திங்கள், 30 நவம்பர், 2015
தமிழக அகதி முகாம்: தகிப்பில் உழலும் வாழ்வு
இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்தவர்களின் வரத்து நான்கு கட்டங்களாகத் தீவிரத்தோடு நிகழ்ந்துள்ளது. உதிரி உதிரியாக வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்நான்கு கட்டப் புலப்பெயர்வுகளும் பாரிய பிரச்சினைகளுக்குட்பட்டவை. இலங்கையில் இனப்பிரச்சினை தீவிரத்தை அடையும் போதெல்லாம் அகதிகளின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகளாகவும் அடுத்த தேர்வு இந்தியாவாகவுமே இருந்துவந்துள்ளது. இத்தேர்வு பொருளாதார அடிப்படையிலானதென்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவில் தஞ்சமடையும் அகதிகள் தமிழ்நாட்டிலிருக்கும்
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
ஞாயிறு, 29 நவம்பர், 2015
வெள்ளி, 27 நவம்பர், 2015
ஈழத் தமிழ் அரசியல் கைதிகளே! புலம் பெயர்ந்த மக்களை மன்னியுங்கள்
கவனிப்பார் யாருமின்றி இலங்கை அரசின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளே! நாளாந்த வாழ்விற்காகப் புலத்தில் இன்றும் போராடும் முன்பு ஆயுதம் ஏந்திய போராளிகளே, உங்களுக்குப் பொது மன்னிப்புக் கிடைக்கிறதோ இல்லையோ உங்களிடத்தில் பொதுமன்னிப்பொன்றை இக்கடித மூலம் கோர விரும்புகிறேன்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 26 நவம்பர், 2015
ரொரான்ரோ (Toronto) கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாக உள்ளது
அரசியல்வாதிகளால் பிரபலமான ரொரான்ரோ கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாகவும் உள்ளது: கனடிய எல்லை சேவை முகவர்(சி.பி.எஸ்.ஏ) நிறுவனத்தின் இரகசிய அறிக்கை
இந்துக் கடவுள்களின் அழகான நுண்ணிய ஓவியங்களை தன்னுள்ளோ கொண்டுள்ள கனடா கந்தசாமி கோவில் அங்கு பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு புனிதமான சூழலைத் தருகிறது, அதேபோல அங்கு வந்து செல்லும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் எடுக்கப் பட்டுள்ளன. மாலை அணிவிக்கப்பட்ட ஒன்ராரியோ பிரதமர் கத்தலின் வைனை கடந்தவருடம் கோவிலில் வைத்து புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது, பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி பெடரல் தேர்தல் பிரச்சாரத்தின்போது உள்ளுர் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் ரோசான் நல்லரட்னத்துடன் அங்கு வந்து சென்றுள்ளார்.
புதன், 25 நவம்பர், 2015
பயனாளர்களை வேவு பார்க்கும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் கூகுள்
டிஜிட்டல் உலகைப் பாதுகாப்பதற்கெனப் பல செயலிகளை உருவாக்கி வரும் 'அவாஸ்ட்' நிறுவனம், அண்மையில் ஓர் அதிர்ச்சி தரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கூகுள், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் புரோகிராம்கள், நம்முடைய தனி நபர் தகவல்களையும், நம் செயல்பாடுகளையும் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாக அறிவித்துள்ளது.
குற்றச் சாட்டிற்கு ஆளான சில நிறுவனங்கள், இதனை மறுக்கவில்லை. இது குறித்த விபரம் பின்வருமாறு:
குற்றச் சாட்டிற்கு ஆளான சில நிறுவனங்கள், இதனை மறுக்கவில்லை. இது குறித்த விபரம் பின்வருமாறு:
Labels:
பேஸ்புக் (Facebook),
வாட்ஸ் அப் (WhatsApp)
விபச்சாரிகளாக்கப்படும் யாழ்ப்பாணப் பெண்கள்!! குறுக்கால போன குறும்படக்காரர்களின் கைவரிசைகள் இதோ
கடந்த சில மாதங்களின் முன்னர் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாக உலாவிய விடயம், ஈழத்து குறும்பட நடிகையொருவரின் அந்தரங்கப்படம். அவர் குளித்தார்.
தன்னைத்தானே வீடியோ எடுத்தபடி. யாரோ ஒரு நடிகை தொடக்கம் த்ரிஸா வரை குளித்துப்பார்த்த நம்மவர்களிற்கு, ‘அட நம்மாளு’ என்ற பாணியில் ரகசியமாக வீடியோவை பார்த்துவிட்டு, சமூகவலைத்தளங்களில் அறக்கத்திகளை தூக்கிக் கொண்டு குதித்தார்கள்.
தன்னைத்தானே வீடியோ எடுத்தபடி. யாரோ ஒரு நடிகை தொடக்கம் த்ரிஸா வரை குளித்துப்பார்த்த நம்மவர்களிற்கு, ‘அட நம்மாளு’ என்ற பாணியில் ரகசியமாக வீடியோவை பார்த்துவிட்டு, சமூகவலைத்தளங்களில் அறக்கத்திகளை தூக்கிக் கொண்டு குதித்தார்கள்.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
ஏன் 2016-ம் ஆண்டு யாரும் திருமணம் செய்யக் கூடாது? மகாமகம் பீதி!!!
மகாமகம் பற்றிய சிறு பார்வை.....
ஒவ்வொரு முறையும் பிரம்மன் உறங்கும் போதும் உலகில் பிரளயம் ஏற்பட்டு, பெரும் அழிவு ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒருமுறை ஏற்பட்ட பிரளயத்தினால் தான் கலியுகம் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். கலியுகத்திற்கு முன்பு உயிர்கள் தோன்ற விதைகளும், அமுதமும் கொண்ட பானை ஒன்றை ஓர் குளத்தில் பிரம்மன் வைத்தான்.
ஒவ்வொரு முறையும் பிரம்மன் உறங்கும் போதும் உலகில் பிரளயம் ஏற்பட்டு, பெரும் அழிவு ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது. இதன் தொடர்ச்சியில் ஒருமுறை ஏற்பட்ட பிரளயத்தினால் தான் கலியுகம் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். கலியுகத்திற்கு முன்பு உயிர்கள் தோன்ற விதைகளும், அமுதமும் கொண்ட பானை ஒன்றை ஓர் குளத்தில் பிரம்மன் வைத்தான்.
Labels:
பலதும் பத்தும்
செவ்வாய், 24 நவம்பர், 2015
கூகுளில் உங்கள் விவரங்கள்
கூகுள், தனது பயனாளிகளுக்காகப் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பயன்பாட்டு நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது. பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது.
Labels:
கணணி மையம் (Google)
இரவில் தூங்கவிடாமல் செய்யும் மூக்கடைப்பைப் போக்க சில முத்தான யோசனைகள்!!!
தற்போது காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், சிலர் இரவில் படுக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்படுவார்கள். இதனால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும். அப்படி நீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
Labels:
மருத்துவம்
பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...
பெண்களின் பிறப்பு உறுப்புப் பகுதிகளில் சில சமயம் மோசமான நாற்றம் ஏற்படுவது இயல்பு தான். பல நோய்த் தொற்றுக்கள் காரணமாக இந்த நாற்றம் உண்டாகிறது. இந்த நாற்றத்திற்கு பாக்டீரியா தாக்குதல், ஈஸ்ட் தொற்று, செக்ஸ் சம்பந்தமான நோய்கள், இனிப்பு உணவுகளை அதிகமாக சாப்பிடுதல், பிறப்பு உறுப்புப் பகுதிகளை மோசமாகப் பராமரித்தல், இறுக்கமான உள்ளாடை அணிதல், மோசமான சோப்புகளை உபயோகித்தல் உள்பட பல காரணங்கள் உள்ளன.
பிறப்பு உறுப்புப் பகுதிகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது இதற்கு ஒரு முக்கிய அறிகுறியாகும். மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிவப்பாகவும் மாறும். இதையடுத்து மோசமான துர்நாற்றமும் கிளம்பும்.
சுவாசிக்கவே கொடுமையாக இருக்கும் இந்த நாற்றத்தை அப்படியே அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. உடனடியாக சரிசெய்ய வேண்டியது ரொம்பவும் முக்கியம். என்ன செய்யலாம்? கவலை வேண்டாம். வீட்டிலேயே எளிய முறைகளில் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியும். இதோ அத்தகைய தீர்வுகள்...
ஒரு நாளைக்குக் குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது ரொம்பவும் ஈஸிதானே! பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தைத் விரட்ட சிறந்த வழியுமாகும். இது இயற்கையாகவே பாக்டீரியாவையும் மற்ற நச்சுப் பொருட்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் அதிக சர்க்கரை இருந்தாலும், தண்ணீர் அதைக் கரைத்து விடும்.
பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தை நீக்குவதில் தயிரின் பங்கும் முக்கியமானது. தயிரில் லாக்டோபேசில்லஸ் அதிகம் இருப்பதால் 'அந்த' இடங்களில் பி.எச். அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நிறைய தயிர் சாப்பிடுங்கள். தயிரை பஞ்சில் நனைத்து பிறப்பு உறுப்புப் பகுதிகளில் நன்றாகத் தடவி, 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலமும் இப்பிரச்சனையைத் தீர்க்கலாம்.
பிறப்பு உறுப்புப் பகுதிகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது இதற்கு ஒரு முக்கிய அறிகுறியாகும். மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிவப்பாகவும் மாறும். இதையடுத்து மோசமான துர்நாற்றமும் கிளம்பும்.
சுவாசிக்கவே கொடுமையாக இருக்கும் இந்த நாற்றத்தை அப்படியே அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. உடனடியாக சரிசெய்ய வேண்டியது ரொம்பவும் முக்கியம். என்ன செய்யலாம்? கவலை வேண்டாம். வீட்டிலேயே எளிய முறைகளில் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியும். இதோ அத்தகைய தீர்வுகள்...
ஒரு நாளைக்குக் குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது ரொம்பவும் ஈஸிதானே! பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தைத் விரட்ட சிறந்த வழியுமாகும். இது இயற்கையாகவே பாக்டீரியாவையும் மற்ற நச்சுப் பொருட்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. உடலில் அதிக சர்க்கரை இருந்தாலும், தண்ணீர் அதைக் கரைத்து விடும்.
பிறப்பு உறுப்பு துர்நாற்றத்தை நீக்குவதில் தயிரின் பங்கும் முக்கியமானது. தயிரில் லாக்டோபேசில்லஸ் அதிகம் இருப்பதால் 'அந்த' இடங்களில் பி.எச். அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நிறைய தயிர் சாப்பிடுங்கள். தயிரை பஞ்சில் நனைத்து பிறப்பு உறுப்புப் பகுதிகளில் நன்றாகத் தடவி, 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலமும் இப்பிரச்சனையைத் தீர்க்கலாம்.
Labels:
பாலியல்
'அந்த' இடத்தில் அரிப்பு தாங்க முடியலையா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்...
சிலருக்கு பிறப்புறுப்பு பகுதிகளில், பின்புறத்தில் மற்றும் தொடைகளில் கடுமையான அரிப்பு ஏற்படும். இப்படி அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் ட்ரைகோபைடான் என்னும் பூஞ்சைகள். இத்தகைய அரிப்பு ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் ஏற்படும். இந்த அரிப்புக்களால் பொது இடங்களில் எல்லாம் பலரும் மிகுந்த தர்ம சங்கட நிலைக்கு உள்ளாகக்கூடும்.
Labels:
பாலியல்
கடற்புலி தளபதி சூசை இறுதியில் யாரை தொடர்புகொண்டார் – பேசியது என்ன……? (காணொளி இணைப்பு)
ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்… கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் தொலைபேசியூடாக இந்தியாவுக்கு பேசியது என்ன??????????
ஞாயிறு, 22 நவம்பர், 2015
ஐஎஸ்ஐஎஸ் ரகசியங்கள் அம்பலமானது..!!
சில ஆண்டுகளாக உலகை அச்சுறுத்தி வரும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமாக அறியப்படும் ஐஎஸ்ஐஎஸ் பாரிஸ் நகரில் நடத்திய கொடூர தாக்குதலுக்கான பதில் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றது எனலாம். ஃபிரான்ஸ் நாட்டின் ஜெட் விமானங்கள் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வரும் நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு தங்கள் தரப்பில் தாக்குதல்களை நடத்த சைபர் போர் ஒன்றை அனானமஸ் எனும் ஹேக்கர் பிரிவினர் அறிவித்தது அனைவரும் அறிந்ததே..
Labels:
உலகப்பார்வை,
ஐஎஸ்ஐஎஸ் (ISIS)
நடுக்கடலில் உயிருக்கு போராடிய அகதிகள்: இரக்கமின்றி படகை மூழ்கடிக்க முயற்சித்த கடலோர காவல் படை (வீடியோ இணைப்பு)
நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா அகதிகளின் படகை கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வேண்டுமென்றே மூழ்கடிக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் முயற்சியில் சுமார் 20க்கும் அதிகமான அகதிகள் நள்ளிரவு நேரத்தில் படகில் பயணம் செய்துள்ளனர்.
சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் முயற்சியில் சுமார் 20க்கும் அதிகமான அகதிகள் நள்ளிரவு நேரத்தில் படகில் பயணம் செய்துள்ளனர்.
Labels:
உலகப்பார்வை,
காணொளிகள் (Videos)
சனி, 21 நவம்பர், 2015
8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை
எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.
ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!
உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு.
இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை,
அண்மையில் வெளிவந்த அஜித்தின் ‘வேதாளத்திற்கு’ நிகராக,
சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை,
ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது.
‘குடுத்தார் பார் ஒரு குடுவை’,
‘உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்’,
‘மனுசன் சொன்னது அத்தனையும் சரி’,
இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர்,
கொண்டாடிக் குதூகலிக்கின்றனர்.
நல்லவேளையாக சுமந்திரன் குழுவினரிடமிருந்து,
இன்னும் பதில் அஸ்திரப்பிரயோகம் எதையும் காணவில்லை.
அதனால் சண்டை உச்சத்தைத் தொட்டு அப்படியே நிற்கிறது.
ஆனால் இது தொடரப்போவது மட்டும் உறுதி.
⋇⋇⋇
இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை,
அண்மையில் வெளிவந்த அஜித்தின் ‘வேதாளத்திற்கு’ நிகராக,
சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை,
ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது.
‘குடுத்தார் பார் ஒரு குடுவை’,
‘உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்’,
‘மனுசன் சொன்னது அத்தனையும் சரி’,
இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர்,
கொண்டாடிக் குதூகலிக்கின்றனர்.
நல்லவேளையாக சுமந்திரன் குழுவினரிடமிருந்து,
இன்னும் பதில் அஸ்திரப்பிரயோகம் எதையும் காணவில்லை.
அதனால் சண்டை உச்சத்தைத் தொட்டு அப்படியே நிற்கிறது.
ஆனால் இது தொடரப்போவது மட்டும் உறுதி.
⋇⋇⋇
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்
வெள்ளி, 20 நவம்பர், 2015
சுமந்திரனுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் பாதிப்படையவே செய்கின்றன. சமீபகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நடவடிக்கையால் உட்கட்சிப் பூசல்கள் அதிகரித்துள்ளதால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் அவர்களின் நிரந்தரத் தீர்விற்கும் வழிகிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.
Labels:
கட்டுரைகள்
வியாழன், 19 நவம்பர், 2015
ஐ.எஸ்.தீவிரவாதிகள் "கொலைவெறி மனநோய்" கொண்டவர்களா?
Image copyright AP
பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்"
(psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார்.
ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ?
"கொலைவெறி மனநோய்" பிடித்த ஐ.எஸ்-- ஜான் கெர்ரி
பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்"
(psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார்.
ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ?
Labels:
இஸ்லாம்,
உலகப்பார்வை
புதன், 18 நவம்பர், 2015
குழந்தைகள் முன் பெற்றோர்கள் ஏன் முத்தமிடக்கூடாது?
முத்தம் என்பது அன்பை பரிமாற சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவது சரியா? பெற்றோர்களால் வரம்போடு நடக்க முடியுமெனில் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவதில் தவறில்லை. முத்தமிடுவது என்பது அன்பை பரிமாறும் ஒரு வழி என்ற அடிப்படை பாடத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் தங்கள் பெற்றோர், ஒருவருக்கொருவர் எந்தளவிற்கு பாசமும் அன்பும் கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
Labels:
பலதும் பத்தும்
செவ்வாய், 17 நவம்பர், 2015
அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்…?- முருகபூபதி -(நேற்றைய தொடர்ச்சி)
” ஊருக்குத்தான் உபதேசமடி பெண்ணே அது உனக்கில்லையடி கண்ணே “ என்ற பாணியில் சட்டங்களும் அரசியல்கைதிகள் விவகாரமும் சமூகச்சிந்தனைகளும்
“நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில், நல்லவரின் தயக்கமும் தாமதமுமே தீமையாய் முடிகிறது “ என்று தமது ஹெம்லெட் நாடகத்தில் ஒரு செய்தியாகச் சொன்னவர் உலகநாடகமேதை வில்லியம் சேக்ஷ்பியர்.
“நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில், நல்லவரின் தயக்கமும் தாமதமுமே தீமையாய் முடிகிறது “ என்று தமது ஹெம்லெட் நாடகத்தில் ஒரு செய்தியாகச் சொன்னவர் உலகநாடகமேதை வில்லியம் சேக்ஷ்பியர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
திங்கள், 16 நவம்பர், 2015
அரசியல்கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்….?- முருகபூபதி |
தர்மிஷ்டர் ஜே.ஆர். 1977 இல் பதவிக்கு வந்தவுடன் முதலில் பிரதமரானார். அதன் பின்னர்தான் அவர் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக்கினார். ஆனால், எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லாத சூழ்நிலையில் ஜே.ஆர். 1977 பொதுத்தேர்தல்காலத்தில் தாம் பதவிக்கு வந்தவுடன் சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் அனைவருக்கும் நிபந்தனையற்ற விடுதலை தருவதாக வாக்குறுதி அளித்தார்.
Labels:
இலங்கை,
ஈழ நாடு,
கட்டுரைகள்,
தமிழர்கள்
ஐரோப்பா இனி எப்படி இருக்கும்?
- நிக் கோஹன்
ஐரோப்பா இன்னும் எத்தனைக் காலம்தான் சுதந்திர மனப்பான்மை உள்ள நிலப்பரப்பாக இருக்கும்? படுபயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த உடனே சிந்திப்பதற்கு இது சரியான தருணம் அல்லதான். இத்தாக்குதலின் கொடூரம் காரணமாக, அரசை நிர்வகிப்போரும் மக்களும், மிகக் கடுமையாக இதை ஒடுக்க வேண்டும் என்றே ஆத்திரப்படுவார்கள். பாரீஸ் நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலுக்கு முன்னால்வரை, பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல்தான் நாடுகள் சோம்பிக் கிடந்தன.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
ஞாயிறு, 15 நவம்பர், 2015
சுமந்திரனின் பதில் என்ன?
தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்?
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
வடக்கு முதல்வரை விலக்கினால் என்ன நடக்கும்?
'தமிழ் மக்களுக்கான காத்திரமான நிலைப்பாட்டை முதலமைச்சர் எடுத்துள்ளார். ஆகவே இலங்கை அரசாங்கத்தின்பால் தான் கொண்டுள்ள பிரசாரத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற நோக்கம் கருதியே முதலமைச்சரை கட்சியிலிருந்து விலத்த வேண்டுமென்று சுமந்திரன் கோருகிறார். எனவே ராஜினாமா செய்ய வேண்டியவர் முதலமைச்சர் அல்லர். தமிழ் மக்களின் நலனுக்கு விரோதமாக பேசிவரும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மாறாக பேசிவரும் சுமந்திரனே ராஜினாமா செய்ய வேண்டுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
'அண்மையில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற வேளையில் சுமந்திரன் ஒரு விடயத்தை புட்டுக் காட்டினார். முதலமைச்சர் இரண்டரை வருடங்களின் பின் தனது பதவியை விட்டுக்கொடுப்பேன் எனக் கூறியிருந்தார். அதை இப்பொழுது அவருக்கு நினைவு படுத்துகின்றேன் என பூடகமாக சுட்டிக்காட்டினார். இதில் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விக்னேஷ்வரன் அவர்களை ஏணியை வைத்து இறக்கி விட்டவர்கள் ஐயா சம்பந்தனும் சுமந்திரனுமாகும். ஆகவே முதலமைச்சருக்கும் உங்களுக்கும் இடையே தோன்றியுள்ள முரண்பாடு உங்களுடைய பிரச்சினையே தவிர எங்களுடைய பிரச்சினை இல்லையென நான் சுமந்திரனுக்கு தெரிவித்தேன். –தர்மலிங்கம் சித்தார்த்தன்
வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்குவதனாலோ அல்லது பதவி விலகும்படி கோருவதனாலோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் நிலையே உருவாகும். இப்போதைக்கு அமைதி காப்பதே சிறந்தது. இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
'அண்மையில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற வேளையில் சுமந்திரன் ஒரு விடயத்தை புட்டுக் காட்டினார். முதலமைச்சர் இரண்டரை வருடங்களின் பின் தனது பதவியை விட்டுக்கொடுப்பேன் எனக் கூறியிருந்தார். அதை இப்பொழுது அவருக்கு நினைவு படுத்துகின்றேன் என பூடகமாக சுட்டிக்காட்டினார். இதில் நாம் சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் என்னவெனில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விக்னேஷ்வரன் அவர்களை ஏணியை வைத்து இறக்கி விட்டவர்கள் ஐயா சம்பந்தனும் சுமந்திரனுமாகும். ஆகவே முதலமைச்சருக்கும் உங்களுக்கும் இடையே தோன்றியுள்ள முரண்பாடு உங்களுடைய பிரச்சினையே தவிர எங்களுடைய பிரச்சினை இல்லையென நான் சுமந்திரனுக்கு தெரிவித்தேன். –தர்மலிங்கம் சித்தார்த்தன்
வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து விலக்குவதனாலோ அல்லது பதவி விலகும்படி கோருவதனாலோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக உடையும் நிலையே உருவாகும். இப்போதைக்கு அமைதி காப்பதே சிறந்தது. இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
மாலைதீவுச் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளுமா இலங்கை?
இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,192 தீவுகளைக் கொண்ட சிறிய நாடான மாலைதீவில் அண்மையில் நடந்து வரும் சம்பவங்கள், அயல் நாடான இந்தியாவை மட்டுமன்றி, இலங்கைக்கும் கூட சில ஆபத்தான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அங்கு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அங்கு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
வீரகேசரி
அரசியல் கைதிகளின் விடுதலையும் தமிழ் கட்சிகளின் குடும்பிபிடிச் சண்டையும்
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து தமக்குப் பூரண விபரங்கள் நாளை திங்கட்கிழமை தெரியவருமெனவும், அதன் பின்னர் அது தொடர்பான முடிவு எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வியாழக்கிழமை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை
'24 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து தமக்கு எதுவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து 24 கைதிகளும் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நீதிமன்றத்திலிருந்து இந்த அரசியல் கைதிகள் சிறைச்சாலை பஸ் வண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு கூடி நின்ற ஊடகவியலாளர்களிடம் பல்வேறு வகையான விமர்சனங்களை தெரிவித்தனர். இந்த விமர்சனங்கள் அவர்களது உள்ளக்கிடக்கைகளை வெளியிடுவதாக அமைந்திருந்தது.
புதன்கிழமை மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் பிணை பெற முடியாமல் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளில் 24 கைதிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் தங்களது உறவினர்களுடன் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
புதன்கிழமை மாலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டும் பிணை பெற முடியாமல் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகளில் 24 கைதிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் தங்களது உறவினர்களுடன் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றனர்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
காதலின் நகரத்தில் இரத்தக்களரி - பாரிஸ் நகரத் தாக்குதல்கள்
அதனைக் காதலின் நகரம் என்றும் கூறுவார்கள். அழகியலின் உச்சத்தைத் தொட்ட புராதனக் கட்டடங்கள். செவிக்கினிமை தரும் பிரெஞ்சு மொழி. நடுத்தெருவில் தயக்க மின்றி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் காதல் சிட்டுக்கள்.
பிரான்சின் தலைநகர் பாரிஸ். அதில் வெள்ளிக்கிழமை இரவு என்றாலே கொண்டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலைகளின் கொண்டாட்டம் ஒருபுறம். ஒருவார கால உழைப்பின் சலிப்பை ஓரங்கட்டச் செய்யும் விளையாட்டுப் போட்டிகள் மறுபுறம்.
பிரான்சின் தலைநகர் பாரிஸ். அதில் வெள்ளிக்கிழமை இரவு என்றாலே கொண்டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலைகளின் கொண்டாட்டம் ஒருபுறம். ஒருவார கால உழைப்பின் சலிப்பை ஓரங்கட்டச் செய்யும் விளையாட்டுப் போட்டிகள் மறுபுறம்.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
வீரகேசரி
எவன்கார்ட் சர்ச்சை. என்னதான் நடக்கிறது?
அரசாங்கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும், எவன்ட்கார்ட் விவகாரத்தில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறுவனமே, இந்தச் சர்ச்சைகள் எல்லாவற்றுக்கும் காரணமாகியுள்ளது. இதன் தாய் நிறுவனம், எவன் கார்ட் பாதுகாப்பு சேவைகள் நிறுவனம். இது இலங்கையில் உள்ள மிகப் பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனம் என்பதும் இதில் 6,500க்கும் வரையானோர் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எவன்கார்ட் மரிரைம் நிறுவனம், போர் முடிவுக்கு வந்த பின்னர், 2011ஆம் ஆண்டு, இலங்கையின் கம்பனிகள் சட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்டது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் நிறுவனமே, இந்தச் சர்ச்சைகள் எல்லாவற்றுக்கும் காரணமாகியுள்ளது. இதன் தாய் நிறுவனம், எவன் கார்ட் பாதுகாப்பு சேவைகள் நிறுவனம். இது இலங்கையில் உள்ள மிகப் பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனம் என்பதும் இதில் 6,500க்கும் வரையானோர் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் எவன்கார்ட் மரிரைம் நிறுவனம், போர் முடிவுக்கு வந்த பின்னர், 2011ஆம் ஆண்டு, இலங்கையின் கம்பனிகள் சட்டத்துக்கு அமைய உருவாக்கப்பட்டது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
நீங்களும் அழைக்கலாம் 1929
"நீங்கள் ஏதேனுமொரு விதமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகுமிடத்து அது ஒரு போதும் உங்கள் தவறன்று. நீங்கள் தவறு செய்ததாக ஒரு போதும் எண்ண வேண்டாம். பாலியல் துஷ்பிரயோகமானது எப்பொழுதும் வளர்ந்தவர்களினால் அல்லது பலம் மிக்கவர்களினால் புரியப்படுகின்ற தவறான செயலாகும். நீங்கள் வருந்துவதன் மூலம் குற்ற உணர்ச்சிக்கு இடமளிக்காதீர்கள். மேலும் மற்றவர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்"
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் அவை எந்தவிதமான பிரதிபலிப்பையும் காட்டுவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவற்றிலும் சில சம்பவங்களே வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் அவை எந்தவிதமான பிரதிபலிப்பையும் காட்டுவதாக தெரியவில்லை. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவற்றிலும் சில சம்பவங்களே வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படுகின்றன.
Labels:
பாலியல்
முகத்தில் ஏற்படும் தழும்புகளுக்கு
முத்தம் கொடுத்தாலும் சிவப்பு நிறத்தில் தழும்புகள் விழும் என்பது தெரியுமா? குறிப்பாக, இம்மாதிரியான நிலை திருமணமான புதுத்தம்பதியர்களுக்கு அதிகம் ஏற்படும். இத்தழும்புகளானது நீல நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ மற்றும் சில நேரங்களில் வீக்கத்துடனோ இருக்கும். முத்தத்தால் ஏற்படும் தழும்புகளை எளிதில் போக்கலாம். இங்கு உங்கள் துணையின் முத்தத்தால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை முயற்சித்து அந்த தழும்புகளைப் போக்குங்கள்.
Labels:
மருத்துவம்
என்ர மகள் தமிழினி நாட்டுக்காகவே வாழ்ந்து அந்த ஏக்கத்துடனேயே போனாள் தாயாரான சின்னம்மா கூறுகிறார்
"தமிழினி தடுப்பால வந்தவுடனும் சிலர் அவ கேட்கிற மாதிரியே கதைச்சிருக்கினம் பிள்ளைகளை பிடிச்சி கொண்டு போய் கொன்று போட்டு அவ மட்டும் உயிரோட வந்திட்டா என்று. இப்படி பலர் கதைப்பினம். இதால தமிழினிக்கு இங்க வாழ விருப்பம் இல்லாமல் போயிட்டு வெளிய வெளிக்கிட்டு போக முடியாது விடுதலையாகி வந்தும் சிறைக்குள் இருக்கிற மாதிரி இருக்க அவ விரும்பயில்ல அதால தான் அவ கொழும்புக்கு போயிட்டா. பூந்தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்பில்தான் அதிகம் இருந்தவ. அவவுக்கு இங்க (பரந்தனில்) இருக்கவே விருப்பம் இல்லை" என்கிறார் தமிழினியின் தாய் சின்னம்மா.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்
யாழ்.கொடிகாமத்தில் சம்பவம்
"பிள்ளையை அரசாங்கத்திலேயே வைச்சு அவங்களே படிப்பிச்சு பாத்துக்கினமாம், அதுக்கு நாங்க மாசம் மாசம் கொஞ்ச காசு கட்டினா சரியாம், இது எங்களுக்கும் கஷ்டமில்லாத வேலை தானே" என்றார் சிறுமியின் தந்தை.
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.
கடந்த முதலாம் திகதி காணாமலாக்கப்பட்டு பின்னர் பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்சினியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தந்தையின் கருத்தே இது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














































