ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? : உங்களுக்குத் தெரியுமா?

ஒரு மதிப்புள்ள பொருளை நாம் விஷயம் தெரியாமல் வீணாக்கிவிட்டால் உடனே நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மை பார்த்து “கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என கூறுவதைக் கேட்டிருப்போம்.


அவர்கள் சொல்லும் விதம், எப்படா நம்மை கழுதை என்று சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்ததைப் போல இருக்கும். அப்படி ஒரு ஜோராக சொல்லிவிடுவார்கள்.

அது சரி. உண்மையிலேயே கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா? என யோசிக்கும் அறிவிஜீவிகளும் நம்மிடையே இருப்பார்கள். ஆனால் இந்த பழமொழியின் பின்னணியே வேறு.

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் பயன்படுத்தினார்கள்.அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும். அந்தபுல்லு கற்பூரபுல்லு, கோரைப்புல்லு என இரு வகைப்படும்.

கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும்.கற்பூர பாயின் விலை அதிகம். பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.

கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். 

இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை. "கழு என்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க,கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.

அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.

அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்றானது.

இனியும் உங்களை யாரேனும் “கழுதை” என்று சொல்ல அனுமதிப்பீர்களா?

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல