட்ட ஒரு தனிப்­பட்ட இழப்­பாக ஏன் நோக்­கி­னார்கள். மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவ­ரது மரணச் செய்தி கேட்­ட­வுடன் அவர்கள் துணுக்­குற்­ற­விதம் இயல்­பா­ன­தா­கவும், முன்­னெப்­போ­து­மில்­லாத அள­வுக்குப் பிர­மாண்­ட­மா­ன­தா­கவும் இருந்­தது.

அவ­ரது அர­சியல் பார்­வை­களில் எனக்குப் பங்­கில்லை என்­ற­போ­திலும், சில விட­யங்கள் குறித்த அவ­ரது அணு­கு­முறை பெரிதும் அக­வெண்ணம் சார்ந்­த­தா­கவே இருந்­தது. ஆனால், சில விட­யங்கள் குறித்துத் தமக்கு எல்லாம் தெரியும் என்று கூறிக் கொள்வோர் அமை­தி­யாக இருப்­ப­தையே தமது சிறந்த தெரி­வாகக் கொண்­டி­ருந்த வேளை­களில் கூட விட­யத்தின் முக்­கி­யத்­துவம் கருதி அவர் பேசினார். அவர் இறந்­த­தி­லி­ருந்து அவரைப் பற்றிப் பல்­வேறு விட­யங்கள் பல்­வே­று­பட்­ட­வர்­க­ளாலும் கூறப்­பட்­டுள்ள குறு­கிய எண்ணம் கொண்ட நாட்டுப் பற்­றா­ளர்கள் மற்றும் மனித உரி­மை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­வர்கள் எனத் தம்மை போலி­யாகக் காட்டிக் கொள்ளும் ஒரு­சிலர் என்­போ­ரி­ட­மி­ருந்­து­வரும் தீய எண்­ணங்கள் கொண்ட சில கூற்­றுக்­க­ளை­யிட்டு நான் ஆச்­ச­ரி­யப்­ப­ட­வில்லை.

அவ­ரது மர­ணத்­தை­யிட்டு இலங்­கைவாழ் தமிழ் மக்கள் புலம்­பெயர் தமிழ்ச் சமூ­கமும் தமது ஆத்­தி­ரத்­தையும் ஆழ்ந்த கவ­லை­யையும் எது­வித சிறு தூண்­டு­த­லு­மின்றி வெளிப்­ப­டுத்தி வரு­கையில், இவ்­வா­றான சக்­தி­க­ளி­ட­மி­ருந்து வேறெந்தப் பதி­வுச்­செ­யற்­பாட்­டையும் எதிர்­பார்ப்­பது தவறு. குமார் மீதான தாக்­கு­தல்கள் போன்று காணப்­பட்ட அவ­ருக்கு வழங்­கப்பட்ட புக­ழு­ரைகள் கடந்­த­சில வரு­டங்­களின் போது அவர் ஆற்­றிய அர­சியல் வகி­பா­கத்­திற்­கா­னது.

ஜன­நா­யகச் செயன்­முறை மற்றும் பேச்சுச் சுதந்­திரம் என்­ப­வற்றின் மீது அவர் கொண்­டி­ருந்த நம்­பிக்­கை­யா­னது, இலங்கை வாழ் தமிழ் சமூ­கத்தின் நல­னோம்­புகை மட்டில் அவ­ருக்­கி­ருந்த அர்ப்­ப­ணிப்புச் சிந்தை போன்று முக்­கி­யத்­துவம் கொண்­ட­தாக விளங்­கி­யது. பிரே­ம­தாஸ ஆட்­சியின் கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் ஆற்­றிய வகி­பா­கத்தை நினை­வூட்­டு­வது சில­ருக்குப் பிடிக்­காது. அவ­ரது கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் காட்­டிய மன வலி­மை­யா­னது அதி­லி­ருந்து பிரிக்­கப்­பட முடி­யா­தது. அத்­துடன், சில பகுப்­பாய்­வா­ளர்கள் காட்ட முனை­வது போலல்­லாது, குமாரின் அர­சியல் நிலைப்­பா­டா­னது ஏறு­மா­றா­ன­தா­கவோ சந்­தர்ப்­ப­வாதப் போக்­கு­டை­ய­தா­கவோ இருக்­க­வில்லை. அதன்­வாதப் பொருத்­தமும் மாறா­நி­லையும் 1970களின் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து இடம்­பெற்ற அர­சியல் வளர்ச்­சி­களின் சூழ­மைவில் புரிந்து கொள்­ளப்­பட வேண்­டி­ய­ன­வாகும்.

எண்ணிப் பார்க்­க­மு­டி­யாத வழ­மைக்கு அப்­பாற்­பட்ட துணிவு கொண்ட மாம­னிதர் சதி செய்து கொலை செய்­யப்­பட்­டவர்.

தமிழ்த்­தே­சிய இனம் தனது வாழ்வோ சாவோ எனப் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர் நேர்மையையும் வெளிப்படையாகப் பேசுவதையுமே தனக்குப் பொருத்தமான ஆயுதமாகக் கொண்டார். அந்தவகையில் அவற்றை எதிர்பார்க்க முடியாத வீரியத்துடன் பயன்படுத்தியவர் என்பது பலரும் அறிந்ததே. யாழ். மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய திலகமாக விளங்கியவர் ஜீ.ஜீ.என அன்பாக அழைக்கப்பட்ட அமரர் பொன்னம்பலம் ஆவார். அவருடைய மகனாகிய குமார் பொன்னம்பலம் தனது ஆயுதமாக தந்தையின் செல்வாக்கையும் தந்தையின் சட்டப் புத்திக் கூர்மையையும் அறிவையும் பெற்று தந்தையின் பெயரினால் அவருக்கு ஏற்பட்ட துணிவினால் தன் உயிரைப் பொருட்படுத்தாது தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக தன்னால் செய்யக்கூடியளவை செய்து மறைந்துவிட்டார். அவர் நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.

 வீரகேசரி

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல