ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

ஏழைகளுக்கு உணவு இல்லை- மன்னிப்பு கேட்டது மெக்டொனால்ட்

பாரிஸ் ஆகஸ்ட் 13- உலகம் முழுவதும் உள்ள பிரபல திரித உணவகத்தின் நிறுவனமான மெக்டொனால்டு (mc donaldald's) வீடற்ற ஏழைகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டதற்கு மன்னிப்பு கூறியுள்ளது.


பிரான்சில் இயங்கி வரும் ஒரு மெக்டொனால்டு நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், உணவகத்திற்கு வரும் ஏழைகளுக்கு உண்வு கொடுக்கக் கூடாது.பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவு கொடுப்பதற்காக உணவகம் வைத்திருக்கவில்லை என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக அந்த கடையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தனக்கு கடை நிர்வாகம் கொடுக்கும் உணவை, கடைக்கு அருகில் இருந்த வீடற்றவர்களுக்கு கொடுத்ததை தொடர்ந்து தான் அந்த அறிக்கை அவருக்கு அனுப்பப்பட்டது.

அந்த அறிக்கை டுவிட்டரில் வெளியிடப்பட்டு கடும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில் தங்களுடைய ஊழியர்களுக்கு அனுப்பிய அறிக்கை தனிப்பட்ட வகையில் யாரையாவது பாதித்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல