உலகில் செல்வந்த மற்றும் அதிகாரத்துவம் பொருந்திய தலைவர்கள் எவ்வாறு வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி தமது செல்வத்தை மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பான தகவல்கள் நம்பகத்தன்மையான இரகசிய ஆவணங்களின் பாரிய கசிவால் அம்பலமாகியுள்ளன.
உலகின் மிகப் பெரிய இரகசிய கசிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கசிவால் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகவும் இரகசியத் தன்மை பேணும் கம்பனிகளில் ஒன்றான பனாமா நாட்டு சட்ட நிறுவனமான மொஸாக் பொன்செகதட்டிலிருந்து கசிந்த 11.5 மில்லியன் ஆவணங்கள் மூலமே இந்த இரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.
மேற்படி ஆவணங்களானது மொஸாக் பொன்செகதட் நிறுவனம் உலகத் தலைவர்கள் மற்றும் செல்வந்த பிரமுகர்கள் உள்ளடங்கலான தனது வாடிக்கையாளர்களுக்கு பண லஞ்சம் பெறவும் தடை விதிப்புகளைத் தவிர்க்கவும் வரி ஏய்ப்பை மேற்கொள்ளவும் எவ்வாறு உதவியுள்ளது என்பது தொடர்பான விபரங்களை உள்ளடக்கியுள்ளன. இந்நிலையில் அந்தக் கம்பனியானது தான் 40 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருவதாகவும் ஒருபோதும் குற்றச்சாட்டுக்குள்ளானதில்லை எனவும் தெரிவிக்கிறது. தற்போது கசிந்துள்ள இரகசிய ஆவணங்களானது 1970 களிலிருந்து இந்த ஆண்டு வரையான தகவல்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரகசிய ஆவணங்கள் கடந்த ஆண்டில் ஜேர்மனியை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சட்டெயட்ச் ஸெய்துங் பத்திரிகைக்கும் தொடர்ந்து வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்புக்கும் பகுப்பாய்வுக்காக வழங்கப்பட்டன.
அந்த ஆவணங்கள் 80க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 107 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 400 ஊடகவியலாளர்களால் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டன.
இந்நிலையில் மேற்படி ஆவணங்கள் தொடர்பான முதலாவது அறிக்கை ஞாயிற்றுக்கிழமை 149 ஆவணங்கள் சகிதம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏனைய இரகசிய ஆவணங்களும் கம்பனிகளது முழு பட்டியலும் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள ஆவணங்கள் 12 தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்களதும் அவர்களுக்கு நெருக்கமான 61 பேரினதும் தரவுகளை உள்ளடக்கியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர்களது சந்தேகத்துக்கிடமான பில்லியன் டொலர் பண மோசடி, ஐஸ்லாந்து பிரதமர் சிக்மன்டர் கன்லோக்ஸனின் மனைவியின் செல்வத்தில் தொடர்புபட்ட பிரகடனப்படுத்தப்படாத வரி வருமானம், அமெரிக்க செல்வந்தரான மரியன்னா ஒல்ஸ்ஸெவ்ஸ்கி போலியான ஆவணங்களை அதிகாரிகளுக்கு வழங்கியமை என்பன தொடர்பில் விபரிக்கும் அந்த ஆவணங்கள் எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் தலைவர் மும்மார் கடாபி மற்றும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் ஆகியோருக்கு நெருக்கமான குடும்பங்களால் வெளிநாடுகளில் இரகசியமாக செயற்படுத்தப்பட்டு வந்த கம்பனிகள் சம்பந்தமான தரவுகளையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளடங்கலான அந்நாட்டின் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொண்ட சந்தேகத்துக்கிடமான வரி ஏய்ப்புகள் குறித்து அந்த ஆவணங்கள் விபரிக்கின்றன.
அத்துடன் பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் 4 பிள்ளைகளில் மூவர் லண்டனில் சொத்தைக் கொண்டுள்ளதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய வங்கியொன்றாலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர்களாலும் சந்தேகத்துக்கிடமான பல மில்லியன் பண மோசடி வலைப்பின்னலொன்று செயற்படுத்தப்பட்டு வந்ததாக அந்த ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.
ரஷ்யா, கிறிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடை விதிப்புக்குள்ளான ரொஸியா வங்கியால் இந்தப் பண மோசடி செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அந்த ஆவணமானது மேற்படி வங்கி எவ்வாறு செயற்படுகிறது என்பதை முதல் தடவையாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்த பண மோசடியானது ரஷ்ய ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவருக்கு உரிமையான இரு கம்பனிகள் உள்ளடங்கலாக நிறுவனங்களால் வெளிநாடுகளில் செயற்படுத்தப்பட்ட கம்பனிகளினூடாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அதேசமயம் ஐஸ்லாந்து பிரதமர் தனது நாட்டிலுள்ள வங்கிகளிலான மில்லியன் கணக்கான முதலீடுகளை தனது மனைவியால் இரகசியமாக வெளிநாட்டில் செயற்படுத்தப்பட்டு வந்த கம்பனி மூலம் மூடிமறைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேற்படி ஆவணங்களின் கசிவால் ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகுவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
இந்த இரகசிய ஆவணங்களின் கசிவையடுத்து பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நவாஸ் ஷெரீப்பின் மகனான ஹுஸைன் தெரிவிக்கையில், தனது குடும்பத்தினரால் தவறு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என வலியுறுத்தியுள்ளார். அந்த வெளிநாட்டு நிறுவனங்களும் தமது குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும் என அவர் கூறினார்.
உலகின் மிகப் பெரிய இரகசிய கசிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கசிவால் சம்பந்தப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் மிகவும் இரகசியத் தன்மை பேணும் கம்பனிகளில் ஒன்றான பனாமா நாட்டு சட்ட நிறுவனமான மொஸாக் பொன்செகதட்டிலிருந்து கசிந்த 11.5 மில்லியன் ஆவணங்கள் மூலமே இந்த இரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.
மேற்படி ஆவணங்களானது மொஸாக் பொன்செகதட் நிறுவனம் உலகத் தலைவர்கள் மற்றும் செல்வந்த பிரமுகர்கள் உள்ளடங்கலான தனது வாடிக்கையாளர்களுக்கு பண லஞ்சம் பெறவும் தடை விதிப்புகளைத் தவிர்க்கவும் வரி ஏய்ப்பை மேற்கொள்ளவும் எவ்வாறு உதவியுள்ளது என்பது தொடர்பான விபரங்களை உள்ளடக்கியுள்ளன. இந்நிலையில் அந்தக் கம்பனியானது தான் 40 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருவதாகவும் ஒருபோதும் குற்றச்சாட்டுக்குள்ளானதில்லை எனவும் தெரிவிக்கிறது. தற்போது கசிந்துள்ள இரகசிய ஆவணங்களானது 1970 களிலிருந்து இந்த ஆண்டு வரையான தகவல்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரகசிய ஆவணங்கள் கடந்த ஆண்டில் ஜேர்மனியை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சட்டெயட்ச் ஸெய்துங் பத்திரிகைக்கும் தொடர்ந்து வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்புக்கும் பகுப்பாய்வுக்காக வழங்கப்பட்டன.
அந்த ஆவணங்கள் 80க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 107 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 400 ஊடகவியலாளர்களால் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டன.
இந்நிலையில் மேற்படி ஆவணங்கள் தொடர்பான முதலாவது அறிக்கை ஞாயிற்றுக்கிழமை 149 ஆவணங்கள் சகிதம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏனைய இரகசிய ஆவணங்களும் கம்பனிகளது முழு பட்டியலும் எதிர்வரும் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள ஆவணங்கள் 12 தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்களதும் அவர்களுக்கு நெருக்கமான 61 பேரினதும் தரவுகளை உள்ளடக்கியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர்களது சந்தேகத்துக்கிடமான பில்லியன் டொலர் பண மோசடி, ஐஸ்லாந்து பிரதமர் சிக்மன்டர் கன்லோக்ஸனின் மனைவியின் செல்வத்தில் தொடர்புபட்ட பிரகடனப்படுத்தப்படாத வரி வருமானம், அமெரிக்க செல்வந்தரான மரியன்னா ஒல்ஸ்ஸெவ்ஸ்கி போலியான ஆவணங்களை அதிகாரிகளுக்கு வழங்கியமை என்பன தொடர்பில் விபரிக்கும் அந்த ஆவணங்கள் எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபிய முன்னாள் தலைவர் மும்மார் கடாபி மற்றும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் ஆகியோருக்கு நெருக்கமான குடும்பங்களால் வெளிநாடுகளில் இரகசியமாக செயற்படுத்தப்பட்டு வந்த கம்பனிகள் சம்பந்தமான தரவுகளையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளடங்கலான அந்நாட்டின் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொண்ட சந்தேகத்துக்கிடமான வரி ஏய்ப்புகள் குறித்து அந்த ஆவணங்கள் விபரிக்கின்றன.
அத்துடன் பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் 4 பிள்ளைகளில் மூவர் லண்டனில் சொத்தைக் கொண்டுள்ளதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய வங்கியொன்றாலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நெருக்கமானவர்களாலும் சந்தேகத்துக்கிடமான பல மில்லியன் பண மோசடி வலைப்பின்னலொன்று செயற்படுத்தப்பட்டு வந்ததாக அந்த ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.
ரஷ்யா, கிறிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட பின்னர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தடை விதிப்புக்குள்ளான ரொஸியா வங்கியால் இந்தப் பண மோசடி செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது.
அந்த ஆவணமானது மேற்படி வங்கி எவ்வாறு செயற்படுகிறது என்பதை முதல் தடவையாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்த பண மோசடியானது ரஷ்ய ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவருக்கு உரிமையான இரு கம்பனிகள் உள்ளடங்கலாக நிறுவனங்களால் வெளிநாடுகளில் செயற்படுத்தப்பட்ட கம்பனிகளினூடாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அதேசமயம் ஐஸ்லாந்து பிரதமர் தனது நாட்டிலுள்ள வங்கிகளிலான மில்லியன் கணக்கான முதலீடுகளை தனது மனைவியால் இரகசியமாக வெளிநாட்டில் செயற்படுத்தப்பட்டு வந்த கம்பனி மூலம் மூடிமறைத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேற்படி ஆவணங்களின் கசிவால் ஐஸ்லாந்து பிரதமர் பதவி விலகுவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
இந்த இரகசிய ஆவணங்களின் கசிவையடுத்து பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நவாஸ் ஷெரீப்பின் மகனான ஹுஸைன் தெரிவிக்கையில், தனது குடும்பத்தினரால் தவறு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என வலியுறுத்தியுள்ளார். அந்த வெளிநாட்டு நிறுவனங்களும் தமது குடும்பத்தினருக்கு சொந்தமானதாகும் என அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக